01 ஜூலை 2022

பண்ணைக் கோழி ஆபத்துகள்

நாட்டுக் கோழி இறைச்சி ஆரோக்கியமானது. ஆனால் தற்போது பலர் வளர்ப்புக் கோழி, பண்ணைக் கோழி மீது அதிக மோகம் கொண்டு உள்ளனர்.

பண்ணைக் கோழியை வளர்ப்பதற்கு பலவித வேதிப் பொருட்களை பயன் படுத்துகின்றனர். மற்றும் இதன் வளர்ச்சி 40 நாட்களில் முழுமை அடைகின்றது. அதாவது நாற்பதே நாட்களில் ஒரு கோழிகுஞ்சு பெரிய கோழியாகி விடுகிறது.


அவ்வளவு மருந்துப் பொருட்களை கோழியின் உணவில் கலந்து சீக்கிரமாகப் பெரிதாகிவிட வளர்க்கிறார்கள். அந்தக் கோழியின் உடலில் இருக்கும் பலதரப்பட்ட மருந்துகள் இறைச்சியின் மூலமாக உங்களின் உடலுக்குள் போய் பலவித இன்னல்களை ஏர்படுகின்றன.

பண்ணைக் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளன. இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும்.

பண்ணைக் கோழியை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பண்ணைக் கோழியை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப் பொருட்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆண்களின் இனப் பெருக்கச் சக்தியினை பாதிக்கின்றது.

பண்ணைக் கோழியின் வளர்ச்சிக்காகச் சேர்க்கப்படும் இராசயனம்; பெண்களை விரைவில் வயதாகச் செய்கின்றது. விரைவில் மூப்பு அடையச் செய்கின்றது.

முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படையச் செய்கின்றது.

சான்று:

http://moonchat.in/health/broiler-chicken-side-effects-7-health-hazards-of-eating-broiler-chicken/


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக