09 அக்டோபர் 2021

மலாக்காவின் முதல் கவர்னர் லியோங் யூ கோ

மலாயா மாநிலங்களில் யாங் டி பெர்த்துவா, கவர்னராக நியமிக்கப்பட்ட முதல் முதல்வர் லியோங் யூ கோ (LEONG YEW KOH. முதலும் கடைசியுமான சீனர். 31 ஆகஸ்ட் 1957-இல் இருந்து 30 ஆகஸ்ட் 1959 வரை பணியாற்றினார்.


அவர் 12 செப்டம்பர் 1959 முதல் 12 ஜனவரி 1963 வரை மலாயா நீதித்துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார்

மலாய் அல்லாதவர்கள் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்று யார் சொன்னது?

நமது சுதந்திரத்தின் தொடக்கத்தில் மலேசியா எப்படி இருந்து இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். இப்போது போல இனம் மற்றும் மதத்திற்கு அப்போது குருட்டுத்தனம் எதுவும் இல்லை.

06 அக்டோபர் 2021

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி இருக்கிறார்

06.10.2021

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தன் சம்பளத்தைக் குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

3. அம்மா நீங்கள் விரும்பியதைச் சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாகக் காட்டப் படுகிறது. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.

4. நீங்கள் தொலைபேசியில் பேசும் போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பது இல்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடம் இருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

5. அலமாரியில் வண்ண மயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தன் சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவது இல்லை. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கு என்று ஆபரணம் ஏதும் இருப்பது இல்லை. தனக்கு என்று ஏதும் வாங்கியதும் இல்லை.  இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும் போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி அல்லது கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் பண்டிகைக்கு எனக்காகச் சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது ​​குழந்தைகள் சொல்கிறார்கள்; வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார்?

*அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.* இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தான் தெரியவில்லை.

 

13 செப்டம்பர் 2021

செந்தமிழ் செல்வி ஜனகா சுந்தரம்

12.09.2021
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராவார். மலேசிய நாளிதழ்கள்; தமிழகத்தின் மஞ்சரி, கலைமகள் போன்ற இதழ்களில் 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.

1960-ஆம் ஆண்டுகள் தொடக்கம் மலேசியத் தமிழ் எழுத்துலகில் நன்கு அறியப்பட்டவர்.


பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவை உறுப்பினராகச் சேவை செய்தவர். தனியார் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்றியவர்.

பினாங்கு இந்து சங்கப் பேரவையின் செயலாளர்; பினாங்கு வட்டாரப் பேரவையின் தலைவர். பல ஆண்டுகளாகப் பொறுப்பேற்று சேவை புரிந்தவர்.

1962-ஆம் ஆண்டு முதலே ஜனகா சுந்தரம்; ஜனனி என்னும் புனைப் பெயரில் கட்டுரை, சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.


வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் நேசன், மலேசிய முரசு ஆகியவற்றில் இவருடைய பல தொடர்கதைகள் வெளி வந்துள்ளன. இலக்கியத் துறையில் பல படைப்புகளை வழங்கியுள்ளார். இவரின் முதல் சிறுகதை தமிழகத்தில் இருந்து வெளிவரும் ராணி வார இதழில் இடம் பெற்றது.

ஜனகா சுந்தரம் எழுதிய நூல்கள்

ஞானத் தழும்புகள் (சிறுகதைத் தொகுப்பு);

திருக்குறள் தொகுப்புரை (கட்டுரை நூல் 1997);

பாரதியார் கவிதைகள் (கட்டுரை நூல் 1998).


*சிறுவர் நூல்கள்*

கண்ணனின் துனிவு (1998);

ஔவையார் அறநெறி - ஆத்திச்சூடி (கட்டுரை -1998);

பைந்தமிழ் நாட்டு பழங்கதைகள் (கதைகள் - 1998)

*சமய நூல்கள்*

காரைக்கால் அம்மையார் வாழ்வும் இலக்கியமும் (1997 / 1998)


1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய வானொலியின் இளைஞர் உலகம் நிகழ்ச்சியின் கருத்துக் களம் நிகழ்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்றவர். அப்போது தொடக்கம் இவரை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சியில் நானும் வாரா வாரம் கலந்து கொள்வேன். ஆழமான தமிழ் வளம். அழுத்தமான சொற்கள். உறுதியான சொற்கள். அவரின் தமிழறிவைக் கண்டு பல கட்டங்களில் வியந்து போய் இருக்கிறேன்.

இவர்தான் டாக்டர் சுபாஷிணியின் தாயார் என்பதை அறிந்து மகிழ்ச்சி ஒரு புறம். மலைப்பு ஒரு புறம். திகைப்பு ஒரு புறம். வாழ்த்துகிறேன்.

பின்னூட்டங்கள்

டாக்டர் சுபாஷிணி: அம்மா - ஒரு வழிகாட்டி!
(எழுத்தாளர் ஜனகா சுந்தரம்)

மலேசியாவில், அதிலும் குறிப்பாக பினாங்கில் ஒரே ஒரு தமிழ் புத்தகக்கடை மட்டுமே இருந்தது ஆரம்பத்தில். அங்கு தரமான நூல்கள் அவ்வப்போது மட்டுமே வந்துகொண்டிருந்தன.

தமிழகத்திலிருந்து யார் பினாங்கு வந்தாலும் அவர்கள் கையோடு கொண்டு வர வேண்டிய நூல்களைப் பற்றியும் அம்மா முன்னமே தெரிவித்து வரவழைத்து விடுவார்.

இப்படி நான் வளர்ந்த காலத்தில் வீட்டில் ஒரு சிறிய நூலகத்தை அம்மா வைத்திருந்தது எனது தமிழ் நூல்கள் வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அம்மாவின் வழிகாட்டுதல் தான் எனக்கு இங்கு ஜெர்மனியிலும் என் வீட்டில் தரமான நூல்களுடன் ஒரு நல்ல நூலகம்  உருவாகுவதற்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

நூல் வாசிப்பு, அது பற்றிய சிந்தனை என்பது பெற்றோர்களது வழிகாட்டுதல்களினால்தான் நமது மனதில் ஆழப்பதியும் வகையில் நமக்கு அமைந்துவிடுகின்றன என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

பாரதியின் நினைவு நாள் இன்று. பாரதியைப் பற்றிய முற்றுப்பெறாத ஒரு நூலையும் அம்மா எழுதிக் கொண்டிருந்தார். பாரதியின் பாடல்களை எனக்கும் என் சகோதரிக்கும் கற்றுக் கொடுப்பார்.

நாங்கள் பாடிக் காட்ட அவர் மகிழ்வார். திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஆண்டுகள் சில கடந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு  இருக்கிறது.

நூல்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும்.. நூல்களை நேசிக்க வேண்டும் என்றும், வீட்டில் குட்டி நூலகம் இருக்க வேண்டும் என்றும் தனது செயலால் எனக்கு வழிகாட்டியாக இருந்த அம்மாவிற்கு இன்று (செப் 11) பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... -சுபா

தேவிசர கடாரம்: அருமை சகோதரி... புத்தகம் வாசிப்பது என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் .என் பெற்றோறை பார்த்தே எனக்கும் இந்த பழக்கம் வந்தது...

தங்களின் தாய் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்கின்றார்.அவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களை சுற்றியே இருக்கும்.....

தனசேகரன் தேவநாதன்: நண்பரின் கவிதை - வாசிப்பு

அன்று தொட்டு இன்று
வரை மனித நாகரீகத்தின்
பரிணாம வளர்ச்சிக்கு
வித்து வாசிப்பு அதுவே
விலை இல்லா சொத்து...

தனி மனிதனின் சிந்தனையில் உதித்த
அறிவியல் அகிலத்துக்கு
ஆயிரமாயிரம் நன்மைகளை
உயிர்ப்பித்து உயிர்களின்
வாழ்வாதாரம் நிர்ணியக்கப் படுகிறது
வாசிப்பில்...

ஆன்றாரோரும் சான்றாரோரும்
மனித குலத்தின் ஒழுக்க
நெறிகளுக்கு எழுதி வைத்த
ஆயிரமாயிரம் அறிவுரைகள்...

ஏடுகளில் ஏங்கிக் கிடக்கின்றன
சாமானியர்களின் வாசிப்புக்கும்  
நல் வாழ்வுக்கும்...

சுவாசிப்பு உயிர் வாழ எவ்வளவு முக்கியமாமோ
அவ்வளவு முக்கியம் வாசிப்பு
மனிதன் மனிதனாக மனிதத்துடன் மண்ணில் வாழ...

கல்வியின் முக்கித்துவம்
புத்தகங்களில் மூழ்கி இருக்கின்றன
அந்த கல்வி முத்தை மூழ்கி
எடுக்க வாசிப்பு என்ற
பயிற்சி வேண்டும்...

மன இறுக்கத்திலிருந்து
விடுபட சிறந்த வைத்தியம்
வாசிப்பு  வாசிப்பாபோம்
வசந்தத்தை வரவேற்பாபோம்
வாழும் வரை...

-நாரா
பத்து காஜா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மகிழ்ச்சியான செய்தி. பெற்றோர் எப்படியோ பிள்ளைகளும் அப்படியே... தாங்கள் இந்த அளவிற்கு சிறந்து விளங்குவதற்கு தங்களின் பெற்றோர்... குறிப்பாக, தாயார் மிக முக்கிய பங்கு வகித்து உள்ளார். நினைவு கூர்கிறீர்கள். மகிழ்ச்சி அடைகிறேன். 🙏💐

டாக்டர் சுபாஷிணி: மிக அழகான பதிவு தோழர். அம்மாவின் படைப்புக்களை அழகாக வரிசைப் படுத்தி விரிவாக எழுதி இருக்கின்றீர்கள். எனது நன்றி மலர்கள் 🌹🌹🌹. அம்மாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

சுறுசுறுப்பு, பல திறமைகள், சமூகச் சிந்தனை  என எனக்கு நேரடி வழிகாட்டி அவர். எல்லா பணிகளுக்கு இடையேயும் அவரது கைமணமும் அபாரம். இன்று மட்டுமல்ல எல்லா நாளுமே அம்மா உடன் இருக்கின்றார்.. 😄 அன்பிற்கு நன்றி நன்றி 🙏😊🌷

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:1967-ஆம் ஆண்டு, தங்கள் தாயாருடன் மலேசிய வானொலி இளைஞர் உலகம் கருத்து மேடை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கருத்து விவாதங்கள ஏற்பட்டதை நினைத்துப் பார்க்கின்றேன். தாங்கள் தான் அவருடைய மகள் அறிந்து தங்கள் மீது தனி ஒரு மரியாதை ஏற்படுகிறது.

ஜனகா சுந்தரம்... புகழ்பெற்ற எழுத்தாளர்... என்னைக் கவர்ந்த எழுத்தாளர். இன்றும் என் நினைவில் வலம் வரும் அழகிய எழுத்தாளர். தங்களின் தாயார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

டாக்டர் சுபாஷிணி: மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏😊😊😊🌷

வெங்கடேசன்: சிறப்பான தகவல் மிக்க நன்றி ஐயா🙏

தனசேகரன் தேவநாதன்: நன்றி ஐயா. அவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன். பினாங்கு மாநில இந்து சங்கத் தலைமைப் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றியவர். வானொலியில் அவர் பெயர் வராத நாட்கள் அபூர்வம்.

அவரின் வாரிசு டாக்டர் சுபாஷிணி என அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி ஐயா. இந்து சங்க வரலாற்றில் இவர் தான் முதல் பெண் மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்தவர்

கரு. ராஜா சுங்கை பூலோ: தகவலுக்கு நன்றி

முருகன் சுங்கை சிப்புட்: எல்லாம் புதுப் புதுத் தகவல்கள். மலேசியம் புலனம் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே வருகிறது. அத்துனை படைப்புகளும் அருமை 👏👏👏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கனகா சுந்தரம்... 1970-களில் மலேசிய வானொலியில் முத்திரை பதித்தவர். இவர் என் மனைவியின் தோழியும் ஆவார். இருவருக்கும் கடிதத் தொடர்புகள் இருந்தன.

கலைவாணி ஜான்சன்: சிறப்பு ஐயா... சிறந்த எழுத்தாளரை அறிமுகம் செய்து, அவர் எழுதிய நூல்களையும் அறிமுகம் செய்து, அவருக்குச் சிறப்பு சேர்த்து உள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி... நன்றி 🙏🙏

கரு. ராஜா சுங்கை பூலோ: புலிக்கு நிச்சயம் பூனை பிறக்காது. புலிதான் பிறக்கும். அந்தப் புலிதான் டாக்டர் சுபாக்ஷினி.

கலைவாணி ஜான்சன்: வாழ்த்துகள் டாக்டர் சுபாஷினி 👏🏼👏🏼🌹🌹

ராதா பச்சையப்பன்: அருமை, சிறப்பு. எனக்குப் புத்தகங்களை வாசிப்பது என்றால் அதிக பிரியம். 👌👌🙏🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சொல்ல மறந்த தகவல்... ஜனகா சுந்தரம் அவர்கள்... சித்த மருத்துவம் பயின்றவர். தமிழ்நேசன் பவுன் பரிசு; தமிழ் முரசு கவிதைப் போட்டியில் முதல் பரிசு; எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசுகள் பெற்றவர்.

குன்றக்குடி அடிகளார் `செந்தமிழ் செல்வி` எனும் விருது வழங்கி உள்ளார்.  

மலேசிய இந்து சங்கம் `தொண்டர் மாமணி’ விருது வழங்கி உள்ளது.

கலைவாணி ஜான்சன்: ஆகா அருமை அருமை ஐயா.... தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து, பல விருதுகள் பெற்ற அம்மையாருக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்.... 🌹🌹🌹👏🏼👏🏼

இமயவர்மன் திருச்சி: வாழ்த்துக்கள் டாக்டர் சுபாஷினி

ராதா பச்சையப்பன்: உங்களுக்கு தெரியாததா, சகலமும் அறிந்தவர் நீங்கள். உங்களிடம் போட்டி போட ஆள் ஏது? 🙏👌👌🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
அட போம்மா... அங்கே இங்கே தோண்டி எடுத்து... பெயர்  போட்டுக் கொண்டு இருக்கிறேன். இதில் பெருமைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை... பதிவிற்கு நன்றிம்மா 😇

 

06 செப்டம்பர் 2021

மாண்புமிகு வீ. கணபதிராவ் - கே. ஆர். சண்முகன்

பதிவாளர்: கருப்பையா ராஜா
06.09.2021

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், மாண்புமிகு வீ. கணபதிராவ் அவர்களின் காணொலி பார்த்தேன். வியந்தேன். ஹின்றாப் போராளி. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமை அனுபவித்தவர்.


இந்தியர்களுக்கு இல்லை; பெரும்பான்மைத் தமிழர்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்தவர். தான் பிறந்த தெலுங்கு சமூகத்திற்காக ப்போராட்டக் களத்தில் குதிக்கவில்லை.

இன்று தெலுங்கன் என்று குறை கண்டு இந்தியச் சமுதாயத்தைப் பிளவு படுத்தி மகிழ்ச்சி அடையும் சகுனிகளே திருத்துங்கள்.

2008-ஆம் ஆண்டுக்கு முன்பு சிலாங்கூர் சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவை எப்படி இருந்தது என்பது இந்தியச் சமுதாயம் உணர்ந்ததால் இந்தியர்களின் வாக்குகள் எதிர்க் கட்சிக்கு விழுந்தன.

சாதி துவேஷம் பேசுவது; சாதி பார்த்து தேடிப் பிடித்து வேட்பாளர் தேர்வு செய்து அரசியல் நடத்திய காலம் மலை ஏறிவிட்டது ராஜா.

காலத்திற்கேற்ப சிந்தனை மாற்றம் செய்து கொள்ள உங்கள் எலும்புத் துண்டுகளுக்குத் துதி பாடாதீர்கள். இனத் துரோகியாகச் செயல் படாதீர்கள்.  

இந்தியச் சமுதாயத்திற்கு உதவும் தலைவர்களை ஆதரிக்கா விட்டாலும் அவதூறு செய்திகளை பரப்பாதீர்கள். இந்தியர்களின் எதிர்காலம் எந்த தலைவரால் பாதுகாக்கப்படும் என்பது உறுதிசெய்து கொள்ளுங்கள்.

அம்னோவால் இந்தியர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையாது. டத்தோஶ்ரீ நஜிப் காலத்தோடு முடிந்துவிட்டது.

பின்னூட்டங்கள்


மலையாண்டி மலாக்கா:
உண்மை. இனம் பார்த்து சேவை செய்யாத மனிதர். மலேசிய இந்திய சமுதாயம் தவறவிட்ட தலைவர். இவரால் சிலாங்கூர் இந்தியர் பயன்பெறுகின்றனர்.

கணேசன் சண்முகம்: நானும் மாண்புமிகு அவர்களின் விளக்க காணொலியைக் பார்த்தேன்.

சிறப்பாக சேவையாற்றும் ஒரு சிறந்த அரசியல்வாதி மீது தேவையில்லாத காழ்ப்புணர்ச்சி ஏனோ?

முகில்:
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர். ஆட்சிக்குழுஉறுப்பினர். மாண்புமிகு வீ. கணபதிராவ் ஒரு நியாயமான அரசியல்வாதி.







 

இறைவன் கொடுத்தது சந்தோசம் கொள்வோம் - தேவிசர கடாரம்


🌼 ஓர் ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.

🌼 அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே.

🌼 கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.

🌼 கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.

🌼 அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலை பார்க்க, அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது... ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று.

🌼 அழகு மயிலே, உன்னை காண இவ்வளவு பேர்.. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.

🌼 என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் என்றது.

🌼 மயில் சொன்னது. அன்பு காகமே, நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.

🌼 ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.

🌼 இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை.

🌼 எனவே நான் யோசித்தது, நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே என்றது .

🌼 இதுதான் நமது பிரச்சினையும்.

🌼 நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.

🌼 நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.

🌼 அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.

🌼 இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.

🌼 ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.

🌼 உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்.

🌼 உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.
        .....படித்ததில் பிடித்தது

பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: இதுதான் நமது பிரச்சனையும்

செல்லையா செல்லம்:
மிகவும் சிறப்பு








 

சுதந்திரமாக சாக... சத்யா பிரான்சிஸ்


இன்ப நதியில் மீனாக நீந்தித் தவழ அலைகிறது இதயம்
துன்பத்தைத் தத்தெடுத்த ஆன்மா
போதி மரம் தேடி அலைகிறது...!

துயரத்தைத் தோளில் சுமந்து
தாவாத மந்திகளிடம்
சுதந்திர வாழ்வைக் கற்றுக் கொள்ளத் தவறிய இனம்
வருத்தத்தைச் சோக நெஞ்சில் சுமந்திருக்கிறது..

வந்தேறியென வசைபாடி
இனவெறிக் கொள்கையைத்
தூக்கிப் பிடிப்பவர்களுக்குப் பரிசளிப்போம் தூக்கு மேடை..!

மலைநாட்டின் வளத்திற்கு
தமிழர்களின் உடல்
மண்ணுக்கு உரமானது
விண்ணுக்கு உயர்வானது..!

பாடுபட்ட இனம்
அடக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது!
கூடாரத்தில் மூக்கை நுழைத்து
ஒண்டி வந்த ஒட்டகம்
பூமிபுத்ரா ஆனது..!

மூதாதையரின் உழைப்பு கனவில் மட்டும்
வந்து வந்து போகிறது
வரலாற்றுப் புத்தகம்
புதிய புதிய அத்தியாயங்களைத்
தவறாக எழுதிக் கடிக்கிறது...!

வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சும் சதித்திட்டம்
இனவாத அரசியல்வாதிகளால்
நுணுக்கமாக இளைய நெஞ்சங்களில் பரப்பப்படுகிறது...!

ஜனநாயக நாட்டில்
சுதந்திரமாக வாழ மறுப்பு
சுதந்திரமாக சாக மட்டும் அனுமதி..!


கணேசன் சண்முகம் சித்தியவான்:
அருமை ஐயா மிகச் சிறப்பு

தனசேகரன் தேவநாதன்: பலரது வேதனை.... கவிதையாக்கி .... விட்டீர். உள்ளூரில் சரித்திரத்தை மாற்றலாம் மறைக்கலாம். உண்மை மாறாது

ராஜா சுங்கை பூலோ: அருமைக் கவிஞர் ஐயா




 

03 செப்டம்பர் 2021

இராஜேந்திர சோழன் கடாரத்தை 66 வருடங்கள் ஆட்சி செய்தாரா?

இராஜேந்திரன் கெப்போங்: மலாயாவிற்கு படையெடுத்து வந்த பேரரசன் இராஜேந்திர சோழன், 66 வருடங்கள் கடாரத்தை ஆட்சி செய்ததாகவும்; தான் கடாரத்தை விட்டுத் தாயகத்துக்குத் திரும்பிய போது ஆட்சி பொறுப்பை மலாய் ஆட்சியாளர்களிடமே விட்டு சென்றதாகவும்; தான் கடாரத்தை ஆட்சி செய்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் தடயங்களையும் பேரரசன் இராஜேந்திர சோழன் விட்டுச் செல்லவில்லை என்று ஆவணங்கள் சொல்வதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பது விளங்கவில்லை.


(Menurut kajian dan manuskrip yang ditemui mendedahkan Raja Chola hanya bertapak di Kedah selama 66 tahun sebelum pulang semula ke tempat asal tanpa membawa dan meninggalkan apa-apa pengaruh.

Ia sekali gus menolak dakwaan kedatangan Raja Chola itu bermakna penduduk asal Tanah Melayu adalah Tamil, sebaliknya ketika itu sudah wujud orang Melayu meskipun belum beragama Islam sehingga kedatangan Parameswara.

Profesor dari Pusat Penyelidikan Dasar dan Kajian Antarabangsa (CenPRIS), Universiti Sains Malaysia (USM), Prof Datuk Dr Ahmad Murad Merican, berkata orang Melayu perlu mengakui semasa 700 ke 800 tahun dahulu sebelum kedatangan Islam, agama yang dianuti pada ketika itu Hindu dan Buddha.

“Pada ketika ini terdapat kecelaruan hingga menyebabkan banyak fakta mengenai asal-usul orang Tamil dan orang Melayu disalah erti.

“Bagaimanapun melalui kajian dan manuskrip yang ditemui, sedikit sebanyak dapat menjelaskan asal-usul kedatangan masyarakat Tamil ke sini,” katanya ketika ditemui pada Forum Migrasi Pertama Masyarakat Tamil ke Tanah Melayu di sini.

Pada forum itu, masyarakat India yang hadir didedahkan dengan penemuan beberapa manuskrip yang menjelaskan sejarah asal-usul mereka dari India ke Kepulauan Melayu, Afrika dan Eropah.

Ahmad Murad berkata, forum itu begitu menarik kerana dapat menjelaskan kecelaruan yang berlaku baru-baru ini, sekali gus memberi pendedahan kepada masyarakat mengenai sejarah tanpa wujudnya elemen hasutan.

“Ini juga sesuatu yang berguna dan memberi kesedaran kepada orang Tamil mengenai sejarah serta warisan mereka,” katanya.

Sementara itu, Timbalan Ketua Menteri II Pulau Pinang, Dr P Ramasamy menegaskan setiap sejarah perlu diperkukuhkan dengan fakta dan bukannya semata-mata emosi serta politik.

Katanya, masyarakat Tamil perlu mengakui bahawa sejak 3,000 tahun dahulu penduduk asal di Tanah Melayu ialah orang Melayu.

“Penduduk asal Tanah Melayu ialah orang Melayu cuma pada ketika itu agama mereka bukan Islam tetapi Hindu dan Buddha sehinggalah wujudnya sultan yang memeluk Islam lalu diikuti seluruh rakyat pada ketika itu.

“Isu yang timbul hari ini kerana berlakunya salah faham ekoran tidak menemui fakta yang tepat dan berputar-belit serta menimbulkan kecelaruan yang perlu diperbetulkan,” katanya.

Tegasnya, setiap perkara berkaitan sejarah jika tidak mempunyai bukti maka ia perlu dirujuk kepada pakar sejarah dan sejarawan untuk mendapatkan maklumat lebih tepat.

“Seperti yang dihuraikan dalam forum ini cukup jelas kepada masyarakat India mengenai asal-usul dan migrasi yang berlaku,” katanya)

(Adakah Orang Asli itu Orang Athi Tamilan dari Pentas Kumari Kandam. Sejarah suatu bangsa bermula sejak mereka mula berjalan. Sejarah Chola Tamil dan Sejarah Melayu 3000 tahun Adalah sejarah terbaru. Sejarah Penduduk Asli lebih tertua lagi.)

முகில்: பதிவிற்கு நன்றி ஐயா. கல்வியாளர்கள் பயன்படுத்தும் ஆழமான மலாய் மொழிப் பதிவு. சாதாரண அன்பர்களுக்கு அதன் விவரங்கள் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை.

தங்களுக்குப் புரிந்து இருப்பதால் தான் இங்கு பதிவு செய்து உள்ளீர்கள். ஆகவே என்ன ஏது என்று தயவு செய்து விளக்கம் கொடுங்கள். அல்லது மொழிபெயர்த்து வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இராஜேந்திரன் கெப்போங்: எனக்கும் வெகுநாட்களாக இப்படி ஒரு சந்தேகம் உண்டு. ஏன் ஓராங் அஸ்லிகள் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்குப் பின் இங்கே அடைக்கலமாகிப் போன சிதறல்களாக இருக்கக் கூடாது .

நாளடைவில் மொழி நாகரீகம் மறந்து போன தமிழ் இனமாக இருக்கக் கூடுமோ எனும் சந்தேகம் எனக்கும் மனதளவில் நிழலாடுகிறது.

ஆனால் இதுவரை ஓராங் அஸ்லிகளின் பூர்வீகம் பற்றிய ஆழமான ஆய்வு இருந்ததாகத் தெரியவில்லை. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம். இராஜேந்திர சோழனின் படையில் இருந்து சிதறிப் போன சிப்பாய்களின் சிதறலாகக் கூட இவர்கள் இருக்கலாம். தவறிருந்தால் மன்னிக்கவும்.

ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங் 🙏

முகில்: இதைப் பற்றி போன 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் மலரில் இரு கட்டுரைகள் எழுதி விட்டேன். பழைய தமிழ் மலர் பத்திரிகைப் புரட்டிப் பாருங்கள் ஐயா...  நன்றி.

பெருமாள் கோலாலம்பூர்: மலாக்கா சிட்டிகளும் மொழி மறந்தவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கும் ,ஓராங் ஆஸ்லி தொடர்பையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

முகில்: நல்ல அருமையான கருத்து. முன்மொழிபவர்தான் முன்னுதாரணமாய் அமைய வேண்டும். முன்மொழிந்த தாங்கள் முன்னெடுத்து ஆய்வு செய்வதே சிறப்பு. எப்போது என்று சொல்லுங்கள். என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்.

ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங்: மலாக்கா செட்டிகள் என்பவர் வியாபார சமூகமாகும். மலாக்காவில் வியாபார நிமித்தம் வந்த இந்திய வம்சாவளியினரின் சந்ததியினரே மொழி மறந்து போன தமிழர்களாக இருக்கலாம்.

தனசேகரன் தவநாதன்: இன்று ஐயாவின் மலாயா கணபதி கட்டுரை போற்றி பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் இந்த நாட்டில் நமது மூன்னோர்களின் தியாக வரலாறு. பேரப் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்து சொல்ல மறக்காதீர்கள் நன்றி ஐயா.

முகில்: மிக்க நன்றிங்க ஐயா... சிரமப்பட்டு எழுதப்பட்டது. பத்திரிகையில் வெளிவந்த  மலாயா தமிழர்களின் வரலாற்றுக் கட்டுரைகளை இங்கேயும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அவற்றை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்கலாம். நம் வாரிசுகளுக்குக் கொண்டு செல்லலாம்.

ஆனால் என்ன... இன்னும் சில நாட்களில் இதே புலனத்தில் ‘யார் இந்த மலாயா கணபதி’ என்று கேட்பார்கள். ஆய்வு செய்யுங்கள் என்று சொல்வார்கள். சற்று சிக்கலான பிரச்சினை தான்.

ராஜா சுங்கை பூலோ: கவிஞர் அவர்களுக்கு, இந்த செய்தி குறித்து கொஞ்சம் விளக்கம் சொன்னால், என்னைப் போன்ற மலாய் புரியாத வர்கலுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.

ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங்: மலாயாவிற்கு படையெடுத்து வந்த பேரரசன் ராஜேந்திர சோழன் 66 வருடங்கள் கடாரத்தை ஆட்சி செய்ததாகவும் தான் கடாரத்தை விட்டு தாயகத்துக்கு திரும்பிய போது ஆட்சி பொறுப்பை மலாய் ஆட்சியாளர்களிடமே விட்டு சென்றதாகவும் தான் கடாரத்தை ஆட்சி செய்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் தடயங்களையும் பேரரசன் ராஜேந்திரசோழன் விட்டுச்செல்லவில்லை என்று ஆவனங்கள் சொல்வதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பது விளங்கவில்லை.

டாக்டர் சுபாஷிணி: மலாயாவிற்கு கிபி பதினோராம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் படை வீரர்கள் வந்து தாக்கி வெற்றி கொண்டு சென்றார்கள். ராஜேந்திர சோழனின் பிரதிநிதி இங்கு ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். இதுபற்றிய செய்திகள் கம்போடிய அரச ஆவணங்களுடன் ஒப்பீடு செய்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ராஜேந்திர சோழன் நேரடியாக கடல் கடந்து அன்றைய மலாயாவில் கடாரம் வரவில்லை. அவரது படைத்தளபதிகள் மட்டுமே வந்தார்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை உறுதி செய்ய அதே காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் மேற்கொண்ட பல்வேறு போர்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. இன்றைய இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் பலவற்றை இராஜேந்திரனின் படைகள் படிப்படியாக கைப்பற்றிய காலகட்டம் அது. அதுமட்டுமல்லாமல் அக்காலகட்டத்தில் இலங்கையிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இன்று கிடைக்கின்ற சோழர்கால கல்வெட்டுகள் பற்றிய தொகுதிகள் இது பற்றிய விரிவான விளக்கத்தை வழங்குகின்றன. தமிழக தொல்லியல் துறையை அணுகினால் தொடர்பு கொண்டால் அங்கிருந்து நீங்கள் கல்வெட்டுகள் தொடர்பான ஏராளமான நூல்களை பெறலாம்.

கணேசன் சண்முகம்: நல்ல தகவல். தகவலுக்கு நன்றி.

மகாலிங்கம் படவெட்டான்: நன்றி.. நல்ல தகவல்... இது வரை இராத்திரி சோழனின்  நேரடி தலைமையில் தான் தென்கிழக்கு பகுதியில் போர் நடந்ததாக அறிவோம்... நன்றி வாழ்த்துகள்.

தேவிசர: அருமை... தன் நாட்டை விட்டு வெளி வரமலேயே தன் படைகளை அனுப்பி பல தேசங்களை வெற்றிக் கொண்டவர் இராஜேந்திர சோழன்.  பெரிய படை பலம், அந்த கால கட்டத்தில் தமிழரிடம் தான் இருந்தது... பெருமை தரும் வரலாறு.

முகில்: திருவாலங்காட்டுச் செப்பேடுகள். சகோதரி முனைவர் சுபாஷிணியின் பார்வைக்கு...

இராஜராஜனின் ஆட்சிக் காலத்தின் 14-ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது கி.பி.1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழனின் படைகள் கடாரத்தின் மீது படையெடுத்த செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு உள்ளது.

கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், அவனுடைய படைகளையும் யானைகளையும் பிடித்துக் கொண்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு உள்ளது.

சங்கராம விஜயோத்துங்கவர்மன் (Sangrama Vijayatunggavarman) என்பவர் இந்தோனேசியாவை ஆட்சி செய்த சைலேந்திரா வம்சாவளி மன்னர் மாறன் விஜயதுங்கவர்மன் என்பவரின் மகன். சங்கராம விஜயோத்துங்கவர்மன் தான் கடாரத்தின் கடைசி ஆட்சியாளராகவும் இருந்தவர்.

இராஜராஜனின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பில் நான்கு படைத் தளபதிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்தார்கள். இதையே நான் என்னுடைய கட்டுரைகளில் பல முறை வலியுறுத்தி வந்துள்ளேன். அந்தமான தீவு தான் அவர்களின் முதல் படையெடுப்பு.

கி.பி. 1021-ஆம் ஆண்டில் இராஜேந்திரனின் படைகள் மேலைச் சாளுக்கியத்தின் மீது படையெடுத்தக் காலக் கட்டம். அது பெரிய போர். பல ஆண்டுகள் நீடித்த போர். அந்தக் கட்டத்தில்  ஈழத்திலும் ஒரு போர்.

தவிர தென்னகத்தில் பாண்டியர், சேரர்களுக்கு எதிராகவும் போர்கள். ஆக இராஜேந்திரனின் முழுக் கவனமும் தெற்கு ஆசியாவில் முழுமையாக இருந்த காலக் கட்டம். மீண்டும் பல ஆண்டுகள் நீடித்த போர். 1025-ஆம் ஆண்டில் இராஜந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பு நடந்தது.

அவர் கடாரத்தைக் கொள்வதற்காக தன் படைத் தளபதிகளை அனுப்பி வைத்தார் எனும் தங்களின் கருத்து ஏற்புடையது.

சாளுக்கியப் போரிலும்; ஈழத்துப் போரிலும்; மேற்கில் சேர நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டு தன் அரசை விரிவாக்கம் செய்து கொண்டு இருந்த காலக்கட்டத்தில் இராஜேந்திர சோழன் கடாரத்திற்கு வந்து இருக்க முடியுமா? ஓர் ஐயப்பாடு.

கடாரத்திற்கு வந்தவர்கள் அவருடைய படைத் தளபதிகளாக ’இருக்கலாம்’ என்பதே என்னுடைய நிலைப்பாடும்கூட.

ராதா பச்சையப்பன்: 🌷🙏மிகவும் சிறப்பு👌🙏🌷.

மலாயா தீபகற்பத்தில் இருந்த தாம்பிரலிங்கா பேரரசின் மீது, கெமர் பேரரசர் முதலாம் சூர்யவர்மன் போர் தொடுப்பதற்கு முன்னர் சோழ மன்னர் இராஜேந்திரனிடம் உதவி கோரினார்.

இராஜேந்திர சோழனுடன் சூர்யவர்மனின் கூட்டணியைத் தெரிந்து கொண்ட பிறகு, தாம்பிரலிங்கா அரசு, ஸ்ரீவிஜய பேரரசின் உதவியை நாடியது.

அப்போது ஸ்ரீ விஜய அரசின் பேரரசராக இருந்த சங்கராம விஜயோத்துங்கவர்மன், தாம்பிரலிங்காவிற்கு உதவி செய்ய முன் வந்தார்.

இதைப் பார்த்த இராஜேந்திர சோழன் தன் படைகளைத் தென்கிழக்கு நாடுகளுக்கு அனுப்பினார் என்று வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

இன்னும் ஒரு விசயம். சோழப் பேரரசும்; கெமர் பேரரசும்; இரண்டும் இந்து சிவ சைவ மதத்தைப் பின்பற்றியவை.

ஸ்ரீ விஜய அரசும் தாம்பிரலிங்கா அரசும் அந்தக் கட்டத்தில் மகாயன புத்த மதத்தைப் பின்பற்றியவை.

ஆக கடாரத்தின் மீதான படையெடுப்பை... இந்து சிவ சைவ மதத்திற்கும்; மகாயன புத்த மதத்திற்கும் இடையே நடந்த படையெடுப்பாகவே நான் கருதுகிறேன்.
-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

டாக்டர் சுபாஷிணி: ஆம். ராஜேந்திரன் காலத்து சூழலில் கிழக்காசிய பகுதிகளில் மிக பலம் பொருந்திய ஒரு கடற்படை சோழ கடற்படை என தாராளமாகச் சொல்லலாம்.

விஜயநகர அதாவது அன்றைய மலாயா இந்தோனேசியா பகுதியை ஆண்ட அரசு சீனாவிற்கான வணிகத்தில் சோழர்களின் ஈடுபாட்டை குறைக்க பல முயற்சியை செய்தார்கள்.

கடாரத்திற்கான இந்த படையெடுப்பு அதனை முறியடித்து இப்பகுதியில் நிலையான வணிகப் போக்குவரத்தை தமிழ் வணிகர்கள் மேற்கொள்ள அக்காலகட்டத்தில் வழிவகுத்தது.

தனசேகரன்: முனைவர் சுபாஷிணி அவர்களின் பதிவிற்கு உங்கள் கருத்து எப்பொழுது பதிவாகும் என காத்திருந்தேன் ஐயா. சிறப்பான விளக்கம் நன்றி ஐயா🌹💕👌🙏

கணேசன் சண்முகம்: அருமையான விளக்கம் ஐயா

வெங்கடேசன்: அருமையான கட்டுரை மிக்க நன்றி. ஐயா. இதை பார்க்கும் பொழுது எனக்கு இலங்கையில் நடந்த யுத்தம் நினைவிற்கு வருகிறது

ராஜேந்திரன் கெப்போங்: ஆம்! மிக ஆச்சரியமான அதிசயமான நம்ப முடியாத சேனை பரிவார கடல் பயணங்கள். 🙏

டாக்டர் சுபாஷிணி: குழுவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இந்த மாத இதழை ஒவ்வொரு பக்கங்களும் படித்து பயன் பெறலாம். தூய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவும் பல நல்ல சொற்களை அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தவும் இது வழி வகுக்கும்.

பொதுவாக பகிரப்படும் செய்திகள் போல ஒதுக்கி விடாமல் தரவிறக்கம் செய்து நேரம் எடுத்து வாசித்து பயன் பெற கேட்டுக்கொள்கிறேன்.

முகில்: மிக்க மகிழ்ச்சிமா சுபாஷிணி... தங்களின் தமிழ்ச் சேவைகள் தொடர வேண்டும். உலகம் முழுமைக்கும் மிளிர வேண்டும். சலைக்காமல் எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். இந்தப் பெண்ணுக்கு தூக்கமே வராதா என்று வியந்து போனதும் உண்டு... வாழ்த்துகிறேன். 🙏🌹




 

02 செப்டம்பர் 2021

உலக வானொலிகள் உங்கள் கரங்களில்

உலகளாவிய நிலையில் எந்த ஒரு வானொலியையும் இப்போது உங்களால் நேரடியாகக் கேட்க முடியும்.

இந்தச் சேவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து (இஸ்ரோ) கிடைக்கும் சேவை.

இணைப்பைக் ’கிளிக்’ செய்யும் போது, உலகம் சுழல்வதைக் காணலாம். நேரடி வானொலிகளின் ஒவ்வொன்றுக்கும் பச்சை புள்ளிகள் உள்ளன.

நீங்கள் தொடும் அந்த இடத்தில் இருந்து வானொலி ஒலிபரப்பை அப்போதே கேட்கலாம். உங்கள் உள்ளூர் வானொலியையும் முயற்சி செய்து பார்க்கவும். உலகம் உங்கள் கையில் சுழல்கிறது.

http://radio.garden/live

-புந்தோங் பக்கிரிசாமி
 

18 ஆகஸ்ட் 2021

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மறைந்த தினம்

1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி *நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்* பயணம் செய்த விமானம் தைவான், பாமோசா தீவுக்கு அருகே விபத்துக்கு உள்ளாகி அவர் இறந்து விட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது.


இந்தச் செய்தி இந்திய மக்களை நிலை குலையச் செய்தது. நேதாஜி இறந்து விட்டார் என்பதைப் பலரும் நம்பவில்லை.

அவருடைய மரணம் மர்மமாகவே இன்றும்கூட தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1967-இல், நேதாஜி மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி. கோசலாவைக் கொண்ட “விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது.

ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்திய ஜி.டி. கோசலா, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.

 

16 ஆகஸ்ட் 2021

தாலிபன்கள் யார்? எழுச்சி பெற்றது எப்படி?

16.08.2021 - BBC News தமிழ்

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்கள், தலைநகர் காபூலில் அமைதி வழியில் ஆட்சியை அரசாங்கம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதன் முன்னோட்டமாக, தலைநகர் காபூலுக்கு வெளியே ஆயதங்களுடன் தம் போராளிகளைக் காத்திருக்குமாறு தாலிபன் தலைமை உத்தரவு போட்டு இருக்கிறது.

இதனால் கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் ஆப்கானிஸ்தானைத் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் நிலையில் இருப்பது உறுதியாகி விட்டது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான நடைமுறைக்கு அரசு தயாராகி வருவதாக ஆப்கன் உள்துறை அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றி பேசி இருக்கிறார்.

இந்த அளவுக்கு அரசாங்கத்தை அடிபணிய வைக்கும் நிலைக்கு தள்ளுவதற்கு தாலிபன்களால் எவ்வாறு முடிந்தது?

2001-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் அகற்றப் பட்டனர். பின்னர் அந்த நாட்டில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தாலிபன்களும் அமெரிக்காவும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் ஒப்புக் கொண்டனர்.

அதன்பேரில், ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் வெளியேறத் தொடங்கின.

இதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தங்களுடைய செல்வாக்கை நிலைநாட்டத் தொடங்கிய தாலிபன்கள், பல இடங்களில் தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.

இன்று கடைசிக் கட்டமாக காபூல் நகரை தாலிபன்கள் சூழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு 20 ஆண்டுகள் ஆகியுள்ளன.

அமெரிக்கா வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள், கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருக்கும் அமெரிக்கத் துருப்புகளை முழுமையாக பின்வாங்க திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், தாலிபன்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் அரசைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில் பல நகரங்களையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

2018-ஆம் ஆண்டு தாலிபன் குழுக்கள் அமெரிக்காவுடன் தாலிபன்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 2020-இல் இரு தரப்புக்கும் தோஹாவில் ஓர் அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது.

அதில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்குவதாகவும், தாலிபன்கள் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டு இருந்தது.

மேலும், அல்-காய்தா போன்ற மற்ற தீவிரவாத அமைப்புகளை, தாலிபன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லைக்குள் இருந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது எனவும்; ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தாலிபன் படைகள், ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் மற்றும் மக்களைத் தொடர்ந்து இலக்கு வைத்து தாக்கியது. தற்போது அமெரிக்கா தன் துருப்புகளைப் பின் வாங்கச் செய்து இருப்பதால், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிவேகமாக, நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யத் துருப்புகள் பின்வாங்கிய பிறகு, பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 1990-களில் தான் 'தாலிபன்' என்கிற பஷ்தோ சொல் உருவானது.

தொடக்கத்தில் தாலிபன் இயக்கத்தில் பஷ்துன்களே அதிகம் இருந்தனர். இந்த இயக்கம் கடுமையான சன்னி இஸ்லாத்தை போதித்தது. இந்த இயக்கத்துக்கு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் இருந்து நிதி உதவி கிடைத்தது.

தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவிக் கிடக்கும் பஷ்துன் நிலப்பரப்புகளில் அமைதியை மீட்டுக் கொண்டு வரவும், தங்களின் கடுமையான ஷரியா விதிகளை அமல்படுத்தவும் உறுதி கூறியது.

ஆஃப்கானிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இருந்த தாலிபன் அமைப்பு, மிக குறுகிய காலத்திலேயே தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. 1995 செப்டம்பரில் ஹெராத் என்கிற ஈரான் எல்லையை ஓட்டி இருக்கும் மாநிலத்தைக் கைப்பற்றியது.

சரியாக அடுத்த ஓராண்டு காலத்தில் ஆப்கன் தலைநகரான காபூலைக் கைப்பற்றியது தாலிபன். அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தார்கள்.

இந்த புர்ஹானுத்தின் தான் ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன் அமைப்பை நிறுவி அவர்களை எதிர்த்து போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேகத்தில் 1998-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 90 சதவீத ஆப்கானிஸ்தானைத் தாலிபன் அமைப்பு கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

தொடக்கக் காலத்தில் தாலிபன்களின் வருகையை மக்கள் வரவேற்றனர். தாலிபன்கள் வந்த இடங்களில் எல்லாம் ஊழலை ஒழித்தனர். சட்டம் இல்லாமல் இருந்ததற்கு ஒரு முடிவு கொண்டு வந்தனர்.

சாலை வசதிகளை ஏற்படுத்தினர். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பாதுகாப்பாகவும் வணிக ரீதியாக செழித்து வளரவும் முடிந்தது. எனவே மக்களும் அவர்களைத் தொடக்கத்தில் ஆதரித்தனர்.

அதே நேரத்தில் தாலிபன்கள் இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்ட தண்டனைகளை அறிமுகப் படுத்தினர் அல்லது ஆதரித்தனர். குற்றவாளியாக அறிவிக்கப் பட்டவர்களை பொது வெளியில் கொல்வது; திருடுபவர்களின் கை கால்களை வெட்டுவது; போன்ற தண்டனைகளை பின்பற்றப்பட்டன.

ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும்; பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடும் புர்காக்களை அணிய வேண்டும்.

டி.வி., இசை, சினிமா போன்றவற்றைத் தாலிபன்கள் தடை செய்தனர். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை அந்த அமைப்பு தடை செய்தது.

பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டன.

2001-ஆம் ஆண்டு, மத்திய ஆப்கானிஸ்தானில் இருந்த உலகப் புகழ் பெற்ற பாமியன் புத்தர் சிலையைச் சிதைத்தது தாலிபன். இதற்கு அனைத்துலக அளவில் மிகக் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

பாகிஸ்தான் தான் தாலிபன் என்கிற அமைப்பு உருவாகக் காரணம். அந்த நாடு தான் தாலிபன் அமைப்பை வடிவமைத்தது என பலரும் கூறிய போது, அதைத் திட்டவட்டமாக மறுத்தது பாகிஸ்தான்.

ஆனால் தாலிபன் அமைப்பில் ஆரம்பக் காலக் கட்டத்தில் இணைந்தவர்கள் பலரும், பாகிஸ்தானில் இருக்கும் மதரஸா பள்ளிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபன்களின் ஆட்சி இருந்த போது அதை அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதைத் தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் ஆதாவை வழங்கின.

அதே போல தாலிபன் அமைப்புடனான தூதரக உறவை முறித்துக் கொண்ட கடைசி நாடும் பாகிஸ்தான் தான் என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தானையே நிலைகுலையச் செய்து விடுவோம் என மிரட்டியது தாலிபன் அமைப்பு.

2012 அக்டோபரில் பாகிஸ்தானின் மிங்கோரா எனும் நகரத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த மலாலா யூசுப்சாய் தாக்கப் பட்டதை ஒட்டுமொத்த அனைத்துலகச் சமூகம், பாகிஸ்தானியத் தாலிபன் தாக்குதலைக் கண்டித்தது.

அடுத்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் தாலிபன்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலில், தாலிபன்களின் ஆதிக்கம் கணிசமாகக் குறைந்தது.

2013-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய டுரோன் தாக்குதலில் ஹகிமுல்லா மெஹ்சூத் உட்பட மூன்று முக்கிய பாகிஸ்தான் தாலிபன் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, உலகின் கவனம் மீண்டும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது.

அல்-காய்தா தீவிரவாத அமைபுக்கும், ஒசாமா பின் லாடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததாகத் தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2001 அக்டோபர் 7-ஆம் தேதி அமெரிக்க இராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் படை கூட்டணி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது.

டிசம்பர் முதல் வாரத்துக்குள் தாலிபன் ஆட்சி நிலைகுலைந்தது. அப்போதைய தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா மொஹம்மது ஒமர், ஒசாமா பின் லாடன் உட்பட சில மூத்த உறுப்பினர்கள் எப்படியோ தப்பி ஓடினர்.

தாலிபனின் பல மூத்தத் தலைவர்கள் பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்டது. அங்கிருந்து கொண்டு தாலிபன் இயக்கத்தை நடத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது.

எத்தனையோ வெளிநாட்டு இராணுவத் துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தாலும், தாலிபன் மெல்ல தன் செல்வாக்கைப் பெற்று தன் அதிக்கத்தை ஆப்கானிஸ்தான் மண்ணில் விரிவாக்கிக் கொண்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் காபூலில் பல்வேறு தாலிபன் தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறின. இதில் கேம்ப் பேசின் பேஸ் தாக்குதல் குறிப்பிடத் தக்கது. தாலிபன் குழுவினர் நேட்டோ படைகள் மீதே நடத்திய தாக்குதல் இது.

கத்தாரில் தாலிபன்கள் ஓர் அலுவலகத்தைத் தொடங்குவது தொடர்பாக அறிவித்த போது, 2013-இல் அமைதி தொடர்பாக சில பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால் மறுபக்கம் வன்முறை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

கடந்த ஆகஸ்ட் 2015-இல் தாலிபன் குழுவின் முக்கிய தலைவரான முல்லா ஒமரின் மரணத்தை மறைத்ததாக ஒப்புக் கொண்டது. அவர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து துணைத் தலைவராக இருந்த முல்லா மன்சூர் தாலிபன் குழுவின் தலைவரானார். இதே காலக் கட்டத்தில், மிக முக்கிய நகரங்களில் ஒன்றான குண்ட்ஸை வெற்றி கொண்டது தாலிபன்.

இது 2001-இல் தாலிபன் சந்தித்த தோல்விக்குப் பிறகு காணும் முக்கிய வெற்றிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு மே மாதம் முல்லா மன்சூர் ஒரு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் பதவிக்கு மற்றொரு தாலிபன் தலைவரான மெளலவி ஹிபாத்துல்லா அகுந்த்ஸாதா என்பவர் வந்திருக்கிறார்.

இப்போது வரை இவர் தான் தாலிபன் இயக்கத்தின் தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார்.

பிப்ரவரி 2020 அமெரிக்கா தாலிபன் அமைதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, தாலிபன் சிக்கலான தாக்குதல் நடத்துவதை கைவிட்டது.

நகரங்கள் மீது, இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து, தனி மனிதர்களை இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது.

பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அமைதிச் செயல்பாட்டாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் என இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது.

அது தாலிபன்கள் தங்களில் தீவிரவாத கொள்கையில் இருந்து மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

வெளிநாட்டுப் படைகள் இல்லையெனில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தாலிபன்கள் கைப்பற்றி விடலாம் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இதற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் 2021-இல், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்த அமெரிக்கத் துருப்புகளும் பின்வாங்கப்படும் எனக் கூறினார்.

ஏற்கனவே பல்வேறு நாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கி விட்டன. எனவே தாலிபன்கள் பல்வேறு நிலப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.

நேட்டோவின் மதிப்பீடுகள் படி, தற்போது 85,000 முழு நேரப் போராளிகள் தாலிபனில் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலப் பகுதிகளை வரையறுப்பது கடினம்.

இருப்பினும் ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு முதல் ஐந்தில் ஒரு பங்கு வரை தாலிபன்கள் நேரடியாக கட்டுப்படுத்தி வருவதாகச் சமீபத்தைய கணிப்புகள் கூறுகின்றன.

பலரும் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக தாலிபன்களின் விரிவாக்கம் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் மோசமான உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அமெரிக்க படைகளை வழி நடத்திய ஜெனரல் ஆஸ்டின் மில்லர் என்பவர் கடந்த ஜூன் மாதம் எச்சரித்தார்.

மேலும் இது ஒட்டு மொத்த உலகத்துக்கே கவலை அளிப்பதாக அமையலாம் எனவும் கூறி உள்ளார்.

அதே மாதம் வெளியான அமெரிக்காவின் புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையில், அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்ற பிறகு, அடுத்த ஆறு மாத காலத்துக்குள், ஆப்கானிஸ்தான் அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. அந்த ஊகம், தற்போது உண்மையாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

பின்னூட்டங்கள்:

கென்னடி ஆறுமுகம்:
ஆப்கானில் தலிபான் ஆட்சியை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக சீனா விளங்குகிறது.

முகில்: தலிபான்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் சொல்லப் படுகிறது. தெற்கு ஆசியாவில் இனி சீனாவின் கை ஓங்கும்இருக்கலாம் ஐயா.

கென்னடி ஆறுமுகம்:  அமெரிக்காவை எதிர்கொள்ள இது அவர்களுக்கு உதவலாம்.

முகில்: இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ஆப்கான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

கணேசன் சண்முகம்: அடுத்து ஆப்கானிஸ்தானில் சீனாவில் பணத்தை அள்ளி  வீசும்.

முகில்: இந்தியாவை மிரட்டுவதே அதன் நோக்கம்.

கென்னடி ஆறுமுகம்: ஆப்கானில் இந்தியாவின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

கணேசன் சண்முகம்: கண்டிப்பாக

கென்னடி ஆறுமுகம்: அவர்களுக்கு பாலஸ்தீனத்துக்கு போராடவே நேரம் போதவில்லை. இதுவரை எந்த அரபு தேசமோ, இஸ்லாமிய நாடுகளோ ஆப்கான் மக்களுக்கு ஆதரவாக இதுவரை குரல் எழுப்பவில்லை.

முகில்: காபூல் விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி அதன் பாதுகாப்பை அமெரிக்க கூட்டுப் படையினர் மீட்டுள்ளனர். காபூல் நகரின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை கைப்பற்ற அமெரிக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக ஆப்கன் படையினர் தாலிபன்களிடம் வீழ்ந்து விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது

அமெரிக்காவின் உதவியுடன் ஆப்கன் படையினர் இயங்கி வந்தனர். அந்த வகையில் அமெரிக்காவை ஆப்கானிஸ்தானில் இருந்து துரத்த வேண்டும் என்பதே சீனாவின் இலக்கு. அப்படித்தான் சீனாவின் அரசியல் சாணக்கியம் செயல்படுகிறது. செயல்பட்டு வந்தது.

கென்னடி ஆறுமுகம்:  ஆமாம் ஐயா. அமெரிக்க கூட்டுப்படைகள் ஆப்கான் மண்ணிலிருந்து வெளியான பிறகு தான் தாலிபான் உத்வேகம் எடுத்தார்கள். ஆனால் வெகு விரைவாகவே ஆப்கானை கைப்பற்றி விட்டார்கள்.

முகில்: தாலிபன்கள் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும், துணை அதிபர் அமிருல்லா சாலேயும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

அமெரிக்கா வெளியேறுவதற்கு முன்னர் ஆப்கான் படையினருக்கு போதுமான பயிற்சிகள் போதுமான தளவாடங்களை வழங்கி உள்ளனர்.

கென்னடி ஆறுமுகம்: ஆப்கான் இராணுவமும் எதிர்ப்பு காட்டாமல் அடங்(க்)கி விட்டார்கள்.

முகில்: ஆனால் சீனாவில் உதவிகள் அமெரிக்காவின் இலக்கைச் சிதறச் செய்து விட்டன. ஆமாம். அவர்கள் அப்படியே தலிபான் பக்கம் சேர்ந்து கொண்டார்களாம்... சண்டைகள் போடாமல்... தலிபான்களுக்கு வசதியாகிப் போனது

கென்னடி ஆறுமுகம்:  அனைத்து போர் தளவாடங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். அவற்றுள் பல ஆயுதங்களை அவர்களுக்கு (தாலிபான்) தெரியவில்லையென செய்தி.

முகில்: ஆப்கானிஸ்தான் முக்கிய தலைவர்கள் எல்லாம் அமெரிக்காவிற்குச் சென்று விட்டார்கள். நாட்டை நடத்த ஆப்கான் தலைவர் எவரும் இல்லை... அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று செய்திகள் வருகின்றன...

முகில்: என்ன நடக்கும். உங்களால் யூகிக்க முடிகிறதா? பாகிஸ்தானுக்கு ஆபத்து... சீனா உள்ளே வரும்.

கென்னடி ஆறுமுகம்:  எல்லாம் வல்லரசு நாடுகளின் கையில். (அமெரிக்கா, சீனா) அவர்கள் ஆட்டுவிப்பார்கள்... இவர்கள் ஆடுவார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா.

ஆனால் பாவம் அங்குள்ள பொதுமக்களின் நிலை கேள்விக்குறியே?

முகில்: மத்திய கிழக்கு நாடுகள் உடையும். அங்கே சீனாவின் உதவிக் கரங்கள் நீளும். இந்தியாவின் வல்லரசு கனவு பலிக்கும் காலம் நெருங்கி வருகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நண்பர்கள்.

சீனாவை எதிர்ப்பதற்கு அமெரிக்கா, இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியா விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.

[7:28 pm, 16/08/2021] Kennedy Arumugam Grik Perak: இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் (பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாள், பூடான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான்) அனைத்திலும் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இது இந்தியாவிற்கு கெட்ட செய்தி.

[7:28 pm, 16/08/2021] Kennedy Arumugam Grik Perak: இது நிதர்சனமான உண்மை ஐயா.

முகில்: மூன்றாம் உலகப் போர் வராமல் இருந்தால் சரி. ஏன் என்றால் அப்படி வந்தால் மனுக்குலம் அழிந்து போகலாம்.

கென்னடி ஆறுமுகம்:  ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே பலத்த போட்டி.

முகில்: அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா எல்லாமே அணுகுண்டுகளை வைத்து இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னால் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். படித்து இருப்பீர்கள்.

கென்னடி ஆறுமுகம்:  அப்படி ஒன்று வந்தால் அதில் சீன தேசம் முக்கிய காரணியாக இருக்கும்.

முகில்: 50% 50%... இந்தியா சீனா...

கென்னடி ஆறுமுகம்: ஆமாம் ஐயா.

முகில்: சரி தம்பி கென்னடி. நல்ல அறிவார்ந்த இளைஞராய் உள்ளீர்கள். வாழ்த்துகள். பின்னர் பார்ப்போம்.

நிறைய அனைத்துலக நடைமுறை விசயங்களை தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். 👍👍

கென்னடி ஆறுமுகம்: மகிழ்ச்சி ஐயா நன்றி 🙏🙏

தனசேகரன் தேவநாதன்: கடந்த காலங்களில் தங்களின் சீன எல்லைகள் விரிவாக்கம் இந்திய நிலை கட்டுரைகள் நினைவிற்கு வருகிறது ஐயா யானையும் யானையும் மோதி பூனைகள் நசுங்கிப் போகலாம்🧐🧐🧐🧐🧐







 

14 ஆகஸ்ட் 2021

செஞ்சோலை சிறுவர் இல்லப் படுகொலை

14.08.2021

2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் நாள் தமிழரின் வரலாற்றில் துயர் படிந்த ஒரு நாளாகும்.

தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம். உலகத்திலேயே அதிகளவு பெண்கள், அதுவும் பள்ளிக்கூட  மாணவிகள் ஒட்டு மொத்தமாகக் கொல்லப் பட்டது ஒரு வரலாறாக மாறி இருக்கிறது.


உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு செயல் நடக்கவில்லை அந்தச் சாதனையை இலங்கை அரசாங்கம் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் திகதி அதிகாலை வேளையில் நடத்தி முடித்தது.

வன்னிப் பகுதியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய இடங்களில் இருந்து கல்விப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து செல்லப்பட்ட 400 மாணவிகளில் 61 மாணவிகள் சில மணித் துளிகளில் மரணித்து போனது ஈழ மண்ணை சோகத்தில் மூழ்கடித்தது.

இந்தப் பயிற்சி  வகுப்புகள் ஆகஸ்ட் 11, 2006-இல் இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.


ஆனால் பயிற்சி வகுப்புகள் தொடங்கிய மூன்றாவது நாளே மாணவிகள் இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப் பட்டனர் .

பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப் போய் கிடந்தன. துள்ளிக் குதித்து ஓடிய கால்கள் தசை குவியலாகக் கிடந்தன. கனவுகளைச் சுமந்த நெஞ்சு குண்டு சிதறலால் கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக் கொண்டு கிடந்தது.

அதிகாலை வேலை கிணற்றடியிலும், கழிப்பறையிலும், சமையலறையிலும், தத்தம் கடமைகளில் இருந்த மாணவிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப் பட்டனர் .

காலை வேளையில் இலங்கை அரசின் வெறி பிடித்து வந்த கிபிர் விமானங்கள் ஆறு முறை குண்டுகளைக் கொட்டியது. கொட்டப்பட்ட குண்டுகள் திட்டமிட்டபடி முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்டது.


மாணவிகள் வாயிலின் ஊடாக ஓட முடியாதபடி வகுக்கப்பட்ட திட்டத்தின் முதற்படி இது. அடுத்த ஐந்து குண்டுகளும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நான்கு திசைகளிலும் போடப்பட்டு ஆறாவது குண்டு மீண்டும் வாயிலில் போடப்பட்டது .

மாணவிகள் எந்தத் திசை வழியாகவும் வெளியே ஓட முடியாதபடி திட்டமிட்டு குண்டுமழை பொழியப் பட்டது.

அங்கிருந்த நூற்றுக் கணக்கான மாணவிகளின் ஓலம் இப்போதும் காதில் ஒலிக்கிறது. ஒவ்வொரு உடலாக அள்ளி எடுத்த கரங்கள் இப்போதும் இரத்தக்கறை மாறாது இருக்கிறது.


உலக வரலாற்றில் நடந்த மறக்க முடியாத கொலைகளில் பிஞ்சு குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்ட இந்த நாளை தமிழர்களால் எப்படி மறக்க முடியும்?

நன்றி: சங்கதி -கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

பின்னூட்டங்கள்:

வெங்கடேசன்: கொடூர அரக்கக் குணம் கொண்டவர்களால் கொல்லப்பட்ட நம் பிள்ளைகளுக்கு இதய பூர்வ அஞ்சலி். எவ்வளவு உயிர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்டனர். உலகமே இன்று வரை, கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. வேதனை. இனப் படுகொலையாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர். மனித குலமே வெட்கித் தலை குனிய வேண்டும் 😡😡

தேவிசர கூலிம்: படிக்க முடியவில்லை கண்களில் கண்ணீர் திரையிடுகிறது. கொடும் பாவிகளை இன்னும் அந்த இறைவன் விட்டு வைத்திருக்கிறாரே...

முகில்: தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கி வரலாறு படைப்பது உண்மைதான். போற்றுகிறோம். ஆனால் செஞ்சோலையில் குண்டுவீசி 400 குழந்தைகள் கொல்லப் படுவதற்கும்; தொடர்ந்து இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் படுவதற்கும் காரணமாக இருந்த சிங்கள அரசிற்குத் துணை போனவர்கள் ஒரு கொலைஞர் குடும்பம் தானே..இதை எந்த வரலாற்றில் சேர்ப்பதாம்?

இதற்குத் துணை போன குடும்பத்தாரைத் தூக்கி வைத்துப் புகழும் இனத்தவரைத் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப் படுகிறேன்.

தமிழீழத்தில் தமிழன மக்களை அழிப்பதற்குத் துணை போன குடும்பத்தின் புகழாரங்களைத் தயவு செய்து இந்தப் புலனத்தில் பகிர வேண்டாம்.

வெங்கடேசன்: இனத் துரோகி. இவர் நினைத்து இருந்தால் ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். தன் மக்களுக்காக இனத்தையே பலி் கொடுத்தவர். துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது 😭

முருகன் சுங்கை சிப்புட்:

முகில்: ஓர் இனம் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கும் போது, தன் மகளுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக டில்லிக்கு வேட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடியவர். அவர் குடும்பத்தின் இனம் மானம் காக்க வேண்டும். அப்படித்தானே.

சாப்பிடுகிற சோற்றில் உப்பு போட்டுச் சாப்பிடும் எந்தத் தமிழரும் ஓர் இனத்தை அழித்தக் குடும்பத்திற்குப் பரிந்து பேச மாட்டார்.

முருகன் சுங்கை சிப்புட்: எப்படி அய்யா. வெறும் வாய்மொழியிலா..? செயலிலா? அதையும் சொல்லி விட்டால் நம் இனத்தில் தான் இன மானம் காக்க நிறைய போராளிகள் உள்ளனரே உடனே திரண்டு விடுவார்கள்.

மொத்தமாக ஓர் இனம் போரால் அழிந்து, வறுமையில் வாடிக் கொண்டும், அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம். அந்த வருடத் தீபாவளியை பட்டாசு வெடித்துக் தானே கொண்டிருந்தோம். எங்கே போச்சு நம் இன உணர்வு அய்யா...

முகில்: இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே புலனத்தில் ஒரு வாக்குவாதம். அதில் தாங்கள் சொன்னது: தமிழீழத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்படும் போது மலேசியத் தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பூப்பறித்துக் கொண்டு இருந்தார்களா என்று கேட்டீர்கள். நினவு இருக்கிறதா. நீங்கள் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை.

அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, இன்றைக்கு அந்தக் கொலக்காரக் குடும்பத்திற்குப் பரிந்துரை செய்வது போல ‘இன மானம் காப்போம்’ என்று சப்போர்ட் பண்ணுவது, அறவே எனக்குப் பிடிக்கவில்லை.

முருகன் சுங்கை சிப்புட்: திசை திருப்பவில்லை அய்யா. வழியைச் சொல்லுங்கள்... நான் வாய் சொல் வீரன் அல்ல. கலைஞர் எனக்கும் எதிரிதான்😡

முகில்: இப்படித்தான் அன்றைக்கும் கேட்டீர்கள். என்னத்த வழி சொல்வது. முதலில் உங்களுக்கு என்று ஒரு கொள்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

தமிழீழ மக்கள் சாகடிக்கப் படுவதற்கு துணை போன குடும்பம் என் எதிரிகள் என்று வைராக்கியக் கொள்கை வேண்டும்.

கொலக்காரக் குடும்பம் ஆயிரத்தெட்டு நன்மைகள் செய்தாலும் செத்துப் போன இரண்டு இலட்சம் தமிழர்கள் மீண்டு வந்துவிடப் போவது இல்லை.

ஆச்சு பூச்சு என்றால் மலேசியத் தமிழர்கள் தீபாவளி கொண்டாடி பட்டாசு கொளுத்தினார்கள் என்று கதையை மாற்றி விடுவது.... போதும்.

நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள். சிராங்கூன் ரோட் அம்மாச்சி பூக்கடையில் பூமாலை கட்டிக் கொண்டு இருந்தீர்களா.

தயவு செய்து எதைப் பற்றி பேசுகிறோமோ அதைப் பற்றி பேசுங்கள்... தீபாவளி பட்டாசு கதை எல்லாம் வேண்டாம். சரிபட்டு வராது.

முருகன் சுங்கை சிப்புட்: உண்மை அய்யா... மீண்டும் சொல்கிறேன் நான் இனமானம் உள்ளவன்.  அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி போட்டு விட்டு தப்பித்து கொள்ள நினைக்காதவன். தப்பு என் மீதும் உண்டு... உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழர்கள் மீதும் உண்டு. "பழமையே பேசிக் கொண்டு எதிர்காலத்தை பற்றி துளி அளவும் சிந்திக்காதவர்கள் நாம்"

முகில்: சரிங்க ஐயா. நீங்க இனமானம் உள்லவர். எங்களுக்கு எல்லாம் இல்லை. அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள். தயவு செய்து திசை திருப்ப வேண்டாம். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. பிறகு பார்ப்போம்.

முருகன் சுங்கை சிப்புட்: நான் நிறுத்திக் கொள்கிறேன் அய்யா. ஏதாவது தப்பாக பேசியிருந்தால் மன்னிக்கவும்.

முகில்: ஏற்கனவே டென்சன்.. இதில் இன்றைக்கு வேறு. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் எனக்கும் பிரசர் எகிறிப் போய் மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும். நிறுத்திக் கொள்கிறேன். நன்றி.

வெங்கடேசன்: உடல் நலத்தில் கவனம் தேவை ஐயா🙏

முருகன் சுங்கை சிப்புட்: தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தான். நன்றி

முகில்: நான்கு வயதிலேயே காது குத்தி விட்டார்கள். ஏழு வயதில் அரிச்சுவடியை மணலில் எழுத, காதில் போட்டு இருந்த கடுக்கனைக் கழற்றினேன். மறுபடியும் குத்த வேண்டியது இல்லை. 🙏

தனசேகரன் தேவநாதன்: ஈழத் தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் அன்றைய சூழ்நிலையில் செய்ய இயன்றதைச் செய்தார்கள். எப்படி என்ன என்று கேட்காதீர்கள் செய்தவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் 💪💪💪💪💪💪😄

ஜீவன் தங்காக்: உண்மை

முருகன் சுங்கை சிப்புட்: இனி இந்த புலனத்தில் பயணம் செய்வதில் ஆர்வம் இல்லை. இதுவரை உங்களுடன் பயணம் செய்ததில் மகிழ்ச்சி... நிறைய கற்றுக் கொண்டேன். அருமையான குடும்பம். கருத்துச் சுதந்திரம் மட்டுமே இல்லை. மிகுந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன்! அனைவருக்கும் நன்றி.🙏🙏🙏

[10:50 pm, 14/08/2021] Satya Francis: ஒரு தந்தை இல்லாமல் நாங்கள் எப்படி ஒரு குடும்பமாக பயணம் செய்ய முடியும்? தயவுடன் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் ஐயா...

[10:52 pm, 14/08/2021] Satya Francis: வணக்கம் ஐயா. இப்படி எல்லாம் நீங்கள் விடை பெற்றுக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது?

முகில்: இரண்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் சாகடிக்கப் பட்டதை ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்களாம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்டார்களாம். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்தது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தானாம்

அநியாயத்தை நியாயப் படுத்த கதைகள் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனசாட்சி இல்லாமல் எப்படிங்க இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா? நியாயமே இல்லை. 🙏

கரு ராஜா சுங்கை பூலோ: ஆமாம் முருகன் சொன்ன கருத்தை ஏற்க முடியாது.

கணேசன் சண்முகம்: உண்மை ஐயா.

கரு ராஜா சுங்கை பூலோ: தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அராஜகம்.

[11:05 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஈழத தமிழர்கள் எப்படி ஏற்றுக் கொண்டு இருப்பார் கள்

[11:08 pm, 14/08/2021] Raja Sg Buluh: தமிழ் நாட்டுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் ஏற்க முடியவில்லை.

[11:10 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு சில சூடு சொரனை இல்லாத தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம்!!!!!?

[11:11 pm, 14/08/2021] Raja Sg Buluh: எல்லாத் தமிழனையும் சூடு சொரனை இல்லாதவர்கள் என்று நினைக்க வேண்டாம்

[11:13 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு கருத்து சொல்லும் போது யோசித்து சொல்லனும்.

[11:15 pm, 14/08/2021] Raja Sg Buluh: கருத்து சுதந்திரம் என்று ஏற்க முடியாத கருத்துக்களைச் சொல்வது தப்பு. உலகமே அழுதது. இதை உலக தமிழர்கள் இவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா??????

கணேசன் சண்முகம்: உலகத் தமிழர்கள் மனதில் ஆழமாய் பதிந்த மரணச் சம்பவம்.


முகில்: இந்த முகங்களைப் பாருங்கள். எத்தனை வயது. இந்தக் குழந்தைகள் தான் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகள். இவர்கள் மட்டும் அல்ல. 400 குழந்தைகள்.

இந்த மாதிரி சின்னஞ்சிறுசுகளைக் கொன்று போட்ட கூட்டத்திற்குத் துணை போன கும்பலுக்கு பரிவு காட்டுவது நியாயமா?

இப்படி எல்லாம் நடந்த பிறகு ’தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்..புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார் என்று கதை சொல்வது நியாயமே. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.

Raja Sg Buluh: இதை எல்லாம் எப்படி மறக்க முடியும்???

கணேசன் சண்முகம்: கண்டிப்பாக மறக்க முடியாத சம்பவம். உடல் சிதைந்த , உயிரற்ற உடல்கள்.

வெங்கடேசன்: உண்மையான தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள். காலப் போக்கில் மறக்கடிக்கப் படலாம். ஆனால் வரலாற்றை மாற்ற இயலாது. கொடுமைகளை நேரில் அனுபவித்தவர்கள் இன்னும் சிலர் சாட்சிகளாக உயிருடன் இருக்கிறார்கள்.

ராதா பச்சையப்பன்: அன்று சேதி கேட்டு அழுததை, இன்றும் நினைத்து பாருங்கள். இனியும் இது போன்று வேண்டாமே...








 

தந்தைகளின் இறுதிக்காலம்

14.08.2021

தந்தைகளின்  இறுதிக்காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும்; முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர், அவரைக் கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.

மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, ’மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும்’ என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடம் இருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்.

எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காகக் கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
.
பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதை செய்து இருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

வயதானவர்களுக்குத் தனிமை மிக கொடுமையானது. ஒரு சிறிய வானொலிப் பெட்டியை வாங்கி கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி. இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்துத் தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

குடும்பத் தலைவன் என்பவன் அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்று எல்லாம் வாழ்ந்து விட்டவன்.

தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.

ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு.

பின்னூட்டங்கள்

தேவிசர கூலிம்: அருமையான அவசியமான பதிவு... முற்றிலும் உண்மையான கருத்துகள்... என் தந்தையின் ஞாபகம் வருகிறது. அப்பாவிற்காகவே மாதத்தில் இரண்டு முறை வீட்டிற்கு செல்வேன்.

அம்மா தவறி விட்டதால் அப்பாவை நாங்கள் நன்றாகவே பார்த்துக் கொண்டோம். இருந்தும் அவர் பாதுகாவலர் வேலைக்குச் செல்வார். யார் கையையும் எதிர் பார்க்க மாட்டார்.

சிறப்பான உணவு செய்தால், கணவரிடம் வேலைக்குச் செல்லும் வழியில் அப்படியே கொடுத்துச் செல்லுங்கள் என்று கொடுத்து அனுப்புவேன். இதைப் படித்தவுடன் அதெல்லாம் ஞாபகம் வருகிறது.

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா. தந்தையர்களுக்காக இந்தப் பதிவு. வரிக்கு வரி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற ஒரு காலம் இருந்தது. இன்றில்லை. தந்தையர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிறப்பு.

பெருமாள் கோலாலம்பூர்: பிள்ளைகளுக்காக ஒரு தந்தையின் எதிர்பார்ப்பை அழகாக விவரித்துள்ளீர். ஆனால் பெற்றவர்கள் கொடுத்தே பழக்கப் பட்டவர்கள். பிள்ளைகளிடம் கேட்டுப் பெறாதவர்களாகவே வாழ்ந்து உள்ளனர்.👍👌

ராதா பச்சையப்பன்: 🌻🙏படித்ததும் மனம் அழுகிறது. எட்டு வயதிற்குப் பிறகு தந்தை பாசம் இல்லை. அப்பாவுக்குச் செல்லப் பெண் நான். திருமணத்திற்குப் பிறகும் மாமனாரும் இல்லை. பார்த்ததும் இல்லை. இதை எல்லாம் நினைக்கையில் வேதனைதான். 🙏🌻

வெங்கடேசன்: கலங்க வேண்டாம் மா. பெண் பிள்ளைகள் கலங்கக் கூடாது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் தந்தை மாதிரிதான். நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பிள்ளைகள் தான். கலங்க வேண்டாம் 👍🙌🙌

பாலன் முனியாண்டி: இன்றைய பிள்ளைகள் உணர்வார்களா என்பது கேள்வி குறிதான் ஐயா.

காரணம் அன்று முதியோர் இல்லம் பார்ப்பதற்கு அரிதாக இருந்தது.
இன்று பார்க்கின்ற இடமெல்லாம் முதியோர் இல்லத்தை  காண முடிகின்றது. இதற்கு என்ன காரணமென்று நினைக்கின்றீர்கள்.....

 இந்த கட்டுரை படித்தபோது  கண்கள் கலங்கின....


13 ஆகஸ்ட் 2021

மலேசியத் தமிழர்களுக்கு குலசேகரன் உதவிகள் செய்யவில்லையா?

13.08.2021

மாண்புமிகு குலசேகரன் அமைச்சராகச் சேவை செய்த காலத்தில், அவர் மலேசிய தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் அரசாங்கம் அமைவதற்கு முன்னர், பக்காத்தான் ஹரப்பான் கட்சி ஒரு கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டது. வழக்கமாக எல்லாக் கட்சிகளும், பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.

ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாக அந்தக் கொள்கை விளக்க அறிக்கையில் சொல்வார்கள்.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் கட்சி வெளியிட்ட அந்தக் கொள்கை விளக்க அறிக்கையை முன்வைத்து, மாண்புமிகு குலசேகரனைத் தரம் தாழ்த்திச் சிறுமைப் படுத்தும் ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் காணொலியும் பதிவாகி உள்ளது.

சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டிவிட வேண்டுமா என்று அந்தக் காணொலிப் பதிவாளர் கேட்கிறார். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கரு. ராஜா: இந்த அம்மணி நியாயமாகப் பேசுறாங்க... ஒரு தமிழனை, குறை சொல்ல, தமிழர்கள் தான் வருகிறார்கள்.

......: நியாயமான கருத்துரை. மாண்புமிகு குலசேகரன் அமைச்சரானதும் ஏற்கனவே இருந்த அதிகாரம் என்ன என்ன செய்து இருக்கிறது; அந்த அதிகாரத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்து அறிக்கை தயாரிக்கவே ஆறு மாதங்கள் பிடித்தன. கோப்புகள் மேல் கோப்புகள்.

இவர் அமைச்சராவதற்கு முன்பு இருந்தே நண்பராக இருந்தவர். அதனால் சில பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். பொதுவில் பகிர இயலாது. அரசு நிந்தனையாகலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வெளியே தெரியாமல் நம் இனத்திற்கு நிறைய உதவிகள் செய்து உள்ளார். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது ஐயா.

......: உங்களுக்கும் அதைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன்

தேவிசர கடாரம்: இவர் இந்திரா காந்தியின் வழக்கிற்கு பணம் வாங்கவில்லை என்று கேள்விப்பட்dஉ இருக்கிறேன்...

......:உண்மைதான். இந்திராகாந்தியின் பிரச்சினை இந்த நாட்டுத் தமிழர்களின் பிரச்சினை எனும் முன்னெடுப்பில் நகர்ந்தவர். ஒரு கட்டத்தில் அவர் பணிபுரிந்த பாலர் பள்ளியில் அவருக்கு ஊழியப் பிரச்சினை; ஊதியப் பிரச்சினை. அவற்றுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டவர். இங்கு விளக்கமாகச் சொல்ல இயலாது. புரிந்து கொள்ளும்மா...

சித்தியவான் சனாதன ஆசிரமம்

தனசேகரன் தேவநாதன்: சித்தியவான் சனாதன ஆசிரம குழந்தைகளின் அடையாள அட்டை பிரச்சனைகளை 90 சதவிகிதம் தீர்வு கண்டவர். பொறுப்பில் இல்லாத போதும் இருந்த போதும் அந்த ஆசிரமத்திற்கு இன்று வரை உதவி வருபவர்.

இவ்விடம் வந்தால் ஆசிரமக் குழந்தைகளுடன் நிறைய நேரத்தை செலவிடும் அன்பான மனிதர். தனது பதவி காலத்தில் பெரிய மானிய தொகையை ஆசிரம குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கியவர். சித்தியவான் மண்ணிற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் 🙏🌹👌🙏🌹👌

......: தகவலுக்கு நன்றிங்க. ஆயர் தாவார், சித்தியவான் பகுதிகளில் தமிழர்கள் பலருக்கு நீல அடையாள அட்டைகள்; குடியுரிமை சான்றிதழ்கள் பெற்றுத் தந்துள்ளார். உண்மை.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

கணேசன் சண்முகம் சித்தியவான்: தெரியும் ஐயா. அன்றைய நிகழ்வை நான் தான் வழி நடத்தினேன். அமைச்சர் என்ற முறையில் சிறப்பான சேவையை செய்தார் ஆசிரமத்திற்கு.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தகவலுக்கு நன்றிங்க கணேசன் ஐயா. கண்ணுக்குள் ஈரம் இருப்பது நமக்கும் தெரியாது. வெளியே உள்ளவர்களுக்கும் தெரியாது. கண்ணுக்கு மட்டுமே தெரியும்.

வெங்கடேசன்: ஒருவரை பற்றி நன்கு ஆராயாமல் கண்டபடி புலனங்களில் திட்டுவது நம் மக்களுக்கு வா(வே)டிக்கையாகி விட்டது 🤷



 

தெலுக் இந்தான் கோவிந்தன் ஆசிரியர்

13.08.2021

தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பளியின் முன்னாள் தலைமையாசிரியர். நேற்று கோவிட் 19- தொற்றினால் காலமானார். மிகவும் அமைதியானவர். இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கோவிட் இறப்பு. நம்ப முடியவில்லை.


வெங்கடேசன்: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்தான் அதிகமாக இறந்து போகிறார்கள். என்னவென்றே புரிய வில்லை ஐயா 🤷‍♀️

நெடுஞ்செழியன் பிரிக்பீல்ட்ஸ்: தடுப்பு ஊசி போட்டு விட்டால் கோறணி தொற்றாது என்ற அறியாத்தனத்தில் எற்படும் அலட்சிய போக்கின் விளைவு

கலைவாணி ஜான்சன்: கொடுமை ஐயா.. இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தொற்று கண்டு இறப்பது.. நம்மவர்களின் மரணங்கள் அதிகம் ஐயா... வேதனை... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராதா பச்சையப்பன்: நாம் யாருக்கும், பிறந்த நாள், திருமணநாள் போன்ற நல் வாழ்த்துகளைக் கூறுவதை விடுத்து, இப்படி  இரங்கல், அனுதாபம் ஆத்ம சாந்தி ஓம் நமசிவாய என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறோமே...

இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு... என்னவோ, ஏதோ என்று பயந்து பயந்து  வாழப் போகிறோம். அலைபோசி சத்தம் வந்தாலும் முன் போல் சந்தோசமாக எடுப்பதை விட்டு, எடுக்கலாமா, வேண்டாமா? யாருக்கு என்னவோ" என்ன சேதியை சொல்லப் போகிறார்களோ என்று தினம் தினம் மனம் திக் திக் என்று அடித்துக் கொள்கிறது.

நிம்மதியாக உண்டு, உறங்கவும் இயலவில்லையே" இவற்றை நாம் கடந்து போவது எப்போது என்று மனம் அழுகிறது. தீர்வு எப்போது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் 😭🙏🙏.

கலைவாணி ஜான்சன்: மிக உண்மை சகோதரி....கைப்பேசி அழைப்பு, அனைவரையும் பயத்தில் ஆழ்த்துகிறது.

தேவிசர கடாரம்: உண்மை சகி... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு இன்றைய சூழலில் அதுவும் சம்பவமாகிவிடக்கூடாது... அதுவே என் பிராத்தனை.

கலைவாணி ஜான்சன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். சகோதரி. ஏற்புடையது. ஏற்றுக் கொள்வோம்...

தேவிசர கடாரம்: இன்றைய சூழ்நிலையில் நம்மவர்களின் இறப்பு விகிதம் மனவேதனையை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை வேண்டாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு தடுப்பூசி போட்டாச்சு... தைரியமாக வெளியில் செல்லலாம் என்று அலச்சிய போக்கோடு செயல் படுகிறார்கள். இரண்டுமே வேதனையை அளிக்கிறது. 🥺

வெங்கடேசன்: ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்னுடைய நண்பர்கள் சிலர் இப்படிதான் அலட்ச்சியமாக இருக்கிறார்கள். தடுப்பூசியை பற்றிய விழிப்புனர்வு மிக குறைவு. தடுப்பூசி செலுத்திய பிறகு நம் உடலில் அது எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து வைத்து கொள்வது இல்லை 🤷‍♀️

கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த அனுதாபங்கள்...! நித்தமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மரண செய்திகள். இறைவா... உலக மக்கள் அனைவரையும் இந்த பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றுவாயக...!

கரு ராஜா: நாட்டில் மரணச் செய்தி மிக சர்வ சாதாரணமாக வந்து கொண்டு இப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமே. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள ஐ எம் ரெடி.

கலைவாணி ஜான்சன்:
இறப்பு அனைவர்க்கும் உரியது. நேரம் வரும் போது, போய்த் தான் ஆக வேண்டும். ஆனால் நான்கு பேர் இல்லாத மரணம். சிந்திக்க வேண்டும் சகோதரரே 🙏

தனசேகரன் தேவநாதன்: பாசமும் நேசமும் நிறைந்த மனிதர்கள் வேதனையை தாங்க இயலாது என்பது இயற்கையின் விதி. காலம் மட்டுமே ஆறுதல் அளிக்க முடியும். மனோதைரியம் அனைவருக்கும் கிட்ட இறைவன் அருள்வானாக. ஓம் நம சிவாய.

 

சாரதா நயனதாரா சாந்தி பெறுக

13.08.2021

செல்வி சாரதா நயனதாரா, முன்னாள் நயனம் ஆசிரியர் இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகள். இராஜகுமாரன் அவர்கள் மறைந்த ஆதி. குமணன் அவர்களின் அண்ணன் ஆவார். கோவிட் தொற்று காரணமாக நயனதாரா மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 


அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறோம்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா சாந்தி பெற இறைவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறோம். 


பாதாசன்: நம்பமுடியவில்லை. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. செல்வி சாரதா நயனதாரா, இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகளின் மரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறேன்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல ஆண்டவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.


ராதா பச்சையப்பன்: பார்க்க முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. ஓம் நமசிவாய. ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏.

மலையாண்டி மலாக்கா: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவா இந்த மண் மீது வாழும் எங்கள் இனத்தின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்.

கரு ராஜா: ஆழ்ந்த இரங்கல். நாட்டில் மரணச் செய்தி மிகs சர்வ சாதாரணமாக வந்து கொண்டிப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது.


கலைவாணி ஜான்சன்: மரணங்களின் ஓலங்கள்.... ஜீரணிக்க முடியவில்லை.... என்னவென்று சொல்வது. மலேசிய மண்ணில் தமிழுக்காக கோலோச்சிய ஒவ்வொரு ஜீவன்களையும் மரணம் தழுவிச் செல்வது தாங்கிக் கொள்ள முடியாத வேதனை.... நயனதாராவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

வெங்கடேசன்: ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆந்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.😭

தனசேகரன் தேவநாதன்: அழகிய முத்தாரம் அறுந்து போனதே... என்று தணியும் இந்த வேதனை இறைவா இறைவா ஓம் நமசிவாய


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இறைவா... என்ன சொல்வது என்று தெரியவில்லை. வாழ வேண்டிய வயது. ஆதி. இராஜக்குமாரன் தன் வாழ்நாளில் தன் மகளுக்காகவே வருத்தப் பட்டவர். மலேசியம் அன்பர்களின் ஆழ்ந்த இரங்கல்... ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏼🙏🏼

விஜயசிங்கம்: என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

உதயகுமார் கங்கார்: ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் நமசிவாய.

மகாலிங்கம் படவேட்டான்: ஆழ்ந்த இரங்கல்... ஓம் நமசிவாய... ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

செல்லா செல்லம்: ஓம் சாந்தி  🙏 ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி