13 செப்டம்பர் 2021

செந்தமிழ் செல்வி ஜனகா சுந்தரம்

12.09.2021
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராவார். மலேசிய நாளிதழ்கள்; தமிழகத்தின் மஞ்சரி, கலைமகள் போன்ற இதழ்களில் 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.

1960-ஆம் ஆண்டுகள் தொடக்கம் மலேசியத் தமிழ் எழுத்துலகில் நன்கு அறியப்பட்டவர்.


பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவை உறுப்பினராகச் சேவை செய்தவர். தனியார் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்றியவர்.

பினாங்கு இந்து சங்கப் பேரவையின் செயலாளர்; பினாங்கு வட்டாரப் பேரவையின் தலைவர். பல ஆண்டுகளாகப் பொறுப்பேற்று சேவை புரிந்தவர்.

1962-ஆம் ஆண்டு முதலே ஜனகா சுந்தரம்; ஜனனி என்னும் புனைப் பெயரில் கட்டுரை, சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.


வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் நேசன், மலேசிய முரசு ஆகியவற்றில் இவருடைய பல தொடர்கதைகள் வெளி வந்துள்ளன. இலக்கியத் துறையில் பல படைப்புகளை வழங்கியுள்ளார். இவரின் முதல் சிறுகதை தமிழகத்தில் இருந்து வெளிவரும் ராணி வார இதழில் இடம் பெற்றது.

ஜனகா சுந்தரம் எழுதிய நூல்கள்

ஞானத் தழும்புகள் (சிறுகதைத் தொகுப்பு);

திருக்குறள் தொகுப்புரை (கட்டுரை நூல் 1997);

பாரதியார் கவிதைகள் (கட்டுரை நூல் 1998).


*சிறுவர் நூல்கள்*

கண்ணனின் துனிவு (1998);

ஔவையார் அறநெறி - ஆத்திச்சூடி (கட்டுரை -1998);

பைந்தமிழ் நாட்டு பழங்கதைகள் (கதைகள் - 1998)

*சமய நூல்கள்*

காரைக்கால் அம்மையார் வாழ்வும் இலக்கியமும் (1997 / 1998)


1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய வானொலியின் இளைஞர் உலகம் நிகழ்ச்சியின் கருத்துக் களம் நிகழ்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்றவர். அப்போது தொடக்கம் இவரை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சியில் நானும் வாரா வாரம் கலந்து கொள்வேன். ஆழமான தமிழ் வளம். அழுத்தமான சொற்கள். உறுதியான சொற்கள். அவரின் தமிழறிவைக் கண்டு பல கட்டங்களில் வியந்து போய் இருக்கிறேன்.

இவர்தான் டாக்டர் சுபாஷிணியின் தாயார் என்பதை அறிந்து மகிழ்ச்சி ஒரு புறம். மலைப்பு ஒரு புறம். திகைப்பு ஒரு புறம். வாழ்த்துகிறேன்.

பின்னூட்டங்கள்

டாக்டர் சுபாஷிணி: அம்மா - ஒரு வழிகாட்டி!
(எழுத்தாளர் ஜனகா சுந்தரம்)

மலேசியாவில், அதிலும் குறிப்பாக பினாங்கில் ஒரே ஒரு தமிழ் புத்தகக்கடை மட்டுமே இருந்தது ஆரம்பத்தில். அங்கு தரமான நூல்கள் அவ்வப்போது மட்டுமே வந்துகொண்டிருந்தன.

தமிழகத்திலிருந்து யார் பினாங்கு வந்தாலும் அவர்கள் கையோடு கொண்டு வர வேண்டிய நூல்களைப் பற்றியும் அம்மா முன்னமே தெரிவித்து வரவழைத்து விடுவார்.

இப்படி நான் வளர்ந்த காலத்தில் வீட்டில் ஒரு சிறிய நூலகத்தை அம்மா வைத்திருந்தது எனது தமிழ் நூல்கள் வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அம்மாவின் வழிகாட்டுதல் தான் எனக்கு இங்கு ஜெர்மனியிலும் என் வீட்டில் தரமான நூல்களுடன் ஒரு நல்ல நூலகம்  உருவாகுவதற்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

நூல் வாசிப்பு, அது பற்றிய சிந்தனை என்பது பெற்றோர்களது வழிகாட்டுதல்களினால்தான் நமது மனதில் ஆழப்பதியும் வகையில் நமக்கு அமைந்துவிடுகின்றன என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

பாரதியின் நினைவு நாள் இன்று. பாரதியைப் பற்றிய முற்றுப்பெறாத ஒரு நூலையும் அம்மா எழுதிக் கொண்டிருந்தார். பாரதியின் பாடல்களை எனக்கும் என் சகோதரிக்கும் கற்றுக் கொடுப்பார்.

நாங்கள் பாடிக் காட்ட அவர் மகிழ்வார். திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஆண்டுகள் சில கடந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு  இருக்கிறது.

நூல்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும்.. நூல்களை நேசிக்க வேண்டும் என்றும், வீட்டில் குட்டி நூலகம் இருக்க வேண்டும் என்றும் தனது செயலால் எனக்கு வழிகாட்டியாக இருந்த அம்மாவிற்கு இன்று (செப் 11) பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... -சுபா

தேவிசர கடாரம்: அருமை சகோதரி... புத்தகம் வாசிப்பது என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் .என் பெற்றோறை பார்த்தே எனக்கும் இந்த பழக்கம் வந்தது...

தங்களின் தாய் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்கின்றார்.அவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களை சுற்றியே இருக்கும்.....

தனசேகரன் தேவநாதன்: நண்பரின் கவிதை - வாசிப்பு

அன்று தொட்டு இன்று
வரை மனித நாகரீகத்தின்
பரிணாம வளர்ச்சிக்கு
வித்து வாசிப்பு அதுவே
விலை இல்லா சொத்து...

தனி மனிதனின் சிந்தனையில் உதித்த
அறிவியல் அகிலத்துக்கு
ஆயிரமாயிரம் நன்மைகளை
உயிர்ப்பித்து உயிர்களின்
வாழ்வாதாரம் நிர்ணியக்கப் படுகிறது
வாசிப்பில்...

ஆன்றாரோரும் சான்றாரோரும்
மனித குலத்தின் ஒழுக்க
நெறிகளுக்கு எழுதி வைத்த
ஆயிரமாயிரம் அறிவுரைகள்...

ஏடுகளில் ஏங்கிக் கிடக்கின்றன
சாமானியர்களின் வாசிப்புக்கும்  
நல் வாழ்வுக்கும்...

சுவாசிப்பு உயிர் வாழ எவ்வளவு முக்கியமாமோ
அவ்வளவு முக்கியம் வாசிப்பு
மனிதன் மனிதனாக மனிதத்துடன் மண்ணில் வாழ...

கல்வியின் முக்கித்துவம்
புத்தகங்களில் மூழ்கி இருக்கின்றன
அந்த கல்வி முத்தை மூழ்கி
எடுக்க வாசிப்பு என்ற
பயிற்சி வேண்டும்...

மன இறுக்கத்திலிருந்து
விடுபட சிறந்த வைத்தியம்
வாசிப்பு  வாசிப்பாபோம்
வசந்தத்தை வரவேற்பாபோம்
வாழும் வரை...

-நாரா
பத்து காஜா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மகிழ்ச்சியான செய்தி. பெற்றோர் எப்படியோ பிள்ளைகளும் அப்படியே... தாங்கள் இந்த அளவிற்கு சிறந்து விளங்குவதற்கு தங்களின் பெற்றோர்... குறிப்பாக, தாயார் மிக முக்கிய பங்கு வகித்து உள்ளார். நினைவு கூர்கிறீர்கள். மகிழ்ச்சி அடைகிறேன். 🙏💐

டாக்டர் சுபாஷிணி: மிக அழகான பதிவு தோழர். அம்மாவின் படைப்புக்களை அழகாக வரிசைப் படுத்தி விரிவாக எழுதி இருக்கின்றீர்கள். எனது நன்றி மலர்கள் 🌹🌹🌹. அம்மாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

சுறுசுறுப்பு, பல திறமைகள், சமூகச் சிந்தனை  என எனக்கு நேரடி வழிகாட்டி அவர். எல்லா பணிகளுக்கு இடையேயும் அவரது கைமணமும் அபாரம். இன்று மட்டுமல்ல எல்லா நாளுமே அம்மா உடன் இருக்கின்றார்.. 😄 அன்பிற்கு நன்றி நன்றி 🙏😊🌷

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:1967-ஆம் ஆண்டு, தங்கள் தாயாருடன் மலேசிய வானொலி இளைஞர் உலகம் கருத்து மேடை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கருத்து விவாதங்கள ஏற்பட்டதை நினைத்துப் பார்க்கின்றேன். தாங்கள் தான் அவருடைய மகள் அறிந்து தங்கள் மீது தனி ஒரு மரியாதை ஏற்படுகிறது.

ஜனகா சுந்தரம்... புகழ்பெற்ற எழுத்தாளர்... என்னைக் கவர்ந்த எழுத்தாளர். இன்றும் என் நினைவில் வலம் வரும் அழகிய எழுத்தாளர். தங்களின் தாயார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

டாக்டர் சுபாஷிணி: மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏😊😊😊🌷

வெங்கடேசன்: சிறப்பான தகவல் மிக்க நன்றி ஐயா🙏

தனசேகரன் தேவநாதன்: நன்றி ஐயா. அவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன். பினாங்கு மாநில இந்து சங்கத் தலைமைப் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றியவர். வானொலியில் அவர் பெயர் வராத நாட்கள் அபூர்வம்.

அவரின் வாரிசு டாக்டர் சுபாஷிணி என அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி ஐயா. இந்து சங்க வரலாற்றில் இவர் தான் முதல் பெண் மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்தவர்

கரு. ராஜா சுங்கை பூலோ: தகவலுக்கு நன்றி

முருகன் சுங்கை சிப்புட்: எல்லாம் புதுப் புதுத் தகவல்கள். மலேசியம் புலனம் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே வருகிறது. அத்துனை படைப்புகளும் அருமை 👏👏👏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கனகா சுந்தரம்... 1970-களில் மலேசிய வானொலியில் முத்திரை பதித்தவர். இவர் என் மனைவியின் தோழியும் ஆவார். இருவருக்கும் கடிதத் தொடர்புகள் இருந்தன.

கலைவாணி ஜான்சன்: சிறப்பு ஐயா... சிறந்த எழுத்தாளரை அறிமுகம் செய்து, அவர் எழுதிய நூல்களையும் அறிமுகம் செய்து, அவருக்குச் சிறப்பு சேர்த்து உள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி... நன்றி 🙏🙏

கரு. ராஜா சுங்கை பூலோ: புலிக்கு நிச்சயம் பூனை பிறக்காது. புலிதான் பிறக்கும். அந்தப் புலிதான் டாக்டர் சுபாக்ஷினி.

கலைவாணி ஜான்சன்: வாழ்த்துகள் டாக்டர் சுபாஷினி 👏🏼👏🏼🌹🌹

ராதா பச்சையப்பன்: அருமை, சிறப்பு. எனக்குப் புத்தகங்களை வாசிப்பது என்றால் அதிக பிரியம். 👌👌🙏🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சொல்ல மறந்த தகவல்... ஜனகா சுந்தரம் அவர்கள்... சித்த மருத்துவம் பயின்றவர். தமிழ்நேசன் பவுன் பரிசு; தமிழ் முரசு கவிதைப் போட்டியில் முதல் பரிசு; எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசுகள் பெற்றவர்.

குன்றக்குடி அடிகளார் `செந்தமிழ் செல்வி` எனும் விருது வழங்கி உள்ளார்.  

மலேசிய இந்து சங்கம் `தொண்டர் மாமணி’ விருது வழங்கி உள்ளது.

கலைவாணி ஜான்சன்: ஆகா அருமை அருமை ஐயா.... தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து, பல விருதுகள் பெற்ற அம்மையாருக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்.... 🌹🌹🌹👏🏼👏🏼

இமயவர்மன் திருச்சி: வாழ்த்துக்கள் டாக்டர் சுபாஷினி

ராதா பச்சையப்பன்: உங்களுக்கு தெரியாததா, சகலமும் அறிந்தவர் நீங்கள். உங்களிடம் போட்டி போட ஆள் ஏது? 🙏👌👌🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
அட போம்மா... அங்கே இங்கே தோண்டி எடுத்து... பெயர்  போட்டுக் கொண்டு இருக்கிறேன். இதில் பெருமைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை... பதிவிற்கு நன்றிம்மா 😇

 

06 செப்டம்பர் 2021

மாண்புமிகு வீ. கணபதிராவ் - கே. ஆர். சண்முகன்

பதிவாளர்: கருப்பையா ராஜா
06.09.2021

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், மாண்புமிகு வீ. கணபதிராவ் அவர்களின் காணொலி பார்த்தேன். வியந்தேன். ஹின்றாப் போராளி. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமை அனுபவித்தவர்.


இந்தியர்களுக்கு இல்லை; பெரும்பான்மைத் தமிழர்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்தவர். தான் பிறந்த தெலுங்கு சமூகத்திற்காக ப்போராட்டக் களத்தில் குதிக்கவில்லை.

இன்று தெலுங்கன் என்று குறை கண்டு இந்தியச் சமுதாயத்தைப் பிளவு படுத்தி மகிழ்ச்சி அடையும் சகுனிகளே திருத்துங்கள்.

2008-ஆம் ஆண்டுக்கு முன்பு சிலாங்கூர் சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவை எப்படி இருந்தது என்பது இந்தியச் சமுதாயம் உணர்ந்ததால் இந்தியர்களின் வாக்குகள் எதிர்க் கட்சிக்கு விழுந்தன.

சாதி துவேஷம் பேசுவது; சாதி பார்த்து தேடிப் பிடித்து வேட்பாளர் தேர்வு செய்து அரசியல் நடத்திய காலம் மலை ஏறிவிட்டது ராஜா.

காலத்திற்கேற்ப சிந்தனை மாற்றம் செய்து கொள்ள உங்கள் எலும்புத் துண்டுகளுக்குத் துதி பாடாதீர்கள். இனத் துரோகியாகச் செயல் படாதீர்கள்.  

இந்தியச் சமுதாயத்திற்கு உதவும் தலைவர்களை ஆதரிக்கா விட்டாலும் அவதூறு செய்திகளை பரப்பாதீர்கள். இந்தியர்களின் எதிர்காலம் எந்த தலைவரால் பாதுகாக்கப்படும் என்பது உறுதிசெய்து கொள்ளுங்கள்.

அம்னோவால் இந்தியர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையாது. டத்தோஶ்ரீ நஜிப் காலத்தோடு முடிந்துவிட்டது.

பின்னூட்டங்கள்


மலையாண்டி மலாக்கா:
உண்மை. இனம் பார்த்து சேவை செய்யாத மனிதர். மலேசிய இந்திய சமுதாயம் தவறவிட்ட தலைவர். இவரால் சிலாங்கூர் இந்தியர் பயன்பெறுகின்றனர்.

கணேசன் சண்முகம்: நானும் மாண்புமிகு அவர்களின் விளக்க காணொலியைக் பார்த்தேன்.

சிறப்பாக சேவையாற்றும் ஒரு சிறந்த அரசியல்வாதி மீது தேவையில்லாத காழ்ப்புணர்ச்சி ஏனோ?

முகில்:
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர். ஆட்சிக்குழுஉறுப்பினர். மாண்புமிகு வீ. கணபதிராவ் ஒரு நியாயமான அரசியல்வாதி.







 

இறைவன் கொடுத்தது சந்தோசம் கொள்வோம் - தேவிசர கடாரம்


🌼 ஓர் ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.

🌼 அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே.

🌼 கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.

🌼 கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.

🌼 அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலை பார்க்க, அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது... ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று.

🌼 அழகு மயிலே, உன்னை காண இவ்வளவு பேர்.. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.

🌼 என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் என்றது.

🌼 மயில் சொன்னது. அன்பு காகமே, நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.

🌼 ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.

🌼 இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை.

🌼 எனவே நான் யோசித்தது, நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே என்றது .

🌼 இதுதான் நமது பிரச்சினையும்.

🌼 நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.

🌼 நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.

🌼 அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.

🌼 இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.

🌼 ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.

🌼 உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்.

🌼 உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.
        .....படித்ததில் பிடித்தது

பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: இதுதான் நமது பிரச்சனையும்

செல்லையா செல்லம்:
மிகவும் சிறப்பு








 

சுதந்திரமாக சாக... சத்யா பிரான்சிஸ்


இன்ப நதியில் மீனாக நீந்தித் தவழ அலைகிறது இதயம்
துன்பத்தைத் தத்தெடுத்த ஆன்மா
போதி மரம் தேடி அலைகிறது...!

துயரத்தைத் தோளில் சுமந்து
தாவாத மந்திகளிடம்
சுதந்திர வாழ்வைக் கற்றுக் கொள்ளத் தவறிய இனம்
வருத்தத்தைச் சோக நெஞ்சில் சுமந்திருக்கிறது..

வந்தேறியென வசைபாடி
இனவெறிக் கொள்கையைத்
தூக்கிப் பிடிப்பவர்களுக்குப் பரிசளிப்போம் தூக்கு மேடை..!

மலைநாட்டின் வளத்திற்கு
தமிழர்களின் உடல்
மண்ணுக்கு உரமானது
விண்ணுக்கு உயர்வானது..!

பாடுபட்ட இனம்
அடக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது!
கூடாரத்தில் மூக்கை நுழைத்து
ஒண்டி வந்த ஒட்டகம்
பூமிபுத்ரா ஆனது..!

மூதாதையரின் உழைப்பு கனவில் மட்டும்
வந்து வந்து போகிறது
வரலாற்றுப் புத்தகம்
புதிய புதிய அத்தியாயங்களைத்
தவறாக எழுதிக் கடிக்கிறது...!

வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சும் சதித்திட்டம்
இனவாத அரசியல்வாதிகளால்
நுணுக்கமாக இளைய நெஞ்சங்களில் பரப்பப்படுகிறது...!

ஜனநாயக நாட்டில்
சுதந்திரமாக வாழ மறுப்பு
சுதந்திரமாக சாக மட்டும் அனுமதி..!


கணேசன் சண்முகம் சித்தியவான்:
அருமை ஐயா மிகச் சிறப்பு

தனசேகரன் தேவநாதன்: பலரது வேதனை.... கவிதையாக்கி .... விட்டீர். உள்ளூரில் சரித்திரத்தை மாற்றலாம் மறைக்கலாம். உண்மை மாறாது

ராஜா சுங்கை பூலோ: அருமைக் கவிஞர் ஐயா




 

03 செப்டம்பர் 2021

இராஜேந்திர சோழன் கடாரத்தை 66 வருடங்கள் ஆட்சி செய்தாரா?

இராஜேந்திரன் கெப்போங்: மலாயாவிற்கு படையெடுத்து வந்த பேரரசன் இராஜேந்திர சோழன், 66 வருடங்கள் கடாரத்தை ஆட்சி செய்ததாகவும்; தான் கடாரத்தை விட்டுத் தாயகத்துக்குத் திரும்பிய போது ஆட்சி பொறுப்பை மலாய் ஆட்சியாளர்களிடமே விட்டு சென்றதாகவும்; தான் கடாரத்தை ஆட்சி செய்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் தடயங்களையும் பேரரசன் இராஜேந்திர சோழன் விட்டுச் செல்லவில்லை என்று ஆவணங்கள் சொல்வதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பது விளங்கவில்லை.


(Menurut kajian dan manuskrip yang ditemui mendedahkan Raja Chola hanya bertapak di Kedah selama 66 tahun sebelum pulang semula ke tempat asal tanpa membawa dan meninggalkan apa-apa pengaruh.

Ia sekali gus menolak dakwaan kedatangan Raja Chola itu bermakna penduduk asal Tanah Melayu adalah Tamil, sebaliknya ketika itu sudah wujud orang Melayu meskipun belum beragama Islam sehingga kedatangan Parameswara.

Profesor dari Pusat Penyelidikan Dasar dan Kajian Antarabangsa (CenPRIS), Universiti Sains Malaysia (USM), Prof Datuk Dr Ahmad Murad Merican, berkata orang Melayu perlu mengakui semasa 700 ke 800 tahun dahulu sebelum kedatangan Islam, agama yang dianuti pada ketika itu Hindu dan Buddha.

“Pada ketika ini terdapat kecelaruan hingga menyebabkan banyak fakta mengenai asal-usul orang Tamil dan orang Melayu disalah erti.

“Bagaimanapun melalui kajian dan manuskrip yang ditemui, sedikit sebanyak dapat menjelaskan asal-usul kedatangan masyarakat Tamil ke sini,” katanya ketika ditemui pada Forum Migrasi Pertama Masyarakat Tamil ke Tanah Melayu di sini.

Pada forum itu, masyarakat India yang hadir didedahkan dengan penemuan beberapa manuskrip yang menjelaskan sejarah asal-usul mereka dari India ke Kepulauan Melayu, Afrika dan Eropah.

Ahmad Murad berkata, forum itu begitu menarik kerana dapat menjelaskan kecelaruan yang berlaku baru-baru ini, sekali gus memberi pendedahan kepada masyarakat mengenai sejarah tanpa wujudnya elemen hasutan.

“Ini juga sesuatu yang berguna dan memberi kesedaran kepada orang Tamil mengenai sejarah serta warisan mereka,” katanya.

Sementara itu, Timbalan Ketua Menteri II Pulau Pinang, Dr P Ramasamy menegaskan setiap sejarah perlu diperkukuhkan dengan fakta dan bukannya semata-mata emosi serta politik.

Katanya, masyarakat Tamil perlu mengakui bahawa sejak 3,000 tahun dahulu penduduk asal di Tanah Melayu ialah orang Melayu.

“Penduduk asal Tanah Melayu ialah orang Melayu cuma pada ketika itu agama mereka bukan Islam tetapi Hindu dan Buddha sehinggalah wujudnya sultan yang memeluk Islam lalu diikuti seluruh rakyat pada ketika itu.

“Isu yang timbul hari ini kerana berlakunya salah faham ekoran tidak menemui fakta yang tepat dan berputar-belit serta menimbulkan kecelaruan yang perlu diperbetulkan,” katanya.

Tegasnya, setiap perkara berkaitan sejarah jika tidak mempunyai bukti maka ia perlu dirujuk kepada pakar sejarah dan sejarawan untuk mendapatkan maklumat lebih tepat.

“Seperti yang dihuraikan dalam forum ini cukup jelas kepada masyarakat India mengenai asal-usul dan migrasi yang berlaku,” katanya)

(Adakah Orang Asli itu Orang Athi Tamilan dari Pentas Kumari Kandam. Sejarah suatu bangsa bermula sejak mereka mula berjalan. Sejarah Chola Tamil dan Sejarah Melayu 3000 tahun Adalah sejarah terbaru. Sejarah Penduduk Asli lebih tertua lagi.)

முகில்: பதிவிற்கு நன்றி ஐயா. கல்வியாளர்கள் பயன்படுத்தும் ஆழமான மலாய் மொழிப் பதிவு. சாதாரண அன்பர்களுக்கு அதன் விவரங்கள் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை.

தங்களுக்குப் புரிந்து இருப்பதால் தான் இங்கு பதிவு செய்து உள்ளீர்கள். ஆகவே என்ன ஏது என்று தயவு செய்து விளக்கம் கொடுங்கள். அல்லது மொழிபெயர்த்து வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இராஜேந்திரன் கெப்போங்: எனக்கும் வெகுநாட்களாக இப்படி ஒரு சந்தேகம் உண்டு. ஏன் ஓராங் அஸ்லிகள் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்குப் பின் இங்கே அடைக்கலமாகிப் போன சிதறல்களாக இருக்கக் கூடாது .

நாளடைவில் மொழி நாகரீகம் மறந்து போன தமிழ் இனமாக இருக்கக் கூடுமோ எனும் சந்தேகம் எனக்கும் மனதளவில் நிழலாடுகிறது.

ஆனால் இதுவரை ஓராங் அஸ்லிகளின் பூர்வீகம் பற்றிய ஆழமான ஆய்வு இருந்ததாகத் தெரியவில்லை. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம். இராஜேந்திர சோழனின் படையில் இருந்து சிதறிப் போன சிப்பாய்களின் சிதறலாகக் கூட இவர்கள் இருக்கலாம். தவறிருந்தால் மன்னிக்கவும்.

ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங் 🙏

முகில்: இதைப் பற்றி போன 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் மலரில் இரு கட்டுரைகள் எழுதி விட்டேன். பழைய தமிழ் மலர் பத்திரிகைப் புரட்டிப் பாருங்கள் ஐயா...  நன்றி.

பெருமாள் கோலாலம்பூர்: மலாக்கா சிட்டிகளும் மொழி மறந்தவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கும் ,ஓராங் ஆஸ்லி தொடர்பையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

முகில்: நல்ல அருமையான கருத்து. முன்மொழிபவர்தான் முன்னுதாரணமாய் அமைய வேண்டும். முன்மொழிந்த தாங்கள் முன்னெடுத்து ஆய்வு செய்வதே சிறப்பு. எப்போது என்று சொல்லுங்கள். என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்.

ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங்: மலாக்கா செட்டிகள் என்பவர் வியாபார சமூகமாகும். மலாக்காவில் வியாபார நிமித்தம் வந்த இந்திய வம்சாவளியினரின் சந்ததியினரே மொழி மறந்து போன தமிழர்களாக இருக்கலாம்.

தனசேகரன் தவநாதன்: இன்று ஐயாவின் மலாயா கணபதி கட்டுரை போற்றி பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் இந்த நாட்டில் நமது மூன்னோர்களின் தியாக வரலாறு. பேரப் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்து சொல்ல மறக்காதீர்கள் நன்றி ஐயா.

முகில்: மிக்க நன்றிங்க ஐயா... சிரமப்பட்டு எழுதப்பட்டது. பத்திரிகையில் வெளிவந்த  மலாயா தமிழர்களின் வரலாற்றுக் கட்டுரைகளை இங்கேயும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அவற்றை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்கலாம். நம் வாரிசுகளுக்குக் கொண்டு செல்லலாம்.

ஆனால் என்ன... இன்னும் சில நாட்களில் இதே புலனத்தில் ‘யார் இந்த மலாயா கணபதி’ என்று கேட்பார்கள். ஆய்வு செய்யுங்கள் என்று சொல்வார்கள். சற்று சிக்கலான பிரச்சினை தான்.

ராஜா சுங்கை பூலோ: கவிஞர் அவர்களுக்கு, இந்த செய்தி குறித்து கொஞ்சம் விளக்கம் சொன்னால், என்னைப் போன்ற மலாய் புரியாத வர்கலுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.

ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங்: மலாயாவிற்கு படையெடுத்து வந்த பேரரசன் ராஜேந்திர சோழன் 66 வருடங்கள் கடாரத்தை ஆட்சி செய்ததாகவும் தான் கடாரத்தை விட்டு தாயகத்துக்கு திரும்பிய போது ஆட்சி பொறுப்பை மலாய் ஆட்சியாளர்களிடமே விட்டு சென்றதாகவும் தான் கடாரத்தை ஆட்சி செய்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் தடயங்களையும் பேரரசன் ராஜேந்திரசோழன் விட்டுச்செல்லவில்லை என்று ஆவனங்கள் சொல்வதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பது விளங்கவில்லை.

டாக்டர் சுபாஷிணி: மலாயாவிற்கு கிபி பதினோராம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் படை வீரர்கள் வந்து தாக்கி வெற்றி கொண்டு சென்றார்கள். ராஜேந்திர சோழனின் பிரதிநிதி இங்கு ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். இதுபற்றிய செய்திகள் கம்போடிய அரச ஆவணங்களுடன் ஒப்பீடு செய்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ராஜேந்திர சோழன் நேரடியாக கடல் கடந்து அன்றைய மலாயாவில் கடாரம் வரவில்லை. அவரது படைத்தளபதிகள் மட்டுமே வந்தார்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை உறுதி செய்ய அதே காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் மேற்கொண்ட பல்வேறு போர்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. இன்றைய இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் பலவற்றை இராஜேந்திரனின் படைகள் படிப்படியாக கைப்பற்றிய காலகட்டம் அது. அதுமட்டுமல்லாமல் அக்காலகட்டத்தில் இலங்கையிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இன்று கிடைக்கின்ற சோழர்கால கல்வெட்டுகள் பற்றிய தொகுதிகள் இது பற்றிய விரிவான விளக்கத்தை வழங்குகின்றன. தமிழக தொல்லியல் துறையை அணுகினால் தொடர்பு கொண்டால் அங்கிருந்து நீங்கள் கல்வெட்டுகள் தொடர்பான ஏராளமான நூல்களை பெறலாம்.

கணேசன் சண்முகம்: நல்ல தகவல். தகவலுக்கு நன்றி.

மகாலிங்கம் படவெட்டான்: நன்றி.. நல்ல தகவல்... இது வரை இராத்திரி சோழனின்  நேரடி தலைமையில் தான் தென்கிழக்கு பகுதியில் போர் நடந்ததாக அறிவோம்... நன்றி வாழ்த்துகள்.

தேவிசர: அருமை... தன் நாட்டை விட்டு வெளி வரமலேயே தன் படைகளை அனுப்பி பல தேசங்களை வெற்றிக் கொண்டவர் இராஜேந்திர சோழன்.  பெரிய படை பலம், அந்த கால கட்டத்தில் தமிழரிடம் தான் இருந்தது... பெருமை தரும் வரலாறு.

முகில்: திருவாலங்காட்டுச் செப்பேடுகள். சகோதரி முனைவர் சுபாஷிணியின் பார்வைக்கு...

இராஜராஜனின் ஆட்சிக் காலத்தின் 14-ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது கி.பி.1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழனின் படைகள் கடாரத்தின் மீது படையெடுத்த செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு உள்ளது.

கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், அவனுடைய படைகளையும் யானைகளையும் பிடித்துக் கொண்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு உள்ளது.

சங்கராம விஜயோத்துங்கவர்மன் (Sangrama Vijayatunggavarman) என்பவர் இந்தோனேசியாவை ஆட்சி செய்த சைலேந்திரா வம்சாவளி மன்னர் மாறன் விஜயதுங்கவர்மன் என்பவரின் மகன். சங்கராம விஜயோத்துங்கவர்மன் தான் கடாரத்தின் கடைசி ஆட்சியாளராகவும் இருந்தவர்.

இராஜராஜனின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பில் நான்கு படைத் தளபதிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்தார்கள். இதையே நான் என்னுடைய கட்டுரைகளில் பல முறை வலியுறுத்தி வந்துள்ளேன். அந்தமான தீவு தான் அவர்களின் முதல் படையெடுப்பு.

கி.பி. 1021-ஆம் ஆண்டில் இராஜேந்திரனின் படைகள் மேலைச் சாளுக்கியத்தின் மீது படையெடுத்தக் காலக் கட்டம். அது பெரிய போர். பல ஆண்டுகள் நீடித்த போர். அந்தக் கட்டத்தில்  ஈழத்திலும் ஒரு போர்.

தவிர தென்னகத்தில் பாண்டியர், சேரர்களுக்கு எதிராகவும் போர்கள். ஆக இராஜேந்திரனின் முழுக் கவனமும் தெற்கு ஆசியாவில் முழுமையாக இருந்த காலக் கட்டம். மீண்டும் பல ஆண்டுகள் நீடித்த போர். 1025-ஆம் ஆண்டில் இராஜந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பு நடந்தது.

அவர் கடாரத்தைக் கொள்வதற்காக தன் படைத் தளபதிகளை அனுப்பி வைத்தார் எனும் தங்களின் கருத்து ஏற்புடையது.

சாளுக்கியப் போரிலும்; ஈழத்துப் போரிலும்; மேற்கில் சேர நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டு தன் அரசை விரிவாக்கம் செய்து கொண்டு இருந்த காலக்கட்டத்தில் இராஜேந்திர சோழன் கடாரத்திற்கு வந்து இருக்க முடியுமா? ஓர் ஐயப்பாடு.

கடாரத்திற்கு வந்தவர்கள் அவருடைய படைத் தளபதிகளாக ’இருக்கலாம்’ என்பதே என்னுடைய நிலைப்பாடும்கூட.

ராதா பச்சையப்பன்: 🌷🙏மிகவும் சிறப்பு👌🙏🌷.

மலாயா தீபகற்பத்தில் இருந்த தாம்பிரலிங்கா பேரரசின் மீது, கெமர் பேரரசர் முதலாம் சூர்யவர்மன் போர் தொடுப்பதற்கு முன்னர் சோழ மன்னர் இராஜேந்திரனிடம் உதவி கோரினார்.

இராஜேந்திர சோழனுடன் சூர்யவர்மனின் கூட்டணியைத் தெரிந்து கொண்ட பிறகு, தாம்பிரலிங்கா அரசு, ஸ்ரீவிஜய பேரரசின் உதவியை நாடியது.

அப்போது ஸ்ரீ விஜய அரசின் பேரரசராக இருந்த சங்கராம விஜயோத்துங்கவர்மன், தாம்பிரலிங்காவிற்கு உதவி செய்ய முன் வந்தார்.

இதைப் பார்த்த இராஜேந்திர சோழன் தன் படைகளைத் தென்கிழக்கு நாடுகளுக்கு அனுப்பினார் என்று வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

இன்னும் ஒரு விசயம். சோழப் பேரரசும்; கெமர் பேரரசும்; இரண்டும் இந்து சிவ சைவ மதத்தைப் பின்பற்றியவை.

ஸ்ரீ விஜய அரசும் தாம்பிரலிங்கா அரசும் அந்தக் கட்டத்தில் மகாயன புத்த மதத்தைப் பின்பற்றியவை.

ஆக கடாரத்தின் மீதான படையெடுப்பை... இந்து சிவ சைவ மதத்திற்கும்; மகாயன புத்த மதத்திற்கும் இடையே நடந்த படையெடுப்பாகவே நான் கருதுகிறேன்.
-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

டாக்டர் சுபாஷிணி: ஆம். ராஜேந்திரன் காலத்து சூழலில் கிழக்காசிய பகுதிகளில் மிக பலம் பொருந்திய ஒரு கடற்படை சோழ கடற்படை என தாராளமாகச் சொல்லலாம்.

விஜயநகர அதாவது அன்றைய மலாயா இந்தோனேசியா பகுதியை ஆண்ட அரசு சீனாவிற்கான வணிகத்தில் சோழர்களின் ஈடுபாட்டை குறைக்க பல முயற்சியை செய்தார்கள்.

கடாரத்திற்கான இந்த படையெடுப்பு அதனை முறியடித்து இப்பகுதியில் நிலையான வணிகப் போக்குவரத்தை தமிழ் வணிகர்கள் மேற்கொள்ள அக்காலகட்டத்தில் வழிவகுத்தது.

தனசேகரன்: முனைவர் சுபாஷிணி அவர்களின் பதிவிற்கு உங்கள் கருத்து எப்பொழுது பதிவாகும் என காத்திருந்தேன் ஐயா. சிறப்பான விளக்கம் நன்றி ஐயா🌹💕👌🙏

கணேசன் சண்முகம்: அருமையான விளக்கம் ஐயா

வெங்கடேசன்: அருமையான கட்டுரை மிக்க நன்றி. ஐயா. இதை பார்க்கும் பொழுது எனக்கு இலங்கையில் நடந்த யுத்தம் நினைவிற்கு வருகிறது

ராஜேந்திரன் கெப்போங்: ஆம்! மிக ஆச்சரியமான அதிசயமான நம்ப முடியாத சேனை பரிவார கடல் பயணங்கள். 🙏

டாக்டர் சுபாஷிணி: குழுவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இந்த மாத இதழை ஒவ்வொரு பக்கங்களும் படித்து பயன் பெறலாம். தூய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவும் பல நல்ல சொற்களை அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தவும் இது வழி வகுக்கும்.

பொதுவாக பகிரப்படும் செய்திகள் போல ஒதுக்கி விடாமல் தரவிறக்கம் செய்து நேரம் எடுத்து வாசித்து பயன் பெற கேட்டுக்கொள்கிறேன்.

முகில்: மிக்க மகிழ்ச்சிமா சுபாஷிணி... தங்களின் தமிழ்ச் சேவைகள் தொடர வேண்டும். உலகம் முழுமைக்கும் மிளிர வேண்டும். சலைக்காமல் எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். இந்தப் பெண்ணுக்கு தூக்கமே வராதா என்று வியந்து போனதும் உண்டு... வாழ்த்துகிறேன். 🙏🌹




 

02 செப்டம்பர் 2021

உலக வானொலிகள் உங்கள் கரங்களில்

உலகளாவிய நிலையில் எந்த ஒரு வானொலியையும் இப்போது உங்களால் நேரடியாகக் கேட்க முடியும்.

இந்தச் சேவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து (இஸ்ரோ) கிடைக்கும் சேவை.

இணைப்பைக் ’கிளிக்’ செய்யும் போது, உலகம் சுழல்வதைக் காணலாம். நேரடி வானொலிகளின் ஒவ்வொன்றுக்கும் பச்சை புள்ளிகள் உள்ளன.

நீங்கள் தொடும் அந்த இடத்தில் இருந்து வானொலி ஒலிபரப்பை அப்போதே கேட்கலாம். உங்கள் உள்ளூர் வானொலியையும் முயற்சி செய்து பார்க்கவும். உலகம் உங்கள் கையில் சுழல்கிறது.

http://radio.garden/live

-புந்தோங் பக்கிரிசாமி