12 டிசம்பர் 2023

அன்வார் 2023 அமைச்சரவையில் இந்திய அமைச்சர்கள் இல்லை

(இன்று 12.12.2023 மலேசியாவின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் மலேசிய இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) ஓர் அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. அதன் விளைவாக மலேசியா முழுமைக்கும் மலேசிய இந்தியர்களிடையே அதிருப்தி நிலை. அது குறித்து மலேசியம் புலன அன்பர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு உள்ளன.)

Dhanasegaran Thevanathan: அமைச்சரவையில் தமிழர்கள் காணாமல் போனது மலேசிய எம்.ஜி.ஆர் செயத சாதனை... வேதனை... மாற்றத்தின் மகிமை


Muthukrishnan Ipoh: மக மக மனுசன் இப்போதைக்கு போக மாட்டான் என்று கிந்தா கிளி ஜோசியர் சொல்கிறார்... அவரின் இரண்டாம் தவணையில் நான்கு இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுத்து நம்மை எல்லாம் கண் கலங்க வைத்தாரே... ஆனால் கழுத்தை அறுக்கப் போகிறார் என்பதை தாமதமாகத் தான் ஐயா தெரிந்து கொண்டோம்...

Dhanasegaran Thevanathan: அவன் கழுத்தறுத்தான்... இவன் கருவறுத்தான்...

12/12/2023, 11:07am - Ganeson Shanmugam Sitiawan: விடாது ஐயா சும்மா விடாது. இவரது ஆட்டம் பொய்யாட்டம் என்றால் நிச்சயம் பேரிடி விழும். விழுந்தே தீரும்.

12/12/2023, 11:07am - Muthukrishnan Ipoh: என்னத்தைச் செய்தாலும் நம் இனத்திற்கு அரசியல் விமோசனம் என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருக்கும்... ’அவர்களுக்குள்’ பதவிகளை மாற்றிக் கொள்வார்கள்... ’அம்புட்டுத்தான்... எல்லா பிரதமர்களும் அதைத்தானே செய்து வருகிறார்கள்... அன்பருக்கு’ பிடிக்காதவர்களை பதவியில் இருந்து தூக்கி விடுவார்...


அருமையான சொல்லாடல்... உண்மையிலேயே இப்போது உள்ளவன்... கருவையே அறுக்கிறான்... வெள்ளிடைமலை...

12/12/2023, 11:10am - Mahalingam Padavettan Penang: தமிழனுக்கு சாப கேடோ???

12/12/2023, 11:10am - Dhanasegaran Thevanathan: தமிழர் முழுஅமைச்சராக இல்லாதது சரித்திரத்தில் முதல் முறை

12/12/2023, 11:11am - Muthukrishnan Ipoh: அடுத்த தேர்தலில் நம் இனத்தின் வாக்குகள் நிச்சயம் ????... இப்போதே என் பிள்ளைகளிடம் சொல்லி வைத்து இருக்கிறேன்...

12/12/2023, 11:11am - Ganeson Shanmugam Sitiawan: 👍👍👍

12/12/2023, 11:12am - Dhanasegaran Thevanathan: ஆட்சி கவிழ ஆதரிக்கிறேன்

12/12/2023, 11:13am - Mahalingam Padavettan Penang: ஆசை வார்த்தைகளை நம்பி நம்பி ஏமாந்த ஒரு இனம்... யாரைத்தான் நம்புவதோ?


12/12/2023, 11:16am - Muthukrishnan Ipoh: மிகச் சரி. இந்த நாட்டின் இந்தியர் மக்கள் தொகையில் 82.8 விழுக்காடினர் தமிழர்கள்.

12/12/2023, 11:16am - Dhanasegaran Thevanathan: தழிழர் சார்ந்த இயக்கங்கள் உடனடியாக தங்கள் ஒட்டு மொத்த எதிர்ப்பை காட்டுவார்களா

12/12/2023, 11:26am - Muthukrishnan Ipoh: இதைக் காரணம் காட்டி இன்னோர் அரசியல் கட்சியைத் திறப்பார்கள்.... 


12/12/2023, 11:28am - Mahalingam Padavettan Penang: ஆனால், ஒரு சதவிகிதம் அரை சதவிகிதம் இருக்கிறவர்களுக்கு 82.8 சதவிகிதம் உள்ள தமிழர்கள் எலும்பு துண்டுக்கு அடிமையாக இருப்பதால் தான்... நமது உரிமைகள் பறிபோகுது... நம்மவர்கள் உணர்வார்களா?

12/12/2023, 11:29am - Mahalingam Padavettan Penang: இதுவும் சுயநலம் தான்... பேச வேண்டியது நிறைய இருக்கிறது...

12/12/2023, 11:35am - Kalaivani Johnson: பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு.. நான் நலம் நீ நலமா.. என்று எழுதுகிறது நம் விரல்கள்.. இது மனித இயல்பு.!

12/12/2023, 11:52am - Dhanasegaran Thevanathan: 3 துணை தமிழ் அமைச்சர்கள்
குலா. சரஸ்வதி ரமணன்


12/12/2023, 12:39pm - Muthukrishnan Ipoh: மகிழ்ச்சியான செய்தி... மூன்று தமிழர்கள்... எதிர்ப்பார்த்தது... சிவக்குமார் அமைச்சரான பிறகு இவர் மீது நிறையவே குற்றச்சாட்டுகள்... இலக்கவியல் அமைச்சராக கோபிந்த் சிங் டியோ நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆள்பல அமைச்சராக Steven Sim Chee Keong நியமிக்கப்பட்டு உள்ளார். 

*மலேசிய அமைச்சரவை மாற்றம்*

*TERKINI*

Rumusan Rombakan Kabinet
_*MENTERI YANG DIGUGURKAN*_

1) YB Sivakumar a/l Varatharaju
_*MENTERI BAHARU*_

1) Gobind Singh Deo
2) Datuk Seri Dr.Haji Dzulkefly Ahmad
3) Datuk Seri Johari Abdul Ghani
4) Steven Sim Chee Keong
5) Datuk Seri Amir Hamzah Azizan (dilantik Senator)

_*TIMBALAN MENTERI YANG DIGUGURKAN*_

1) Ramkarpal Singh a/l Karpal Singh
2) Datuk Siti Aminah binti Aching

_*TIMBALAN MENTERI YANG BAHARU*_

1) Datuk Seri Noraini Ahmad
2) M.Kulasegaran a/l V.Murugeson
3) Datuk Ramanan Ramakrishnan
4) Wong Kah Woh
5) Dr. Zulkifli bin Hasan (Dilantik Senator)

_*RUMUSAN KESELURUHAN*_

1) Jumlah Ahli Jemaah Menteri meningkat daripada 28 orang ke 31 orang
2) Jumlah Timbalan Menteri meningkat daripada 27 orang ke 29 orang. 
3) Jumlah keseluruhan meningkat daripada 55 orang ke 60 orang.


12/12/2023, 1:25pm - Muthukrishnan Ipoh: *மலேசிய இந்தியர்களில் எவரும் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லை* >>> பிரதமரின் கணிப்பாக இருக்கலாம்... மாண்புமிகு சிவகுமார் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி; மற்றும் ஜ.செ.க தலைவர்களில் ஒருவர். இந்தக் கட்டத்தில் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு சேவை செய்ய அவரின் அனுபவம் மிக மிக அவசியம் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இப்போது ஜ.செ.க ஆட்சியில் உள்ளது. எனவே மாண்புமிகு சிவக்குமார் தொடர்ந்து இந்தியர்களின் பிரதிநிதியாகவும், தகவல் தொடர்பாளராகவும் செயலாற்றலாம்.

இந்தியர்களின் ஏழ்மை நிலை, கல்வி நிலைப்பாடு, கோயில்கள் பிரச்சினை, சமூக-பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகச் சீர்கேடுகள் மற்றும் இவை போன்ற பல பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. 

எதிர்க்காலத்தில் மாண்புமிகு சிவக்குமார் நம் இந்தியர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான கருத்து. இன்று அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை... மிக மிகக் கேவலமாகவும் மிக்க வேதனையாகவும் உள்ளது. 

1957-இல் மலாயா சுதந்திரம் அடைந்ததில் இருந்து... இதுவரையிலும் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டதே இல்லை. *அன்வார்  கொடுத்த பரிசு* 

12/12/2023, 1:51pm - Kalaivani Johnson: வணக்கம் ஐயா....தகுதி இல்லாத ஒருவரை தேர்ந் தெடுத்தது நம் தவறு தான். அவர் யார் என்பதை நமக்கு காண்பித்து விட்டார்.

12/12/2023, 1:52pm - Muthukrishnan Ipoh: நம்பினோம்... மோசம் போனோம்...

Melayu Anak saya... 
China Anak Saya... 
India Anak Saya... 
Kadazan Anak Saya ...

12/12/2023, 1:58pm - Kalaivani Johnson: எம்.ஜி.ஆர் .... பல பொய்கள்...

12/12/2023, 1:59pm - Muthukrishnan Ipoh: தலை சுற்றுகிறது... இரண்டு பெணடோல் இருந்தால் கொடுங்கள்... 

12/12/2023, 2:09pm - Perumal Kuala Lumpur: இந்த ஆட்சியின் லட்சணம் பாதியிலே பிட்டுக்கலாம்... சபாகாரன் துணிந்து ஓராங் டாயாக் என்கிறான். சாபாவின் பூமியின் புத்திரன் என பேச்சு ஆரம்பம். இங்கே mgr சீக்கிரம் காத்து வாங்க போகலாம். நாளும் பெரிக்காத்தான் வாங்கு வாங்குன்னு வாங்குரான். புதிய அமைச்சரவையை அவரே மெச்சிக்கனும். தலை சுற்றத்தான் செய்யும். ஆப்பு அடிக்க தயாராவோம்.

12/12/2023, 2:35pm - Perumal Kuala Lumpur: பாவம் YB sivakumar அவர்கள். இந்த ஆட்சி மட்டுமே ஒரு தமிழனை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

12/12/2023, 2:45pm - Muthukrishnan Ipoh: விரைவில் மலேசிய இந்தியர்கள் பின் தள்ளப்படுவார்கள்... கோபிந்த் சிங் மலேசிய இந்தியர் அல்ல... *சீனர்கள்* 6 முழு அமைச்சர்கள் 6 துணை அமைச்சர்கள்... மலேசிய இந்தியர்களுக்கு... 
*1* முழு அமைச்சர்... (சீக்கியர் - bukan Orang India)
*3* இந்தியத் துணையமைச்சர்கள்

12/12/2023, 2:53pm - Perumal Kuala Lumpur: மத்தியில் ஒரு சீக்கியர் வடக்கே ஒரு சீக்கியர்
12/12/2023, 2:56pm - Perumal Kuala Lumpur: தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய சீக்கியர்களை Mgr அடையாளம் காட்ட முடியுமா.

12/12/2023, 2:59pm - Mahalingam Padavettan Penang: தமிழனை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்... ஏமாளி தமிழனை எப்படியெல்லாம் வதைக்கலாம் என்பதை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசியல் தலைவர்களும் புரிந்துக் கொண்டு மிக சிறப்பாக காயை நகர்த்துகிறார்கள்...

12/12/2023, 2:59pm - Mahalingam Padavettan Penang: PMX க்கு நன்றி வாழ்த்துக்கள்.

12/12/2023, 2:59pm - Kalaivani Johnson: தமிழர்களுக்கான பிரதிநிதிகள் சரியாக இருந்திருந்தால், நாம் ஏன் அன்வாருக்கு ஓட்டு போடப் போகிறோம்..? வாய்த்தவர் சரியில்லை, வந்தவரும் சரியில்லை...இப்போது ஓட்டுப் போட்டவர்களை குறை சொல்லி என்ன பயன்?  நமது இனத்தின் ஒற்றுமையின்மையே இந்த சூழ்நிலைக்கு காரணம்...

12/12/2023, 3:06pm - Perumal Kuala Lumpur: அம்னோ பொலிவிழந்து செயல்படுகிறது. ஓங்கி நின்ற நம் தாய்கட்சியோ ஒதுங்கி நிற்கிறது... பாரிசானை கணக்கிட்டு கச்சிதமாக காய் நகர்த்தும் Mgrரை காலை வாரி விடுவோர் வெகு தூரமில்லை. மணி அடிக்காதே என்ற போதே மரண அடி கொடுத்திருக்க வேண்டும். சங்கூதும் ஒலி தொடங்கியாச்சு.

12/12/2023, 3:24pm - Muthukrishnan Ipoh: இந்தப் பதிவுகள் அனைத்தையும் தொகுக்கப்பட்டு நம் மலேசியம் இணையத் தளத்தில் பதிவு செய்யப்படும்... 💐


12/12/2023, 3:28pm - Kennedy Arumugam Grik Perak: அப்பொழுது பார்க்கும் பொழுது மனதிற்கு சுகமாக இருந்தது. இப்பொழுது பார்க்கும் பொழுது மனதிற்கு சுமையாக இருக்கிறது.

12/12/2023, 3:31pm - Kalaivani Johnson: நம் இனத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இவர் அன்று... இவர் தவறு இல்லையே.... மனம் குமுறுகிறது.... 😡😡

நானும் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்... ஆனால் நடப்பது எல்லாம் கானல் நீர்... உண்மைதான்... அவரின் ஆனந்தக் களிப்பு... இமயத்தில் உச்சம்... பலரும் அப்படியே... 😞😞

12/12/2023, 3:35pm - Kennedy Arumugam Grik Perak: எல்லோரையும் நம்பி நம்பி மோசம் போனது தான் மிச்சம் ஐயா.

12/12/2023, 3:36pm - Muthukrishnan Ipoh: நஜீப் எவ்வளவோ பரவாயில்லை... நடப்பது நடந்தே தீரும்... 😞

12/12/2023, 3:38pm - Kalaivani Johnson: மிகச் சரியாக கூறினீர்கள் ஐயா...நாம் அனைவரும் ஆனந்த களிப்பில் இருந்தோம்.....நம்பிக்கை துரோகி.....

12/12/2023, 4:04pm - Mahalingam Padavettan Penang: அன்று பார்த்த போது கூட கடுப்பாக தான் இருந்தது... இப்போது 1000 மடங்கு மகா கடுப்பாக இருக்கு... இப்படிப்பட்ட சுய நிலை மறந்த ஜென்மங்கள் கூட இருக்கா என்று... 😭😢😭😢😭

12/12/2023, 5:07pm - Kumaran Marimuthu: இந்தியர்களை பின் தள்ளும் முயற்சிகளை இன்றைய பிரதமர் தீவிரப்படுத்தி இருக்கின்றார். இது அவருக்குப் புதிதல்ல.

சிலாங்கூர் மாநிலத்தில் PKR சார்பில் ஒரு தவணை மட்டுமே ஒருவருக்கு ஆட்சிக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டது. கடந்த மூன்று தவணைகளாக ஒரு இந்தியருக்கும் PKR சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சிரித்து சிரித்து கழுத்தறுத்துவிட்டார் அன்வார். ஆனாலும், அந்தக் கட்சி இந்திய ஆதரவாளர்கள் இன்னும் கிணற்றுத் தவளைகளாகவே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

12/12/2023, 5:14pm - Kumaran Marimuthu: சாகிர் நாய் முன்பு இட்ட ஓலம் நினைவில் உள்ளதா? காபிர்கள் அமைச்சர்களாகவும் உயர் பதவிகளிலும் இருக்கக்கூடாது; இசுலாமியர்கள்தான் மேல்மட்டத்தை அலங்கரிக்க வேண்டும்; காபிர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குக் கீழ் அடிபணிந்துதான் வாழ வேண்டும் என்று கூறியது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அன்வரும் அவரின் சீடர்தானே? குருவின் ஆசியை நடைமுறைபடுத்துகிறார்...... மலேசிய MGR

12/12/2023, 5:26pm - Kalaivani Johnson: நாய் நன்றி உள்ள மிருகம் ஐயா... சாகிர் கழுதையை, ஒருநாள் இந்தக் கழுதை பின்னங்காலால் உதைக்கும் பொழுது, பின்னாள் நிற்கும் எம்.ஜி.ஆர் வேடம் அணிந்தவர் உதை வாங்குவார்... கூடிய விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது...

12/12/2023, 5:50pm - Perumal Kuala Lumpur: கண்மூடித்தனமான தொண்டர்களை பகடைக்காய் ஆக்கியவர்... பதவி சுகத்தால்... பழமையை மறந்து... புதுமையான சுகபோகம் காண்கிறார். வரும் ஒரு  திருப்புமுனை அது. ஏவுகனையாகவே வரும்.

12/12/2023, 5:55pm - Murugan Sivam: மலேசிய எம்.ஜி.ஆர் தெய்வம்... இன்னும் இருக்கு.....

12/12/2023, 5:56pm - Raja Sg Buluh: நம் இனத்திற்கு முழு அமைச்சர் இல்லாத புதிய அமைச்சரவை. தமிழன் முழு அமைச்சராக இருக்க லாய்க்கில்லையோ!!!இந்த நாட்டு தமிழர்களுக்கு ஒரு தலைக்குனிவு! சிங் சமூகத்தை விட நாம் என்ன அறிவில் குறைந்தவர்களா?

தமிழன் அரை மந்திரியாக இருக்கத்தான் லாயக்கு என்று பிரதமர் முடிவு எடுத்துவிட்டாரோ? இவருக்கு அரை மந்திரி கொடுத்து அவமானப் படுத்தியது நியாயமா?

12/12/2023, 6:00pm - Perumal Kuala Lumpur: பாரிசான் ஆட்சி தானே நடக்குது அதையே பின் பற்றி ஒரு  தமிழனுக்கு முழு அமைச்சர் தந்திருந்தால் அன்வாரின் பதவியோ பட்டமோ பறி போயிருக்குமோ.....


12/12/2023, 6:04pm - Raja Sg Buluh: இந்தச் செய்தியை கேட்டால் தமிழனுக்கு முழு மந்திரி கிடைக்க வாய்ப்பே இல்லை ராஜா. நல்ல அடி.........

12/12/2023, 6:23pm - Murugan Sivam: அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும்...(எம்ஜிஆர்)

12/12/2023, 7:10pm - Raja Sg Buluh: வணக்கம் மலேசிவாழ் தமிழினத்தினர் அனைவரும் இதனைக் கட்டாயம் படித்துப் பார்ப்பதோடு இனிவரும் காலங்களில் இந்நாட்டு அரசியலும் இந்த அரசியலினால் தமிழர்களாகிய நமது எதிர்கால நிலைப்பாடும் மிகப் பெரிய கேள்விக்க குறியாகவுள்ளது??? 


இம்மண்ணில் ஐந்து  தலைமுறையை எட்டியுள்ள நாம் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்த  இனம் என்று பெருமைப் பேசுவது வெட்டிப் பேச்சுக்கு இனி இடமில்லை.  

இன்றைய இளையோர்களும் பெற்றோர்களின் அர்ப்பணிப்புகளால் எந்தவோரு கடினங்களும் மேற்கொள்ளாமல் 4 வேலை சோறு, உடுத்த உடை, நண்பர்களோடு சுற்றித் திரிந்து எதிர்காலத்தைப் பற்றி கவலையின்றி இருக்கின்றனர் (சிலரை தவிர). 

இப்போது உள்ள இளையோர் முதலில் அனுபவிப்போம் பின்னால் பார்த்துக் கொள்வோம் எனும் தத்துவத்தைக் கடைப்பிடிக்கின்றனர் (Most if current generation policy is to enjoy first n the rest later part). 

எனவே நமக்கு நாமேதான் எதிர்காலத்தை முடிவு செய்துக் கொள்ள வேண்டுமேயொழிய எந்த அரசியல் கட்சியும் தலைவரும் வாயிலாக எதுவும் கிடையாது? தயவுசெய்து இதனைப் பொறுமையாக முழுமை படித்துப் பகுத்தறிந்து பகிருங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்.  

(Dear beloved Msian Tamilians.  Please take few moment and be patient to read rationally this comment n share it. The previous and the current political scenario does not benefit us at all.  We may proud to say that we particularly majority Tamils who makes the Indian community had contributed the economic growth and for development and also for the progress of this nation. This old self-proud sayings does not valid n doesn't make sense to this current Malaysia.  And as such the previous and the current government never bother about us.  So we have to take care of our  future by ourselves. Think rational. Thank you 🙏🙏🙏

2/12/2023, 8.14pm - Kumaran Marimuthu: துணை அமைச்சர் பதவியைக் கொடுத்து அன்வார் குலாவை ஏமாற்றிவிட்டதாக நீங்கள் ஆதங்கப் படுகின்றீர்கள். ஆனால், தூக்கி எறிந்த எலும்புத் தூண்டை கௌவிக் கொண்டு ஓடும் நாயைப் போல அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளாரே... அதற்கு என்ன சொல்வது ஐயா? மானங்கெட்ட பிழைப்பு ஐயா இது...... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

12/12/2023, 8.40pm - Perumal Kuala Lumpur: அரசியல்வாதிகள் எது கிடைத்தாலும் கௌவிக் கொள்வதில் பேர் பெற்றவர்கள்

12/12/2023, 8.44pm - Perumal Kuala Lumpur: அன்வார் 2023 அமைச்சரவையில் இந்திய அமைச்சர்கள் இல்லை

12/12/2023, 9.08pm - Murugan Sivam: அப்போ குலாவை ராஜினாமா செய்ய சொல்லாமே... இங்கே பலருக்கு குலாவுடன் நேரடி தொடர்பு உண்டுதானே....

12/12/2023, 9:10pm - Raja Sg Buluh: அதுதான் எலும்புத் துண்டு கிடைத்துவிட்டது. எப்படிங்க ராஜினாமா ???????


08 டிசம்பர் 2023

பத்து தீகா கரு. ராஜாவின் மனவேதனைகள்

கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர்

சிலாங்கூர், புக்கிட் ஜாலில் அரங்க வளாகத்தில் 08.12.2023 - 10.12.2023 வரையில் இலவச இருசக்கர வண்டி கவசத் தொப்பிகள் வழங்கப்படுகின்றன எனும் செய்திக்கு பத்து தீகா கரு. ராஜா வழங்கிய பதில் பதிவுகளில் அவரின் மனவேதனைகள் பிரதிபலிக்கின்றன. அண்மையில் அவரின் மூன்றாவது மகன் ராஜமோகன் புற்றுநோயினால் மரணம் அடைந்தார். அந்தத் தாக்கம் இன்றும் அவரிடம் உள்ளது.


அவரின் பதிவு: காலையிலேயே போனால் ஒரு கவசத் தொப்பி வாங்கி வரலாம். ஒரு தடவை நான் பெட்டாலிங் ஜெயாவில் இருந்து பத்து தீகா போகும் போது இடையில் மடக்கி பழைய தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு ஒரு புதிய தொப்பியைக் கொடுத்தார்கள்.


எனக்கு இப்போது 77 வயது. இன்னும் இருசக்கர வண்டியை விரும்பி ஓட்டுகிறேன். ஒரு சிலர் என்னைப் பார்த்து இருசக்கர வண்டி ஓட்ட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்வார்கள். இந்தக் காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுவேன்.

சமீபத்தில் காலமான என் மகன் பெரிய மோட்டார் ஓட்டுவான். 900 சி.சி. நான் அவன் விசயத்தில் தலையிடமாட்டேன். இந்த மலேசியாவில் எல்லா இடங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று இருக்கிறான். அவனோடு சேர்ந்து சுமார் 50 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பயணிப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் எந்த விபத்தும் நடக்கவில்லை. இந்தக் கேன்சர் வந்து என் மகன் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

பதில் இடுகைகள்:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:

வயதை நினைக்காதீர்கள் ராஜா... மனசோடு வாழுங்கள்... என்னைப் பாருங்கள்... இன்றும் 16 என்றும் 16... அப்படி போய்க் கொண்டே இருக்கிறேன்... வயதை நினைத்தால் அங்கே ஒரு உள்ளார்ந்த தடை ஏற்படுவதை உணரலாம். Age is a number என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

07 டிசம்பர் 2023

ஈப்போவில் ஈமச் சடங்கு செய்ய 2500 ரிங்கிட்?

 மாசிலன், பகாவ் - 07.12.2023

அந்த அர்ச்சகர்களை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே இந்த இந்தியச் சமுதாயம் தானே... குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் இவர்களுக்கு இடம் கொடுப்பதால் தான் இந்த அளவுக்கு கேட்கிறார்கள்.


முன்பு கிராமப் புறங்களில் இறப்பு நிகழ்வுகளில்‌ தொண்டு அடிப்படையில் சேவை வழங்குவார்கள். ஆனால் இன்று அது ஒரு வணிகம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது.

ஈமச் சடங்குகள் செய்வதற்கு 2500 ரிங்கிட் கேட்ட அர்ச்சகர்...  100 ரிங்கிட்டில் செய்து முடிக்க வேண்டிய காரியம்...


மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமயத்தின் பெயரில் அதீதமாகக் கட்டணம் கேட்பது நியாயமன்று. இந்த சகோதரியைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து நம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வரவேண்டும்.

ஈப்போ யோகேஸ்வரிக்கு மாமன்னரின் சிறப்பு விருது

 கென்னடி ஆறுமுகம், கிரீக், பேராக் - 07.12.2023

பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலரின் இரக்கச் செயல்களுக்காக, மாட்சிமை தாங்கிய மலேசிய நாட்டின் பேரரசரின் கரங்களால் அவருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.


ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (Hospital Raja Permaisuri Bainun, Ipoh) பாதுகாவலரான யோகேஸ்வரி (Puan Yogeswary), சில மாதங்களுக்கு முன்பு நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் இவர் உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து வைரலானது.

இந்த மருத்துவமனைக்கு வரும் குடும்பங்களின் மிகவும் கடினமான தருணங்களின் போது பார்க்கிங் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற அவரது உதவிகள் இந்த குடும்பங்கள் தாங்கும் கஷ்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு டிசம்பர் 19, 2023 அன்று இஸ்தானா நெகராவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதற்கு முன்னர் இவர் கிரீக் குழுவக தமிழ்ப்பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றினார். அங்கும் அவர் சேவையை செய்தார். பள்ளி மாணவர்களை வாகனத்தில் இருந்து இறக்குவது, அவர்களை வாகனத்தில் ஏற்றி விடுவது, அவர்களது புத்தக பைகளை எடுத்து சென்று வகுப்பறையில் வைப்பது, எவ்வளவு கனமழை பெய்து தான் நனைத்தாலும் மாணவர்களை மழையில் நனைய விடாமல் அழைத்து வருவார். 


ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா மணிக் கணக்கில் கடின உழைப்பை உழைக்கும் பொது மக்கள் தங்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது நம் இதயங்களை அரவணைக்கிறது. 
 
நாம் பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதை அர்பணிப்புடனும், மனநிறைவுடனும் செய்தால் எந்த ஒரு உயரிய நிலையையும் அடையலாம் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 


இவருக்கு கடந்த மார்ச் 21-இல் பேராக் மாநில அளவிலான மகளிர் தின கொண்டாட்டத்தில் இவருக்கு செஜாத்திரா வனிதா விருது (Sejahtera Wanita Award) (பாதுகாப்பு வகை) எனும் சமூக சேவை விருதும் வழங்கப்பட்டது. அவர் பேராக் முதலமைச்சர் டத்தோஸ்ரீ சாரணி முகமட்டிடம் இருந்து விருதைப் பெற்றார்.

மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபாவின் (Health Minister Dr Zaliha Mustafa) கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சி யோகேஸ்வரியின் அர்ப்பணிப்புக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

வாழ்த்துக்கள் சகோதரி யோகேஸ்வரி! ❤

-----------------------------------------------------------------

இடுகைகள்:

பெருமாள், கோலாலம்பூர்

வாழ்த்துகளும் நம்
இனத்திற்கு கிடைத்த பெருமையே.

ஒரு ஆண் பாதுகாவலர்
ஒருவர் அன்மையில்
பள்ளி ஒன்றிலிருந்து
ஓய்வு பெற்றார்.

ஆசிரியர்கள்
மாணவ மாணவியர்களும்
அவருக்கான பிரியாவிடையில்
பல பரிசு பொருட்களும்
கொடுத்து வழியனுப்பியுள்ளதும்
மனம் நெகிழ்வு கொள்ளும் நிகழ்வே.

செய்தொழிலை தெய்வமாக
மதிப்போரை பாராட்டுக்கள் தானாக
தேடி வரும் என்பதை
மெய்பிக்கும் இந்த நிகழ்வுகளே சாட்சியாகிறது.

நாமும் அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்.ta





03 டிசம்பர் 2023

கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி

தனசேகரன் தேவநாதன் - 03.12.2023
வெண்பா மண்டப திறப்புவிழா

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் மற்றும் ஒரு சாதனைத் தளமாக கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி (SJKT Kampung Columbia, Ayer Tawar) உருமாற்றம் கண்டு வருகிறது. பற்பல போராட்டங்களுக்கு இடையில், மலேசிய தமிழர்களை ஈர்க்கும் வகையில், பற்பல சாதனைகளையும் படைத்து வருகிறது. 

பேராக், மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் பகுதியில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது. 1918-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 105 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டில் கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. 

அத்தகைய கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாகத் தழைத்து வளர்ந்து வானுயரும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றுதான் பேராக், ஆயர் தாவார் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி. நல்லது நடக்கும் இடத்தில் நலிவின்மையும் தொடரும் என்பார்கள்.


அந்த வகையில் அண்மைய காலத்தில் இந்தப் பள்ளியில் எலிகளின் தொல்லையும் எல்லை மீறிப் போய்விட்டது. இப்பள்ளியைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் செம்பனை மரங்கள்; இயற்கை மேவிய பச்சை சமவெளிகள். அந்த வகையில் எலிகளும் மற்ற மற்ற ஊர்வனங்களும் இந்தப் பள்ளியில் அழையா விருந்தாளிகளாக வந்து போவது வாடிக்கையானது. 

பொது இடங்களிலும் சரி; பள்ளி வகுப்பறைகள் மற்றும் சிற்றுண்டி சாலையிலும் சரி; எலிகளின் கழிபொருள்கள் பெரும் சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்தன. எலிகளை ஒழிக்கும் பல்வேறு திட்டங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை.



அஸ்ட்ரோ செய்திக் காணொலி

தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் படிப்பை மேற்கொண்டால், அதுவே பின்னர் காலத்தில் மாணவர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று பேராக் மாநில சுகாதார இலாகாவும் எச்சரிக்கை செய்தது. 

அந்த வகையில் எலிக் கழிவுகள், எலிகளின் சிறுநீர் துர்நாற்றத்தால் இந்தப் பள்ளி மூடும் ஆபத்தை நோக்கி இருந்தது. பள்ளியின் அமைவிடத்தை மாற்ற வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டது. அதே கட்டத்தில் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளிக்கு பின்புறத்தில்; தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஓர் இடத்தில் புதிய பள்ளியைக் கட்டுவதற்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.


புதிய பள்ளி கட்டுவதற்கான நிலத்தை கொள்முதல் செய்யும் முயற்சிக்கு பேராக் மாநில மனித வள சுகாதார ஒற்றுமைத் துறை; இந்திய நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரும்; சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்களும் உறுதுணையாக இருந்தார். 

அதே வேளையில் ஓர் இக்கட்டான நிலைமை. புதிய பள்ளியின் நிலத்திற்கு 1.3 இலட்சம் ரிங்கிட் முன்பணம் (பிரிமியம்) கட்ட வேண்டும் என நிபந்தனையும் தொடர்ந்தது. இருப்பினும் மாநில அரசாங்கத்தின் தலையீட்டினால் அந்த முன்பணத் தொகை செயல்பாடு நிறுத்தம் செய்யப்பட்டது.


புதிய பள்ளிக்கு புதிய கட்டடத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு வழியாக, அடுத்த ஆண்டு மலேசியத் துணைக் கல்வியமைச்சர் இப்பள்ளிக்கு வரவிருப்பதாகவும் மாண்புமிகு சிவநேசன் தெரிவித்தார். 

பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2022-ஆம் ஆண்டில், மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 11,231 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 1679 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். அத்துடன் மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,602 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

தற்போது கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியில் 52 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்; 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன். சிறப்பான முறையில் கட்டொழுங்கான பார்வையில் பள்ளி நிர்வாகம் பயணித்து வருகின்றது. 



வணக்கம் மலேசியா காணொலி

பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பற்பல உள்நாட்டு வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு உயர்நிலைத் தோற்றத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். ஆயர் தாவார் தமிழர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை!

கடந்த 02.12.2023-ஆம் தேதி இப்பள்ளியின் வெண்பா மண்டபம் திறப்புவிழா கண்டது. அத்துடன் சிற்றுண்டி தினமும் நடைபெற்றது. அந்த நிகழ்வில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்: 

1) மாணவர்களுக்கான பள்ளி நடவடிக்கைகளின் செலவு 
2) போக்குவரத்து கட்டணம்
3) கட்டட பழுது பார்ப்பதற்கான செலவு
4) வகுப்பறைகளில் திறன் தொலைக்காட்சி (Smart TV) பொருத்துதல்


பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பற்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மைய காலங்களில் வாகனங்களின் மூலமாக பள்ளிக்கு வரும் பி 40 பிரிவு குடும்பங்களின் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆண்டில் இருந்து வாகனப் போக்குவரத்து ஆண்டுத் தொகையான 12,500 ரிங்கிட்டை பேராக் மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. மகிழ்ச்சி தரும் செய்தி.


கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியின் வெண்பா மண்டப திறப்புவிழாவிற்கும்; மற்றும் பல பள்ளி நடவடிக்கைகளுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும்; பள்ளி மேலாளர் வாரியக் குழுவினரும்;  பொது மக்களும் வற்றாத ஆதரவை வழங்கி வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன்

இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் வழிநடத்தியவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் ஆகும் அவர்களுக்கு பொறுப்பு வகித்த ஆசிரியர் திரு. மோ. கலைச்செல்வன். 

உலகின் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் தமிழ் மொழியின் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும். இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி என வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன் கூறுகிறார்.


தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் மொழியின் ஆணி வேர் தமிழ்ப் பள்ளிகளின் சன்னிதானத்தில் தான் வேர் ஊன்றி உள்ளன. தமிழ் பள்ளிகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற முடியும். அதுவே காலத்தின் கட்டாயம்.

01 டிசம்பர் 2023

மனித நேய மலேசிய உணர்வு

தனசேகரன் தேவநாதன், சித்தியவான், பேராக் - 01.12.2023

இனங்களுக்கு இடையில் மனிதத் தன்மைகள் பரவலாக அனுசரிக்கப் பட்டால், அங்கே பகுத்தறிவு வளர்கிறது. இணைந்து போகும் தாராள மனப்பான்மையை வெளிப்படுகிறது. அதுமட்டுமல்ல அவையே பகைமை உணர்வை வளர்வதைத் தடுக்கிறது என்று கூட சொல்லலாம்.


எல்லா இனங்களும் இணைந்து ஒவ்வொருவரின் மாறுபட்ட கலாசாரத்தை ஏற்றுக் கொள்வது பல்லின மக்கள் வாழும் நாட்டில் சுபிட்சத்தை வளர்க்க உதவும். ஒற்றுமையைக் காண நல்லெண்ணம் தேவை. நம்மை விட சிறந்தவர் எவரும் இல்லை என்கின்ற முரட்டு இறுமாப்பு நல்லிணக்கத்தை வளர்க்காது.

பேராக், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான், கிந்தா தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அங்கு பணிபுரிந்த ஓர் இந்திய பாதுகாவலரிடம் தங்களின் அன்பின் வெளிப்பாட்டை வெளிக் கொணர்ந்த முறை மலேசியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உலகின் முதல் பெட்ரோல் நிலையம்

கென்னடி ஆறுமுகம், கிரீக், பேராக் - 01.12.2023

இன்று டிசம்பர் 1, 1913-ஆம் ஆண்டு இதே நாளில்தான் வாகனத்தை உள்ளே ஓட்டிச் சென்று பெட்ரோல் நிரப்பும், உலகின் முதல் பெட்ரோல் நிலையம், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அமைக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் இருப்புச் சாமான் விற்கும் கடைகளிலும், கொல்லர் பட்டறைகளிலும்தான் எரிபொருள் வாங்க வேண்டியிருந்தது. உலகின் முதல் நீண்ட கார்ப் பயணத்திலிருந்து திரும்பும் போது, ஒரு மருந்துக் கடையில்தான் பெர்த்தா பென்ஸ் என்பவர் மீண்டும் எரிபொருள் நிரப்பினார். 


பெட்ரோலியத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் லைக்ராய்ன், ஈதரைப் போலவே இருக்கும். இதை மருந்துக் கடையில் வாங்கித்தான் காரில் நிரப்பி, தன் திரும்பி வரும் பயணத்தை மேற்கொண்டார் பெர்த்தா பென்ஸ். அதனால் உலகின் முதல் பெட்ரோல் நிலையம் மருந்துக் கடைதான்! 

முதல் பெட்ரோல் விற்குமிடம் 1905-இல் அமெரிக்காவின் மிசவுரியில் தொடங்கப்பட்டது. இதில் வாகனத்தை உள்ளே ஓட்டிச் சென்று நிரப்ப முடியாது என்பதால் இது கடைதான்! 

முதல் பெட்ரோல் நிலையம் 1913-இல் அமைக்கப் பட்டாலும் பெரிய வரவேற்பை உடனடியாகப் பெறவில்லை. அக்காலத்தில் கார்களின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டும் காரணமல்ல. எல்லா கார்களும் பெட்ரோலால் இயங்கவில்லை. எத்தனால், மின்சாரம் ஆகியவை மட்டுமின்றி, நிராவியில் இயங்கும் கார்களும் புழக்கத்திலிருந்தன. 

இதனால் வாகனங்களுக்கு இலவசமாக நீர், காற்று ஆகியவற்றையும், பின்னர் சாலை வரைபடங்களையும் (மேப்) இலவசமாக வழங்கிய முதல் பெட்ரோல் நிலையம் இதுதான். 1917வரை பென்சில்வேனியா மாநிலம் முழுவதற்குமே 7 பெட்ரோல் நிலையங்கள்தான் இருந்தன. 

மோட்டார் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குறைந்த விலை கார்கள் வரத் தொடங்கியதையடுத்து, 1920-இல் அமெரிக்கா முழுவதும் 15 ஆயிரமாகவும், 1920-களில் இறுதியில் 2 இலட்சமாகவும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 

உலகம் முழுவதும் பெட்ரோல் என்று அழைக்கப்பட்டாலும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கேசோலின், கேஸ் என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. இதனால் அங்கு பெட்ரோல் நிலையங்கள் கேஸ் ஸ்டேஷன் என்று அழைக்கப்படுகின்றன. 

மலேசியா போன்ற நாடுகளில் பெட்ரோல் பம்ப், பெட்ரோல் ஸ்டேஷன் என்றும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் பங்க் என்றும் எரிபொருள் நிலையங்கள் அழைக்கப் படுகின்றன.

பத்தாவது மனிதன்

கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர் - 01.12.2023


கடவுள் வந்தார்...!

“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.


முதல் மனிதன் : “எனக்கு அம்பானி போல் கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்: “நான் கூகுள் சுந்தர் பிச்சை போல சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் : “எனக்கு ரஜனிகாந்த் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி: “ஐஸ்வர்யாராய் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் maximum எந்த அளவு மன நிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு் கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்... சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! 

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! 

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம் ஒன்பதில் ஒன்றா..? இல்லை, பத்தாவது மனிதனா..?

படித்ததில் பிடித்தது

25 நவம்பர் 2023

மலேசியத் தமிழர் இனம் 2023

(பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்)

மலேசியத் தமிழர் இனத்தின் எழுச்சியால்
2008 ஆட்சி மாற்றத்தால்
அன்றைய 2007 முயற்சி...
ஆரம்பத்தில் வெற்றி பெற்ற முயற்சி...


அதில்...
உயர்ந்த சுகம் அனுபவித்தது
இரண்டு இனங்கள் தான்...

நாம் நமது முயற்சி...
நமது இந்த எழுச்சி...
"விழலுக்கு இரைத்த நீராக" போய் விட்டது...

அடி உதை வாங்கியவன் ஒரு புறமிருக்க
துன்பம் பட்டவன் ஒரு புறமிருக்க
சிறைவாசம் சென்ற கூட்டம் ஒரு புறமிருக்க
அநாதையாக்கப்பட்ட ஓர் இனக் கூட்டம் ஒரு புறமிருக்க...

மலேசியத் தமிழர் இனத்தின் போராட்டத்தைக் கொண்டு
இன்றும் சொகுசு வாழ்க்கை வாழும் பலர் உள்ளனர்.
அதில் அன்னிய இனத்தவர்கள் மட்டுமல்ல
மாறாக நம் இனத்தை சார்ந்தவர்கள் மிக அதிகம்...

அரசியல் மூலம் தனி மனிதனாக
குடும்ப அரசியல் நடத்திக் கொண்டு
கோடான கோடு சொத்துக்கள் சேர்த்துக் கொண்டு
அவர் அவர் குடும்பத்தை வளர்த்துக் கொண்டு
வாரிசு அரசியல் என்று
இராஜ போக வாழ்க்கை வாழ்கிறார்கள்...

இதற்கு உதாரணம் நிறைய உண்டு...
இன்றளவும் இதை தான் செய்து கொண்டு வருகிறார்கள்...

தமிழர்கள் பலர் அவர்களுக்கு வாலை பிடித்துக் கொண்டு
எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு பின் தொடர்கிறார்கள்...
அவர்களோ... தன் இன அரசியல் செய்கிறார்கள்...
கேட்பாரில்லை... ஐயகோ...

அன்று எழுச்சி கொண்ட மலேசியத் தமிழர் இனம்
இன்றும் கோழை இனமாக
பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கு...

இந்த 16 ஆண்டுகால போராட்டத்தின் மூலம்
"பூனைக்கு மணிக்கட்டிய" இனத்துக்கு
கிடைத்தது என்ன?
சாதித்தது என்ன?
வாழ்கிற வாழ்க்கை தான் என்ன?

அறுபது ஆண்டு கால ஆட்சியில்
ஒன்றும் கிடைக்கவில்லை
அந்தத் தாக்கத்தில் தான் "இந்திய இனம்"  
குறிப்பாக 90 சதவிகித தமிழர்கள்
தலைநகரில் 2007-இல் ஒன்று கூடினார்கள்
(அதில் எனது குடும்பமும் தான்)

என்ன ஆச்சு?

அரசாங்கமும் நமது குறையை கேட்டு அறியவில்லை...
செவி சாய்க்கவில்லை...
ஒரு முக்கியத்துவம் கொடுக்க வில்லை...

(ஆரம்பத்தில் ஒரு சில சலுகைகளை கொடுத்தது குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு)

ஆனால், 2007 எழுச்சிக்குப் பிறகு
இன்று நமக்கு ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்த்தால்
ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை...
ஒன்றுமே இல்லை...

காரணம் நமக்கென்று ஒரு சரியான சமுதாயத் தலைவன் இல்லை
வந்தவன்...
போனவன்...
இருக்கிறவன்...
எவனும் நல்லவன் இல்லை...

வருவான் என்று எதிர்ப்பார்த்தால்
எல்லோரும் 1000 சதவிகிதம் சுயநலவாதிகளே...

நம்மவர்களை ஏணிப்படியாக வைத்து...
மேலே போகிறார்களே தவிர
நம்பிய இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற எண்ணம் எள் அளவும் இல்லை.
நாம் சிந்திப்பதும் இல்லை... திருந்துவும் இல்லை...

சுயநல நரிக்கூட்டமும்
நம்மை சிந்திக்க விடமாட்டார்கள்...

ஆக............
ஒரு காலத்தில் "மக்கள் சக்தி"
என்று வாய் கிழிய கத்திய வாய்கள் இன்று "பண சக்தி" "தன சக்தி"
என்று சத்தமில்லாமல் இரகசியமாக மனதுக்குள்ளேயே கூவுது...

சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...
அன்புடன்
நாம் தமிழர்
நாமே தமிழர்...

ஆக்கம்: பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்
25.11.2023