10 ஜனவரி 2024

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம்

மகாலிங்கம், பினாங்கு (07.01.2024)

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம், பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரிலிருந்து, அன்றைய போர்ட் வேல்ட்; இன்றைய கோலா செபத்தாங் வரையில், ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பெற்றது. 


அன்று தைப்பிங் நகரில் உள்ள ஈய இலம்பங்களில் எடுக்கப்பட்ட ஈயக் கட்டிகளை போர்ட் வேல்ட் துறைமுகத்திற்கு எடுத்து செல்ல உருவாக்கப் பட்டது தான் இந்த இரயில் தண்டவாளம்.

இன்றைக்கு ஒட்டு மொத்தமாக இந்தப் பகுதிகள் அனைத்தும் சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ளன. வித விதமான வியாபாரங்கள் நடைப் பெறுகின்றன; வித வித மான உணவுகள், கருவாடுகள், கடல் பயணம் என்று ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு மிக நிம்மதியாக வாழ்கிறார்கள்.

உழைக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள்...

(பதில் இடுகைகள்)

பெருமாள், கோலாலம்பூர்

இதிலே 
பழமையும்
புதுமையும்
இருக்கையிலே...

மலேசியா முழுமையும்
துடைத்தொழிக்க
காரணமென்ன...

பழயனவற்றை
இன்றும்
பாதுகாத்து
வரும் அரசு
ஏன்
அத்தகைய மாற்றத்தை
முன்னெடுத்தது
என்பதை
அன்றைய KTM நிர்வாகம் பதிலலித்தால் சிறப்பாக இருக்கும்...

இப்படி பழசும்
பதுசும்
பார்வையில்
விழுந்தால்
அந்த கால
நினைவலைகள்
சிறகடித்துப்போகும்...

கண்டிப்பாக
சுற்றுப் பயணிகளை
கவர்ந்திழுக்கும் இடங்கள் பல உள்ளன.
MATIC பின்னோக்கி நகருமா. ta

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக