கங்கா நகரப் பேரரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கா நகரப் பேரரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூன் 2021

கங்கா நகரப் பேரரசு - 29.06.2021


கணேசன் சித்தியவான்: 20 ஆண்டுகளுக்கு முன் பெருவாஸ் Kg Kota வளைவில் makam Raja Cholan என்று பெயர் பலகை இருந்தது. இப்பொழுது makam Raja Beruas என்று உள்ளது. பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் பாடலில் கங்கையின் வாசம் தென்றலில் வீசும்... ராஜ ராஜ சோழனின் வம்சம்... என்று தொடங்கும்

மலாக்கா முத்துகிருஷ்ணன்: நல்ல தகவல். கங்கா நகரத்தைப் பற்றி ஏற்கனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி இருக்கிறேன். இப்போது ஆசிரியர் கணேசன் கொடுத்த தகவலையும் உடனடியாக இணைத்து விட்டேன். நன்றிங்க.

கங்கா நகரம் விக்கிப்பீடியா
https://ta.wikipedia.org/s/3wfv

தனசேகரன் தேவநாதன்: உண்மைதான் தம்பி. அதே போல் இந்த மாவட்டத்தின் பந்தாய் ரெமிஸ் பட்டணத்தின் பிரதான சாலையின் பெயர் jalan Ganga negara என்று இருந்தது. இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

மகாலிங்கம் படவெட்டான்: அற்புதம் ஐயா.. நன்றி வாழ்த்துகள்... புருவாஸ் நகரமும் அதன் சுற்றுப்புறமும் கடந்த 60 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு உண்டு... தெரிந்த விடயம் கொஞ்சம் தான்.. ஆனால், தங்களின் இந்த கட்டுரையைப் படித்து இன்னும் பல சரித்திர புரிதல் ஏற்பட்டுள்ளது... 🌹🙏🏽🌹

மோகன் காசிநாதன்: முற்றிலும் உண்மை. பல மறைக்க பட்டது. இதற்கு ஒரே வழி, மீண்டும் அங்கே ஆய்வு நடத்த வேண்டும். அதுவும் இந்தியர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளி வரும். இது நடக்காதா என பல நாட்கள் ஏங்கியது உண்டு. என்று தீருமோ இந்த தாகம். 🙏

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஆய்வு நடத்தலாம். நல்ல  கருத்து. அதற்கு ஏற்படும் செலவை யார் ஏற்றுக் கொள்வது. தங்களைப் போல கருத்து முன்வைப்பாளர்கள் நிதியுதவி செய்தால் நாங்கள் தயார். தாங்கள் நிதியுதவி செய்ய முடியுமா ஐயா? அங்கே கேட்கலாம் இங்கே கேட்கலாம் எனும் மீண்டும் கருத்துகள் வேண்டாம். உங்களால் இயன்றால் நிதியுதவி செய்யுங்கள்.

கோத்தா கெலாங்கி ஆய்வுகளில் நம் தமிழ் ஆய்வாளர்கள் பல்லாயிரம் செலவு செய்து விட்டார்கள். அதில் நானும் ஒருவன். உதவி செய்ய எந்த அமைப்பும் முன் வரவில்லை. மூடி மறைக்கும் மேலாதிக்கத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும் என உதவி செய்ய மறுக்கிறார்கள்.

எல்லோரும் இந்தியர்களாக இருக்க வேண்டும். முடியுமா? 2013-ஆம் ஆண்டில் களம் இறங்கி ஆய்வு செய்து, சேகரித்த தகவல்களைக் கொண்டு 'கங்கா நகரம்' கட்டுரையைத் தயாரித்தேன் என்பதைப் பணிவுடன் முன் வைக்கிறேன். நன்றி.

தனசேகரன் தேவநாதன்: உண்மைதான். ஐயா தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆய்வுகளும் அதே பரிதாபம் தான் போல. உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம்;

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு; நமது தமிழர்களின் தடயங்களை ஆய்வு செய்ய என்னதான் செய்தார்கள். மாநாடு கூடியது. சிறப்பாக நடத்தி முடித்தோம் என மங்கலம் பாடியதோடு சரி. தமிழ் நாட்டுத் தொல்லியல்துறை உள்நாட்டிலேயே ஓணான் பிடிக்க முடியவில்லை. நம்ப நாட்டிற்கு வந்து விடுவார்ளா என்ன.

தங்களைப் போன்ற தன்னார்வப் பணியால் தான் நாங்கள் கொஞ்ச நஞ்சம் சரித்திரத்தைத் தெரிந்து கொள்கிறோம். தற்சமயம் தாங்கள் செய்து கொண்டிருப்பதே பெரும் பணி. பார்ப்போம். எதிர்காலம் எப்படியோ?

தாங்கள், சுக்கை பட்டாணி நடராஜா; டாக்டர் ஜெயபாரதி இன்னும் இலைமறை காயாக சிலர் எடுத்த முயற்சிகள் வீண் போகாமல் இருக்க வேண்டும் என்பதே. நமது எண்ணம்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: அங்கே தமிழர்களின் தடயங்களை இராத்திரி நேரத்தில் மறைக்கிறார்கள். இங்கே விடியல் காலையில் மறைக்கிறார்கள். தவிர மலாயா தமிழர்கள் எனும் உணர்வில் எவ்வளவோ செலவாகி விட்டது. எங்கேயாவது முதலீடு செய்து இருக்கலாமே என்று சமயங்களில் நினைப்பதும் உண்டு. விடுங்கள். யாருக்காக செலவு செய்தோம். நம் எதிர்காலச் சந்ததியினரின் விழிப்பு உணர்வுக்காகச் செலவு செய்தோம். அந்த மனநிறைவு போதும்.