மலேசியத் தமிழர்களுக்கு குலசேகரன் உதவிகள் செய்யவில்லையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழர்களுக்கு குலசேகரன் உதவிகள் செய்யவில்லையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஆகஸ்ட் 2021

மலேசியத் தமிழர்களுக்கு குலசேகரன் உதவிகள் செய்யவில்லையா?

13.08.2021

மாண்புமிகு குலசேகரன் அமைச்சராகச் சேவை செய்த காலத்தில், அவர் மலேசிய தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் அரசாங்கம் அமைவதற்கு முன்னர், பக்காத்தான் ஹரப்பான் கட்சி ஒரு கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டது. வழக்கமாக எல்லாக் கட்சிகளும், பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.

ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாக அந்தக் கொள்கை விளக்க அறிக்கையில் சொல்வார்கள்.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் கட்சி வெளியிட்ட அந்தக் கொள்கை விளக்க அறிக்கையை முன்வைத்து, மாண்புமிகு குலசேகரனைத் தரம் தாழ்த்திச் சிறுமைப் படுத்தும் ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் காணொலியும் பதிவாகி உள்ளது.

சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டிவிட வேண்டுமா என்று அந்தக் காணொலிப் பதிவாளர் கேட்கிறார். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கரு. ராஜா: இந்த அம்மணி நியாயமாகப் பேசுறாங்க... ஒரு தமிழனை, குறை சொல்ல, தமிழர்கள் தான் வருகிறார்கள்.

......: நியாயமான கருத்துரை. மாண்புமிகு குலசேகரன் அமைச்சரானதும் ஏற்கனவே இருந்த அதிகாரம் என்ன என்ன செய்து இருக்கிறது; அந்த அதிகாரத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்து அறிக்கை தயாரிக்கவே ஆறு மாதங்கள் பிடித்தன. கோப்புகள் மேல் கோப்புகள்.

இவர் அமைச்சராவதற்கு முன்பு இருந்தே நண்பராக இருந்தவர். அதனால் சில பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். பொதுவில் பகிர இயலாது. அரசு நிந்தனையாகலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வெளியே தெரியாமல் நம் இனத்திற்கு நிறைய உதவிகள் செய்து உள்ளார். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது ஐயா.

......: உங்களுக்கும் அதைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன்

தேவிசர கடாரம்: இவர் இந்திரா காந்தியின் வழக்கிற்கு பணம் வாங்கவில்லை என்று கேள்விப்பட்dஉ இருக்கிறேன்...

......:உண்மைதான். இந்திராகாந்தியின் பிரச்சினை இந்த நாட்டுத் தமிழர்களின் பிரச்சினை எனும் முன்னெடுப்பில் நகர்ந்தவர். ஒரு கட்டத்தில் அவர் பணிபுரிந்த பாலர் பள்ளியில் அவருக்கு ஊழியப் பிரச்சினை; ஊதியப் பிரச்சினை. அவற்றுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டவர். இங்கு விளக்கமாகச் சொல்ல இயலாது. புரிந்து கொள்ளும்மா...

சித்தியவான் சனாதன ஆசிரமம்

தனசேகரன் தேவநாதன்: சித்தியவான் சனாதன ஆசிரம குழந்தைகளின் அடையாள அட்டை பிரச்சனைகளை 90 சதவிகிதம் தீர்வு கண்டவர். பொறுப்பில் இல்லாத போதும் இருந்த போதும் அந்த ஆசிரமத்திற்கு இன்று வரை உதவி வருபவர்.

இவ்விடம் வந்தால் ஆசிரமக் குழந்தைகளுடன் நிறைய நேரத்தை செலவிடும் அன்பான மனிதர். தனது பதவி காலத்தில் பெரிய மானிய தொகையை ஆசிரம குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கியவர். சித்தியவான் மண்ணிற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் 🙏🌹👌🙏🌹👌

......: தகவலுக்கு நன்றிங்க. ஆயர் தாவார், சித்தியவான் பகுதிகளில் தமிழர்கள் பலருக்கு நீல அடையாள அட்டைகள்; குடியுரிமை சான்றிதழ்கள் பெற்றுத் தந்துள்ளார். உண்மை.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

கணேசன் சண்முகம் சித்தியவான்: தெரியும் ஐயா. அன்றைய நிகழ்வை நான் தான் வழி நடத்தினேன். அமைச்சர் என்ற முறையில் சிறப்பான சேவையை செய்தார் ஆசிரமத்திற்கு.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தகவலுக்கு நன்றிங்க கணேசன் ஐயா. கண்ணுக்குள் ஈரம் இருப்பது நமக்கும் தெரியாது. வெளியே உள்ளவர்களுக்கும் தெரியாது. கண்ணுக்கு மட்டுமே தெரியும்.

வெங்கடேசன்: ஒருவரை பற்றி நன்கு ஆராயாமல் கண்டபடி புலனங்களில் திட்டுவது நம் மக்களுக்கு வா(வே)டிக்கையாகி விட்டது 🤷