05 ஜனவரி 2022

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் என்றும் வாழும்

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப தமிழ் - சீன மொழிப் பள்ளிகள் செயல் படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.


நாட்டில் தாய் மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என அவர் தமது வரலாற்றுப்பூர்வ தீர்ப்பில் தெரிவித்தார். தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சீன மற்றும் தமிழ் பள்ளிகள் செயல்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் நம் நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

*தமிழ் சீனப்பள்ளிகளுக்கு எதிரான வழக்கு*

இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் (வாதிகள்)

1. (Gabungan Pelajar Melayu Semenanjung எனும் Federation of Peninsular Malay Students (GPMS)

2. Pembangunan Pendidikan Islam Malaysia எனும் Islamic Education Development Council (Mappim)

3. Gabungan Persatuan Penulis Nasional Malaysia எனும் Confederation of Malaysian Writers Association (Gapena)

இந்த வழக்கின் பிரதிவாதிகள். அதாவது இந்த வழக்கிற்கு எதிராக வாதாடியவர்கள்:

1. மலேசிய அரசாங்கம்
2. மலேசிய கல்வி அமைச்சு/ மலேசிய கல்வி அமைச்சர்
3. ம.இ.கா.
4. ம.சீ.ச.
5. கெராக்கான்
6. Parti Bumiputera Perkasa Malaysia,
7. மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பு
8. மலேசிய தமிழ் நெறி கழகம்,
9. மலேசியத் தமிழர்க் கழகம்
10. தமிழர் திருநாள் கழகம் (பேராக்)
11. தமிழ்ப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம்
12. சீனக் கல்வியாளர் குழு Dong Zong
13. சீனக் கல்வியாளர் குழு Jiao Zong
14. மலேசியச் சீன மொழிக் கழகம் (Malaysian Chinese Language Council)
15. சோங் ஹுவா சீன உயர்நிலைப்பள்ளி (SMJK Chong Hwa)

(மலேசியம்)
30.12.2021

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக