05.01.2021
தமிழ் மலர் 03.01.2021 நாளிதழ் ஞாயிறு மலரில் மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன் அவர்கள் எழுதிய கவிதை.
என்றைக்கோ நடந்துவிட்ட வரலாற் றைத்தான்
இன்றைக்குக் கண்முன்னே காட்சி போலக்
கொண்டுவரும் திறன்எழுது கோலை பெற்று
கூர்தமிழுக்குக் குப்பெருமை சேர்க்கும் அண்ணா
வண்ணவண்ன சொல்லாட்சி மூலம் நீங்கள்
வழங்குகிற அறிவலைகள் நெஞ்சா ழிக்குள்
எழுந்தாட்டம் போடுதண்ணா இசைகள் மீட்டி
கட்டுரையை நகைச்சுவையாய் நகர்த்தும் உங்கள்
கலைகண்டு வாய்சிரிக்கும் களுக்கென் றேதான்!
குத்தூசி களைநிரம்பச் சொல்லில் சேர்த்துக்
குத்துகிற பாங்குமிக அருமையண்ணா!
பற்றுமொழி மேல்வைத்தே ஏட்டில் நீங்கள்
பதிவுசெய்யும் கட்டுரைகள் விழிப்பு ணர்வை
கற்பவர்கள் உள்ளத்தில் ஏற்ப டுத்தி
கம்பீர நடையிங்கே போடு தண்ணா!
கட்டுரைகள் ஆயிரத்து கும்மேல் செய்யும்
கரம்பெற்றாய் சாதனையும் அதிலே கண்டாய்!
கட்டுரையை இன்றிங்கே படைத்து விட்டால்
கரகாட்டம் கண்டபடி போடு கின்றார்!
பத்திரிகை தனைவிரித்தால் உங்கள் பக்கம்
பார்த்தகணம் மனத்திலுற் சாகம் தாவும்!
சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் நீங்கள் கொண்ட
தமிழ்ப்பற்றைக் கண்டுதமிழ்த்தாய் செருக்க டைவாள்!
தமிழுக்குத் தொண்டுசெய்தார் பெருமை என்றும்
தமிழர்வா னில்கதிர்போல் நிலைத்து நிற்கும்!
அமிழ்தான செம்மொழியை உயிர்மூச் சாக
அகத்தினிலே ஏற்றுலவும் அண்ணா வாழ்க!
இமைமணிபோல் செந்தமிழை பாது காக்கும்
இதயத்தைப் பெற்ற உங்கள் எழுத்தே ஊக்கம்!
சுமையாக எண்ணாமல் மொழியைத் தூக்கி
சுகிக்கும்நீர் கட்டுரைக்கு மன்னன் தானே!
கரு.ராஜா: கொட்டு வாங்கினாலும் மோதிர விரல்களில் கொட்டு வாங்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இந்த நாட்டின் புகழ்ப் பெற்ற ஒரு மரபுக் கவிஞனின் பாராட்டுக் கவிதையைப் படித்த போது மெய் சிலிர்த்துப் போனேன்.
சாகுல் ஹமீது: மரபுக் கவிஞனின் மணிக்கவிதை... இடைச் செருகல்... நகைச்சுவை... படிப்பதற்கு ஆர்வமூட்டும்... எடுத்துக் காட்டும் உண்மைகள்... குத்தூசி போல் தீட்டும்... வாழ்த்துகள் ஐயா!
=====
புனைப் பெயர்: ம.அ. சந்திரன்
பணி: வியாபாரம்
நூல்கள்: சிந்தனைச் செல்வம் (கவிதைத் தொகுப்பு)
1973-ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். பெரிதும் கவிதைகளும் கட்டுரைகளுமே எழுதி வருகிறார். மலேசியத் திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்.