17 ஜனவரி 2021

நெசவாளர்களும் துணி வணிகர்களும்

15.01.2021

பதிவு செய்தவர்: முனைவர் க. சுபாஷிணி

வாருங்கள் படிப்போம் - 36
நெசவாளர்களும் துணி வணிகர்களும்
முனைவர்: ஜெயசீல ஸ்டீபன்
திறனாய்வு: முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

Jan 16, 2021
சனிக்கிழமை மாலை 4.30 மணி( இந்திய நேரம்)
ஐரோப்பிய நேரம் நண்பகல் 12:00.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87543620268?pwd=US93ZER3cUljWE9yQVNHaGg4UWp0QT09

Meeting ID: 875 4362 0268
Passcode: 307455

தமிழகத்தின் துணி நெசவு குறித்த ஒரு நெடிய வரலாறு..பங்கேற்க அழைக்கிறோம்.

தமிழகத்தில் துணி நெசவுத் தொழில், நெசவுத் தொழிலுக்கு கட்டப்பட்ட வரி தொடர்பான  கல்வெட்டுகள், நெசவிற்காக, வணிகத்திற்காகப் புகழ் பெற்று விளங்கிய தமிழகக் கடற்கரை நகரங்கள், டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தின் தாக்கம்,

நெடுங்காலமாகத் தமிழக வணிகர்கள் கிழக்காசிய நாடுகள் சென்ற விவரங்கள், மலாக்கா, இந்தோனேசியா மன்னர்கள் தமிழகத் துணிகள் பெற கப்பல் அனுப்பிய செய்திகள், செட்டியார்கள் மற்றும் மரைக்காயர்கள் துணி வணிகத் தொழில்... இப்படி விரிவாகப் பேசுகிறது ’நெசவாளர்களும், துணி வணிகர்களும்’

திறனாய்வு: முனைவர் க.சுபாஷிணி 



மலாக்கா தோன்றிய வரலாறு

15.01.2021

பதிவு செய்தவர்: ஜெயகோபாலன், பாகன் செராய்

பரமேஸ்வராவின் வேட்டை நாயைச் சருகுமான் தன் பின்னங் காலில் எத்தி உதைத்துத் தள்ளியதை மன்னர் கண்ணுற்றார். அந்த நிகழ்வினைக் (சருகுமானின் வீர தீரச் செயலை) கண்ணுற்ற மன்னர் அங்கு தன் ஆட்சியை நிறுவ எண்ணினார்.

தான் நிழலுக்காக ஒதுங்கிய அந்த மரத்தின் பெயரைக் கேட்டறிந்து அந்த இடத்திற்கு (ஊருக்கு) அந்த மரத்தின் பெயரையே (மலாக்கா) என்று பெயர் சூட்டினார் என்கிறது மலாக்கா வரலாறு.

Pokok Melaka

✅ Bahasa Inggeris: Indian gooseberry

✅ Nama botani: Phyllanthus Emblica - ialah sejenis pokok daun luruh daripada famili Phyllanthaceae. Pokok ini yang terdapat di Malaysia dan India terkenal untuk buahnya yang boleh dimakan. Nama umum untuk pokok ini termasuk:

✅ Bahasa Sanskrit: amalaka

✅ Bahasa Hindi: amla

✅ Bahasa Tamil: nelli-நெல்லி

மலாக்கா என்ற பெயர் வந்ததற்கும் இந்த மரத்திற்கும் தொடர்பு உள்ளதாகக் கூறுகிறார்கள்.

ஆதி சேகர்: மேலே தோழர் ஜெயகோபாலன் Rp (16:22)  அவர்கள் பகிர்ந்த வரலாறு மிக்க கருத்தை...

எப்படி இதுபோல் உள்ளவரிடையே
தமிழ்....
நம் தமிழ்  வரலாற்றை..
நமக்கெல்லாம்
நம் கடந்து வந்த பாதையை தன் எழுத்துகள் மூலமாக
ஆழ் மனதில் பதியும் அளவுக்கு கொண்டு சேர்த்த.......

முத்து ஐயாவையும்...
மற்ற வரலாற்று படைபாளிகளின்
பெயராவது தெரிய
வாய்ப்பு உள்ளதா....?
இவருக்கு.....
விஜய் படம் பார்க்க
முடியவில்லையாம்

இந்த வேளையில் தோழர் ஜெயராமனை பாதம் தொட்டு வணங்கவேண்டும் போல உள்ளது...

வரும் தமிழ் சமுதாயத்திற்க்கு நல்லதொரு தாய் தமிழ் தாய்யை
(இலக்கியாஜெயராமன்) தந்ததற்கு.

ராஜா சுங்கை பூலோ: நான் படிக்கும் போது இப்படித் தான் படித்தேன்.


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
மலாக்கா மரத்தின் பெயரில் இருந்து மலாக்காவின் பெயர் வந்து இருக்கலாம். நான் ஏற்றுக் கொள்கிறேன். இதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் தமிழ் மலர் நாளிதழில் எழுதி இருக்கிறேன்.

மல்லாக்கா என்பது  ஒருகொச்சைத் தமிழ்ச் சொல். அந்தச் சொல்லைப் பரமேஸ்வரா பயன்படுத்தி இருப்பாரா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

பரமேஸ்வரா ஒரு பல்லவர். அவர் தமிழ் மொழியைப் பேசினாரா; அல்லது ஜாவானிய கலப்பு சமஸ்கிருத மொழியைப் பேசினாரா; அல்லது ஜாவானிய கிரியோல் மொழியைப் பேசினாரா; அல்லது ஜாவானிய மொழியைப் பேசினாரா; அல்லது தமிழை எழுத்து முறையைப் பயன்படுத்தினாரா. தெரியவில்லை.

அப்படியே அவர் தமிழ் பேசி இருந்தாலும் அதை மறைத்து விடுவார்கள். மல்லாக்கா எனும் சொல்லை நான் தான் மலாக்கா வரலாற்றில் முன் வைக்கிறேன். இது ஒரு தற்காலிகமான கருத்து. (Hypothesis). கருத்துகளுக்கு நன்றிங்க.

இதைப் பற்றி தமிழ் மலரில் எழுதப்பட்ட கட்டுரை...

https://ksmuthukrishnan.blogspot.com/2020/06/blog-post_4.html

04.07.2020-இல் எழுதப்பட்டது.

https://ksmuthukrishnan.blogspot.com/2020/06/blog-post_25.html

25.06.2020-இல் தமிழ் மலரில் எழுதப் பட்ட முதல் கட்டுரை.





விக்கிப்பீடியா தொடங்கிய நாள் 2001 ஜனவரி 21

15.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

இன்று ஜனவரி 15 2001ஆம் ஆண்டில் இதே நாளில்தான் மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக இன்று திகழும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.

1408இல் சீனாவில் 37 கோடிச் சீன எழுத்துகள், 11,095 தொகுதிகளுடன் உருவாக்கப்பட்டு, 1400 சதுர அடிக்கு அடுக்கப் பட்டிருந்த யாங்கிள் டாடிஸ் என்ற கலைக்களஞ்சியமே உலகின் மிகப்பெரிய கலைக் களஞ்சியமாக 600 ஆண்டுகளுக்கு விளங்கியதை, 2007 செப்டம்பர் 9-இல் விக்கிப்பீடியா கடந்தது!

விக்கி, என்சைக்ளோப்பீடியா ஆகியவற்றை இணைத்து விக்கப்பீடியா என்று பெயரிடப்பட்டது. பயனாளர்களே எழுதி, திருத்தி, பயன்படுத்திக் கொள்ளும் இணையதள அமைப்புக்குப் பெயர் விக்கி. வார்ட் கன்னிங்காம் என்பவர்தான், 1994இல் கணினி நிரல் வடிவங்களுக்கான களஞ்சியத்திற்காக, பயனாளர்களே பங்களிக்கும் வடிவத்தை விக்கிவிக்கிவெப் என்ற பெயரில் உருவாக்கினார்.

விக்கி என்ற ஹவாய் மொழிச் சொல்லுக்கு வேகமாக என்று பொருள். பயனாளர்களே பங்களிப்பதால் வேகமாக வளரக் கூடியது என்பதை உணர்த்த, முதலில் க்விக்வெப் என்று பெயரிடத்தான் அவர் திட்டமிட்டார். ஹவாயின் ஹோனோலூலு விமான நிலையத்தில், பயணிகளை அழைத்துவரும் பேருந்துச் சேவைக்கு விக்கிவிக்கி ஷட்டில் என்று பெயரிடப் பட்டிருந்தது.

வேக வேகமாக என்ற பொருளுடைய அந்தப் பெயர் அவருக்குப் பிடித்திருந்ததால் விக்கிவிக்கிவெப் என்ற பெயரைச் சூட்டினார். அதைத் தொடர்ந்து பயனாளர்களே பங்களிக்கும் வடிவத்திற்கே விக்கி என்பது பெயராக நிலைத்து விட்டது. ஜிம்மி வேல்ஸ், லேரி சேங்கர் ஆகியோர் ஏற்கெனவே ந்யூபீடியா என்ற கலைக்களஞ்சிய தளத்தை 1999இல் உருவாக்கியிருந்தனர்.

விற்பன்னர்கள் மட்டுமே பங்களித்த அதன் வளர்ச்சி மெதுவாக இருந்ததால், குறைகளை நிரப்பும் மற்றொரு தளமாகத்தான் விக்கிப்பீடியா தொடங்கப் பட்டது. அதாவது, சரிபார்க்கப்பட்ட கட்டுரைகளை, விக்கிப்பீடியாவிலிருந்து ந்யூபீடியாவுக்கு எடுத்துக் கொள்வது என்று திட்டமிடப்பட்டு, விக்கிப்பீடியாவின் வளர்ச்சியின் காரணமாக, 2003இல் ந்யூபீடியாவே கைவிடப்பட்டது.

யாரும் பங்களிக்கலாம் என்பதால், கட்டுரைகளின் உண்மைத் தன்மை பலவிதங்களிலும் சரி பார்க்கப் படுகிறது. இதற்காக ஒரு பாட் (ரோபோ மென்பொருள்) ஒன்றும் தொடர்ந்து பதிவுகளையும், திருத்தங்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. அடிக்கடி உள்நோக்கத்துடன் திருத்தப்படும் பக்கங்கள் பாதுகாக்கப் பட்டவையாக மாற்றப் படுகின்றன.

இந்த நடவடிக்கைகளின் மூலம், நம்பகத்துக்குரிய கலக்களஞ்சியமாக திகழ்கிற விக்கிப்பீடியா, தற்போது 313 மொழிகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பங்களிப்பவர்களில் 90 சதவீதம் ஆண்களக இருப்பதால், பெண்களை ஊக்கப்படுத்த போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மாதத்திற்கு 170 கோடி (தனித்த) பயனாளர்கள் வருகிற விக்கிப்பீடியாவில் தற்போது 5.5 கோடி கட்டுரைகள் உள்ளன!



தமிழர் திருநாள் 2021 மலேசிய தமிழர் சங்கம் பேராக்

15.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார் 

 






 

மலேசிய வள்ளல் ரெனா

15.01.2021

பதிவு செய்தவர்: முத்துசாமி, கோலா கிள்ளான்

மலேசிய இந்திய சமுதாயத்தின் வள்ளல் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படும் ஒரே மனிதர் ‘நினைவில் வாழும்’ நா. ரெங்கசாமி பிள்ளை.

நாடு விடுதலை அடைந்த காலக் கட்டத்தில், தோட்டத் தொழிலில் தூள் கிளப்பிய வர்த்தகப் புள்ளியான இவர், ‘தவணை முறை’ என்னும் புதிய நுட்பத்தை வர்த்தகத்தில் அறிமுகப்படுத்தி இளந்தோட்ட முதலாளியர் ஏராளமானோரை உருவாக்கினார்.

இத்தனைக்கும் 1950-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் சிவகங்கை சீமையிலிருந்து, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஔவை மூதாட்டியின் வாக்கிற்கு இணங்க இம்மலாயாவிற்கு வந்தவர் இவர்.

வந்த சூட்டோடு, மண் வாசனைக்கும் மண்வாழ் மக்களின் இயல்புக்கும் ஏற்ப தன்னை தக அமைத்துக் கொண்டு ஆங்கிலேயர், சீனர், மலாயர் என அனைத்துத் தரப்பினருடனும் ஊடாடி, உறவாடி வர்த்தகக் கொடியை நன்றாக பறக்கவிட்டவர் வள்ளல் ரெனா.

பொருள் சேர சேர, இவரின் கொடைக் குணமும் பரந்து விரிந்தது. இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் ஆசிரியர் தொழிலுடன் வாழ்க்கைப் பயணத்தை இவர் தொடங்கிய நேரத்தில், எவரோ ஒரு முதியவர் உதவி கேட்டதற்காக தன்னிடம் இல்லாத நிலையிலும் கடன்பெற்று உதவிக்கரம் நீட்டியவர் ரெங்கசாமி.

குடும்பத்தாரை நன்கு வாழ வைக்கவும் நலிந்த மக்களுக்கு கொடை அளிக்கவும் நிறைந்த பொருளீட்ட வேண்டும் என்று கனவிலும் நனவிலும் என எந்நேரமும் மனதிற் கொண்டிருந்த அந்த எண்ண ஊற்றுதான், வள்ளல் ரெனா-வை சிவங்கையிலிருந்து பெயர்த்து வந்து இம்மலையகத்தில் சேர்த்தது.

மலேசியத் திருநாட்டின் முதல் ஆறு பிரதமர்களுடன் குடும்ப உறவைப் பேணி வரும் தாமரைக் குழுமத்தின் அடித்தள நாயகரான வள்ளல் ரெங்கசாமி, அரசியல் ஈடுபாடும் மொழி-சமுதாயப் பற்றும் மிகக் கொண்டிருந்தார்.

மிகமிக நல்லபொழுது ‘இந்தப் பொழுது’

உயர்வுக்கு வழி ‘உழைப்பு’

நழுவவிடக்கூடாதது ‘வாய்ப்பு’

வணங்கத்தக்கவர்கள் ‘தாயும் தந்தையும்’

வந்தால் போகாதது ‘புகழும் பழியும்’

போனால் வராதது ‘மானமும் உயிரும்’

தானாக வருவது ‘இளமையும் முதுமையும்’

அனைவருக்கும் பொதுவானது ‘பிறப்பும் இறப்பும்’

கடைத்தேற வழி ‘உண்மையும் உழைப்பும்’

வருவதும் போவதும் ‘இன்பமும் துன்பமும்’

மிகப்பெரும் தேவை ‘சூழ்நிலை அறிவு’

போன்ற சிந்தனை சொற்றொடர்களை வேளை வாய்க்கும்பொழுதெல்லாம், குடும்ப உறுப்பினர்கள், வர்த்தக நண்பர்கள், தோட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரெங்கசாமி.

வள்ளல் ரெனா என்று சுறுக்கமாக அழைக்கப்படும் ரெங்கசாமியின் குடும்ப முன்னோர் தஞ்சை மண்டலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மன்னர் ஆட்சி நடைபெற்ற அக்காலத்தில், பிற மன்னர்களின் ஆதிக்கமும் படையெடுப்பும் அடிக்கடி இடம்பெற்று வந்ததால், பொது மக்களும் தங்களின் வாழ்க்கைச் சூழல், தொழில் முறைக்கு ஏற்ப அவ்வப்பொழுது இடம்பெயருவது அந்நாட்களில் வாடிக்கையானது.

அந்த வகையில் தஞ்சை மண்ணில் இருந்து திருப்புத்தூருக்கு குடிபெயர்ந்த ரெங்கசாமியின் முன்னோர், சிவ கங்கைச் சீமையின் கோட்டை கொத்தளப் பகுதியில் வாழ்ந்த நேரத்தில் நாகப் பிள்ளை-தங்கம்மாள் இணையரின் நான்காவது மகனாகப் பிறந்தார் ரெங்கசாமி.

அதிக பொருள் தேடும் எண்ணத்தால் ஆசிரியர் தொழிலைவிட்டு, உணவுப் பண்டக விநியோகம், கனரக வாகன முதலாளி என்றெல்லம் அனுபவம் பெற்று பினாங்கில் நகரத்தார் பெருமக்களுடன் சேர்ந்து பண பரிவர்த்தனைத் தொழில் புரிந்து அதன் பிறகுதான் தோட்ட முதலாளியாகவும் தோட்ட வணிகராகவும் உருவெடுத்தார்.

வலுவான குடும்ப பின்னணி அமைந்தபின், ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்குப் பின் தமிழகம் திரும்பி 79 வயது வரை வாழ்ந்த வள்ளல் ரெனா-விற்கு ஜனவரி முதல் நாள் (1918) பிறந்த நாள்.