பதிவு: இமயவர்மன், மதுரை - 03.07.2021
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான அகமுடையார் வழித்தோன்றல் ஐயா எஸ்.ஆர். நாதன் தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் எஸ். ஆர். நாதன் இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன் இவர் 03/07/1924-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்துள்ளார். இவரது பிறப்புக்கு முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறி உள்ளது.
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான அகமுடையார் வழித்தோன்றல் ஐயா எஸ்.ஆர். நாதன் தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் எஸ். ஆர். நாதன் இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன் இவர் 03/07/1924-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்துள்ளார். இவரது பிறப்புக்கு முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறி உள்ளது.
சிங்கப்பூர் அரசாங்க சேவையில் பல பொறுப்புகளை வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய சிறப்புக்குரியவராகக் கருதப்படும் நாதன் அவர்கள் 1979-இல் தமது 55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு கடந்த 31.8.2012 அன்று பதவி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐயாவுக்கு புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
பின்னூட்டங்கள்
முருகன் சுங்கை சிப்புட்: ஓ... இவர் இந்தியர் இல்லையோ
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: அகமுடையார் என்று கட்டி அழுவதைத் தவிர்த்து தமிழர் என்று சொன்னால் என்ன குறைந்துவிடப் போகிறது... எப்போதுதான் இந்தச் சாதியத்திற்கு முடிவு கட்டுவது.
பால் சேர்வை: ஐயா முத்து அவர்களே..அகமுடையார் என்பதின் பொருள் என்ன??
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: முட்டையைப் போட்ட கோழியிடம் கேட்கலாமே...
தனசேகரன் தேவநாதன்: முடிசார்ந்த மன்னரும் பிடிசாம்பல் ஆவதுதான் நிதர்சனம். இதில் முகமுடையார் அகமுடையார் என்ற அகழ்வாராய்ச்சி அர்த்தமுடையதா சகோதரரே. சிந்தித்துச் செயல்படுவீர் 😢😥
முருகன் சுங்கை சிப்புட்: மக்கள் இந்த மாமனிதரை சிங்கப்பூர் கண்டெடுத்த முத்தாகவும்; சிங்கப்பூரராக மட்டுமே பார்த்தது. எங்கள் வீட்டுப் பிள்ளை போல் உறவாடினர். இந்த கட்டுரை வேறு மாதிரி பார்க்கிறது.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியம் பேசுகிறது
முருகன் சுங்கை சிப்புட்: ஆமாம் அய்யா நம்மில் இன்னும் மாற்றம் இல்லை..
தேவி சர: மிகச் சரியாக சொன்னீர்கள் அப்பா... நம்மவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியை எப்படியாவது ஒழிச்சுக் கட்டலாம் என்று பார்க்கிறேன். உஹும் முடியல... ரெக்க கட்டி பறக்குது... என்னையே மலையாளத்தான் வன்னியக் கவுண்டன் என்று தமிழர் விவாத மேடை குழுவில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அப்புறம் எப்படிம்மா...
தேவி சர: உண்மை ... முப்பதாம் நூற்றாண்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் ஆனால், இன்றும் பிள்ளைகளுக்கு சாதியை பெயரோடு இணைத்து வைக்கிறார்கள் 🤦🏻♀️🤷🏻♀️
முருகன் சுங்கை சிப்புட்: உங்களையும் விட்டு வைக்கவில்லையா இவனுங்க.
ராதா பச்சையப்பன்: பல வேளைகளில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போது,, சாதியின் பெயரையும் சேர்த்தே பெயர் வைக்கும் பெற்றோர் என்றாவது நினைத்து பார்த்தது உண்டா?
பிள்ளை வளர்ந்து படிக்கும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் சாதிப் பெயரை சொல்லி அழைக்கும் போது அந்தப் பிள்ளை படும் வேதனை; அவமானத்தை நினைத்து பார்த்து இருந்தால், பிள்ளைகள் பெயரயோடு சாதி பெயரை இணைக்க மாட்டார்கள்.
பெரியவர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளை குறை கூறுவது ஏன்? இன்றும் இது போன்ற சாதிப் பெயரை பேரப் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் தாத்தா, பாட்டிக்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் போல் உள்ளவர்கள் திருந்தினால் ஒழிய சாதி பெயரும் ???
அதன் பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு கடந்த 31.8.2012 அன்று பதவி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐயாவுக்கு புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
பின்னூட்டங்கள்
முருகன் சுங்கை சிப்புட்: ஓ... இவர் இந்தியர் இல்லையோ
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: அகமுடையார் என்று கட்டி அழுவதைத் தவிர்த்து தமிழர் என்று சொன்னால் என்ன குறைந்துவிடப் போகிறது... எப்போதுதான் இந்தச் சாதியத்திற்கு முடிவு கட்டுவது.
பால் சேர்வை: ஐயா முத்து அவர்களே..அகமுடையார் என்பதின் பொருள் என்ன??
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: முட்டையைப் போட்ட கோழியிடம் கேட்கலாமே...
தனசேகரன் தேவநாதன்: முடிசார்ந்த மன்னரும் பிடிசாம்பல் ஆவதுதான் நிதர்சனம். இதில் முகமுடையார் அகமுடையார் என்ற அகழ்வாராய்ச்சி அர்த்தமுடையதா சகோதரரே. சிந்தித்துச் செயல்படுவீர் 😢😥
முருகன் சுங்கை சிப்புட்: மக்கள் இந்த மாமனிதரை சிங்கப்பூர் கண்டெடுத்த முத்தாகவும்; சிங்கப்பூரராக மட்டுமே பார்த்தது. எங்கள் வீட்டுப் பிள்ளை போல் உறவாடினர். இந்த கட்டுரை வேறு மாதிரி பார்க்கிறது.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியம் பேசுகிறது
முருகன் சுங்கை சிப்புட்: ஆமாம் அய்யா நம்மில் இன்னும் மாற்றம் இல்லை..
தேவி சர: மிகச் சரியாக சொன்னீர்கள் அப்பா... நம்மவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியை எப்படியாவது ஒழிச்சுக் கட்டலாம் என்று பார்க்கிறேன். உஹும் முடியல... ரெக்க கட்டி பறக்குது... என்னையே மலையாளத்தான் வன்னியக் கவுண்டன் என்று தமிழர் விவாத மேடை குழுவில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அப்புறம் எப்படிம்மா...
தேவி சர: உண்மை ... முப்பதாம் நூற்றாண்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் ஆனால், இன்றும் பிள்ளைகளுக்கு சாதியை பெயரோடு இணைத்து வைக்கிறார்கள் 🤦🏻♀️🤷🏻♀️
முருகன் சுங்கை சிப்புட்: உங்களையும் விட்டு வைக்கவில்லையா இவனுங்க.
ராதா பச்சையப்பன்: பல வேளைகளில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போது,, சாதியின் பெயரையும் சேர்த்தே பெயர் வைக்கும் பெற்றோர் என்றாவது நினைத்து பார்த்தது உண்டா?
பிள்ளை வளர்ந்து படிக்கும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் சாதிப் பெயரை சொல்லி அழைக்கும் போது அந்தப் பிள்ளை படும் வேதனை; அவமானத்தை நினைத்து பார்த்து இருந்தால், பிள்ளைகள் பெயரயோடு சாதி பெயரை இணைக்க மாட்டார்கள்.
பெரியவர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளை குறை கூறுவது ஏன்? இன்றும் இது போன்ற சாதிப் பெயரை பேரப் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் தாத்தா, பாட்டிக்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் போல் உள்ளவர்கள் திருந்தினால் ஒழிய சாதி பெயரும் ???
பி.கே. குமார்: தமிழர் அல்லாதவர்கள் பலரும்கூட சாதிப் பெயரை இணைப்பதைப் பெருமையாக கொள்கிறார்கள்.