05 ஜனவரி 2022

பறக்கும் அணில்

பறவைகள் பறப்பதைப் போல பறக்கும் அணிலால் பறக்க முடியாது. ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்குக் காற்றில் மிதந்த படியே தாவ முடியும். ஓர் உயரமான மரத்தில் ஏறி அங்கு இருந்து கீழே பாய்கிறது.


இதன் கால்களை ஒரு சவ்வுத் தோல் இணைக்கிறது. அதன் உதவியால் கொஞ்ச தூரம் பறக்க முடிகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கால்களை விரைப்பாக நீட்டிப் பாயும். அதைப் பார்க்கும் போது அணில் பறப்பதைப் போல இருக்கும். உண்மையில் அணில்களால் பறக்க இயலாது.

(மலேசியம்)
02.01.2022

04 ஜனவரி 2022

மலேசியத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக நிதி சேகரிப்பு

தாய்மொழிப் மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வமான தன்மையை எதிர்த்து போராடும் ஓர் அரசு சாரா நிறுவனத்திற்கு உதவுவதற்காக, பெம்பேலா இஸ்லாம் (Pertubuhan-Pertubuhan Pembela Islam) அமைப்புகள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளைச் சேகரிக்க ஒரு நிதியைத் தொடங்கி இருக்கின்றது.


அதன் தலைவர் அமினுதீன் யஹாயா (Aminuddin Yahaya). அவர் கூறுகிறார்: ’இதுவரையில் அந்த அரசு சாரா அமைப்புகள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி வந்தன. அவர்களின் அந்தச் சுமையை இந்த நிதி, ஓரளவுக்கு குறைக்க முடியும்.’

’தாய்மொழிப் பள்ளிகளுக்குச் சவால் விடுக்கும் எங்கள் போராட்டத்திற்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டும் என்று பொது மக்கள் பலர் கேட்டுக் கொள்கிறார்கள்.’

"இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும். ஆகவே எங்களின் செலவுகளுக்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டிய அவசியத்தை நானும் என் தோழர்களும் உணர்கிறோம்’ என்கிறார் அமினுதீன் யஹாயா.

"குறைந்த பட்சம் எங்களின் நீதிமன்றச் செலவுகள், ஆவணங்கள் தயாரிப்புச் செலவுகள் மற்றும் இந்த வழக்கில் கடினமாக உழைத்துப் போராடி வரும் வழக்கறிஞர்களுக்கு ஒரு சின்ன பண உதவி போன்றவற்றை எங்களால் செய்ய முடியும்," என்று அமினுதீன் யஹாயா தன் பேஸ்புக் பதிவில் இன்று கூறினார்.

(மொழியாக்கம்: மலேசியம்)
04.01.2022

The Pembela Islam (Pembela) organizations will open a fund to collect donations from the public in an effort to help the non-governmental organization (NGO) in its struggle to challenge the legitimacy of vernacular schools.

Its chairman, Aminuddin Yahaya, said that with the contribution from the public, it could ease some of the burden borne by NGOs that previously used pocket money for operations.

Many ask, will the Defenders open a fund for the general public to contribute to our struggle to challenge the legitimacy of this vernacular school.

“As this case goes on for much longer, with the appeal process and possibly to a higher court, my comrades and I feel the need for us to open that space (fund).

"At least we can help cover court costs, documentation and also as a token to lawyers who are working hard to fight in this case," he said through his Facebook post, today.


https://malaysiagazette.com/2022/01/03/pembela-buka-tabung-tampung-perjuangan-cabar-keabsahan-sekolah-vernakular/?amp


The Pembela Islam (Pembela) organizations will open a fund to collect donations from the public in an effort to help the non-governmental organization (NGO) in its struggle to challenge the legitimacy of vernacular schools.

Its chairman, Aminuddin Yahaya, said that with the contribution from the public, it could ease some of the burden borne by NGOs that previously used pocket money for operations.

Many ask, will the Defenders open a fund for the general public to contribute to our struggle to challenge the legitimacy of this vernacular school.

“As this case goes on for much longer, with the appeal process and possibly to a higher court, my comrades and I feel the need for us to open that space (fund).

"At least we can help cover court costs, documentation and also as a token to lawyers who are working hard to fight in this case," he said through his Facebook post, today.




 

 

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2021 புள்ளிவிவரங்கள்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2021 புள்ளிவிவரங்கள்
(மாவட்ட வாரியாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்)

நகர்ப்புறம் (370 பள்ளிகள்) (70.21%)

கிராமப்புறம் (157 பள்ளிகள்) (29.79%)

அரசாங்க உதவி:

முழு உதவி (162 பள்ளிகள்) (30.74%)

பகுதி உதவி (365 பள்ளிகள்) (69.26%)

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை:

ஜனவரி 2018 - 81,488 மாணவர்கள்

ஏப்ரல் 2018 - 81,635 மாணவர்கள்

ஜனவரி 2019 - 81,321 மாணவர்கள்

மே 2019 - 81,447 மாணவர்கள்

ஜனவரி 2020 - 80,569 மாணவர்கள்

ஜூன் 2020 - 80,743 மாணவர்கள்

ஜூன் 2021 - 80,434 மாணவர்கள்

(தயாரிப்பு: மலேசியம்)

சான்றுகள்: SENARAI SEKOLAH WEB KPM - JUN2020 - https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3547-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2020/file

 

 

09 அக்டோபர் 2021

மலாக்காவின் முதல் கவர்னர் லியோங் யூ கோ

மலாயா மாநிலங்களில் யாங் டி பெர்த்துவா, கவர்னராக நியமிக்கப்பட்ட முதல் முதல்வர் லியோங் யூ கோ (LEONG YEW KOH. முதலும் கடைசியுமான சீனர். 31 ஆகஸ்ட் 1957-இல் இருந்து 30 ஆகஸ்ட் 1959 வரை பணியாற்றினார்.


அவர் 12 செப்டம்பர் 1959 முதல் 12 ஜனவரி 1963 வரை மலாயா நீதித்துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார்

மலாய் அல்லாதவர்கள் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்று யார் சொன்னது?

நமது சுதந்திரத்தின் தொடக்கத்தில் மலேசியா எப்படி இருந்து இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். இப்போது போல இனம் மற்றும் மதத்திற்கு அப்போது குருட்டுத்தனம் எதுவும் இல்லை.

06 அக்டோபர் 2021

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி இருக்கிறார்

06.10.2021

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தன் சம்பளத்தைக் குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

3. அம்மா நீங்கள் விரும்பியதைச் சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாகக் காட்டப் படுகிறது. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.

4. நீங்கள் தொலைபேசியில் பேசும் போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பது இல்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடம் இருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

5. அலமாரியில் வண்ண மயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தன் சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவது இல்லை. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கு என்று ஆபரணம் ஏதும் இருப்பது இல்லை. தனக்கு என்று ஏதும் வாங்கியதும் இல்லை.  இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும் போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி அல்லது கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் பண்டிகைக்கு எனக்காகச் சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது ​​குழந்தைகள் சொல்கிறார்கள்; வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார்?

*அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.* இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தான் தெரியவில்லை.