29 ஜூன் 2021

கோலா சிலாங்கூர் இந்தியர்களுக்கு உதவிப் பொருள்கள்


கரு. ராஜா, சுபாங் ஜெயா: இந்த கேள்வி ராதாவுக்கு? மேற்கண்ட உதவித் திட்டத்தின் கீழ் உங்களுக்குப் பொருள் ஏதாவது கிடைத்ததா?

ராதா பச்சையப்பன்: உதவி பெற்ற இடம் எல்லாம்  காப்பாருக்கும், ஜெரத்திற்கும் இடையில் உள்ளது. மாவட்டம் தான் கோலசிலாங்கூர். எங்கள் இடத்துக்கு இது போன்ற உதவிகள் வருவது குறைவு தான். அப்படியே வந்தாலும் மலாய்க்காரர்களுக்குத் தான்; மலாய்க்காரர்களுக்குத் தான் கொடுப்பார்கள்.

இதை எப்பவும் நான் எதிர் பார்ப்பதில்லை. எனக்கு ஓர் அளவு வசதி உண்டு. இவை எல்லாம் மிகவும் ஏழ்ழையில் கஷ்டப் படுபவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அப்படி கிடைத்தால் பெறும் மகிழ்ச்சி அடைவேன். தீபாவளிக்கும் நம்மவர்களுக்கு, பணமாகவோ, பொருளாகவோ கொடுப்பார்கள். இன்று வரை எதையும் நான் வாங்கியதும் இல்லை. கேட்டதும் இல்லை. அதை விரும்புவதும் இல்லை. ஏழைகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தாலே போதுமே. கேட்டதற்கு நன்றி சகோதரரே. 🙏🌺

மலாக்கா முத்துகிருஷ்ணன்: சபாஷ் 👏👏👏. இப்படித்தான் இருக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கை... வெரிகுட்...

 

1 கருத்து: