29 ஜூன் 2021

பிரதமருக்குப் போன் செய்யும் பெண்கள்



மலாக்கா முத்துகிருஷ்ணன்: பிரதமருக்கு போன் செய்யும் அளவிற்கு நம் பெண்கள் முன்னேறி விட்டார்கள். அதிக உரிமை கொடுத்தால் பாவம் ஆண்கள்... 😞

கரு. ராஜா: சுபாங் ஜெயா: இது ரொம்ப நல்லா இருக்கு!!! தொடர்ந்தால் பெண்கள் செய்யும் எல்லா வேலையையும் மறந்து விடுவார்கள்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவு என்று புந்தோங் பக்கிரிசாமி அனுப்பி வைத்தது...

ராதா பச்சையப்பன்: பெண்களுக்குச் சம உரிமை என்பது சும்மா தானா? பிரதமரிடம்  பேசியதில் நீங்கள் எல்லாம் பெண்கள் எங்களை நினைத்து பெருமைப்பட வேண்டுமே தவிர, பொறாமை படக் கூடாது. 😃🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  அதற்கு புருசன்காரனை இப்படியா வேலை வாங்குவது. பாவம் அந்த புருசன்காரன்.

தேவி சர: இல்லை அப்பா... பாவம் பெண்கள் இன்று பல வீடுகளில் ஆண்கள் பெண் சம்பாத்தியத்தில் தான் வாழ்கிறார்கள்.... அதுவும் படித்த பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் சொகுசு வாழ்க்கைதான்...

மலாக்கா முத்துகிருஷ்ணன்: இது எங்களைப் போன்றவர்களுக்கு அல்ல. இப்போது உள்ள இளைஞர்கள் சிலருக்குப் பொருந்தி வரும். இதுவரை என் மனைவியை வேலைக்கு அனுப்பியது கிடையாது.

முன்பு என் சம்பளத்தில் கடைசி பத்து வெள்ளிகள் (50 வெள்ளி) மட்டுமே என் சொந்தச் செலவு. மற்ற நூறு வெள்ளிகள் எல்லாம் குடும்பத்திற்கு... பல வருடங்கள்.

கரு. ராஜா: சுபாங் ஜெயா: இடுப்பு உடைந்துவிடும்.

ராதா பச்சையப்பன்:  கட்டினதில் இருந்து கடைசி வரையிலும் நாங்க செய்யும் போது யாருக்கும் எங்கள் மீது பரிதாபமே வரவில்லையே. அத்தி பூத்த மாதிரி ஒரு சில நாட்கள் செய்தால், அதற்குப் பெயர் கொடுமையா? இந்தக் கொடுமையை எங்க போய் சொல்வது. இந்த ‌கொரோனா வந்ததே இப்படி பட்ட ஆண்களால் தான். மனைவி தினம் படும் கஷ்டம் இப்பவாவது தெரிதால் சரி.🙏🌺.

ராதா பச்சையப்பன்:  >>>> கரு. ராஜா, சுபாங் ஜெயா: அண்ணா, நீங்களுமா?😳😳😱 நீங்க இப்படி சொல்வீங்க என்று நினைத்துப் பார்க்கவில்லை. அண்ணியின் மீது அலாதி பிரியம் கொண்டவர் நீங்கள். நம்ப முடியவில்லை 😳🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஒவ்வொரு வீட்டிலும் எந்தக் கணவன் என்ன வேலை செய்வான் என்று யாருக்கும் தெரியாது. அதே சமயத்தில் வீட்டு வேலைக்கு இப்படி அலுத்துக் கொள்கிறீர்கள்... வெளியே போய் மாடாய் உழைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம்.

தனசேகரன் தேவநாதன்: கொடுமை... கொடுமை. என் மலேசியம் புலனம் பக்கம் போனால் அங்கே இரண்டு கொடுமை கொண்டை கட்டி ஆடுதோ இராதா அம்மா 😃😄😀🤣

மலாக்கா முத்துகிருஷ்ணன்: எனக்குத் தெரிந்த ஒருவர் மூன்று வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார். காலையில் ஜே.கே.ஆர். வேலை. பிற்பகலில் மீன் மார்க்கெட் வேலை. இரவில் ஜாகா வேலை. இப்படி மூன்று வேலை செய்தவர் சீக்கிரமாய்ப் போய்ச் சேர்ந்து விட்டார். நல்ல உழைப்பாளி.

ராதா பச்சையப்பன்: 🙏இப்படி உழைத்தவர் ஒருவர், தன் பிள்ளைகள் இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்களே, அந்த அப்பாவும் பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு அகம் மகிழ்ந்து நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தார். நீங்க சொன்னவருக்கு ஏதாவது நோய் இருந்திருக்கும். 😃🙏.

ராதா பச்சையப்பன்:  >>>> தனசேகரன் தேவநாதன்: நீங்களுமா சகோதரரே! எனக்கு சப்போட் பண்ண இந்தப் புலனத்தில் ‌பெண்கள் யாருமே இல்லையா சகோதரிகளே? 😢😳😳.

தனசேகரன் தேவநாதன்: தாய் குலம் என்றுமே தெய்வத்திற் நிகர். வருத்தம் வேண்டாமே... 🌹🙏🌹🙏🌹🙏

தேவி சர:>>>> தனசேகரன் தேவநாதன்: அப்படி சொல்லுங்கள் ஐயா👍🏻👌

மலாக்கா முத்துகிருஷ்ணன்: நான் இருக்கேன் பயப்படாதேமா... ஆனாலும் இன்றைக்கு மட்டும்... என் ஆண் இனத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன். நான் ஆண்கள் கட்சி. 😃😃😃

தேவி சர:இந்தக் கேலிசித்திரம் வரைந்தவர் வீட்டில் இப்படித்தான் இருப்பார் போலும்... 🤷🏻‍♀️

தனசேகரன் தேவநாதன்: எடுத்து விட்டார் துப்பாக்கியை தேவி அம்மா...

தேவி சர: அவர் வரைந்த படத்திற்கு நம் புலனத்தில் இப்படி விமர்சனம் வரும் என்று அடியேன் எதிர்பார்க்கவில்லை...

மகாலிங்கம் படதேவன்: உணர்ந்து வரைந்துள்ளாரோ?

தேவி சர:அவர் உணர்ந்து வரைந்துள்ளார்.... ஆனால்.... விமர்சனம் இப்படி வருகிறதே... 🤔ம்...

முருகன் சுங்கை சிப்புட்: தாயின் கருவறையில் முதலில் தோன்றியவள் பெண் என்று நினைக்கிறேன்.பெண்களுக்கே என் ஓட்டு.

தேவி சர:நன்றி ஐயா🙏🏻. ஒர் ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் குடும்பத்தை நடத்தி விடுவாள்.

கலைவாணி ஜான்சன்: அருமை சகோதரி.... விட்டுக் கொடுக்கும் மனம் வர வேண்டும்... 👏🏻👏🏻

ராதா பச்சையப்பன்: உண்மையைதான் சொன்னேன். எங்களுக்கு மாத வருமானமே போதுமானது. என்னால் கொடுக்க முடியவில்லை என்றாலும் இல்லாதவர்களுக்கு  கொடுப்பதுதான் முறை. கடந்த காலங்களில் நானும், என்னவரும் ம.இ.கா. நிர்வாகத்தில் இருந்தோம். நான் தலைவி. எங்களுக்கு என்று எதுவும் கேட்பதில்லை. அவர்களும் எதுவும் கொடுத்தது இல்லை. எங்களுக்கு வருத்தமும் இல்லை. நாங்கள் சிறப்பாகவே இருக்கிறோம். நன்றி சகோதரி 🙏🙏🌺.

செல்லையா செல்லம்: .இப்படி வேலை செய்வது என்ன பிரச்சினை நம் இல்லத்து அரசிகளுக்கு  கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  கெமர் நாட்டுப் பெண்கள் தங்களின் கணவன்மார்களை வீட்டு வேலைகள் செய்ய அனுமதிப்பது இல்லை.

கரு. ராஜா: கல்யாணம் முடிந்து என் மனைவி என் வீட்டிற்கு வந்ததும், சொன்ன முதல்வார்த்தை, எங்கள் வம்சத்தில் நாங்கள் கணவனை சமையல் கூடத்திஏகு அனுமதிப்பது இல்லை என்று கூறினார். இன்னும் அது தொடர்கிறது. அவர்கள் வெளிநாடு சுற்றுலா போகும் போது மட்டுமே சமையல் பிரச்னை வரும்.

ராதா பச்சையப்பன்:  உண்மைதானே! அன்று  சொன்னதை, இன்றும் அண்ணி கடைபிடித்து  தானே வருகிறார். பிறகு என்ன?👌

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் அப்படி நடந்து கொண்டால் புண்ணியம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

ராதா பச்சையப்பன்: 🙏 என் திருமணம் 16- வயதில்... வீட்டு வேலை சமையல் எல்லாம் என் பிறந்த வீட்டில் நான்தான் செய்வது. அதைப் பார்த்த என் மாமி என்னை தன் மருமகளாக்கினார். தனியாகப் போகும் வரை எல்லாம் நான்தான் செய்தேன்.

குளத்திலிருந்து தண்ணீரைக் காண்டா போட்டு தூக்கி வருவது. விறகு பொறுக்குவது எல்லாம். என் நாத்திகள் உதவுவார்கள்.

என்னவரை என் மாமி ஒரு வேலை செய்ய விடுவது இல்லை. தலைமகன் செல்லமாக பார்ப்பார். தனியாக வந்தும் எல்லா வசதிகளும் இருந்தும், என்னவர் எந்த வேலையும் வீட்டில் செய்வது இல்லை.

அவருடைய அரசாங்க வேலையை மட்டுமே செய்வது உண்டு. குடிக்கத் தண்ணீர் வேண்டுமானாலும் நான்தான் எடுத்து அவர் கையில் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் வந்த பிறகும் அப்படியே.

டி, காப்பி கலக்கக் கூட தெரியாது. இவர் தன் பெண் பிள்ளைகளையும் எந்த வேலையும் செய்ய விடுவது இல்லை. ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் என்றாலும் நான்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.  

பிள்ளைகளும் அவரோடுதான் இருப்பார்கள். அந்தச் சமயத்தில் கோபம் வரும் பாருங்க... உங்க பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து அனுப்பும் போது, வரதட்சனையாக வீட்டு வேலைக்கு ஒரு‌ ஆளையும் அனுப்பி வைங்கனு கத்துவேன். 🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: கொடுத்த வைத்த கணவர்...  👍

கரு. ராஜா: கொடுத்து வைத்தக் கணவர் அவர்

ராதா பச்சையப்பன்: நீங்களும் நிறையவே கொடுத்து வைத்தவர் தான் அண்ணா. எல்லா வகையிலும் அண்ணி சிறப்பானவர் தானே! எல்லோருமே ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் தான். உண்மைதான். அடுத்தப் பிறவி என்று ஒன்று இருந்தால் அவரே மீண்டும் என்னவராக வர வேண்டும். 🙏🙏🌺.

கரு. ராஜா: அப்படியே நடக்கட்டும். நீங்கள் கேட்ட வரம் கொடுத்து விட்டேன். மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்யாதே பக்தா.

 

1 கருத்து: