(மலேசியம் புலனத்தின் பதிவு)
27.02.2022
எச். ஜி. வெல்ஸ் (H. G. Wells) (செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஓர் ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதியவர்.
27.02.2022
எச். ஜி. வெல்ஸ் (H. G. Wells) (செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஓர் ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதியவர்.
வெல்ஸ் _அறி புனை_ இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் ஒருவர். ஒரு சமதர்மவாதி. அமைதிவாதத்தை ஆதரித்தவர்.
அறிவியல் அம்சங்களைச் சாரமாக அல்லது பின்புலமாகக் கொண்டு கற்பனையுடன் கலந்து உருவாக்கப்படும் படைப்புக்களே _அறிவியல் புனைவு_ அல்லது _அறி புனை_ ஆகும்.
வெல்ஸ் பல புத்தகங்களை எழுதி உள்ளார் அவற்றில் *கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன்* (GOD THE INVISIBLE KING) குறிப்பிடத் தக்கது.
பெண் வாக்குரிமை பற்றி புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறி புனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி.
இவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார்.
வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.
இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அதில் _தி டைம் மெஷின்_ என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும்.
அவருடைய இந்தப் புதினம் அவரின் காலத்தில் அறிவியல் விந்தையாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர்.
அவருடைய இந்த தி டைம் மெஷின் புதினம் பல தொலைக்காட்சித் தொடர்கள், திரைப் படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது.
தி டைம் மெஷின் புதினதை 1895-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்தக் கதையின் கதாநாயகன் தன் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்குச் சென்று விடுவார்.
தி டைம் மெஷின் புதினத்தைப் படித்த ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், எச். ஜி. வெல்ஸை 1934 ஜூலை 23-ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார்.
மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஓர் ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்றும் ஸ்டாலினிடம் கூறினார்.
(நடக்கிற காரியமாகத் தெரியல்லை... மனித மூளையின் 5 கோடி நரம்புகளை வெட்டி ஒட்ட வேண்டும். முடியுமா... கணினி மூலமாகச் செய்யலாம்.)
தமிழில் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்:
# ராஜேஷ்குமார்
# ஜெயமோகன்
# சுஜாதா
# அரவிந்தன் நீலகண்டன்
# ராஜ்சிவா
(மலேசியம்)
27.02.2022
அறிவியல் அம்சங்களைச் சாரமாக அல்லது பின்புலமாகக் கொண்டு கற்பனையுடன் கலந்து உருவாக்கப்படும் படைப்புக்களே _அறிவியல் புனைவு_ அல்லது _அறி புனை_ ஆகும்.
வெல்ஸ் பல புத்தகங்களை எழுதி உள்ளார் அவற்றில் *கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன்* (GOD THE INVISIBLE KING) குறிப்பிடத் தக்கது.
பெண் வாக்குரிமை பற்றி புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறி புனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி.
இவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார்.
வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.
இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அதில் _தி டைம் மெஷின்_ என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும்.
அவருடைய இந்தப் புதினம் அவரின் காலத்தில் அறிவியல் விந்தையாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர்.
அவருடைய இந்த தி டைம் மெஷின் புதினம் பல தொலைக்காட்சித் தொடர்கள், திரைப் படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது.
தி டைம் மெஷின் புதினதை 1895-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்தக் கதையின் கதாநாயகன் தன் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்குச் சென்று விடுவார்.
தி டைம் மெஷின் புதினத்தைப் படித்த ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், எச். ஜி. வெல்ஸை 1934 ஜூலை 23-ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார்.
மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஓர் ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்றும் ஸ்டாலினிடம் கூறினார்.
(நடக்கிற காரியமாகத் தெரியல்லை... மனித மூளையின் 5 கோடி நரம்புகளை வெட்டி ஒட்ட வேண்டும். முடியுமா... கணினி மூலமாகச் செய்யலாம்.)
தமிழில் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்:
# ராஜேஷ்குமார்
# ஜெயமோகன்
# சுஜாதா
# அரவிந்தன் நீலகண்டன்
# ராஜ்சிவா
(மலேசியம்)
27.02.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக