மலேசிய வரலாற்றில் தனிப் புகழ் பெற்ற ஒரு வரலாற்றுத் தளம் புருவாஸ். இந்த நகரை பெருவாஸ் (Beruas) என்றும் அழைக்கிறார்கள். 1900 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு தான் கங்கா நகரம் உருவானது.
கங்கா நகரத்தை உருவாக்கிய ராஜா சார்ஜானா
பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள இந்தப் பெருவாஸ் நகரம், ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ.; தைப்பிங் பெருநகரத்தில் இருந்து 53 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. பெருவாஸ் நகரத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள் பந்தாய் ரெமிஸ்; பாரிட்.
1970-ஆம் ஆண்டில் பந்தாய் ரெமிஸ் பிரதான சாலைக்கு ஜாலான் கங்கா நெகரா என பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
1970-ஆம் ஆண்டில் பந்தாய் ரெமிஸ் பிரதான சாலைக்கு ஜாலான் கங்கா நெகரா என பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
கங்கா நகரத்தின் மீது இராஜேந்திர சோழன் படையெடுப்பு
ஒரு காலக் கட்டத்தில் டிண்டிங்ஸ் ஆறு; லூமுட் துறைமுகத்தில் இருந்து புருவாஸ் நகரம் வரை நீண்டு இருந்தது. அந்த ஆற்றின் சுவடுகளை இன்றும் இங்கு காணலாம்.
புருவாஸ் பட்டணத்திற்கு 2 கி.மீ. தொலைவில் கம்போங் கோத்தா (Kg. Kota) எனும் கிராமப்பகுதி உள்ளது. அங்குள்ள பெயர்ப் பலகையில், 2007-ஆம் ஆண்டு வரையில் மாக்காம் ராஜா சோழன் (Makam Raja Cholan) என்று இருந்தது. தற்பொழுது மாக்காம் ராஜா புருவாஸ் (Makam Raja Beruas II) என்று மாற்றப்பட்டு உள்ளது.
வரலாறு
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டு வணிகர்களும் சீன நாட்டு வணிகர்களும் மலாக்கா நீரிணையில் இருந்து டிண்டிங்ஸ் ஆற்று வழியாக. புருவாஸ் நகரத்திற்கு வணிகம் செய்ய வந்தார்கள் எனும் வரலாற்றுத் தகவல்களும் உள்ளன.
புருவாஸ் பட்டணத்திற்கு 2 கி.மீ. தொலைவில் கம்போங் கோத்தா (Kg. Kota) எனும் கிராமப்பகுதி உள்ளது. அங்குள்ள பெயர்ப் பலகையில், 2007-ஆம் ஆண்டு வரையில் மாக்காம் ராஜா சோழன் (Makam Raja Cholan) என்று இருந்தது. தற்பொழுது மாக்காம் ராஜா புருவாஸ் (Makam Raja Beruas II) என்று மாற்றப்பட்டு உள்ளது.
வரலாறு
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டு வணிகர்களும் சீன நாட்டு வணிகர்களும் மலாக்கா நீரிணையில் இருந்து டிண்டிங்ஸ் ஆற்று வழியாக. புருவாஸ் நகரத்திற்கு வணிகம் செய்ய வந்தார்கள் எனும் வரலாற்றுத் தகவல்களும் உள்ளன.
பெருவாஸ் மரம்
முன்பு காலத்தில் தமிழர்கள் இந்த நகரைப் புருவாஸ் என்று அழைத்தார்கள். மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர் புருவாஸ் எனும் சொல்லுக்கு மாறாகப் பெருவாஸ் எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பள்ளிப் பாட நூல்களிலும் பெருவாஸ் எனும் சொல்லே பயன்படுத்தப் படுகிறது.
பெருவாஸ் மரம்
பெருவாஸ் எனும் பெயர் மாங்கூஸ்டீன் (mangosteen) மரத்தைப் போன்ற ஓர் உள்ளூர் மரமான பெருவாஸ் மரத்தில் இருந்து பெறப் பட்டதாக நம்பப் படுகிறது (அறிவியல் பெயர்: கார்சீனியா ஹோம்பிரோனியா - Garcinia hombroniana).
பெருவாஸ் மரம்
பெருவாஸ் எனும் பெயர் மாங்கூஸ்டீன் (mangosteen) மரத்தைப் போன்ற ஓர் உள்ளூர் மரமான பெருவாஸ் மரத்தில் இருந்து பெறப் பட்டதாக நம்பப் படுகிறது (அறிவியல் பெயர்: கார்சீனியா ஹோம்பிரோனியா - Garcinia hombroniana).
பெருவாஸ் விதைகள்
புருவாஸ் நகரம் மலேசிய வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த நகரமாகும். இங்கு வாழ்ந்த கிராமவாசிகளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கங்கா நகரம் தொடர்பான பல அரிய கலைப் பொருட்களைக் கண்டுபிடித்து உள்ளனர். இந்தப் பொருட்கள் இப்போது புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
பல்லவர்களின் கலைப்பொருட்கள்
கங்கா நகரம் அந்தக் காலத்தில் பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளில் பரவி இருந்த ஒரு பேரரசு ஆகும். கங்கா நகரம் கோலோச்சிய இடங்களில் இருந்து பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன.
பல்லவர்களின் கலைப்பொருட்கள்
கங்கா நகரம் அந்தக் காலத்தில் பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளில் பரவி இருந்த ஒரு பேரரசு ஆகும். கங்கா நகரம் கோலோச்சிய இடங்களில் இருந்து பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன.
1962-ஆம் ஆண்டு பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட
1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியர் வெண்கலச் சிலை.
1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியர் வெண்கலச் சிலை.
பல்லவர்களின் கலைப்பொருட்கள். தமிழர்களின் தங்க ஆபரணங்கள். சீனர்களின் பீங்கான் மங்குகள். இந்தோனேசிய அரசுகளின் பின்னல் வேலைபாடுகள். அவற்றில் சில பொருட்கள் ஈப்போவிலும் இன்னும் சில பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.
சிம்மோர் பள்ளத்தாக்கில் அகத்தியர் சிலை
பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியர் வெண்கலச் சிலை.
கோலாலம்பூர் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டின் புத்த அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை. 1936-ஆம் ஆண்டில் பேராக், பிடோர், ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கத்தில் கண்டு எடுக்கப்பட்ட 79 செ.மீ உயரச் சிலை.
சிம்மோர் பள்ளத்தாக்கில் அகத்தியர் சிலை
பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியர் வெண்கலச் சிலை.
கோலாலம்பூர் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டின் புத்த அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை. 1936-ஆம் ஆண்டில் பேராக், பிடோர், ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கத்தில் கண்டு எடுக்கப்பட்ட 79 செ.மீ உயரச் சிலை.
8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டின் புத்த அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை.
1936-ஆம் ஆண்டில் பேராக், பிடோர், ஆங்கிலோ ஓரியண்டல்
ஈயச் சுரங்கத்தில் கண்டு எடுக்கப்பட்ட 79 செ.மீ உயரச் சிலை.
1936-ஆம் ஆண்டில் பேராக், பிடோர், ஆங்கிலோ ஓரியண்டல்
ஈயச் சுரங்கத்தில் கண்டு எடுக்கப்பட்ட 79 செ.மீ உயரச் சிலை.
1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.
அதன் எடை 34 பவுண்டுகள் (15.4 கிலோ கிராம்). உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.
கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உறுதிப்பாட்டை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் இதே கருத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 - 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்த தாக்குதல்களினால் கங்கா நகரம் அழிந்து போய் இருக்கலாம். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
புருவாஸ் அருங்காட்சியகம்
அதன் எடை 34 பவுண்டுகள் (15.4 கிலோ கிராம்). உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.
கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உறுதிப்பாட்டை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் இதே கருத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 - 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்த தாக்குதல்களினால் கங்கா நகரம் அழிந்து போய் இருக்கலாம். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
புருவாஸ் அருங்காட்சியகம்
புருவாஸ் அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு இலவச நுழைவுடன் திறக்கப்பட்டு உள்ளது. 5-ஆம்; 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள் புருவாஸில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல பொருட்கள் புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி
![]() |
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி |
மலேசியாவில் பழைமையான பள்ளிகளில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளியும் (SJK(T) Beruas) ஒன்றாகும். 16 ஆசிரியர்கள் கற்பிக்கும் இந்தப் பள்ளியில் ஏறக்குறைய 170 மாணவர்கள் பயில்கிறார்கள். தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பற்பல சாதனைகளைப் படைத்து உள்ளது.
பின்னூட்டங்கள்:
கணேசன், சித்தியவான்: 16 ஆண்டுகள் மலேசிய மூலத் தொழில் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி.
பல்லின மக்களுக்கு நிறைவான சேவையைச் செய்தார். ஆனால், பெருவாஸ் நகரம் வளர்ச்சியின்றி விடுபட்டுப் போனது.
மோகன் காசிநாதன், பெருவாஸ்: தாங்கள் பதிவு செய்திருக்கும் கங்கா நகரம், புருவாசின் காணொளி, அருமை.
அதில் நாக மலை, புன்னகைத்து கொண்டிப்பது அதைவிட அழகு. அதற்கு முதலில் நன்றி ஐயா. கடந்த காலங்களில் தேசிய முன்னணி வசம் இருந்த இந்த நாடாளுமன்றம், அப்போதைய அமைச்சர் அவர்களிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தோம்.
அதன் பிறகு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் புருவாஸ் நகருக்கு வந்த போதும், சில கோரிக்கைகளைக் கடிதம் மூலமாகச் சமர்ப்பித்தோம்.
அதில் முக்கியமாக, புருவாஸ் எல்லையில், பத்து அம்பார் அருகில் ஒரு பல்கலைகழகம்; ஒரு தரைப்படை இராணுவ தளமும் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை.
இங்கு உள்ளவர்கள் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்களில் பெரும்பாலோர், ஊரை விட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுகிறார்கள்.
எனவே அரசாங்கம் சார்ந்த ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும்; புருவாஸ் நகரில் இருந்து கோலா கங்சாருக்கு நெடும் சாலை அமைக்க வேண்டும் போன்ற மகஜர்களைச் சமர்ப்பித்தோம்.
இவை அனைத்தும் நடைபெறும் என்று எண்ணினேன். ஆனால் அவை அனைத்தும் கனவாகி போய் விட்டன. 😢🙏🏼
பின்னூட்டங்கள்:
கணேசன், சித்தியவான்: 16 ஆண்டுகள் மலேசிய மூலத் தொழில் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி.
பல்லின மக்களுக்கு நிறைவான சேவையைச் செய்தார். ஆனால், பெருவாஸ் நகரம் வளர்ச்சியின்றி விடுபட்டுப் போனது.
மோகன் காசிநாதன், பெருவாஸ்: தாங்கள் பதிவு செய்திருக்கும் கங்கா நகரம், புருவாசின் காணொளி, அருமை.
அதில் நாக மலை, புன்னகைத்து கொண்டிப்பது அதைவிட அழகு. அதற்கு முதலில் நன்றி ஐயா. கடந்த காலங்களில் தேசிய முன்னணி வசம் இருந்த இந்த நாடாளுமன்றம், அப்போதைய அமைச்சர் அவர்களிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தோம்.
அதன் பிறகு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் புருவாஸ் நகருக்கு வந்த போதும், சில கோரிக்கைகளைக் கடிதம் மூலமாகச் சமர்ப்பித்தோம்.
அதில் முக்கியமாக, புருவாஸ் எல்லையில், பத்து அம்பார் அருகில் ஒரு பல்கலைகழகம்; ஒரு தரைப்படை இராணுவ தளமும் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை.
இங்கு உள்ளவர்கள் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்களில் பெரும்பாலோர், ஊரை விட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுகிறார்கள்.
எனவே அரசாங்கம் சார்ந்த ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும்; புருவாஸ் நகரில் இருந்து கோலா கங்சாருக்கு நெடும் சாலை அமைக்க வேண்டும் போன்ற மகஜர்களைச் சமர்ப்பித்தோம்.
இவை அனைத்தும் நடைபெறும் என்று எண்ணினேன். ஆனால் அவை அனைத்தும் கனவாகி போய் விட்டன. 😢🙏🏼
கரு. ராஜா, சுங்கை பூலோ: அருமையானக் கட்டுரை. அடுத்த முறை ஈப்போ வந்தால் புருவாஸ் போய் இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: புருவாஸ் நகரில் ஒரு பெரிய வரலாறு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் போய் இருந்தேன்... உடல் சிலிர்த்தது.
கங்கா நகரம் உருவான இடம்... கங்கா நகர மன்னர்கள் நடந்து போன இடம்... இராஜேந்திர சோழன் யானைப் படையுடன் போரிட்ட இடம். பர்மா மோன் மக்கள் உலாவிய இடம். பற்பல போர்களினால் இரத்த அருவிகள் குமிழ் எடுத்த இடம்... மனசிற்குள் இறுக்கம்.
ஒரு மலேசிய இந்தியராக இருந்தால் அவரின் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு பகுதி இங்கே புதைந்து கிடக்கிறது. 🙏
அருமையான கட்டுரை..
பதிலளிநீக்குஎன் பூர்விகம் கடாரம் என்றபோதிலும் ..என் மனைவியின் ஊரான பந்தாய் ரெமிஸ் மற்றும் புருவாஸ் மீது அலாதி காதல் உண்டு..
முனியாண்டி ராஜ்