10.01.2021
பதிவு செய்தவர்: இராவணன் - கோலாகிள்ளான்
மலாயா பல்கலைக்கழகம் - தமிழ்ப் பிரிவு நூலகம்
🔹 மலாயா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அமைந்து உள்ளது.
🔹 1956-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
🔹 36,000 நூல்கள் உள்ளன.
🔹 மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ் நூலகம் இதுவே என்று கூறலாம்.
🔹 நாட்டின் மிகப் பெரிய, அதிகமான தமிழ் நூல்களைக் கொண்ட நூலகம்.
🔹 ஆனால் இது பொது நூலகம் அல்ல. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரியது அல்ல.
🔹 மலாயா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
🔹 பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்ப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.
முத்தமிழ் படிப்பகம்
🔹 கோலாலம்பூர், செந்தூலில் அமைந்துள்ளது.
🔹 1958-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
🔹 25,000 நூல்கள் உள்ளன.
🔹 பொது மக்களுக்கான பொது நூலகம்.
🔹 பொது நூலகம் என்ற வகையில் மலேசியாவின் ‘முதல் தமிழ் நூலகம்’.
🔹 நாட்டின் மிகப் பெரிய ‘பொது தமிழ் நூலகம்’.
திருக்குறள் மன்ற நூலகம்
🔹 கோலக்கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் செயல்படுகின்றது.
🔹 1961-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
🔹 6,000 நூல்கள் உள்ளன.
🔹 பொது மக்களுக்கான பொது நூலகம்.
🔹 மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட ‘இரண்டாவது பொது தமிழ் நூலகம்’.
🔹 நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொது தமிழ் நூலகம்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நூலகம்
🔹 கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் அமைந்து உள்ளது.
🔹 2019-ஆம் ஆண்டு தோற்றம் கண்டது.
🔹 2,500 நூல்கள் உள்ளன.
🔹 பொது பயன்பாட்டிற்குரிய நூலகம்.
பினாங்கில் எதிர்வரும் 14.01.2021-ஆம் தேதி பினாங்கு இந்து சபாவின் சார்பில் புது நூலகம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.
கோலாசிலாங்கூர், ராஜா மூசா தோட்டத்தில் ‘டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூலகம்’ என்ற நூலகம் இருந்தது. இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை.
இதைத் தவிர்த்து, பல சமூக இயக்கங்களும், ஆலயங்களும் சிறிய அளவிளான நூலகங்களை வைத்து நடத்தி வருகின்றன.
பின்குறிப்பு: இது எனக்குத் தெரிந்த தகவல்களை மட்டும் வைத்து தொகுக்கப்பட்டது. இதுவே இறுதியான ஆவணக் குறிப்பு அல்ல. கவனத்திற்கு வராத வேறு பெரிய தமிழ் நூலகங்களும் மலேசியாவில் இருக்கலாம்.
https://www.facebook.com/groups/507255119326493


















