08.01.2021
பதிவு செய்தவர்: ராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்
சூரியன் மிகத் துல்லியமாகக் கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1. எனவேதான் தமிழர்கள் சித்திரை 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் துல்லியமாகக் கணித்தது வானியல் சாஸ்திரம். அது இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மையாகும்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுவது ஏதோ ஒரு சடங்கு பழக்கம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நம் முன்னோர்கள் இதற்குப் பின்னாடி மிகப் பெரிய அறிவியலை வைத்து உள்ளார்கள் தெரியுமா?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஓர் அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம் அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியைப் புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆம். சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாகக் கிழக்கே உதிக்கும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கித் திரும்பும். அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும். அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.
இப்படி சரியாகக் கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று போய்க் கொண்டே இருக்கும். மறுபடியும் கிழக்கிற்கு வருகிற நேரம் சரியாக ஒரு வருடம். சரி. இதற்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன், அது உதிக்கும் பயணத்தைக் கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1" தமிழ் புத்தாண்டு. (In science it is called vernal equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1". ஆடி பிறப்பு. (In science it is called summer solstice)
மறுபடியும் கிழக்கிற்கு வரும்போது "ஐப்பசி 1". (In science it is called autumn equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை 1" பொங்கல். (In science it is called winter solstice)
இந்த வானியல் மாற்றங்களையும்; அதனைச் சார்ந்த பருவ கால மாற்றங்களையும்; நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களையும் கொண்டாடினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக