09 ஜனவரி 2021

பட்டாம்பூச்சி தத்துவம்

08.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

’குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை’ என்று சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் சொன்னான். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.  

’இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா’, என்று குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தி துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.

’பரவாயில்லை வா... நாம் இந்த தோட்டத்தில் அழகை ரசிக்கலாம்’ என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று தோட்டத்தின் அழகை கண்குளிரக் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்தில் முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கையிலே வந்து அமர்ந்தது.

குரு சிரித்தபடி சொன்னார்: ’இது தான் வாழ்க்கை!’

மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும் போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக