05 ஜனவரி 2022

கோத்தா கெலாங்கி வானில் இருந்து எடுத்த படம்

கோத்தா கெலாங்கி வானில் இருந்து எடுத்த படம். கோட்டையின் சதுர வடிவிலான நான்கு மூலைகள் தெளிவாய்த் தெரிகின்றன. தாயாரிப்பு நிலையில் இருக்கும் ‘காணாமல் போன கோத்தா கெலாங்கி’ நூல் 8 ஆய்வாளர்களின் ஆய்வுகளைப் பதிவு செய்கிறது.



Dudley Francis Amelius Hervey; (1851).

பிரேங்க் சுவெட்டன்ஹாம் (1885).

சர் ரிச்சர்ட் வின்ஸ்டெட் (Sir Richard Olof Winstedt). (1920)

ஜெரால்டு கார்ட்னர் (Gerald Brosseau Gardner). (1928)

கேப்டன் அகமது முகமது (Captain Ahmad Muhammadun). (1930)

வில்லியம் லென்கன் (1936. 1947a, 1947c).  

செ ரோஸ் ரெய்மி (2004)

ஜொகூர் உலு திராம், கணேசன். (2014)

கோட்டை இல்லை என்று எப்படி மறுக்கப் போகிறார்கள். படங்களை வெளியிடுவதற்கு அனுமதி: Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, 56(1), 1983.

Stuart Munro-Hay (2001). Nakhon Sri Thammarat: The Archaeology, History and Legend of a Southern Thai Town. White Lotus Press. p. 22.


 

மலேசிய வெள்ள நெருக்கடியில் ஊமை அமைச்சர்கள்

மலேசிய வெள்ள நெருக்கடியின் போது ஊமையாக இருந்த மலேசிய அமைச்சர்கள் சிலரின் பட்டியல்...

அமைச்சர் ரினா ஹருண்

1. பாஸ் அரசியல்வாதி ஹலிமா அலி

இஸ்லாமியக் கட்சி PAS-இன் அரசியல்வாதி ஹலிமா அலி. ஓர் அதிர்ச்சியூட்டும் ’ட்வீட்’ செய்து இருந்தார். வெள்ளத்தில் "சில பேர் மட்டுமே இறந்தனர். அதற்கு மக்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்’. தீமைகளை நிறுத்திவிட்டு "பாவங்களை" குறைக்க வேண்டும். தீபகற்ப மலேசியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள மக்கள் செய்த தீமைகள் மற்றும் பாவங்களால் தான் வெள்ளம் மற்றும் இறப்புகள் ஏற்பட்டதாக ’ட்வீட்’ செய்து இருந்தார்.


1959 முதல், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் கிளந்தான் மாநிலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் கிளந்தான் மக்களும், PAS-இன் இஸ்லாமிய அரசாங்கமும் முடிவு இல்லாத தீமைகளையும் பாவங்களையும் தொடர்ந்து செய்து வந்ததால் கடவுள் கோபம் அடைந்தார் என்று அர்த்தமாகுமா?

2. சிறப்புப் பணிகளுக்கான அமைச்சர் அப்துல் லத்தீப் அகமது

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தலைவரான அப்துல் லத்தீப், தனது நிறுவனம் பாதிக்கப் பட்டவர்களின் இழப்பீட்டை மட்டுமே நிர்வகிக்கிறது என்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது இல்லை என்றும் கூறினார்.

இருப்பினும், ’திறமையற்ற பிரதமரும்’ கூட, NADMA-இன் பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் அடங்கும் என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் NADMA தனது இயலாமையை ஒப்புக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னும் கர்வத்துடன் இருக்கிறது.

அமைச்சர் அப்துல் லத்தீப் வெள்ள நிவாரணப் பணிகளை நிர்வகிப்பதும் ஒருங்கிணைப்பதும் தன் வேலை இல்லை என்று கூறியது ஏன்?

3. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் நோ ஓமர்

மலிவான விளம்பரம் தேடிப் போனவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரால் அவமானப் படுத்தப் பட்டார். வைரலான ஒரு வீடியோவில், வயதான மலாய் பெண்மணியிடம் இருந்து அமைச்சர் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

வெள்ளத்தின் நெருக்கடியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உதவியது அரசாங்க நிறுவனங்கள் அல்ல; தன்னார்வலர்கள் என்று கூறினார். அமைச்சராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் என்று காது கிழியச் சத்தம் போட்டு கத்தினார்கள்.

4. சேவியர் ஜெயக்குமார்

ஊழல் விசாரணையில் இருந்து தப்பிக்க பெரிகாத்தான் நேசனல் அரசாங்கத்தின் பின் கதவு வழியாக வந்த சேவியர் ஜெயக்குமார். ஸ்ரீ மூடா வெள்ளத்தில்... தன் பெயரைச் சரி செய்ய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முயற்சி செய்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பொருட்களைப் பெட்டிகளின் மூலமாக் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது முயற்சி மற்றொரு மலிவான அரசியல் நாடகம் என எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து பெட்டிகளிலும் சேவியர் ஜெயக்குமாரின் புகைப்படங்கள் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தன. அது வழக்கமாக பல காலமாக பாரிசான் நேசனல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பழைய தந்திரமாகும்.

5. பெண்கள் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண்

தொற்று நோய்களின் போது பெண்கள் மேக்-அப் போட வேண்டும். ஆண்கள் தங்கள் மனைவியுடன் "உல்லாசமாக" இருக்க வேண்டும் என்று அறிவுரை சொன்ன பிரபல டோரேமான் அமைச்சர் (Doraemon Minister) ரினா  ஹருன். வெள்ள நிவாரண மையத்தில் குதிக்கால் சப்பாத்துடன் போஸ் கொடுததவர்.

Surrounded by photographers, she fired high-powered water jet to the floor of a school in Salak Tinggi, pretending to help cleaning a flooded area.

But the floor area, which she pretended to clean had already been cleaned and was not tainted with any dirt.

Netizens mocked and laughed at her stupidity and desperation to show off, but ended up making a fool of herself instead. It was a PR stunt that backfired badly.

அவரின் முட்டாள்தனத்தைப் பார்த்து மக்கள் கேலி செய்து சிரித்தனர். தன்னையே முட்டாளாக்கிக் கொண்ட ஓர் அமைச்சர்.





 

பறக்கும் அணில்

பறவைகள் பறப்பதைப் போல பறக்கும் அணிலால் பறக்க முடியாது. ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்குக் காற்றில் மிதந்த படியே தாவ முடியும். ஓர் உயரமான மரத்தில் ஏறி அங்கு இருந்து கீழே பாய்கிறது.


இதன் கால்களை ஒரு சவ்வுத் தோல் இணைக்கிறது. அதன் உதவியால் கொஞ்ச தூரம் பறக்க முடிகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கால்களை விரைப்பாக நீட்டிப் பாயும். அதைப் பார்க்கும் போது அணில் பறப்பதைப் போல இருக்கும். உண்மையில் அணில்களால் பறக்க இயலாது.

(மலேசியம்)
02.01.2022

04 ஜனவரி 2022

மலேசியத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக நிதி சேகரிப்பு

தாய்மொழிப் மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வமான தன்மையை எதிர்த்து போராடும் ஓர் அரசு சாரா நிறுவனத்திற்கு உதவுவதற்காக, பெம்பேலா இஸ்லாம் (Pertubuhan-Pertubuhan Pembela Islam) அமைப்புகள், பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளைச் சேகரிக்க ஒரு நிதியைத் தொடங்கி இருக்கின்றது.


அதன் தலைவர் அமினுதீன் யஹாயா (Aminuddin Yahaya). அவர் கூறுகிறார்: ’இதுவரையில் அந்த அரசு சாரா அமைப்புகள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி வந்தன. அவர்களின் அந்தச் சுமையை இந்த நிதி, ஓரளவுக்கு குறைக்க முடியும்.’

’தாய்மொழிப் பள்ளிகளுக்குச் சவால் விடுக்கும் எங்கள் போராட்டத்திற்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டும் என்று பொது மக்கள் பலர் கேட்டுக் கொள்கிறார்கள்.’

"இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும். ஆகவே எங்களின் செலவுகளுக்காக ஒரு நிதியைத் திறக்க வேண்டிய அவசியத்தை நானும் என் தோழர்களும் உணர்கிறோம்’ என்கிறார் அமினுதீன் யஹாயா.

"குறைந்த பட்சம் எங்களின் நீதிமன்றச் செலவுகள், ஆவணங்கள் தயாரிப்புச் செலவுகள் மற்றும் இந்த வழக்கில் கடினமாக உழைத்துப் போராடி வரும் வழக்கறிஞர்களுக்கு ஒரு சின்ன பண உதவி போன்றவற்றை எங்களால் செய்ய முடியும்," என்று அமினுதீன் யஹாயா தன் பேஸ்புக் பதிவில் இன்று கூறினார்.

(மொழியாக்கம்: மலேசியம்)
04.01.2022

The Pembela Islam (Pembela) organizations will open a fund to collect donations from the public in an effort to help the non-governmental organization (NGO) in its struggle to challenge the legitimacy of vernacular schools.

Its chairman, Aminuddin Yahaya, said that with the contribution from the public, it could ease some of the burden borne by NGOs that previously used pocket money for operations.

Many ask, will the Defenders open a fund for the general public to contribute to our struggle to challenge the legitimacy of this vernacular school.

“As this case goes on for much longer, with the appeal process and possibly to a higher court, my comrades and I feel the need for us to open that space (fund).

"At least we can help cover court costs, documentation and also as a token to lawyers who are working hard to fight in this case," he said through his Facebook post, today.


https://malaysiagazette.com/2022/01/03/pembela-buka-tabung-tampung-perjuangan-cabar-keabsahan-sekolah-vernakular/?amp


The Pembela Islam (Pembela) organizations will open a fund to collect donations from the public in an effort to help the non-governmental organization (NGO) in its struggle to challenge the legitimacy of vernacular schools.

Its chairman, Aminuddin Yahaya, said that with the contribution from the public, it could ease some of the burden borne by NGOs that previously used pocket money for operations.

Many ask, will the Defenders open a fund for the general public to contribute to our struggle to challenge the legitimacy of this vernacular school.

“As this case goes on for much longer, with the appeal process and possibly to a higher court, my comrades and I feel the need for us to open that space (fund).

"At least we can help cover court costs, documentation and also as a token to lawyers who are working hard to fight in this case," he said through his Facebook post, today.




 

 

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2021 புள்ளிவிவரங்கள்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2021 புள்ளிவிவரங்கள்
(மாவட்ட வாரியாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்)

நகர்ப்புறம் (370 பள்ளிகள்) (70.21%)

கிராமப்புறம் (157 பள்ளிகள்) (29.79%)

அரசாங்க உதவி:

முழு உதவி (162 பள்ளிகள்) (30.74%)

பகுதி உதவி (365 பள்ளிகள்) (69.26%)

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை:

ஜனவரி 2018 - 81,488 மாணவர்கள்

ஏப்ரல் 2018 - 81,635 மாணவர்கள்

ஜனவரி 2019 - 81,321 மாணவர்கள்

மே 2019 - 81,447 மாணவர்கள்

ஜனவரி 2020 - 80,569 மாணவர்கள்

ஜூன் 2020 - 80,743 மாணவர்கள்

ஜூன் 2021 - 80,434 மாணவர்கள்

(தயாரிப்பு: மலேசியம்)

சான்றுகள்: SENARAI SEKOLAH WEB KPM - JUN2020 - https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3547-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2020/file