04 மார்ச் 2022

உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டி

மலேசியச் சகோதரிகள் சாதனை

உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டியில் மலேசியச் சகோதரிகளான கஸ்தூரி 21; வினோசா 20; மதிப்புமிக்க உகாண்டா பூப்பந்து 2022 பட்டத்தை வென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.


உகாண்டா,  கம்பாலாவில் உள்ள எம்.டி.என். அரங்கில் 2022 பிப்ரவரி 24 முதல் 27 வரை இந்தப் போட்டி நடைபெற்றது.


The Uganda International Challenge 2022 dramatically ended with a great piece of news as sisters, Kasturi, 21, and Venosha, 20, created a sensation as they earned the most prestigious title at the recent tournament. The tournament took place at the  MTN Arena, Kampala, Uganda on 24th till 27th of February 2022 creating buzz over social media platforms.

(மலேசியம்)

 

02 மார்ச் 2022

மலேசியத் தமிழ்ச் சிறுமியின் எதிர்ப்பு அட்டை


உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில், கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், மலேசியத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் எதிர்ப்பு அட்டை. 

கோலாலம்பூர் ரஷ்ய தூதரகத்தின் முன் எதிர்ப்பு பதாகைகள்


கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்.


உக்ரைன் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் கோலாலம்பூர் கோபுரம். 2020 ஆகஸ்டு 24-ஆம் தேதி எடுத்த படம்.

(மலேசியம்)
(பிப்ரவரி 28, 2022)

 

27 பிப்ரவரி 2022

எச். ஜி. வெல்ஸ்

(மலேசியம் புலனத்தின் பதிவு)
27.02.2022

எச். ஜி. வெல்ஸ் (H. G. Wells) (செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஓர் ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதியவர்.

 
வெல்ஸ் _அறி புனை_ இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் ஒருவர். ஒரு சமதர்மவாதி. அமைதிவாதத்தை ஆதரித்தவர்.

அறிவியல் அம்சங்களைச் சாரமாக அல்லது பின்புலமாகக் கொண்டு கற்பனையுடன் கலந்து உருவாக்கப்படும் படைப்புக்களே _அறிவியல் புனைவு_ அல்லது _அறி புனை_ ஆகும்.

வெல்ஸ் பல புத்தகங்களை எழுதி உள்ளார் அவற்றில் *கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன்* (GOD THE INVISIBLE KING) குறிப்பிடத் தக்கது.

பெண் வாக்குரிமை பற்றி புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறி புனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி.

இவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார்.

வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.

இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அதில் _தி டைம் மெஷின்_ என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும்.

அவருடைய இந்தப் புதினம் அவரின் காலத்தில் அறிவியல் விந்தையாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர்.

அவருடைய இந்த தி டைம் மெஷின் புதினம் பல தொலைக்காட்சித் தொடர்கள், திரைப் படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது.

தி டைம் மெஷின் புதினதை 1895-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்தக் கதையின் கதாநாயகன் தன் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்குச் சென்று விடுவார்.

தி டைம் மெஷின்  புதினத்தைப் படித்த ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், எச். ஜி. வெல்ஸை 1934 ஜூலை 23-ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார்.

மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஓர் ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்றும் ஸ்டாலினிடம் கூறினார்.

(நடக்கிற காரியமாகத் தெரியல்லை... மனித மூளையின் 5 கோடி நரம்புகளை வெட்டி ஒட்ட வேண்டும். முடியுமா... கணினி மூலமாகச் செய்யலாம்.)

தமிழில் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்:

# ராஜேஷ்குமார்
# ஜெயமோகன்
# சுஜாதா
# அரவிந்தன் நீலகண்டன்
# ராஜ்சிவா

(மலேசியம்)
27.02.2022

 

உக்ரைன் அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி

வலோதிமிர் அலெக்சாந்திரவிச் செலேன்சுக்கி (Volodymyr Oleksandrovych Zelenskyy) பிறப்பு: 25 ஜனவரி 1978), வயது 44; உக்ரைனியத் தொலைக்காட்சி நடிகர், அரசியல்வாதி. 2019 மே 20 முதல் உக்ரைனின் 6-ஆவது அரசுத் தலைவராகப் பதவியில் உள்ளார்.


உக்ரைன் தேசிய பொருளியல் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். திரைப் படத்துறையில் சேர்ந்து ’குவார்த்தால் 95’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். திரைப்படங்கள் தயாரித்தார். நகைச்சுவை நடிகராக நடித்துப் பிரபலமானார்.

2015 முதல் 2019 வரை _மக்கள் சேவகன்_ _(Servant of the People)_ என்ற தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபராக நடித்தார். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் நிஜ வாழ்க்கையில் உக்ரைன் நாட்டின் அசல் அதிபராகவே மாறிப் போனார்.

2019 அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73.2% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அரசுத் தலைவராகப் பதவி ஏற்றதும் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பொருளாதார மந்த நிலையைத் திறம்பட நிர்வகித்தார். ஊழலை இறுக்கமாகக் கையாண்டார். மக்களுக்குப் பிடித்த அதிபராக வலம் வருகிறார்.

இப்போது நடைபெறும் போரில், போர் வீரர்களில் ஒருவராகக் களம் இறங்கி போர் முனையில் உள்ளார்.

(மலேசியம்)
26.02.2022

 

19 பிப்ரவரி 2022

சிவசங்கரி சுப்ரமணியம்

மலேசியா நாட்டின் சுவர்ப்பந்து (ஸ்குவாஷ்) வீராங்கனை சிவசங்கரி சுப்ரமணியம் (Sivasangari Subramaniam), (பிறப்பு: 24 ஜனவரி 1999); ஐவி லீக் சம்மேளனத்தின் (Ivy League Women's Player of the Year) பெண்கள் பிரிவில் 2022-ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


சிவசங்கரி சுப்ரமணியம் (பிறப்பு: 24 ஜனவரி 1999) மலேசியா நாட்டின் சுவர்ப்பந்து (ஸ்குவாஷ்) வீராங்கனை. இவர் 2018 மே மாதம், உலகத் தரவரிசையில் 38-ஆவது நிலையை அடைந்தார்.

2011-ஆம் ஆண்டில் மலேசிய விளையாட்டு மன்றத்தின் (National Schools Sports Council) வளர்ந்துவரும் சிறந்த விளையாட்டாளர் (Promising Sportsgirl of the Year) விருதைப் பெற்றார்

2018-ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் சடோமி வாடனபே (Satomi Watanabe) என்பவரைத் தோற்கடித்து பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் சாம்பியன்சிப் (2018 British Junior Open) பட்டதைப் பெற்றார்.


2022-ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் 26-ஆவது நிலையைப் பெற்றார். இதுவே இதுவரை இவர் பெற்ற சிறப்புத் தரவரிசையாகும்.

வசிப்பிடம்: அலோர் ஸ்டார், கெடா

பிறப்பு:    ஜனவரி 24, 1999 (வயது 19), சுங்கை பட்டாணி, கெடா, மலேசியா 

உயரம்:    160 செ.மீ. (5 ft 3 in)

(மலேசியம்)
19.02.2022