02 ஜூன் 2022

லேடாங் மலை தேசியப் பூங்கா

லேடாங் மலை தேசியப் பூங்கா; (Gunung Ledang National Park); மலேசியா, ஜொகூர் மாநிலம், தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இந்தப் பூங்கா 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் சுமார் 160 வகையான பறவைகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. லேடாங் மலை (Gunung Ledang; Mount Ophir), மலேசியா, ஜொகூர் - மலாக்கா மாநிலங்களின் எல்லையில் உள்ளது. தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

(மலேசியம்)
02.06.2022

https://ta.wikipedia.org/s/b1qu


18 ஏப்ரல் 2022

புஷ்பநாதன் லெட்சுமணன்

93 வயதான *புஷ்பநாதன் லெட்சுமணன்* ஈப்போ பத்து காஜா நகரைச் சேர்ந்தவர். பத்து காஜா பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்.

மலேசியாவின் பழைமையான தடகளப் போட்டியாளர். வெற்றி பெற ஆசை இருந்தால் வயது தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

யோகா பயிற்சியுடன் ஒவ்வொரு நாளும் 2 கி.மீ. மெது ஓட்டம். அதன் மூலமாகத் தன் உடல் தகுதியைப் பராமரித்து வருகிறார். உடல் எடை 53 கிலோ.

மனைவியின் பெயர் மங்கலேஸ்வரி. வயது 90. ஒரே மகள் சாந்தி. இரு பேரப் பிள்ளைகள். 1982-ஆம் ஆண்டு ராஜா சூலான் இடைநிலைப் பள்ளியில் இருந்து பதவி ஓய்வு பெற்றார்..

கோலாலம்பூர் 2019 மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் 150 விநாடிக்குள் ஓடி, தங்கம் வென்று மலேசியர்களை அசர வைத்த மனிதர்.



2018-ஆம் ஆண்டு மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் மற்றும் 400 மீ. ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

1957-ஆம் ஆண்டில் இருந்து ஓட்டப் பந்தயத் துறையில் ஈடுபட்டு வருகிறார். 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது, அவர் உதவி தடகளப் போட்டி அரங்க மேலாளராகவும், மாநில, தேசிய மற்றும் அனைத்துலக நிகழ்வுகளில் தடகள தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றினார்.

(மலேசியம்)
16.04.2022


04 மார்ச் 2022

உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டி

மலேசியச் சகோதரிகள் சாதனை

உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டியில் மலேசியச் சகோதரிகளான கஸ்தூரி 21; வினோசா 20; மதிப்புமிக்க உகாண்டா பூப்பந்து 2022 பட்டத்தை வென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.


உகாண்டா,  கம்பாலாவில் உள்ள எம்.டி.என். அரங்கில் 2022 பிப்ரவரி 24 முதல் 27 வரை இந்தப் போட்டி நடைபெற்றது.


The Uganda International Challenge 2022 dramatically ended with a great piece of news as sisters, Kasturi, 21, and Venosha, 20, created a sensation as they earned the most prestigious title at the recent tournament. The tournament took place at the  MTN Arena, Kampala, Uganda on 24th till 27th of February 2022 creating buzz over social media platforms.

(மலேசியம்)

 

02 மார்ச் 2022

மலேசியத் தமிழ்ச் சிறுமியின் எதிர்ப்பு அட்டை


உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில், கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், மலேசியத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் எதிர்ப்பு அட்டை. 

கோலாலம்பூர் ரஷ்ய தூதரகத்தின் முன் எதிர்ப்பு பதாகைகள்


கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்.


உக்ரைன் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் கோலாலம்பூர் கோபுரம். 2020 ஆகஸ்டு 24-ஆம் தேதி எடுத்த படம்.

(மலேசியம்)
(பிப்ரவரி 28, 2022)

 

27 பிப்ரவரி 2022

எச். ஜி. வெல்ஸ்

(மலேசியம் புலனத்தின் பதிவு)
27.02.2022

எச். ஜி. வெல்ஸ் (H. G. Wells) (செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஓர் ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதியவர்.

 
வெல்ஸ் _அறி புனை_ இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் ஒருவர். ஒரு சமதர்மவாதி. அமைதிவாதத்தை ஆதரித்தவர்.

அறிவியல் அம்சங்களைச் சாரமாக அல்லது பின்புலமாகக் கொண்டு கற்பனையுடன் கலந்து உருவாக்கப்படும் படைப்புக்களே _அறிவியல் புனைவு_ அல்லது _அறி புனை_ ஆகும்.

வெல்ஸ் பல புத்தகங்களை எழுதி உள்ளார் அவற்றில் *கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன்* (GOD THE INVISIBLE KING) குறிப்பிடத் தக்கது.

பெண் வாக்குரிமை பற்றி புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறி புனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி.

இவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார்.

வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.

இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அதில் _தி டைம் மெஷின்_ என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும்.

அவருடைய இந்தப் புதினம் அவரின் காலத்தில் அறிவியல் விந்தையாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர்.

அவருடைய இந்த தி டைம் மெஷின் புதினம் பல தொலைக்காட்சித் தொடர்கள், திரைப் படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது.

தி டைம் மெஷின் புதினதை 1895-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்தக் கதையின் கதாநாயகன் தன் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்குச் சென்று விடுவார்.

தி டைம் மெஷின்  புதினத்தைப் படித்த ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், எச். ஜி. வெல்ஸை 1934 ஜூலை 23-ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார்.

மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஓர் ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்றும் ஸ்டாலினிடம் கூறினார்.

(நடக்கிற காரியமாகத் தெரியல்லை... மனித மூளையின் 5 கோடி நரம்புகளை வெட்டி ஒட்ட வேண்டும். முடியுமா... கணினி மூலமாகச் செய்யலாம்.)

தமிழில் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்:

# ராஜேஷ்குமார்
# ஜெயமோகன்
# சுஜாதா
# அரவிந்தன் நீலகண்டன்
# ராஜ்சிவா

(மலேசியம்)
27.02.2022