11 நவம்பர் 2022

மலேசியாவில் ஒரு மனிதாபிமானமற்ற செயல்

மலேசியப் பொதுத் தேர்தல் 15 பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் பயணிக்கின்றோம். மகிழ்ச்சி.

அதே வேளையில் மலேசிய கெசட் டிவி (Malaysia Gazette TV) ஊடகத்தில் வெளியான ஒரு காணொலிப் பதிவையும் (Watch "#PRU15: Macam Mana Nak Undi? 65 Tahun Tinggal di Malaysia IC Masih Merah! 'Uncle' Luah Rasa Kecewa" on YouTube) கம்பளத்திற்கு அடியில் அப்படியே போட்டு நாம் மறைத்துவிட முடியாது முடியாது.


இந்தக் கொடுமையான நிகழ்ச்சிக்கு எந்த ஓர் அரசியல் கூட்டணி அல்லது எந்த ஒரு கூட்டணித் தலைவர் தீர்வு காண்பார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மலேசியாவில் அறுபத்தைந்து வருடங்களாக வாழ்ந்தும் இன்னும் சிவப்பு அடையாள அட்டையுடன் இருக்கும் ஓர் இந்தியரின் கடந்த காலம் மிக மிக வேதனையானது.

அவரின் நிலையும் அவரின் குடும்பத்தினர் போன்ற மக்களின் அவல நிலையையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க முடியும் என்றால் உண்மையான ஒரு தேசியத்தின் அர்த்தம் தான் என்ன?


இந்த அவல நிகழ்ச்சியை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று தெரியவில்லை. மக்களாட்சியை இந்த நாட்டின் கொள்கைக் கோட்டையாக அறிவிக்கும் ஒரு நாட்டில் பல விசயங்கள் தவறாகிப் போய்விட்டன என்பது ஒரு பெரிய பனிப்பாறையில் ஒரு சிறிய துளி முனை மட்டுமே.

புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்ற தொழிலாளர்கள் பலர் இங்கு இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இந்த நாட்டில் (சபாவில்) குடியுரிமை விற்பனைக்கு வந்ததாகவும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், 65 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குழந்தை மூன்று மாதக் குழந்தையாக மலேசியாவிற்கு பெற்றோரால் கொண்டுவரப்பட்டது; அவ்வளவு காலம் எப்படி இங்கே பெயர் போட்டது என்பதற்கான தெளிவான சான்றுகளுடன் ஒரு கணக்கும் இங்கே உள்ளது. அதை இப்போது முன் வைக்கிறோம்.

அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 65. குழந்தை எனும் அவர் மலேசியாவில் 65 ஆண்டுகள் தன் வாழ்நாள் முழுவதும் இங்கு வாழ்ந்தார்; மூன்று குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை உருவாக்கினார்; அவரின் மூத்த மகனுக்கு இப்போது 19 வயது.


அந்தப் பெரியவருக்கு சிவப்பு அடையாள அட்டை (சிவப்பு NRIC) வழங்கப்பட்ட போதிலும் குடியுரிமை மட்டும் அவருக்கு மறுக்கப்பட்டது.

அவருக்கு குடியுரிமை மறுக்கப் பட்டதால், அவரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே முடியவில்லை.

மேலும் இந்தக் கொடுமையால் ஒட்டுமொத்த குடும்பமும் குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலாளிகளாக வேலை செய்ய வேண்டிய அவலநிலை.

1953-ஆம் ஆண்டில் இங்கு வந்த ஒரு ஜாவானியர் ஒரு பெரும் கோடீஸ்வரராக மாற முடியும்; ஓர் அரசியல் கட்சியின் தலைவராக முடியும்... மேலும் அவர் பிரதமராகும் கனவுகளுடன் வாழ முடியும்.

ஒரு வெளிநாட்டு பிரசங்கிக்கு, அவரின் அசல் தாயகத்தில் நீதிமன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன; சாத்தியமான சிறைவாசங்களும் உள்ளன. இருப்பினும் அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் இங்கு வழங்கப் படலாம்.

வெளிநாட்டுப் பிரஜைகள் இங்கு வணிகப் பங்காளிகள் ஆகலாம்; அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறலாம்; எண்ணற்ற அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்று சுக போகங்களை அனுபவிக்கலாம்.

ஆனால் 65 வருடங்களாக இங்கு வாழும் ஒரு குடும்பம் இன்னும் சிவப்பு அடையாள அட்டையால் தண்டிக்கப்படுகிறது. நியாயமா?

இந்த 15-ஆவது பொதுத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக் கூட்டணியோ, அல்லது அரசியல் தலைவர்களோ அல்லது வேட்பாளர்களோ, இந்த சிவப்பு அடையாள அட்டை பிரச்சினையை... தங்களின் பிரசாரத்தில் எடுத்துக் கொண்டு... அதற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றால்... மலேசியர்கள் அனைவருமே மனிதாபிமான தன்மைகளில்... மிகக் கொடூரமாக தோல்வி அடைகிறோம் என்றே பொருள்படும்.

குடியுரிமை வழங்கப் படுவதில் நன்கு மறைக்கப்பட்ட ஓர் உண்மையைக் கவனிக்கத் தவறி விட்டோம். அந்த நிலையில் பார்த்தால், சிறந்த மலேசியாவைக் கோரும் சுயநலவாதிகளாக மட்டுமே நாம் பயணிக்க முடியும்.

இந்த மனிதரையும், அவருடைய குடும்பத்தையும் இன்னும் பலரையும் மிக மோசமான நிலையில் கொண்டு போய் விட்டு இருக்கும் இந்த அடிப்படை உரிமை மீறல்களுக்கு கடுமையான மறுப்புக் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த மோசமான தவற்றைச் சரி செய்ய ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

மலேசியாவில் ஊழலும் பாரபட்சமான அரசியலும் செழித்து வளர்வதற்கு இத்தகைய தோல்விகளே காரணம்.

மலேசிய கெசட் டிவியின் இந்தச் செய்தி அறிக்கையானது மனித உரிமைக்கு எதிரான ஒரு பிரச்சனைக்கு நேர்மையான, பொறுப்பான பதிலை வழங்குமா?

ஜே.டி. லோவ்ரென்சியர்

 

மலேசியப் பொதுத் தேர்தல் சர்ச்சை படம்

மலேசியப் பொதுத் தேர்தலில், மூவார் நகரில் ஒரு பெண்ணின் படம் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

அப்படி ஒரு பதாதை மூவாரில் இல்லை. அதை உருவாக்கியவர் நூருல் பைனுன் முர்சிடி Nurul Bainun Murshidi எனும் ஊடகவியலாளர். ஊடகங்களில் 'எனான்' என்றும் அழைக்க ப்படுகிறார்.

விளம்பரப் பலகையில் காணப்படும் அவரின் படம் போட்டோஷாப் மூலமாகச் செய்யப்பட்டது. அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் நகைச்சுவையாக இப்படிப்பட்ட படங்களைப் பதிவு செய்து வருகிறார். அவற்றில் இதுவும் ஒன்று.

மேலே காண்பது நூருல் பைனுன் முர்சிடி உருவாக்கிய போட்டோஷாப் படம். இப்படி ஒரு பதாதை மூவாரில் இல்லை. அவருடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்தும் அழிக்கப்பட்டு விட்டது.

(மலேசியம்)
11.11.2022

05 ஆகஸ்ட் 2022

மலேசிய ஜனநாயக செயல் கட்சி - தேவன் நாயர்

தேவன் நாயர் (ஆங்கிலம்: Devan Nair அல்லது Chengara Veetil Devan Nair); என்பவர் மூன்றாவது சிங்கப்பூர் அதிபர்.

மலேசியா, மலாக்கா, ஜாசின் பகுதியில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், 1981-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின் அதிபராகப் பதவி வகித்தவர்.


சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர். சிறந்த தொழிற்சங்கவாதி; போராட்ட குணத்தில் இரும்பு மனிதராக விளங்கியவர். லீ குவான் இயூ அவர்களின் நீண்டகால நெருங்கிய நண்பர்.

சிங்கப்பூரின் கம்யூனிசக் கட்சியில் குறிப்பிட்டுப் பெயர் சொல்லும் அளவுக்கு, 'முக்கிய ஐந்து நபர்களில்' ஒருவராய் வலம் வந்தவர். 1951 ஆம் ஆண்டு முதல் 1953 ஆண்டு வரை சிறைவாசம்.

1964-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பங்சார் தொகுதியில், சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சியின் ஒரே உறுப்பினர் இவரே ஆகும்.

1979-ஆம் ஆண்டு சிங்கப்பூர் அன்சன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார். 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அதே அன்சன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இரண்டு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரே இந்தியர். 1981 அக்டோபர் 23-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்றார்.

இருப்பினும் 1985 மார்ச் 28-ஆம் தேதி, தெளிவற்ற சூழ்நிலையின் காரணமாக இவர் தன் அதிபர் பதவியைத் துறப்பு செய்தார்.

1961-ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியை உருவாக்கினார். தேவன் நாயர் உருவாக்கிய இந்த ஜனநாயக செயல் கட்சி தான், இப்போது மலேசியாவின் தலையாய எதிர்க் கட்சியாக விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றத்தில் 42 இடங்களைக் கொண்டுள்ளது.

தேவன் நாயர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, 1988-ஆம் ஆண்டில், தன் மனைவியுடன் முதலில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

பின்னர் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டனுக்கு (Hamilton, Ontario, Canada) குடிபெயர்ந்தார்கள். அவர்கள் தங்களின் இறுதிநாட்கள் முழுவதும் அங்குதான் வாழ்ந்தார்கள்.

அவரின் மனைவி ஆவடை தனம் லட்சுமி (Avadai Dhanam Lakshimi) 18 ஏப்ரல் 2005-இல் கனடா ஹாமில்டன் நகரில் காலமானார். அதே நேரத்தில் கடுமையான மறதிநோயினால் பாதிக்கப்பட்ட தேவன் நாயர் அவர்கள், அதே 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, மனைவி மறைந்த அதே ஹாமில்டன் நகரில் காலமானார்.

(மலேசியம்)
05.08.2022







01 ஜூலை 2022

பண்ணைக் கோழி ஆபத்துகள்

நாட்டுக் கோழி இறைச்சி ஆரோக்கியமானது. ஆனால் தற்போது பலர் வளர்ப்புக் கோழி, பண்ணைக் கோழி மீது அதிக மோகம் கொண்டு உள்ளனர்.

பண்ணைக் கோழியை வளர்ப்பதற்கு பலவித வேதிப் பொருட்களை பயன் படுத்துகின்றனர். மற்றும் இதன் வளர்ச்சி 40 நாட்களில் முழுமை அடைகின்றது. அதாவது நாற்பதே நாட்களில் ஒரு கோழிகுஞ்சு பெரிய கோழியாகி விடுகிறது.


அவ்வளவு மருந்துப் பொருட்களை கோழியின் உணவில் கலந்து சீக்கிரமாகப் பெரிதாகிவிட வளர்க்கிறார்கள். அந்தக் கோழியின் உடலில் இருக்கும் பலதரப்பட்ட மருந்துகள் இறைச்சியின் மூலமாக உங்களின் உடலுக்குள் போய் பலவித இன்னல்களை ஏர்படுகின்றன.

பண்ணைக் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளன. இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும்.

பண்ணைக் கோழியை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பண்ணைக் கோழியை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப் பொருட்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆண்களின் இனப் பெருக்கச் சக்தியினை பாதிக்கின்றது.

பண்ணைக் கோழியின் வளர்ச்சிக்காகச் சேர்க்கப்படும் இராசயனம்; பெண்களை விரைவில் வயதாகச் செய்கின்றது. விரைவில் மூப்பு அடையச் செய்கின்றது.

முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படையச் செய்கின்றது.

சான்று:

http://moonchat.in/health/broiler-chicken-side-effects-7-health-hazards-of-eating-broiler-chicken/


 

பெற்றோர் பராமரிப்பு நலன் சட்டம் 2007 (மலேசியா)

*Maintenance and Welfare of Parents and Senior Citizen Act 2007*
*Section 125 of the Code of Criminal Procedure 1973*

60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதைக் கொண்ட பெற்றோர்களுக்கும்; தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியாத பெற்றோர்களுக்கும்; அவர்களின் பராமரிப்புக்காக, அவர்களின் பிள்ளைகள் மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும்.

(The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 seeks to make a legal obligation for children and legal heirs to provide maintenance to senior citizens.)


அல்லது பெற்றோர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உணவு, உடை, தங்கும் இடம், மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டும்.

(Maintenance is defined in Section 2(b) of the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 as “maintenance includes provision for food, clothing, residence and medical attendance and treatment.”)

அவ்வாறு செய்யத் தவறிய பிள்ளைகளிடம் இருந்து, பெற்றோர்கள் தங்களின் பராமரிப்புக்காக ஒரு மொத்தத் தொகையைப் பிள்ளைகளிடம் இருந்து கோருவதற்கு சட்டம் அனுமதிக்கிறது.

(The Act allows its residents aged 60 years and above who are unable to provide for themselves, to claim for maintenance in the form of monthly allowance or a lump sum from their children who are capable of supporting them but are not doing so.)

1973 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-ஆவது பிரிவின் கீழ் அல்லது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007-இன் கீழ்; பெற்றோர்கள் தங்களின் பராமரிப்புக்காக பிள்ளைகளிடம் இருந்து பண உதவி கோரலாம். மலேசியாவில் சட்டம் அமலில் உள்ளது.

(Parents can claim maintenance either under Section 125 of Code of Criminal Procedure, 1973 or under Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007.)

செய்யும் முறை:

தங்கள் பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறி விட்டார்கள் என்று, தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள சமூக நலனபிவிருத்தி இலாகாவில் (Social Welfare Department) புகார் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் கட்டணம் இல்லை. இலவசம்.
 
அதன் பின்னர் பிள்ளைகளை அழைக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள். 15% அவர்களின் ஊதியத்தில் இருந்து வெட்டப்பட்டு பெற்றோர்களின் கவனிப்புக்காக பெற்றோரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப் படலாம்.

(தொகுப்பு: மலேசியம்)
(கருத்துகள் வழங்கிய டத்தோ வாசு அவர்களுக்கு நன்றி)
(30.06.2022)

சான்றுகள்:

1. https://www.malaysianbar.org.my/article/news/legal-and-general-news/general-news/no-more-abandoned-parents