தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் படிப்பை மேற்கொண்டால், அதுவே பின்னர் காலத்தில் மாணவர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று பேராக் மாநில சுகாதார இலாகாவும் எச்சரிக்கை செய்தது.
03 டிசம்பர் 2023
கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி
தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் படிப்பை மேற்கொண்டால், அதுவே பின்னர் காலத்தில் மாணவர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று பேராக் மாநில சுகாதார இலாகாவும் எச்சரிக்கை செய்தது.
01 டிசம்பர் 2023
மனித நேய மலேசிய உணர்வு
தனசேகரன் தேவநாதன், சித்தியவான், பேராக் - 01.12.2023
இனங்களுக்கு இடையில் மனிதத் தன்மைகள் பரவலாக அனுசரிக்கப் பட்டால், அங்கே பகுத்தறிவு வளர்கிறது. இணைந்து போகும் தாராள மனப்பான்மையை வெளிப்படுகிறது. அதுமட்டுமல்ல அவையே பகைமை உணர்வை வளர்வதைத் தடுக்கிறது என்று கூட சொல்லலாம்.
எல்லா இனங்களும் இணைந்து ஒவ்வொருவரின் மாறுபட்ட கலாசாரத்தை ஏற்றுக் கொள்வது பல்லின மக்கள் வாழும் நாட்டில் சுபிட்சத்தை வளர்க்க உதவும். ஒற்றுமையைக் காண நல்லெண்ணம் தேவை. நம்மை விட சிறந்தவர் எவரும் இல்லை என்கின்ற முரட்டு இறுமாப்பு நல்லிணக்கத்தை வளர்க்காது.
பேராக், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான், கிந்தா தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அங்கு பணிபுரிந்த ஓர் இந்திய பாதுகாவலரிடம் தங்களின் அன்பின் வெளிப்பாட்டை வெளிக் கொணர்ந்த முறை மலேசியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
உலகின் முதல் பெட்ரோல் நிலையம்
பத்தாவது மனிதன்
கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர் - 01.12.2023
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.
இரண்டாம் மனிதன்: “நான் கூகுள் சுந்தர் பிச்சை போல சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “எனக்கு ரஜனிகாந்த் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: “ஐஸ்வர்யாராய் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
இப்படி இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் maximum எந்த அளவு மன நிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
“மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு் கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்... சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!
அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!
நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!
பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம் ஒன்பதில் ஒன்றா..? இல்லை, பத்தாவது மனிதனா..?
படித்ததில் பிடித்தது
25 நவம்பர் 2023
மலேசியத் தமிழர் இனம் 2023
(பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்)
மலேசியத் தமிழர் இனத்தின் எழுச்சியால்
2008 ஆட்சி மாற்றத்தால்
அன்றைய 2007 முயற்சி...
ஆரம்பத்தில் வெற்றி பெற்ற முயற்சி...
அதில்...
உயர்ந்த சுகம் அனுபவித்தது
இரண்டு இனங்கள் தான்...
நாம் நமது முயற்சி...
நமது இந்த எழுச்சி...
"விழலுக்கு இரைத்த நீராக" போய் விட்டது...
அடி உதை வாங்கியவன் ஒரு புறமிருக்க
துன்பம் பட்டவன் ஒரு புறமிருக்க
சிறைவாசம் சென்ற கூட்டம் ஒரு புறமிருக்க
அநாதையாக்கப்பட்ட ஓர் இனக் கூட்டம் ஒரு புறமிருக்க...
மலேசியத் தமிழர் இனத்தின் போராட்டத்தைக் கொண்டு
இன்றும் சொகுசு வாழ்க்கை வாழும் பலர் உள்ளனர்.
அதில் அன்னிய இனத்தவர்கள் மட்டுமல்ல
மாறாக நம் இனத்தை சார்ந்தவர்கள் மிக அதிகம்...
அரசியல் மூலம் தனி மனிதனாக
குடும்ப அரசியல் நடத்திக் கொண்டு
கோடான கோடு சொத்துக்கள் சேர்த்துக் கொண்டு
அவர் அவர் குடும்பத்தை வளர்த்துக் கொண்டு
வாரிசு அரசியல் என்று
இராஜ போக வாழ்க்கை வாழ்கிறார்கள்...
இதற்கு உதாரணம் நிறைய உண்டு...
இன்றளவும் இதை தான் செய்து கொண்டு வருகிறார்கள்...
தமிழர்கள் பலர் அவர்களுக்கு வாலை பிடித்துக் கொண்டு
எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு பின் தொடர்கிறார்கள்...
அவர்களோ... தன் இன அரசியல் செய்கிறார்கள்...
கேட்பாரில்லை... ஐயகோ...
அன்று எழுச்சி கொண்ட மலேசியத் தமிழர் இனம்
இன்றும் கோழை இனமாக
பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கு...
இந்த 16 ஆண்டுகால போராட்டத்தின் மூலம்
"பூனைக்கு மணிக்கட்டிய" இனத்துக்கு
கிடைத்தது என்ன?
சாதித்தது என்ன?
வாழ்கிற வாழ்க்கை தான் என்ன?
அறுபது ஆண்டு கால ஆட்சியில்
ஒன்றும் கிடைக்கவில்லை
அந்தத் தாக்கத்தில் தான் "இந்திய இனம்"
குறிப்பாக 90 சதவிகித தமிழர்கள்
தலைநகரில் 2007-இல் ஒன்று கூடினார்கள்
(அதில் எனது குடும்பமும் தான்)
என்ன ஆச்சு?
அரசாங்கமும் நமது குறையை கேட்டு அறியவில்லை...
செவி சாய்க்கவில்லை...
ஒரு முக்கியத்துவம் கொடுக்க வில்லை...
(ஆரம்பத்தில் ஒரு சில சலுகைகளை கொடுத்தது குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு)
ஆனால், 2007 எழுச்சிக்குப் பிறகு
இன்று நமக்கு ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்த்தால்
ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை...
ஒன்றுமே இல்லை...
காரணம் நமக்கென்று ஒரு சரியான சமுதாயத் தலைவன் இல்லை
வந்தவன்...
போனவன்...
இருக்கிறவன்...
எவனும் நல்லவன் இல்லை...
வருவான் என்று எதிர்ப்பார்த்தால்
எல்லோரும் 1000 சதவிகிதம் சுயநலவாதிகளே...
நம்மவர்களை ஏணிப்படியாக வைத்து...
மேலே போகிறார்களே தவிர
நம்பிய இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற எண்ணம் எள் அளவும் இல்லை.
நாம் சிந்திப்பதும் இல்லை... திருந்துவும் இல்லை...
சுயநல நரிக்கூட்டமும்
நம்மை சிந்திக்க விடமாட்டார்கள்...
ஆக............
ஒரு காலத்தில் "மக்கள் சக்தி"
என்று வாய் கிழிய கத்திய வாய்கள் இன்று "பண சக்தி" "தன சக்தி"
என்று சத்தமில்லாமல் இரகசியமாக மனதுக்குள்ளேயே கூவுது...
சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...
அன்புடன்
நாம் தமிழர்
நாமே தமிழர்...
ஆக்கம்: பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்
25.11.2023