18 ஏப்ரல் 2021

கங்கார் தமிழ்ப்பள்ளி சாதனை

இந்தோனேசியாவின் அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான 2021-ஆம் ஆண்டு புத்தாக்கப் போட்டியில் தொழில்நுட்பம் மற்றும் கணினி பட்டியலில் கங்கார் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கம் வென்று வெற்றி வாகை சூடி உள்ளது.


அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் பல அரிய பெரிய சாதனைகளை எல்லாம் செய்து வருகிறார்கள். தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களின் சாதனைச் சரித்திரங்கள், கடந்த பத்து ஆண்டுக் காலக் கட்டத்தில் அதிகரித்த வண்ணமாய் உள்ளன.


தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பு; கற்றல் கற்பித்தலில் நவீன அணுகுமுறைகள்; அன்பு அரவணைப்புகள்; உற்சாகத் தூண்டுதல்கள் போன்றவை மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.

23 உலக நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அனைத்துலக மாணவர்கள் இந்த அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டனர்.

கங்கார் தமிழ்ப்பள்ளி, பெர்லிஸ் மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளி. இருப்பினும் இந்த அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்று பெர்லிஸ் மாநிலத்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்து உள்ளது.

இளம் ஆய்வாளர்கள், லாரா அன்சிலியா செல்வராஜ், ஹெரன் ரஷ் ஜெய் ரஷ், குஜென் சந்திரஹாசன் & ருத்ரா மணிவனன். இவர்களுக்கு நம் வாழ்த்துகள்.


இவற்றுக்கு எல்லாம் தூண்டு கோலாக அமைந்தவர்கள் அப்பள்ளியின் ஆசிரியர்கள் திரு. சிவசுதன் குமரன், திரு. அறிவானந்தன் இராஜமாணிக்கம், ஆசிரியை குமாரி தர்ஷினி கணேச மூர்த்தி, ஆசிரியை திருமதி. தனமலர் வீரசிம்மன், ஆசிரியர் பரமேஸ்வரன் குணசேகரன், ஆசிரியர் திரு. கிருபா முருகன் கிருஷ்ணன் மற்றும் அனைத்து கங்கார் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.


அவர்களுடன் கங்கார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், பெர்லிஸ் கல்வி இலாகா ஆளுநர் மற்றும் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைக் கங்கார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. உதயகுமார் கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

கங்கார் தமிழ்ப்பள்ளி, பெர்லிஸ் மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு உதயக்குமார்.

இவர் நம் மலேசியம் புலனத்தின் நீண்ட நாள் அன்பர்களில் ஒருவர். அவருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் உதயக்குமார்.

புலன அன்பர்களின் பதிவுகள்


தனசேகரன் தேவநாதன்: இனிய தகவல் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

வெங்கடேசன்: வாழ்த்துகள் நம் பிள்ளைச் செல்வங்களுக்கு... மேன்மேலும் வெற்றிகள் குவியட்டும். வாழ்க வளமுடன்...

ராஜா கருப்பையா: வாழ்த்துகள் 🙏

உதயக்குமார்: மிக்க நன்றி, தங்கள் அன்பும் ஆசிர்வாதமும் என்றென்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவை. வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பள்ளி...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தமிழ்ப்பள்ளிகள் மலாயா தமிழர்களின் உயிர்நாடிகள். என்றைக்கும் உயிர் கொடுப்போம்.

பி.கே. குமார்:
வாழ்த்துகள் 🙏

கணேசன் சண்முகம்: வாழ்த்துகள் 🙏

கென்னடி ஆறுமுகம்:
வாழ்த்துகள் ஐயா

ராதா பச்சையப்பன்: அனைத்து மாணவ மாணவிகளுக்கு  மேம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

உதயக்குமார்: தங்கள் பாராட்டுக்கள் நம் செல்வங்கள் வளர்ச்சிக்கு தூண்டு கோலாக அமையும். மிக்க நன்றி.

தேவிசர: வாழ்த்துகள் 🙏

மகாலிங்கம் பினாங்கு: வாழ்த்துகள் 🙏

சிவகுரு மலாக்கா: வாழ்த்துகள் ஐயா... வாழ்க தமிழ் 💐

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தமிழ் மொழி தமிழ்ப்பள்ளிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு தமிழ்ப்பள்ளி அனைத்துலக அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு ஒரு வாழ்த்து சொல்ல முடியவில்லை. இந்த மாணவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு ஆசிரியர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள். நினைத்துப் பாருங்கள். ஒரு வாழ்த்து கூடவா சொல்ல மனசு இல்லை. நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். இதில்

தமிழக கோயில் களின்
கோபுரங்களில்
அதிகமான காமலீலை
சிலைகள் எதற்காக
செதுக்கப்பட்டிருக்கிறது

என்று கேள்விகள் கேட்க மட்டும் நேரம் இருக்கிறது. வேதனை. கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துச் சொன்ன நல் இதயங்கள்.

1. தனசேகரன் தேவநாதன்
2. வெங்கடேசன்
3. ராஜா கருப்பையா
4. பி.கே.குமார்
5. கணேசன் சண்முகம்
6. கென்னடி ஆறுமுகம்
7. ராதா பச்சையப்பன்
8. தேவி சர
9. மகாலிங்கம் பினாங்கு
10. சிவகுரு
11. ????

ஆர்.டி.எம். ராஜா: வாழ்த்துகள் 🙏

வெங்கடேசன்: அனைவருக்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

வெங்கடேசன்: இதற்கு மேல் என்னதான் சொல்வதோ?தாங்களும் பல முறை கூறி விட்டீர்கள்

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா...இப்போது தான் புலனத்தை பார்க்க வந்தேன்... ஆகவே தான் தாமத பதிவு. ஆசிரியர் பெருந்தகையர்க்கும் மாணவ மணிகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் ... பாராட்டுகள். வரும் காலங்களில் மென் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள் 👌👌👏🏻👏🏻👍👍

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இரண்டு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தால் போதுங்க... துணிந்து குடும்பப் பொறுப்பை ஒப்படைக்கலாம்

சரோஜினி: வாழ்த்துகள் 👏🏻

காளிதாசன்: வாழ்த்துகள் 🙏

நாகராஜன்: வாழ்த்துகள் 🙏

வேலாயுதம் பினாங்கு: வாழ்த்துகள்...

வனஜா பொன்னன்: என் இனிய நல்வாழ்த்துக்கள்! 🙏🙏

பாரதிதாசன் சித்தியவான்: சிறப்பு வாழ்துக்கள்

சந்திரன் ஜொகூர்: வாழ்த்துகள் ஐயா. வாழ்க தமிழ் 💪🙏

ஜீவன் தங்காக்: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள்







 

04 ஏப்ரல் 2021

அண்ட்லி தோட்டமும் மேக்கடை லயன்களும் - முனியாண்டி ராஜ்

04.04.2021

பகிர்வு: ஆயர் தாவார் தனசேகரன் தேவநாதன்

வெள்ளி மாநிலம் பல வரலாறுகளின் பண்ணை. வணிகர்களாக வந்த சீனர்களின் கலங்கரை விளக்கம். உலகிற்குப் பல கோடி டன் ஈயத்தை வாரிக் கொடுத்த சீதக்காதி.

உறுப்புக்கள் அனைத்தையும் பயனுக்கு அள்ளித் தரும் தென்னை அதிகமாய் பூப்பெய்திய மண்; மலேசிய பதிவேட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம்; என இன்னும் பல கூறுகளைச் சொல்லி கொண்டே போகலாம். அதுதான் பேரா மாநிலம்.

மாநிலத்தின் தலைநகரமாய் முன்னாளில் முழங்கப்பட்ட தைப்பிங்கில் இருந்து 60 கல் தெற்கே பயணத்தை தொடர்ந்தால் மேம்பாட்டுத் திட்டங்களின் அபரித வளர்ச்சியினால் பழைய முகவரியைத் தொலைத்துப் புதிய பரிணாமம் பூண்டு இருக்கும் பந்தாய் ரெமிஸ் பட்டணத்தை அடுத்து சுமார் 13 கல் அளவில் உள்வாங்கியவாறு அண்ட்லி தோட்டம மையம் கொண்டு உள்ளது.

தோட்டத்து நுழைவாயிலை அடைந்ததும் மண்சாலை. இருபுறமும் செம்பனை மரங்கள் குடை பிடித்துக் நிற்கின்றன. சற்று தள்ளிச் சென்றால் கோயில் கோபுரம் தலை நமிர்ந்து நிற்கிறது.

நவக்கிரக வழிப்பாட்டுத் தளங்களுடன் ஸ்ரீ ராமர் கோயில், முனீஸ்வரர் ஆலயம், அர்ச்சகர் குடியிருப்பு மற்றும் கல்யாண மண்டபம் என ஒரு சேர அமைந்து அரசாட்சி நடத்திய அடையாளங்கள் தெரியும்.

கோயிலின் எதிர்ப்புறத்தில் 80-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட தற்போதைய குடியிருப்பு. அதற்கு முன்னர் மேக்கடை லயன்களாக காட்சி அளித்தவை.

காலனித்துவ ஆட்சியில் பலகைகளால் கட்டப்பட்டு பச்சை வர்ணம் பூசப்பட்ட  வீடுகளில் நூறு குடும்பங்களுக்கு மேல் குடி இருந்தார்கள். நாட்டின் முக்கிய ஏற்றுமதியான ரப்பர் மரம் சீவுதலே பிரதான தொழில். தோட்டத்து நிர்வாகம் ஒரு சில அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து இருந்தது.

பல தோட்டங்களில் 'தாமஸ் ஆல்வா எடிசனின் மின்சாரக் கண்டுபிடிப்பு இல்லாமல்... மண்ணெண்யை விளக்கின் வெளிச்சத்தில் படித்துக் கொண்டு இருக்கையில், இங்கு காலை 5 மணி முதல் 6.30 வரையிலும் மாலை 7.00 மணி தொட்டு 10.30 மணி வரையிலும் மின்சார ஒப்பந்தச் சம்சாரமாய் அறிமுகப் படுத்தி இருந்தார்கள்.

திருவிழா, பண்டிகை நாட்களில் நேரம் நீட்டிக்கப் படுவதும் உண்டு. மற்றொன்று ஆயாக் கொட்டகை. வேலையின் நிமித்தம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கே விட்டுச் சென்று பணி முடிந்து திரும்பும் பொழுது அழைத்து செல்லலாம்.

உபரி வருமானம் ஈட்ட பயிரிடுதல்; கால்நடைகள் வளர்த்தல்; மற்றும் தோட்டத்துத் தொழிற்சாலையில் பகுதிநேர வேலை செய்தல் என பொன்னான வாய்ப்புகள் நிறைய வாய்த்திருந்ன.

உறவு, நேசம் மற்றும் மனித நேயம் என்பது தோட்டத்து மக்களின் பொதுவான குண நலன்கள். அஃறிணயை மாந்தர் பெயர்ச் சொல்லி அழைத்த பெருமை தோட்டத்து மக்களுக்கே உரித்தானது.

வளர்ப்பு நாயை மணி, வேலா, குணா என்றும் மாடுகளை லெச்சிமி, கண்ணம்மா என்றும் அழைப்பது தோட்ட மக்களுக்கே உரிய குணம்.

மார்கழி அதிகாலையி்ல் பட்டாம் பூச்சியாய் மங்கையர்கள், மாட்டு சாணம் சேகரித்து வீட்டின் முன்புறம் மெழுகில் கோலமிட்டதையும்... நிலா வெளிச்சத்தில் உடன் பிறப்புகளோடு சம வயதுடைய அண்டை வீட்டு நட்புகளுடன் நிலாச் சோறு சாப்பிட்டு நொண்டி விளையாடியதும்... காலத்தால் மாசு படியாத காவியங்கள்.

பள்ளி விடுமுறை நாட்களில் விறகு சேகரிக்கும் தோரணையை முன்னெடுத்து வேலி இல்லாத சேற்று குளத்தில் நீச்சல் பழகியதும்; காகிதக் கப்பல் மிதக்க மழையை வேண்டி நின்ற எதார்தத்தையும் நினைத்தால் இன்றும் மனம் குதூகலி்க்கும். மாலை வேளையில் காற்பந்து, சடுகுடு என உற்சாகமாகி விடுவார்கள் இளைஞர்கள்.

கோவில் வளாகத்து திண்ணையில் விருட்சமாய் வளர்ந்திருந்த அரசமரம். அன்றையக் கனவு நாயகர்களின் அசத்தலான நடிப்பு முதல் ரஞ்சன் வீட்டு மாடு கன்று ஈன்றது வரை இப்போது கேட்டாலும் மனனம் செய்ததை ஒப்புவிக்கும்.

தீ விபத்தைக் களையும் நோக்கில் எந்த நேரமும் நீண்ட கழியில் தயாரான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சிவப்பு நிறத்திலான மணல் வாளிகளுடன் வரவேற்றுக் கொண்டு சுமார் 250 மாணவ மாணவிகளுடன் இயங்கி வந்த தமிழ் பள்ளியை அடுத்து வள்ளுவர் படிப்பகம்...

மாத, வார நாழிதழ் முதல் தமிழ்வாணன், கல்கி, மு.வரதராசணார், கல்கி போன்றோரின் நூல் வடிவங்கள் அழகாய் வரிசை பிடித்து நிற்கும்.

இலக்கிய தாகம் கொண்ட சிலரை இரவு நேரங்களில் இங்கே காணலாம்.

பதிவேட்டில் குறிப்பெழுதிப் புத்தகங்களை இரவல் வாங்கிச் செல்லலாம்.

மாலை வகுப்பு (tution) திரு கிருஷ்ணன் (இன்று அமரராகி விட்டார்) ஆசிரியரின் தலைமையில் நடைபெறும். இவரைப் பற்றி இங்கே சில வரிகள் சொல்லியாக வேண்டும்.

எம் ஜி ஆரின் பரம ரசிகரான இவர்; அதே பாணியில் உடுத்தி; தலையையும் வாரிக் கொண்டு கையில் ஒன்றிரண்டு புத்தகத்துடன் அதிகமான கண்டிப்புமாய் வலம் வருவார்.

'சார்' என்று அழைக்காதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

இன்னொரு பிரபலம் இங்கே உண்டு. 'சுல்தான்' என அடைமொழியுடன் அழைக்கப்பட்ட கை. துரைசாமி. உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தற்காப்புக் கலையில் தேர்ந்தவரான இவர் அப்போதைய வில்லன்களின் சிம்ம சொப்பனம்.

கை கால்களில் எலும்பு இடம் பெயர்ந்துள்ளாதா? இவரை நாடினால் குணமாகிவிடும் என்று சொல்லும் அளவிற்க்கு சித்த வைத்தித்தில் அனுபவம் உண்டு. தோட்டத்தில் வர்ண விளக்குகள், அலங்கார வளைவுகள் என தீமிதி உற்சவம் ஒரு வாரத்திற்க்கு முன்பே களைகட்டிவிடும்.

திடீர் கடைகள் கோவிலை சுற்றி ஆங்காங்கே தோன்றிவிடும். கோவில் உற்சவங்கள் என்று வந்தால் பாரம்பரிய உடைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இவை அன்றைய எழுதப்படாத சாசனம்.

திருவிழாவை முன்னிட்டு இருபதுக்கும் மேற்பட்ட உபயங்கள் நடைந்தேறும். அதில் வாலிபர் உபயமே மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். அன்றுதான் விளையாட்டுப் போட்டிகள், திரைப்படம் என அமர்க்களப்படும்.

முதல்நாள் இரத ஊர்வலத்தில் தொடங்கி... மறுநாள் தீ மிதித்தல், அதனைத் தொடர்ந்து மறுநாள் காவடிகள் செலுத்தும் நேர்த்திக் கடன் மிக தேர்த்தியாய் நடைபெறும்.

80-ஆம் ஆண்டுகளின் மத்தியில் உலகளாவிய நிலையில் ரப்பர் விலை மீள முடியாத படு வீழ்ச்சியில் சரிந்துக் கொண்டிருந்தது.

ரப்பர் மரங்களின் அழிப்பு மெல்ல மெல்லத் தொடங்கி... செம்பனை மரங்களின் தாக்கம் கிடு கிடு என உயர்ந்துக் கொண்டே போனது.

வேலை வாய்ப்பை இழந்த பலர் மற்ற மாநிலங்களுக்கு வருமானம் தேடி புலம் பெயர... இளைய தலைமுறையினர் சிங்கப்பூருக்கு படையெடுக்க... ஒரு பகுதியினர் அக்கம் பக்கத்து வீடமைப்பு பகுதிகளில் புதுத் தொழில்களுடன் தங்களை வசப்படுத்திக் கொள்ள... தோட்டத்தின் மக்கள் தொகையும் மகிழ்ச்சியும் சன்னம் சன்னமாகச் சுருங்க ஆரம்பித்தது.
 
இளமைப் புன்முறுவலுடன் கண் சிமிட்டிய மேக்கடை லயன்கள்; நூல் நிலையம்;  இன்று ஒரு சிலர் வீட்டில் ரசம் இழந்த கண்ணாடிச் சிறையில் புகைப்படங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் மட்டுமே மீதமாய் இருக்கின்றன.

ரப்பர் மரங்களை வரிசையாய் ஆட்கொண்டிருந்த சதுப்பு நிலம்... தற்பொழுது செம்பனை காடுகளாகிவிட்டது... மாதத்தின் தொடக்கத்தில் சம்பளம் பெற அலுவலகம் செல்லும் பெற்றோரின் கையைப் பிடித்துச் சென்ற கடைகுட்டிகள்... இன்று காதோரம் நரைத்த குழந்தைகளாகி விட்டனர்.

சுப காரியங்களின் கால் தடங்களுடன் இறுதி யாத்திரையும் பத்திரமாய் பதிவு செய்து வைத்திருக்கும் அந்த செம்மண் சாலை... இன்று குழி விழுந்த கண்களாய் காட்சி அளித்து பழமையை ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

மக்கள் திரள் நிறைந்து இருந்த தோட்டத்தின் எஞ்சிய அடையாளமாய் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தமிழ்ப் பள்ளி, கோயில், ஒரு மளிகைக் கடை மட்டுமே நினைவுச் சின்னங்களாய் பிழைத்து இருக்கிறது.

தோட்டத்தின் முகப்பில் தோட்டத்தின் பெயரைச் சுமந்துக் கொண்டு இருக்கும் அறிவிப்பு பதாகை புதிய வண்ணத்தில் பளிச்சிடுகிறது.

ஏதோ ஒரு தூரத்து வானொலியில் 'வசந்த கால கோலங்கள்... வானில் விழுந்த கோடுகள்... கலைந்திடும் கனவுகள்... கண்ணீர் சிந்தும் நினைவுகள்... எனும் பாடல் காதில் வந்து மோதி மெல்ல மெல்ல கரைகிறது.



மலேசியம் புலன அன்பர்களின் பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: நாங்கள் வாழ்ந்த தோட்டத்தின் உரிமையாளர் அமரர் வி.கே. கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி, சிலவாரங்களுக்கு முன்பு நமது ஐயா அவர்கள் நீண்ட கட்டுரையைப் பதிவு செய்து இருந்தார். அச்சமயம் அவரின் தோட்டச் செய்தி இடம்பெறவில்லையே என அடியேனுக்கு ஒரு வருத்தம்.

இன்று அதை நிவர்த்தி செய்யும் வகையில் அண்ட்லி தோட்ட மைந்தர் செய்த பதிவு மனதை நெருடியது. அதை அனைவருக்கும் பகிர்வதில் ஒரு சந்தோசம். நன்றி 🌹🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
அருமையான வரலாற்றுப் பதிவு... கட்டுரை எழுதும் போது இந்தத் தகவல்கள் கிடைத்து இருந்தால் கண்டிப்பாக சேர்த்து இருப்பேன் ஐயா... நன்றிங்க.

திருமதி ராதா: அருமை... அன்று தோட்டத்து வாழ்க்கை முறையே வேறுதான். அக்கம், பக்கத்து வீட்டாரை முறை சொல்லி அழைப்பதில் உள்ள அன்பும் சுகமும் தனி தான்.

இன்று பக்கத்து வீட்டில் யார் வசிக்கின்றனர் என்று தெரியாமல் போயிற்றே!

திருவிழாக் காலங்களில் சொந்தங்கள் வருகை தனி சிறப்புதான். அன்று பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கோ, வேலைக்கோ பயம் இன்றி போய் வந்த காலம். ஆனால் ‌இன்றோ...? அந்த இளவேனில் காலம் மீண்டும் வருமா...? சிறப்பாக இருக்கிறது கட்டுரை. படைப்பாளருக்கு நன்றி. வாழ்த்தும் வணக்கமும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்:
மலேசிய நாட்டு மண் வாசனையில், நம் முன்னோர்களின் தியாகமும் நம் தாய் தந்தையரின் வேர்வை வாசமும் என்றும் நம் உடலிலும் உதிரத்திலும் உறங்காமல் இருக்கும். தோட்டத்து வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு அனுபவித்தவனுக்கு மட்டும் தான் அதன் உயிரும் ஈர்ப்பும் புரியும் தெரியும்.

தேவி சர: 


இமயவர்மன்:
அற்புதமான எழுத்து
கை பிடித்து இளமை காலம் அழைத்து சென்ற உணர்வு வாழ்த்துகள் அய்யா

குமரன் மாரிமுத்து: சற்றே என்னை மறந்தேன். மீண்டும் அந்தத் தோட்டப்புற வாழ்க்கைக்கு கை பிடித்து அழைத்தே சென்றுவிட்டார்.....💐💐💐



30 மார்ச் 2021

சிறைக் கைதிக்கு மனைவி கடிதம்

 30.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

அன்புள்ள கணவருக்கு... நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே... குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னால் இருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன். நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடம் இருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு... யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளை எல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு!

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.


குங்குமம் மகிமை

30.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.

பெண்கள் குங்குமம் இடுவதால் மகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.

வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும்.


படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப் படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

1. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

2. மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால்., குங்குமம் இட்டுக் கொண்ட எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

3. பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

4. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

5. தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத் தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

6. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், உச்சி வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

7. ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

8. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

9. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

10. குங்குமம் இரு புருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அலங்காரத்திற்காக இட்டுக் கொள்ளும் மற்றவைகளை குங்குமத்திற்கு கீழே இட்டுக் கொள்ள கூடாது.

குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ளுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

தூய்மையான மஞ்சள், எலுமிச்சை, படிகாரம் ஆகியவற்றின் பக்குவக் கலவையால் தயாரிக்கப்படுவதே செந்நிற குங்குமம். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. குங்குமத்தினால் முகம் களை பெறும்.

பெண்களின் நெற்றியின் முன் வகிடில் லட்சுமி தேவி உறைவதாகக் கூறுவர். நடுவகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால் பெண்கள் பிற ஆடவனின் மனதில் ஆசையைத் தூண்டாதவாறு தடுக்க முடியும்.

குங்குமம் அணிந்துள்ள மங்கையரை எத்தனை ஆண்கள் பார்த்து மோகித்தாலும் அவளை பிறர் அடைய முடியாது. அதனால் மங்கையின் கற்பு நிலை பெறும். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், பிறர் சக்தி நம் மேல் ஏவுதல் போன்றவற்றை குங்குமம் அணிவதனால் மட்டுமே தடுத்திட முடியும் என்பது ஆராய்ந்தவர்களின் கூற்றாகும்.

இத்தகைய குங்குமத்தை அம்மனுக்கு அபிஷேகப் பொருளாய் பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டு சக்தி திருக்கோயில்களில் மகாலட்சுமியும், சக்தியும் வாசம் புரிகின்றனர் என்பர் சான்றோர்.

நீறுடன் குங்குமம் அணிவோருக்கு சோம்பல் இல்லை. தோல்வியில்லை. சுறுசுறுப்பும் வெற்றியும் கிடைக்கும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டப்படுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும். நெற்றி பகுதியில் குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.

நெற்றியில் குங்குமம் இடுவதால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.

ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகிறது. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  

மதுரை மீனாட்சி ஆலயத்தின் தாழம்பூ மண குங்குமம் உலகப்பிரசித்தி பெற்றது.     

நன்றி: தினகரன் ஆன்மீகம்    

 

24 மார்ச் 2021

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது

24.03.2021

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்து உள்ளன. அது தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானம்  22-க்கு 11 எனும் வாக்குகளில் நிறைவேறி உள்ளது.

இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, லிபியா, நேபாளம், உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை (abstain).

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வங்காள தேசம், கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்கு அளித்தன.

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் மலேசியாவின் பெயர் இடம் பெறவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற 2021 பிப்ரவரியில் முறையீடு செய்தது.

இப்படி ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப் படுவது இலங்கை அரசுக்கு அனைத்துலக அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாகும்.

IN FAVOUR 22


Argentina 🇦🇷
Armenia 🇦🇲
Austria 🇦🇹
Bahamas 🇧🇸
Brazil 🇧🇷
Bulgaria 🇧🇬
Côte d’Ivoire 🇨🇮
Czechia 🇨🇿
Denmark 🇩🇰
Fiji 🇫🇯
France 🇫🇷
Germany 🇩🇪
Italy 🇮🇹
Malawi 🇲🇼
Marshall Islands 🇲🇭
Mexico 🇲🇽
Netherlands 🇳🇱
Poland 🇵🇱
Republic of South Korea 🇰🇷
Ukraine 🇺🇦
United Kingdom of Great Britain and Northern Ireland 🇬🇧
Uruguay 🇺🇾

AGAINST 11

Bangladesh 🇧🇩
Bolivia 🇧🇴
China 🇨🇳
Cuba 🇨🇺
Eritrea 🇪🇷
Pakistan 🇵🇰
Philippines 🇵🇭
Russia 🇷🇺
Somalia 🇸🇴
Uzbekistan 🇺🇿
Venezuela 🇻🇪

ABSTAIN 14

Bahrain 🇧🇭
Burkina Faso 🇧🇫
Cameroon 🇨🇲
Gabon 🇬🇦
India 🇮🇳
Indonesia 🇮🇩
Japan 🇯🇵
Libya 🇱🇾
Mauritania 🇲🇷
Namibia 🇳🇦
Nepal 🇳🇵
Senegal 🇸🇳
Sudan 🇸🇩
Togo 🇹🇬

மலேசியம்
24.03.2021

சான்றுகள்:

1. https://www.tamilguardian.com/

2. https://www.bbc.com/tamil/global-56496711