09 ஜூலை 2021

பிரான்சு நாட்டில் ஒபிலிஸ்க் தூண்கள் - டாக்டர் சுபாஷினி

பண்டைய எகிப்தின் புகழ் மிக்க மன்னன் இரண்டாம் ராம்செஸ் (Ramesses II). அவன் கட்டிய பல கோயில்களில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு கோயிலாக அமைவது லுக்ஸோர் கோயில் (Luxor).

இக்கோயிலின் முன்புறத்தில் இரண்டு ஒபிலிஸ்க் (Obelisk) நிற்கும் வகையில் அவன் கட்டினான். அந்த இரண்டு ஒபிலிஸ்களில் ஒன்று இன்றைக்குப் பாரிஸ் நகர மையத்தை அலங்கரித்து நிற்கிறது.


22 மீட்டர் உயரம் கொண்டது இந்த ஒபிலிஸ்க். 1936-ஆம் ஆண்டு இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாகப் பிரான்சில் பிரகடனப் படுத்தப்பட்டது. கொன்கோர்ட் மெட்ரோ ஸ்டேஷன் இருக்கும் பகுதிக்கு பக்கத்தில் இது அமைந்திருக்கிறது.

மன்னன் இரண்டாம் ராம்செசைப் புகழும் வகையில் ஹீரோக்ளிப்ஸ் (Hieroglyphs) எழுத்துக்களால் இந்த ஒபிலிஸ்க் கற்பாறை சின்னத்தில் நான்கு பகுதிகளிலும் குறியீடுகள் கீறப்பட்டு உள்ளன.

பாறைக் கீறல்கள் என்பது நமக்கு புதிய ஒன்றல்ல அல்லவா? நம் சேர சோழ பல்லவ பாண்டிய மன்னர்கள் கோயில் கல்வெட்டுகளில் பண்டைய தொல் தமிழ் எழுத்துக்களால் பல செய்திகளை ஆவணப்படுத்தி இருப்பது போல, பண்டைய எகிப்தில் ஹீரோகிளிப்ஸ் எழுத்துக்களால் பண்டைய எகிப்திய மன்னர்கள் தங்கள் புகழ் பாடலையும் பல செய்திகளையும் செதுக்கி வைத்திருக்கின்றனர்.

எகிப்தில் இருந்த இந்த ஒபிலிஸ்க் எப்படி பிரான்சுக்கு வந்தது என்ற செய்தியைப் பார்ப்போம். 


ஏறக்குறைய 3000 ஆண்டு பழமையான இந்த ஒபிலிஸ்க் 1833 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி பாரிஸ் நகரை வந்தடைந்தது. நைல் நதிக் கரையில் கப்பலில் ஏற்றப்பட்டு எகிப்தின் அலெக்சாண்டிரியா பகுதிக்கு வந்து பிரான்சின் சார்புக் துறைமுகப் பகுதியில் இது வந்தடைந்தது.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 25 அக்டோபர் மாதம் 1836 ஆம் நாள் இது மன்னர் லூயி பிலிப் அவர்களால் தற்போது உள்ள இடத்தில் நிறுவப்பட்டது.

எகிப்தை ஆண்டு வந்த ஒட்டோமான் மாமன்னன் முகமது அலி பாஷா அவர்களால் இது ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.


ஒபிலிஸ்க்  என்பது என்ன என்று பலருக்கும் கேள்வியாக இருக்கலாம். எகிப்தியர்களைப் பொறுத்தவரை தங்கள் கடவுள்களை வழிபடவும் சிறப்பிக்கவும் இறந்து போன தங்கள் மன்னர்களைப் பிரதிபலிக்கவும் ஒரு சின்னமாக இருப்பது தான் ஓபிலிஸ்க்.

பண்டைய நாகரிகங்களில் மன்னர்களைக் கடவுளாக காணும் முறை வழக்கில் இருந்தது தான். எகிப்திய பண்டைய நாகரிகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாகவே ஒபிலிஸ்க்  தூண்கள் ஒற்றையாக இல்லாமல் இரட்டையாக வைப்பதுதான் இயல்பு. ஒபிலிஸ்க்  தூணின் மேற்பகுதி சூரிய கடவுளான ரா (Ra) கடவுளைப் பிரதிபலிக்கின்றது.

இன்று ஐரோப்பியர்கள் பரவிய பல்வேறு நாடுகளில் ஒபிலிஸ்க்  தூண்கள் வரலாற்றுச் சின்னமாக நிற்பதை நாம் காண முடியும். அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் டிசியில் கேப்பிட்டல் மண்டபத்தை நோக்கியவாறு பிரம்மாண்டமான எகிப்திய  ஒபிலிஸ்க் நிறுத்தப்பட்டிருக்கிறது.

பல தெய்வ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எகிப்திய பண்டைய நாகரிகம். அந்த நாகரிகத்தின் முக்கிய சின்னம் ஒபிலிஸ்க். கடந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கிருத்துவ அடிப்படை சிந்தனைகளுக்கு எதிராக எழுந்த குரல்களின் பிரதிபலிப்பாகவும் ஒபிலிஸ்க் சின்னத்தை நிறுவிய செயல்பாடுகளைக் காணலாம் என்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டிலும் ஒபிலிஸ்க்   வடிவிலான சின்னங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. என்ன... ஆச்சரியமாக உள்ளதா?

உங்களில் யாருக்காவது உடனே பார்க்க வேண்டும் எனத் தோன்றினால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்புறத்தில் முந்தைய கருப்பர் நகரத்தையும் வெள்ளை நகரத்தையும் பிரிக்கும் எல்லைக் கோட்டில் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட ஒபிலிஸ்க் ஒன்று நிற்பதைச் சென்று பாருங்கள். தொடர்வேன்.

-சுபா

 

03 ஜூலை 2021

அவதிப்படும் சாரா கலைவாணி பூபாலன்

சாரா கலைவாணி பூபாலன் (Sarah Kalaivani Pupalan). வயது 32. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாகத் துறையில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அழகிய பெண்மணி. மாடலிங் செய்தவர். கை நிறைய சம்பளம். மனம் நிறைந்த வாழ்க்கை.


2019-ஆம் ஆண்டு இறுதியில், 29 வயதில், அவருக்கு கால் முடக்குவாதம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் போய் விட்டது. அவரைச் சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் காணாமல் போய் விட்டன. குடும்பத்தாரால் கைவிடப் பட்டவர். மனித வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம். தவிர அவருக்கு மேலும் ஒரு நோய். தன் உடலை ஆளும் குறைநிலை Borderline Personality Disorder.


கால் முடக்குவாதம் என்றால் Rheumatoid Arthritis Disorder. ஒரு நீண்டகால நோய். மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வலி. குறிப்பாக விரல்கள், மணிகட்டு, கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அசைவற்ற தன்மை ஏற்படலாம்.

Sarah Kalaivani Pupalan, a 32-year-old who struggles with borderline personality disorder and rheumatoid arthritis. Sarah used to do administration work and part-time modelling before her health deteriorated.


கடந்த ஈராண்டுகளில் கோவிட் காலத்தில் மிகவும் சிரமப் பட்டார். மருத்துவமனை வீடு என்று அலைந்து கொண்டு இருந்தார். கோலாலம்பூர் மலிவு வீட்டு உதவிக்கு விண்ணப்பித்தார். நிராகரிக்கப் பட்டது.

வீடு என்று அழைக்க ஓர் இடம் இல்லை. அதனால் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அடித்து விரட்டப் பட்டார். வாடகை கட்ட முடியாத நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.

2021-இல் எடுக்கப்பட்ட படம்

இந்தக் கட்டத்தில் Ebit Lew எனும் ஒரு சமய போதகர், அவரின் தன்னார்வ அமைப்பின் மூலமாக உதவி செய்யத் தொடங்கினார். சாரா கலைவாணி தங்கி இருக்கும் அறையின் மாத வாடகைக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறார். வாழ்க மனிதநேயம்.

அண்மையில் சாரா கலைவாணிக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். கோவிட் காலத்திற்குப் பிறகு அவர் வேலைக்குப் போகலாம்.

மனித வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
03.07.2021

(பி.கு. இவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இற்றை செய்யப்படும். 2021 ஜுன் முதல் தேதி எடுக்கப்பட்ட படங்கள்)



சிங்கப்பூர் முன்னாள் அதிபதி அகமுடையார் வழித்தோன்றல்

பதிவு: இமயவர்மன், மதுரை - 03.07.2021

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான அகமுடையார் வழித்தோன்றல் ஐயா எஸ்.ஆர். நாதன் தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் எஸ். ஆர். நாதன் இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன் இவர் 03/07/1924-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்துள்ளார். இவரது பிறப்புக்கு முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறி உள்ளது.


சிங்கப்பூர் அரசாங்க சேவையில் பல பொறுப்புகளை வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய சிறப்புக்குரியவராகக் கருதப்படும் நாதன் அவர்கள் 1979-இல் தமது 55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு கடந்த 31.8.2012 அன்று பதவி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐயாவுக்கு புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்னூட்டங்கள்

முருகன் சுங்கை சிப்புட்: ஓ... இவர் இந்தியர் இல்லையோ

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: அகமுடையார் என்று கட்டி அழுவதைத் தவிர்த்து தமிழர் என்று சொன்னால் என்ன குறைந்துவிடப் போகிறது... எப்போதுதான் இந்தச் சாதியத்திற்கு முடிவு கட்டுவது.

பால் சேர்வை: ஐயா முத்து அவர்களே..அகமுடையார் என்பதின் பொருள் என்ன??

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: முட்டையைப் போட்ட கோழியிடம் கேட்கலாமே...

தனசேகரன் தேவநாதன்: முடிசார்ந்த மன்னரும் பிடிசாம்பல் ஆவதுதான் நிதர்சனம். இதில் முகமுடையார் அகமுடையார் என்ற அகழ்வாராய்ச்சி அர்த்தமுடையதா சகோதரரே. சிந்தித்துச் செயல்படுவீர் 😢😥

முருகன் சுங்கை சிப்புட்: மக்கள் இந்த மாமனிதரை சிங்கப்பூர் கண்டெடுத்த முத்தாகவும்; சிங்கப்பூரராக மட்டுமே பார்த்தது. எங்கள் வீட்டுப் பிள்ளை போல் உறவாடினர். இந்த கட்டுரை வேறு மாதிரி பார்க்கிறது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியம் பேசுகிறது

முருகன் சுங்கை சிப்புட்: ஆமாம் அய்யா நம்மில் இன்னும் மாற்றம் இல்லை..

தேவி சர: மிகச் சரியாக சொன்னீர்கள் அப்பா... நம்மவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியை எப்படியாவது ஒழிச்சுக் கட்டலாம் என்று பார்க்கிறேன். உஹும் முடியல... ரெக்க கட்டி பறக்குது... என்னையே மலையாளத்தான் வன்னியக் கவுண்டன் என்று தமிழர் விவாத மேடை குழுவில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அப்புறம் எப்படிம்மா...

தேவி சர: உண்மை ... முப்பதாம் நூற்றாண்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் ஆனால், இன்றும் பிள்ளைகளுக்கு சாதியை பெயரோடு இணைத்து வைக்கிறார்கள் 🤦🏻‍♀️🤷🏻‍♀️

முருகன் சுங்கை சிப்புட்: உங்களையும் விட்டு வைக்கவில்லையா இவனுங்க.

ராதா பச்சையப்பன்: பல வேளைகளில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போது,, சாதியின்  பெயரையும் சேர்த்தே பெயர் வைக்கும் பெற்றோர் என்றாவது நினைத்து பார்த்தது உண்டா?

பிள்ளை வளர்ந்து படிக்கும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் சாதிப் பெயரை சொல்லி அழைக்கும் போது அந்தப் பிள்ளை படும் வேதனை; அவமானத்தை நினைத்து பார்த்து இருந்தால், பிள்ளைகள் பெயரயோடு சாதி பெயரை இணைக்க மாட்டார்கள்.  

பெரியவர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளை குறை கூறுவது ஏன்? இன்றும் இது போன்ற சாதிப் பெயரை பேரப் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் தாத்தா, பாட்டிக்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் போல் உள்ளவர்கள் திருந்தினால் ஒழிய சாதி பெயரும் ???

பி.கே. குமார்: தமிழர் அல்லாதவர்கள் பலரும்கூட சாதிப் பெயரை இணைப்பதைப் பெருமையாக கொள்கிறார்கள்.



இணைய ஆய்வு: பிரதமர் பதவிக்கு அன்வார் முதலிடம்

03.07.2021
 

சந்திரன் ஜொகூர் பாரு: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு எதுவும் கிடையாது.

ஜெயகோபாலன்: அன்வார் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பதவியில் இருந்த காலக் கட்டத்தில் மனுஷன் செய்த அட்டூழியங்களை மறந்திடலாகாது 🤷‍♂

முருகன் சுங்கை சிப்புட்: என்ன அட்டூழியம்... பட்டியல் இட முடியுமா

ராதா பச்சையப்பன்: 🙏உண்மை

கணேசன் சண்முகம்: உண்மை உள்ளது. குறிப்பாக அவர் செய்த அனைத்துக்கும் சாவி கொடுத்தவர் மகா தீரர்

தனசேகரன் தேவநாதன்: இடி அமின் உலகம் அறிந்த கொடுங்கோலன். இவனைப் பற்றிச் சொல்ல அகராதியில் வார்த்தை இல்லை...

[11:54 am, 03/07/2021] Ganeson Shanmugam Sitiawan: எனக்கு தெரிந்து காப்புறுதித் துறையில் இந்திய சீனர்களின் ஆதிக்கத்தை ஓழித்தல், பூமிபுத்ரா எனும் கூற்றில் இந்தியர்களை சீனர்களோடு சேர்க்காமல் தனி சலுகைகள் வழங்க கேட்கப்பட்டது - முடியாது என்று பதில் வந்தது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு கோரப்பட்டது - அங்கேயும் முடியாது என்று கை விரித்தனர். கடைசியாக பினாங்கு கம்போங் ராவா கோவில் பிரச்சனையில், ’வாயை மூடுங்கள் இல்லையேல் மலேசியாவில் கோவில்களில் மணியடிப்பது நிறுத்தப்ப்டும்’ என கூவியது மறக்க முடியுமா.

1987, 1988-இல் நான் படிவம் 4, படிவம் 5 படிக்கும் காலக் கட்டத்தில் நான் அதிகம் நேசித்த தலைவர் அன்வார். இருமுறை, அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

[11:55 am, 03/07/2021] Ganeson Shanmugam Sitiawan: பூமிபுத்ரா அல்லாதவரின் கூற்றில் ...

ஜெயகோபாலன்: மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் Mr Ganesan. ஐயா முருகன் சுங்கை சிப்புட் அவர்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்?! 🙏


 

காலம் மாறியது தேவைகளும் மாறின - குமரன் மாரிமுத்து

03.07.2021

குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் ஏற்படக்கூடிய மனநல பாதிப்புகளையும் உளவியல் சிக்கல்களையும் பலர் குறிப்பாக பெற்றோர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. நாங்களும் இந்தப் பருவத்தைக் கடந்துதான் வந்தோம். நாங்கள் பார்க்காததா என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம்.

காலம் மாறிவிட்டது. தேவைகள் மாறிவிட்டன. வாழ்க்கை முறைகள் பேரளவில் மாற்றம் கண்டுவிட்டன. பொருளாதார மேம்பாடு என்ற போர்வையில் மனிதம் கரைந்து இயந்திரத் தன்மை ஆட்கொண்டுவிட்டது.


பொதுவாக 1990-களுக்கு முன்பு இருந்த வாழ்கை வேறு; சூழல் வேறு. 90-களுக்குப் பின் நடப்பில் பயணிக்கும் வாழ்க்கை வேறுதான். இதனை முதலில் நாம் உணர வேண்டும்.

அன்றைய பெற்றோர்கள், பொதுவாக உடல் உழைப்புத் தொழிலாளர்கள். கடின உழைப்பாளிகள். அந்தக் காலத்தைச் சற்றே நுணுகிப் பார்க்கும் போது பின்வருபவை எல்லாம் உங்கள் நினைவுகளுக்கு வரலாம்.

அ) விலைவாசி மிகக் குறைவு; வாழ்க்கைச் செலவீனங்கள் மிகக் குறைவு. பல பிள்ளைகள் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சமாளிக்க முடிந்தது.

ஆ) பெரும்பாலோர் தோட்டப் புறங்களில் வேலை செய்து வந்ததால் வீட்டைச் சுற்றி இரசாயனம் அற்ற முறையில் தன் குடும்பத்திற்குத் தேவையான விவசாய விளைச்சல்களைப் பயன்படுத்தினர்.

இ) விடியற்காலையில் வேலைக்குச் சென்றாலும் மதியத்தில் வீட்டிற்குத் திரும்பி விடுவர். ஓய்வுக்கான நேரம் அதிகம்.

ஈ) வீட்டுக் கடன், வாகனக் கடன்

என்று எதுவும் இல்லை. வாழ்க்கைச் செலவீனங்கள் குறைவு. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் மிக மிகக் குறைவு.

இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். மாலை நேரத்தில் ஓய்வு.

சிலர் தோட்டம் போடுதல்;

சிலர் திடலில் காற்பந்து;

சில ஆண்கள் கல்லுக்கடையில் சகாக்களுடன் நேரம் போக்குதல்;

சில பெண்கள் அண்டை வீட்டுத் தோழிகளுடன் பேசிக் கழித்தல்;

பிள்ளைகளுடன் கணிசமான அளவு நேரம்  செலவிடல்;

என்று தனக்கு உண்டான உளவியல், மனநலச் சிக்கல்களை, இறுக்கத்தைக் களைவதற்கான அல்லது இறக்கி வைப்பதற்கான சூழல்கள் இயற்கையாகவே அமைந்து இருந்தன. உடல் ரீதியிலான சுகாதாரக் கோளாறுகளும் குறைவாகவே இருந்தன.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் 90-களுக்குப் பிறகு பெற்றோர்களின் மத்தியில் மாறிவிட்ட வாழ்க்கை முறையில் காண முடியுமா? ஆக, இன்றைய பெற்றோர்களுக்கு மன இறுக்கம் அல்லது பாதிப்புகளும் அதிகம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அழுத்தங்களைப் பிள்ளைகளிடம் காட்ட மாட்டார்களா என்ன? எப்படியாவது வெளிப்படத் தானே செய்யும்?

சூரியன் எழும் முன் வேலைக்குச் செல்பவர்கள் இரவில்தான் வீடு திரும்புகின்றனர். வேலை முடிந்து வந்தக் களைப்பு. உணவு சமைக்க வேண்டும்.

எத்தனைக் குடும்பங்களில் சொந்த சமயல் நடக்கின்றது? வியாபார நோக்கோடு விற்கப்படும் உணவுகள் உடலுக்கும் மனநலத்திற்கும் பாதிப்பைத் தானே ஏற்படுத்துகின்றன?

உடல் உழைப்பு குறந்துவிட்ட நிலையில் அறிவுக்கு வேலை அதிகரித்துவிட்டது. இவை எல்லாம் இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு மன இறுக்கத்தை அதிகரித்துவிடும் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே.

அதனால், வீட்டில் மனம்விட்டு பேசும் பழக்கம் அருகிவிட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டது.

பெற்றோர்களிடம் காணப்படும் மாற்றங்கள் இவ்வாறு இருக்க, பிள்ளைகள் மத்தியிலும் வாழ்க்கை, வளர்ப்புச் சூழல் பெரும் மாற்றம் கண்டுள்ளதை மறுக்க இயலாது.

அன்று, பள்ளி முடிந்து வீடு வந்த மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் விழிபிதுங்கும் அளவிற்கு இருந்தது இல்லை.

மாலையில் பிள்ளைகளை வீட்டிற்கு உள்ளே பார்ப்பது அரிது. ஆறு, மலை, மேடு என்று தோட்டத்தையே சுற்றித் திரிவார்கள். மாலை ஐந்து மணிக்கு மேல் அவர்களை திடல்களில் நிச்சயம் காணமுடியும்.

இதனால் பிள்ளைகளுக்கு உண்டாகும் மன உளைச்சல்கள், இறுக்கங்கள் இயற்கையாகவே எந்தப் பயிற்சியும் இன்றி களைந்து போயின.

இன்று அப்படி இல்லையே. நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்று மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். கூடுதல் வகுப்புகளும் மிக அதிகத் தாக்கத்தைத் தருகின்றன.

ஆனால் இந்த மனச் சோர்வு, இறுக்கம், கலக்கம், சிக்கல் என்று எதுவும் தீருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன என்ற உண்மையை எற்கத்தான் வேண்டும்.

விளையாட நேரமில்லை; காலையில் இருந்து தூங்கச் செல்லும் வரை புத்தகத்துடன் வாழ்க்கை. வீடுகள் அகண்டு விட்டன; வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உறவுகள் சுருங்கி விட்டன.

இன்றைய பிள்ளைகள் மின் கருவிகளில் தன்னைத் தொலைத்துவிட்ட தலைமுறையாக மாறிவிட்டனர். காரணம் இன்று உறவுகள் அருகில் இருப்பதில்லை; இந்தக் கருவிகளே அவர்களுக்குத் தோழன் அல்லது உறவு.

அதிக நேரம் கணித்திரைகளைப் பயன்படுத்துதலும் பிள்ளைகளுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும் என்பதை மறந்திடல் ஆகாது.

இப்படியாகக் காரணங்கள் பல உள்ளன. இவற்றின் தாக்கங்களை எதிர்கொண்டு வென்றவர்கள் தப்பித்து விடுகின்றனர்; மீண்டு வராத பிள்ளைகள் தற்கொலை, குண்டர் கும்பல், போதைப்பொருள் என்று அடிமையாகி விடுகின்றனர் அல்லது அமரராகி விடுகின்றனர்.

இவற்றை திட்டமிட்டக் கல்வித் திட்டங்களின் வாயிலாக மாற்றி அமைக்கலாம். பல வளர்ந்த நாடுகள் அவ்வாற் செய்யத் தொடங்கிவிட்டன. நல்ல பலனையும் காண்கின்றனர்.

ஆனால் அது இப்போது நம் நாட்டில் சாத்தியமில்லா ஒன்றாகவே கருதுகிறேன். காரணம் இனவாதம், மதவாதம் இரண்டையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தடிக்கும் தலைமைத்துவங்கள்தான் இது நாள் வரை நம்மை ஆண்டு வந்துள்ளன. இனியும் அது மாறும் என்பதற்கான அறிகுறிகள் எங்கும் புலப்படவில்லை.

-குமரன் மாரிமுத்து

பின்னூட்டங்கள்

தேவி சர: உண்மையான கருத்துகள்...

தனசேகரன் தேவநாதன்: பிள்ளைகளின் மனநலப் பிரச்சனைகளைப் பெற்றோர்கள் கவனிக்காத சூழ்நிலை. அதே போல் பள்ளியில் மாணவர்களின் மனநலனை அறியாத ஆசிரியர்கள். சிக்கிக் கொண்ட மாணவர்கள் பலியாகி விடுகின்றனர்.

ராதா பச்சையப்பன்: 🙏 நல்ல பயனானக் கட்டுரை. கட்டுரையில் வரும் விசயங்கள் அனைத்தும் உண்மையே! கட்டுரை படைப்பாளருக்கு நன்றி.