சாரா கலைவாணி பூபாலன் (Sarah Kalaivani Pupalan). வயது 32. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாகத் துறையில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அழகிய பெண்மணி. மாடலிங் செய்தவர். கை நிறைய சம்பளம். மனம் நிறைந்த வாழ்க்கை.
2019-ஆம் ஆண்டு இறுதியில், 29 வயதில், அவருக்கு கால் முடக்குவாதம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் போய் விட்டது. அவரைச் சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் காணாமல் போய் விட்டன. குடும்பத்தாரால் கைவிடப் பட்டவர். மனித வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம். தவிர அவருக்கு மேலும் ஒரு நோய். தன் உடலை ஆளும் குறைநிலை Borderline Personality Disorder.
கால் முடக்குவாதம் என்றால் Rheumatoid Arthritis Disorder. ஒரு நீண்டகால நோய். மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வலி. குறிப்பாக விரல்கள், மணிகட்டு, கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அசைவற்ற தன்மை ஏற்படலாம்.
Sarah Kalaivani Pupalan, a 32-year-old who struggles with borderline personality disorder and rheumatoid arthritis. Sarah used to do administration work and part-time modelling before her health deteriorated.
Sarah Kalaivani Pupalan, a 32-year-old who struggles with borderline personality disorder and rheumatoid arthritis. Sarah used to do administration work and part-time modelling before her health deteriorated.
கடந்த ஈராண்டுகளில் கோவிட் காலத்தில் மிகவும் சிரமப் பட்டார். மருத்துவமனை வீடு என்று அலைந்து கொண்டு இருந்தார். கோலாலம்பூர் மலிவு வீட்டு உதவிக்கு விண்ணப்பித்தார். நிராகரிக்கப் பட்டது.
வீடு என்று அழைக்க ஓர் இடம் இல்லை. அதனால் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அடித்து விரட்டப் பட்டார். வாடகை கட்ட முடியாத நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.
வீடு என்று அழைக்க ஓர் இடம் இல்லை. அதனால் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அடித்து விரட்டப் பட்டார். வாடகை கட்ட முடியாத நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.
2021-இல் எடுக்கப்பட்ட படம்
இந்தக் கட்டத்தில் Ebit Lew எனும் ஒரு சமய போதகர், அவரின் தன்னார்வ அமைப்பின் மூலமாக உதவி செய்யத் தொடங்கினார். சாரா கலைவாணி தங்கி இருக்கும் அறையின் மாத வாடகைக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறார். வாழ்க மனிதநேயம்.
அண்மையில் சாரா கலைவாணிக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். கோவிட் காலத்திற்குப் பிறகு அவர் வேலைக்குப் போகலாம்.
மனித வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
03.07.2021
(பி.கு. இவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இற்றை செய்யப்படும். 2021 ஜுன் முதல் தேதி எடுக்கப்பட்ட படங்கள்)
How to contact her
பதிலளிநீக்குContact number
பதிலளிநீக்குpls share her contact number
பதிலளிநீக்குPls share CLA num
பதிலளிநீக்குஇவருடைய கைப்பேசி எண்கள் கிடைக்கவில்லை. ஆனால் மின்னஞ்சல் உள்ளது.
பதிலளிநீக்குsarahpupalaninsurvivalmood@yahoo.com