06 செப்டம்பர் 2021

இறைவன் கொடுத்தது சந்தோசம் கொள்வோம் - தேவிசர கடாரம்


🌼 ஓர் ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.

🌼 அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே.

🌼 கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.

🌼 கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.

🌼 அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.

🌼 உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலை பார்க்க, அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது... ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று.

🌼 அழகு மயிலே, உன்னை காண இவ்வளவு பேர்.. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.

🌼 என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் என்றது.

🌼 மயில் சொன்னது. அன்பு காகமே, நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.

🌼 ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.

🌼 இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை.

🌼 எனவே நான் யோசித்தது, நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே என்றது .

🌼 இதுதான் நமது பிரச்சினையும்.

🌼 நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.

🌼 நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.

🌼 அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.

🌼 இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.

🌼 ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.

🌼 உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்.

🌼 உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.
        .....படித்ததில் பிடித்தது

பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: இதுதான் நமது பிரச்சனையும்

செல்லையா செல்லம்:
மிகவும் சிறப்பு








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக