🌼 ஓர் ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம். அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.
🌼 அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே.
🌼 கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.
🌼 கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.
🌼 அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
🌼 காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
🌼 உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலை பார்க்க, அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது... ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று.
🌼 அழகு மயிலே, உன்னை காண இவ்வளவு பேர்.. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.
🌼 என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் என்றது.
🌼 மயில் சொன்னது. அன்பு காகமே, நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.
🌼 ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.
🌼 இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை.
🌼 எனவே நான் யோசித்தது, நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே என்றது .
🌼 இதுதான் நமது பிரச்சினையும்.
🌼 நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.
🌼 நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.
🌼 அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.
🌼 இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.
🌼 ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.
🌼 உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்.
🌼 உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.
.....படித்ததில் பிடித்தது
பின்னூட்டங்கள்
ராதா பச்சையப்பன்: இதுதான் நமது பிரச்சனையும்
செல்லையா செல்லம்: மிகவும் சிறப்பு
🌼 அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே.
🌼 கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.
🌼 கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.
🌼 அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
🌼 காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
🌼 உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலை பார்க்க, அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது... ம்ம்ம். இதுதான் மகிழ்ச்சி என்று.
🌼 அழகு மயிலே, உன்னை காண இவ்வளவு பேர்.. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.
🌼 என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் என்றது.
🌼 மயில் சொன்னது. அன்பு காகமே, நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.
🌼 ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.
🌼 இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை.
🌼 எனவே நான் யோசித்தது, நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே என்றது .
🌼 இதுதான் நமது பிரச்சினையும்.
🌼 நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.
🌼 நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.
🌼 அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.
🌼 இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.
🌼 ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.
🌼 உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள்.
🌼 உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.
.....படித்ததில் பிடித்தது
பின்னூட்டங்கள்
ராதா பச்சையப்பன்: இதுதான் நமது பிரச்சனையும்
செல்லையா செல்லம்: மிகவும் சிறப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக