மாசிலன், பகாவ் - 07.12.2023
அந்த அர்ச்சகர்களை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே இந்த இந்தியச் சமுதாயம் தானே... குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் இவர்களுக்கு இடம் கொடுப்பதால் தான் இந்த அளவுக்கு கேட்கிறார்கள்.
முன்பு கிராமப் புறங்களில் இறப்பு நிகழ்வுகளில் தொண்டு அடிப்படையில் சேவை வழங்குவார்கள். ஆனால் இன்று அது ஒரு வணிகம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது.
ஈமச் சடங்குகள் செய்வதற்கு 2500 ரிங்கிட் கேட்ட அர்ச்சகர்... 100 ரிங்கிட்டில் செய்து முடிக்க வேண்டிய காரியம்...
மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமயத்தின் பெயரில் அதீதமாகக் கட்டணம் கேட்பது நியாயமன்று. இந்த சகோதரியைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து நம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வரவேண்டும்.
மிக நன்று.நம் சமூதாயம் விழிப்புணர்வு பெற வேண்டும்.
பதிலளிநீக்கு