07 டிசம்பர் 2023

ஈப்போ யோகேஸ்வரிக்கு மாமன்னரின் சிறப்பு விருது

 கென்னடி ஆறுமுகம், கிரீக், பேராக் - 07.12.2023

பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலரின் இரக்கச் செயல்களுக்காக, மாட்சிமை தாங்கிய மலேசிய நாட்டின் பேரரசரின் கரங்களால் அவருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.


ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (Hospital Raja Permaisuri Bainun, Ipoh) பாதுகாவலரான யோகேஸ்வரி (Puan Yogeswary), சில மாதங்களுக்கு முன்பு நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் இவர் உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து வைரலானது.

இந்த மருத்துவமனைக்கு வரும் குடும்பங்களின் மிகவும் கடினமான தருணங்களின் போது பார்க்கிங் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற அவரது உதவிகள் இந்த குடும்பங்கள் தாங்கும் கஷ்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு டிசம்பர் 19, 2023 அன்று இஸ்தானா நெகராவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதற்கு முன்னர் இவர் கிரீக் குழுவக தமிழ்ப்பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றினார். அங்கும் அவர் சேவையை செய்தார். பள்ளி மாணவர்களை வாகனத்தில் இருந்து இறக்குவது, அவர்களை வாகனத்தில் ஏற்றி விடுவது, அவர்களது புத்தக பைகளை எடுத்து சென்று வகுப்பறையில் வைப்பது, எவ்வளவு கனமழை பெய்து தான் நனைத்தாலும் மாணவர்களை மழையில் நனைய விடாமல் அழைத்து வருவார். 


ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா மணிக் கணக்கில் கடின உழைப்பை உழைக்கும் பொது மக்கள் தங்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது நம் இதயங்களை அரவணைக்கிறது. 
 
நாம் பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதை அர்பணிப்புடனும், மனநிறைவுடனும் செய்தால் எந்த ஒரு உயரிய நிலையையும் அடையலாம் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 


இவருக்கு கடந்த மார்ச் 21-இல் பேராக் மாநில அளவிலான மகளிர் தின கொண்டாட்டத்தில் இவருக்கு செஜாத்திரா வனிதா விருது (Sejahtera Wanita Award) (பாதுகாப்பு வகை) எனும் சமூக சேவை விருதும் வழங்கப்பட்டது. அவர் பேராக் முதலமைச்சர் டத்தோஸ்ரீ சாரணி முகமட்டிடம் இருந்து விருதைப் பெற்றார்.

மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபாவின் (Health Minister Dr Zaliha Mustafa) கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சி யோகேஸ்வரியின் அர்ப்பணிப்புக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

வாழ்த்துக்கள் சகோதரி யோகேஸ்வரி! ❤

-----------------------------------------------------------------

இடுகைகள்:

பெருமாள், கோலாலம்பூர்

வாழ்த்துகளும் நம்
இனத்திற்கு கிடைத்த பெருமையே.

ஒரு ஆண் பாதுகாவலர்
ஒருவர் அன்மையில்
பள்ளி ஒன்றிலிருந்து
ஓய்வு பெற்றார்.

ஆசிரியர்கள்
மாணவ மாணவியர்களும்
அவருக்கான பிரியாவிடையில்
பல பரிசு பொருட்களும்
கொடுத்து வழியனுப்பியுள்ளதும்
மனம் நெகிழ்வு கொள்ளும் நிகழ்வே.

செய்தொழிலை தெய்வமாக
மதிப்போரை பாராட்டுக்கள் தானாக
தேடி வரும் என்பதை
மெய்பிக்கும் இந்த நிகழ்வுகளே சாட்சியாகிறது.

நாமும் அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்.ta





1 கருத்து: