08 டிசம்பர் 2023

பத்து தீகா கரு. ராஜாவின் மனவேதனைகள்

கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர்

சிலாங்கூர், புக்கிட் ஜாலில் அரங்க வளாகத்தில் 08.12.2023 - 10.12.2023 வரையில் இலவச இருசக்கர வண்டி கவசத் தொப்பிகள் வழங்கப்படுகின்றன எனும் செய்திக்கு பத்து தீகா கரு. ராஜா வழங்கிய பதில் பதிவுகளில் அவரின் மனவேதனைகள் பிரதிபலிக்கின்றன. அண்மையில் அவரின் மூன்றாவது மகன் ராஜமோகன் புற்றுநோயினால் மரணம் அடைந்தார். அந்தத் தாக்கம் இன்றும் அவரிடம் உள்ளது.


அவரின் பதிவு: காலையிலேயே போனால் ஒரு கவசத் தொப்பி வாங்கி வரலாம். ஒரு தடவை நான் பெட்டாலிங் ஜெயாவில் இருந்து பத்து தீகா போகும் போது இடையில் மடக்கி பழைய தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு ஒரு புதிய தொப்பியைக் கொடுத்தார்கள்.


எனக்கு இப்போது 77 வயது. இன்னும் இருசக்கர வண்டியை விரும்பி ஓட்டுகிறேன். ஒரு சிலர் என்னைப் பார்த்து இருசக்கர வண்டி ஓட்ட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்வார்கள். இந்தக் காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுவேன்.

சமீபத்தில் காலமான என் மகன் பெரிய மோட்டார் ஓட்டுவான். 900 சி.சி. நான் அவன் விசயத்தில் தலையிடமாட்டேன். இந்த மலேசியாவில் எல்லா இடங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று இருக்கிறான். அவனோடு சேர்ந்து சுமார் 50 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பயணிப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் எந்த விபத்தும் நடக்கவில்லை. இந்தக் கேன்சர் வந்து என் மகன் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

பதில் இடுகைகள்:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:

வயதை நினைக்காதீர்கள் ராஜா... மனசோடு வாழுங்கள்... என்னைப் பாருங்கள்... இன்றும் 16 என்றும் 16... அப்படி போய்க் கொண்டே இருக்கிறேன்... வயதை நினைத்தால் அங்கே ஒரு உள்ளார்ந்த தடை ஏற்படுவதை உணரலாம். Age is a number என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

1 கருத்து: