14.01.2021
மலேசியம் புலனத்தின் அன்பர்களின் பொங்கல் வாழ்த்துகள்...
மலேசியம் புலன நிர்வாகத்தினரின் பொங்கல் வாழ்த்துகள்.
கரு. ராஜா; தமிழ் மறவன் பாலன் முனியாண்டி;
கென்னடி ஆறுமுகம்; மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
ஜெயகோபாலன், பாகன் செராய்

நாச்செல் அமைச்சி, கேமரன் மலை
மலேசியம் புலனத்தில் உள்ள அனைத்து தமிழ்த் தாய் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்..! 🌹🙏🌹 இரா. ஆதிசேகர், கோலக்கிள்ளான். சிலாங்கூர் மாநிலம்.
தமிழன் இந்த மானிடத்துக்கு அறம் பகன்ற, பாடம் சொன்ன உன்னதத் திருநாள். இந்நாளில், 2021 மலேசியர்களுக்கு சிக்கல்கள் தீரும் நிவாரண ஆண்டாக மலர சிவ பெருமானின் அருளை வேண்டுகிறேன்.
தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்; திருவள்ளுவர் ஆண்டு 2052-ஆம் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். பொங்கலோ... பொங்கல். குமரன் மாரிமுத்து குடும்பத்தார்
விவசாயி ஒருவர் பொங்கல் சீர் எடுத்துச் செல்வது போன்ற ஓவியம்... பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" இது முன்னோர் வாக்கு... பிறக்கப் போகும் தை மாதத்தில் இருந்து வாழ்வில் உள்ள வலிகள் எல்லாம் நீக்கி நல்வழிகள் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்...!
ஆதி சேகர், கோலாகிள்ளான்: பார்க்கவே கண் இமைகள் மகிழ்ச்சியில் பட படக்கிறது. தமிழ்த் தாமரை இதழ் போல சிரித்த முகத்தோடு வாழ்த்துக் கூறும் தமிழர் வாரிசுகள்.
பார்க்கவே அழகு...! பாப்பா முன் பொங்கல் பானை உள்ளோதோ...? பார்வை... பானையில் மேல் இருக்கிற மாதிரி தெரிகிறதே..! மகிழ்ச்சி...!
அனைத்து நண்பர்களுக்கும் இதயங் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்... அன்புடன் அன்பன், பனையபுரம் அதியமான், ஆன்மிக எழுத்தாளர்.
தேவி கெடா, (கடாரம்): கண்ணு படும்... சுற்றி போடுங்கள்...
முத்துக்கிருஷ்ணன்: அழகிய குடும்பம்... அழகிய வதனங்கள்... என் இரத்த உறவுகள்... 🙏🌹

குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்.
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்.
🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
சந்திரன், லார்கின், ஜொகூர்