12 ஆகஸ்ட் 2021

மலேசியக் கல்விச் சட்டத்தில் கிரந்த எழுத்துகள்

தமிழ் மலர்: 12.08.2021

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். அந்தப் பாவனையில் மொழி மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மொழிச் சீர்த்திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை. எதை மாற்றம் செய்ய வேண்டுமோ; எதைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமோ; அதைச் செய்வது சிறப்பு.

அந்த வகையில் மொழி மாற்றங்கள்; மொழிச் சீர்த்திருத்தங்கள் செய்பவர்களின் நல்ல நோக்கங்களைத் தவறாக எடைபோடுவது நம் நோக்கம் அல்ல. ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைச் சிதைவுறாமல் சீர்த்திருத்தம் செய்வது நலம் பயக்கும். அதுதான் முக்கியம். சீர்த்திருத்தம் எனும் பெயரில் திணிப்புகளைத் தவிர்ப்பதும் சாலச் சிறப்பு.

மொழிச் சீர்த்திருத்தம் செய்யப்படும் போது, பொது மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். நான் எடுத்த முடிவுதான் சரி என்று பிடிவாதம் செய்வது தவறு. பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் என்று முரட்டுவாதம் செய்வது தவறு.

கிரந்த எழுத்துகள் வட எழுத்துகள் அல்ல. இதைத்தான் மலேசியக் கல்வி அமைச்சின் பாடத் திட்டக் குழுவினரும் முன்வைக்கின்றனர். பாடத் திட்டங்களை வகுக்கும் போதும் சரி; தொகுக்கும் போதும் சரி; கிரந்த எழுத்துகள் என்று சில அத்தியாயங்களை உருவாக்கிப் பாடமாகச் சொல்லித் தருகிறார்கள்.

1957-ஆம் ஆண்டு, மலாயா சுதந்திரம் அடைந்த போது ரசாக் அறிக்கை (Razak Report) எனும் கல்வி அறிக்கை உருவாக்கப்பட்டது. மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்து ரஹ்மான் தாலிப் (Rahman Talib Report 1960) அறிக்கை வந்தது. அதன் விளைவாக கல்விச் சட்டம் 1961 (Education Act 1961) உருவானது. அப்போது தான் தமிழ்ப் பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை உருவாக்கினார்கள்.

அந்தக் கட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்தில் கிரந்த எழுத்துகள் இணைத்துக் கொள்ளப் பட்டன. அப்போது இருந்தே கிரந்த எழுத்துகள் சட்டபூர்வமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தத் தகவல் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

எப்போது எழுதப்பட்ட பாட நூல்களில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாய் இருந்தன. கிரந்த எழுத்துகள் இருக்கின்றனவா இல்லையா என்றுகூட அடையாளம் தெரியாமல் பிணைந்து போய் இருந்தன.

பின்னர் காலங்களில் வடமொழிச் சொற்கள் களையப் பட்டன. ஆனால் கிரந்த எழுத்துகளை மட்டும் விட்டு விட்டார்கள். ஒன்றும் செய்யவில்லை. அந்த எழுத்துகள் இன்றும் பாட நூல்களில் வந்து போகின்றன. அப்படியே பிள்ளைகளுடன் மக்களுடன் ஐக்கியமாகி விட்டன.

மேலும் ஒரு தகவல். 2011-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் லீனஸ் (LINUS) கல்வி முறை அமல் செய்யப்பட்டது. (LINUS, Literacy and Numeracy Screening). இந்த லீனஸ் திட்ட நடைமுறை தமிழ்ப் பள்ளிகளில் அமல்படுத்தும் போது கிரந்த எழுத்துகளும் இருந்தன. 2011 அக்டோபர் மாதம் வரையில் 1100 ஆசிரியர்களுக்கு லீனஸ் கல்வி முறை பயிற்சிக்கப் பட்டது. அந்தப் பயிற்சிகளில் கிரந்த எழுத்துகள் பயன்பாடும் ஓர் அங்கமாக இருந்தது.

ஆக காலம் காலமாகத் தமிழ்ப்பள்ளிகளில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருப்பினும் அண்மைய காலங்களில் கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்போம் என்று ஒரு குழுவினர் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு நாம் தடைக்கல்லாக அமையவில்லை. போராட்டம் செய்யுங்கள். வெற்றி பெறுங்கள். ஆனால் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளுக்கும் செவி சாயுங்கள். 


பின்னூட்டங்கள்:

தனசேகரன் தேவநாதன்: அதிகாலையிலேயே படித்து விட்டேன் ஐயா. கருத்து குருடர்களை ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் பின் பெரிய பட்டாளமே உண்டு ஐயா. உண்மையை உறக்க சொல்ல தயக்கம் வேண்டாம். தமிழோடு உயர்வோம் வாழ்க உங்கள் பணி 👌💞👌💞👌💞

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தங்களின் அன்பான ஆதரவான கருத்துகளுக்கு நன்றிங்க. பொதுவாக காலையில் பத்திரிகையைப் பார்ப்பது இல்லை. கட்டுரை வந்து இருக்கும் எனும் நம்பிக்கையில் மற்ற மற்ற வேலைகளில் ஈடுபடுவேன்.

இன்றைக்கு முதல் வேலையாகப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தேன். மனநிறைவு. தாங்கள் சொல்வது போல உண்மையைத்தான் சொல்கிறோம். உண்மையைத்தான் வலியுறுத்துகிறோம். அது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். தனிப்பட்ட ’அஜெண்டா’, தனிப்பட்ட பார்வையில் சிலர் பிடிவாதம் பிடிக்கலாம்.

தோழரே. நம் பாதையில் நம்மால் இயன்றவரை நல்லவற்றைச் செய்து கொண்டே இருப்போம். 🙏

இராதா பச்சையப்பன்: 🌷🙏 நானும் காலையிலேயே கட்டுரையைப் படித்தேன். சில பல விசயங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே. தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான் என்பார்கள். அது போல வருவது வரட்டும். வந்த பிறகு பேசுவோம். கட்டுரையின் கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கட்டுரையாளருக்கு நன்றி 🙏🌷.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க சகோதரி. கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கடைசி வரிகளின் சொல்லாடலைக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

கரு. ராஜா, சுங்கை பூலோ: கட்டுரை அருமை ஐயா. உங்களிடம் வாலாட்ட முடியுமா? அலவாங்குப் போட்டு நோண்டி எடுத்து ஆதாரம் காட்டிவிட்டார் நம்ம வரலாற்று பேரரசு முத்துக்கிருஷ்ணன்.

எந்தெந்த காலங்களில் நம் முன்னோர்கள் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை ஆதாரப் பூர்வமாக மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். இனி என்ன ஆதாரம் வேண்டும் இங்குள்ள தமிழ்ப் பண்டிதர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கும். இரண்டு நாள் கட்டுரைகளை படித்து ஓரளவு தெளிவு அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நன்றி. வணக்கம்.

வெங்கடேசன்: பூனைக்கு மணியும் சுண்டெலிக்கு சிலுவாரா? என்ன ஒரு வார்த்தை ஜாலம் ! 😄😄

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: (11.08.2021 பதிவு) நன்றிங்க ராஜா. சாட்டையடி என்று சொல்கிறீர்கள். ஆனால் காலையில் என்ன நடந்தது என்று கேட்கவில்லையே.

இன்று காலை மணி 9 இருக்கும். ஒருவர் மிக அமைதியாக அழைத்தார். கொஞ்ச நேரம் நன்றாக அமைதியாகப் பேசினார். நல்ல மனிதர் என்று முடிவு செய்யும் போதுதான் சுய ரூபத்தைக் காட்டினார்.

‘நீ தமிழனுக்கு பொறந்து இருந்தால் பார்ப்பான் எழுத்துக்கு அடிவருட மாட்டாய். தமிழ் மலருக்கு போன் செய்து என்ன செய்கிறேன் பார். உன்னை எழுத விடாமல் செய்கிறேனா இல்லையா பார்’ என்று ஒருமையில் மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பைத் துண்டித்து விட்டேன்.

அவர் மிரட்டிய தோரணையைப் பார்த்தால் மேல்மட்ட அரசியல் செல்வாக்கு ஆள்பலம் இருக்கலாம் போலும். விடுங்கள். இந்த மாதிரி எத்தனையோ மிரட்டல்களைச் சந்தித்து விட்டேன்.

இருந்தாலும் மனசுக்குள் ஆதங்கம். உண்மையை எழுதுவதால் எதிர்கள்தான் அதிகமாகிறார்கள் எனும் ஆதங்கம்.

அதிகாரம் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால்... நாளைய தினம் இரண்டாவது கட்டுரை வராமல் போகலாம். சொல்ல முடியாது. அதுவே ஒரு பனிப்போரின் ஆரம்பம்.. பார்ப்போமே!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க ராஜா. தெளிவான பார்வையில் சிறப்பான பின்னூட்டங்கள். ஆழமான பதிவு. சற்றுக் கூடுதலான தனிப்பட்ட தகவல். கிரந்த எழுத்துகள் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் வாட்ஸ் அப்; புளோகர், பேஸ்புக்; இன்ஸ்டகிராம் ஊடகங்களில் வழக்கம் போல பதிவு செய்யலாம் என்று நினைத்தேன்.

தாங்களும் பதிவு செய்யுங்கள் என்று காலையில் சொல்லி இருந்தீர்கள். ஆனால் மனத்தில் சின்ன சஞ்சலம்.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராஜேந்திர சோழனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போய் நார் நாராகக் கிழித்து எடுத்து விட்டார்கள். நான் ஒரு தனிமனிதனாக ஒரே சமயத்தில் பத்துப் பதினைந்து தாக்குதல்களைச் சமாளித்தேன்.

அதன் பின்னர் சரியான மன உளைச்சல். நல்லதுதானே எழுதினேன். நல்லதுக்குத் தானே எழுதினேன். அதற்கு இந்த மாதிரியா... பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அப்படி இப்படி என்று வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டார்கள். நல்ல ஒரு பாடம்.

ஊடகத்தில் பதிவு செய்யாமல் பத்திரிகையோடு விட்டு இருந்தால் பிரச்சினை பெரிதாகிப் போய் இருக்காது.

அதே போல கிரந்த எழுத்துகள் பற்றிய அந்த இரண்டு கட்டுரைகளையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்தால், சிலர் அவற்றைப் படம் பிடித்து மற்ற புலனங்களில் பகிரலாம். அதைப் பற்றி விவாதங்கள் நடக்கலாம். நல்ல பெயர் சிலருக்கு... கடைசியில் கெட்ட பெயர் எனக்கு.

நல்லதுக்கு காலம் இல்லைங்க. ’எப்ப... எப்ப... பாயலாம்’ என்று சிலர் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். வம்பை விலை கொடுத்து வாங்குவது சரியன்று. பத்திரிகை வாங்கிப் படித்துக் கொள்ளட்டுமே. அமைதியாக இருப்பதே சிறப்பு. என்ன சொல்கிறீர்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எவருக்கும் தெரியாதுங்க.

பொன் வடிவேலு, ஜொகூர்: சகோதரர் முத்து அவர்களே, உங்களுக்கு துணையிருப்பவர் ஸ்ரீவிநாயகர், அன்னை ஸ்ரீமகாலக்‌ஷ்மி, சிவபெருமான், முருகப்பெருமான். தூசுகள் துவம்சமாகும் ௐ





நம்பிக்கை வைத்தால் அவமானம் நமக்கே

12.08.2021

ஆறுதல் கிடைக்கும் என்று சில வேளைகளில் நம்முடைய பிரச்சினைகளை நம்பிக்கையின் பெயரில் மற்றவரிடம் சொல்லி விடுகிறோம். இங்கே நம்பிக்கை தான் முதன்மை பெறுகிறது.

ஆனால் இந்தக் கலிகாலத்தில் உயிருக்கு உயிராய் நம்பியவர்களே மோசம் செய்து விடுகிறார்கள்.

2014-ஆம் ஆண்டில் என் நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப் தோழி ஒருவர் இருந்தார். கூடப் பிறந்த தங்கைக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்துப் பழகி வந்தார். தன்னுடைய குடும்ப ரகசியங்களை எல்லாம் அந்தப் பெண்ணிடம் சொல்லி விடுவார். நம்பிக்கை. நம்பிக்கை.

அந்தப் பெண்ணுக்குப் பண உதவி தேவைப்படும் போது எல்லாம் 50, 100, 200 என்று கொடுத்து உதவி செய்து வந்து இருக்கிறார். கணக்குப் பார்ப்பது இல்லை.

தங்கச்சி தானே என்று அவருடைய போன் பில்; கரண்டு பில்; அந்த பில் இந்த பில் என்று நிறைய கொடுத்து உதவி இருக்கிறார். சில ஆயிரங்கள் என்று கேள்விப் பட்டேன்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் என்னவோ பிணக்கு. அப்புறம் என்ன. நண்பரின் அந்தரங்க இரகசியங்கள் எல்லாம் அம்பலத்திற்கு வந்தன.

அதனால் நல்லா இருந்த அவருடைய மனைவிக்கும் அவருக்கும் சண்டைச் சச்சரவுகள். பிள்ளைகளும் தந்தையாருடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். குடும்ப உறவு முறை இன்றும் சீர் அடையவில்லை.

அப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகள் நம் அருகிலேயே இருக்கிறார்கள். ஆகவே யாரிடமும் எந்த இரகசியத்தையும் சொல்லாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். உங்களையே நீங்கள் நம்புங்கள்.

பின்னூட்டங்கள்

வெங்கடேசன்: உண்மை. நம்மிடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்றால் நண்பனும் பகைதான். என் சொந்த அனுபவமே உண்டு. மனிதர்கள் பல வகை 🤷‍♀️

இராதா பச்சையப்பன்: 🌷🙏எதுவும் சொல்ல தோன்றவில்லை, யாரையும் நம்பவும் முடியவில்லை. 🤷‍♀️🤷‍♀️

கலைவாணி ஜான்சன்: சிறப்பு மிக்க பதிவு ஐயா... நிதர்சனமான உண்மை... 👍👍

போகும் பாதை பொல்லாத பாதை

12.08.2021

பதிவு செய்தவர்: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

போகும் பாதை பொல்லாத பாதை
திருந்தி வாழவா தெரியவில்லை
வேகமாக வளர்கின்ற காலத்தை
விளங்கி உயரவா புரியவில்லை

அமரர் டி.எம். ராமையா


போகும் பாதை பொல்லாத பாதை

கையில் புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறாய்

..... பாடல் வரிகள் தொடரும்



பின்னூட்டங்கள்:

முருகன் சுங்கை சிப்புட்:  அருமை இந்தப் பாடலை சிறுவயதில் கேட்டுள்ளேன். வெகு காலத்திற்குப் பிறகு இப்போது தான் கேட்கிறேன். அருமை அய்யா. நன்றி 🙏🙏🙏

டாக்டர் சுபாஷினி: நல்ல பாடல். இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. mp3 வடிவில் இந்தப் பாடல் இருந்தால் அனுப்புங்கள். இது மலேசிய பாடகர் எழுதி பாடிய உள்ளூர் பாடல் தானே...

வெங்கடேசன்: திசையறியா வைரஸ் பாதை. எப்போது முடியுமோ 😢

தனசேகரன் தேவநாதன்: போகும் பாதை பொல்லாத பாதை திருந்தி வாழ்வா தெரியவில்லை. மலேசிய பாடகர் அமரர் திரு T.m இராமையா பாடிய பாடல் 😢😥


தேவிசர கடாரம்: ஊதா....ஊதா...ஊதாப்பூ... 😍

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஊதா பூவின் உவகையில் மின்சாரக் கண்ணா படத்தின் பாடல்...

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
இன்றும் என்றும் உதிரா பூ...

தேவிசர கடாரம்: வாவ் 😍...அருமை👏👏👏👏

இராதா பச்சையப்பன்: 🌷🙏 சகோதரர் கவிஞர் அவர்களே 'கொஞ்ச நாட்களாய் காணவில்லையே".  நலம் தானே? கவிதையைப் பாடலாமே'. காலையிலேயே  புலனத் தலைவர் கூட பாட்டுப் பாடி இருக்கிறார் கவனித்தீர்களா? வேறு ஒருவர் 'ஊதாக் கலர் ரிப்பன், உனக்கு யார் அப்பன் என்று கூட பாட நினைத்தாராம். ஆனால் தலைவர் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு எதற்கு என்று விட்டு விட்டாராம்.  🤷‍♀️🙏🌷

இராதா பச்சையப்பன்: 🌷🙏 இந்த ஊதா பூ பாடல் நான் கூட பாடியது இல்லை.  உலகக் கட்டுரை நாயகனுக்குக் கட்டுரை எழுத மட்டுமே தெரியும் என்று நான் நினைத்தது தவறு என்று தெரிகிறது. பாடல்களிலும், பாடல் நாயகன் என்று  தெரிகிறது. மகிழ்ச்சி 😃🙏🌷.



 

பொறுமையின் மறுவடிவம் மூங்கில் செடி

12.08.2021

பதிவு செய்தவர்: பி.கே.குமார், ஈப்போ

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால் செடி வளரவே வளராது. ஓர் அங்குகுலம் அளவு கூட வளராமல் அடம் பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதைப் பராமரிக்க வேண்டும்.*

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பது இல்லை.


ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் தொடங்கும். அதுவும் எப்படி? சட சடவெனும் அசுர வளர்ச்சி.

ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஓர் இரகசியம் அதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களைப் பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஐந்தாவது ஆண்டில் ’நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன். என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை’ என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை. தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித் தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!

#பாரதிய தமிழன்

 

11 ஆகஸ்ட் 2021

மொட்டை அடிக்கும் குட்டிப் பிசாசுகள்


1. ஐம்பது சாரி... ஐம்பது சுடிர்தார் போதும்...

2. அப்பா கட்டின வீடு ஒன்னு இருக்கு... அது வேணும்.

3. கல்யாணத்தை ஸ்ரீவாரி மண்டபத்தில் கிரேண்டா செய்யணும். அதன் ஒருநாள் வாடகை ஐம்பது இலட்சம். அதிலே எல்லா செலவும் அடங்கும்.

4. பிரிட்ஜ் வேணும்... வாசிங் மெசின் வேணும்... சப்போஸ் நான் தனிக்குடித்தனம் போனால்...

4. கார்... வீடு... அப்புறம் கோல்ட் 50 பவுன்... அப்புறம் எங்க அம்மா வச்சிருக்கிற இருக்கிற சேலைகள் எல்லாம் வேணும்...


5. இப்ப நாங்க இருக்கிற வீடு எனக்கு வேணும்... கீழே வாடகைக்கு விட்டு இருக்காங்க. வாடகை நிறைய வரும். நான் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். 

நான் ஒரு நாளைக்கு ஒரு சாரி கட்டினால் அதை மறுபடியும் கட்டவே கூடாது. வருசத்துல 365 நாளைக்கும் 365 சேலைகள் வேணும். இதை எல்லாம் புருசன் கிட்ட கேட்கலாமே. வேண்டாம். அப்பா அம்மகிட்ட கேட்கலாம். இன்னொருத்தன் கிட்ட போய் ஏன் கேட்கணும். (பிள்ளையை ரொம்ப அற்புதமா வளர்த்து இருக்காங்க).

6. வைர நெக்லஸ் ஒரு கலெக்சன் வேணும்.

7. 50 பவும் நகை வேணும் ஒரு நிலம் வேணும். அம்மா சேர்த்து வச்சிருக்காங்க. அதான் வேணும். (என்ன கொடுமை சார் இது)

8. மணமேடைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கணும்

9. மாப்பிள்ளை வீட்டில் 30 சவரண் கேட்டால் எனக்கு டபுளா தரணும்.

10. எனக்கு 80 பவுன்ல நகை வேணும்.

பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: இந்த நிகழ்வைப் பார்க்க நேர்ந்த பொழுது என் மகள் சொன்ன வார்த்தை ‘இதுகள் பிசாசுகள்’. அச்சமயம் மகளுக்கு திருமணம் ஆகவில்லை.

இராதா பச்சையப்பன்: இது பழைய  காணொலி .

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இதைப் பற்றி அன்பர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்லலாமே... ஒரு மாற்றத்திற்காக...

கணேசன் சண்முகம் சித்தியவான்: தாய் தந்தையின் வேர்வை  உழைப்பு  கண்ணீர் சிந்திய இரத்தம் அதை உணரும் பிள்ளைகள் உருவாக வேண்டும்.

குமரன் மாரிமுத்து: பணம், பொருள் ஈட்டும் வேட்கையில் குழந்தை வளர்ப்பை, கூட்டுக் குடும்பங்களை உதறித் தள்ளிய பெற்றோர்களின் சொத்துகள் (பிள்ளைகள்) இன்று முள்வேளியாக வளர்ந்து அவர்களையே காயப் படுத்துகின்றனர்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் கெட்டவராவது தாய் தந்தை வளர்ப்பினிலே!

தனசேகரன் தேவநாதன்: நமது நாட்டில் குறிப்பாக பெண் பிள்ளைகள் இப்படி என கேள்வி பட்டதே இல்லை ஐயா. இப்படி எதிர்பார்த்த மாப்பிள்ளைகளை தட்டிக் கழித்த பெண்கள் உண்டு.

தமிழ் நாட்டில் இந்நிகழ்வில் கலந்து கருத்து சொன்னவர்கள் வாழ்க்கை முறை புரியாத புதிராக உள்ளது. கோடிஸ்வர குடும்ப உறுப்பினர்கள் பாணியில் பேசுவது தமிழ்நாட்டு ஏற்ற தாழ்வு விளங்கவில்லை

ஐயா. நம்நாட்டில் வசதியான குடும்ப பெண்கள் கூட பெற்றோர்களிடம் இப்படி சுரண்டல் செய்வார்களா என்பது கேள்வி குறிதான்

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா.... மற்றும் அனைவர்க்கும் 🙏🙏... பெண் பிள்ளைகள் என்றால் அப்பாக்களுக்கு தேவதைகள் என்ற நினைப்பு ஆணித்தரமாக உள்ளது. ஆகவே பெண் பிள்ளைகள் தேவதைகள் தான் அப்பா என்று நிரூபிக்க வேண்டும்.

சில பெண் பிள்ளைகள் இப்படி செய்ததை எனது நண்பர் காவல் துறை அதிகாரி சொல்லி கேள்வி பட்டு உள்ளேன்.... வேதனை தான்.... பார்த்து பார்த்து வளர்ந்தவர்களிடம் இப்படி நடந்து கொள்வது முறை அல்ல....

திருமணத்திற்கு பின் கணவருடன் சேர்ந்து உழைத்து அனைத்து ஆடம்பரங்களைச் சேர்த்து கொள்வது அவர்கள் திறமை. அதுவே சாலச் சிறந்த பண்பாகும்...

என் அப்பாவுக்கு நாங்கள் நான்கு பெண் பிள்ளைகளும் தேவதைகள் தான் என்பதை பெருமையாக மகிழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறேன்.

அப்பாக்கள் அனைவரும் பெண் பிள்ளைகளுக்கு கிடைத்த பொக்கிஷம்.... நம் புலன அப்பாக்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்... 🌹🌹🙏🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மலேசியாவைப் பொருத்த வரையில் நம் தமிழ்ப்பிள்ளைகள் தங்கமான பிள்ளைகள். 100-க்கு 95 பெண்பிள்ளைகள் குடும்பத்திற்குப் பாரம் இல்லாதவர்கள்.

காணொலியைப் பார்த்து மிக மிக வேதனை அடைந்தேன். பொதுவாகவே பெண் பிள்ளைகளைத் தெய்வக் குழந்தைகளாக, தெய்வத்தின் அவதாரங்களாகப் பார்த்து புகழ்ந்து போற்றுவது என் வழக்கம்.

ஆனால் அந்தக் காணொலியில் அப்பாவுடைய சொத்துகளை பறித்துக் கொள்வதில்தான் அந்தப் பெண்பிள்ளைகள் முழு இலக்கைக் காட்டி உள்ளார்கள். எப்படி மனசு வருகிறது என்றுதான் முதல் கேள்வி. இப்படி கேட்கும் அளவிற்கு என் மகளை வளர்க்கவில்லையே....

நம் நாட்டில் அப்படிப்பட்ட பெண்பிள்ளைகள் அறவே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். தன்னிடம் உள்ளதை அப்பா அம்மாவிடம் கொடுக்கும் பிள்ளைகளைத் தான் இதுநாள் வரையிலும் பார்த்து இருக்கிறேன்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆமாம் ஐயா. உண்மை ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரு குடும்பத்தில் அதிகமான பெண் பிள்ளைகள் இருந்தால் அங்கே பெண் தேவதைகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று பொருள்.

ஆண் பிள்ளைகளை விட்டுத் தள்ளுங்கள். அதிரசத்தை அதிசயமாகப் பார்க்கும் ஆஸ்திரேலியாகாரன் மாதிரி திருமணம் ஆனதும் பெற்றோரை அதிகம் கண்டு கொள்வது இல்லை. எல்லோரும் அல்ல. பாதிக்குப் பாதி.

ஆனால் பெண் பிள்ளைகள் அப்படி இல்லை. திருமணமாகிப் போனாலும் அப்பா அம்மாவை விட்டுக் கொடுப்பது இல்லை. தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகள் செய்கிறார்கள். இது நம் நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளைச் சொல்கிறேன்.

காணொலியைப் பாருங்கள். அப்பாவுடைய வீடு வேண்டும். அப்பாவுடைய நிலம் வேண்டும். அம்மாவுடைய நகைகள் வேண்டும். அப்பாவுடைய பணம் வேண்டும். அதுவும் 50 இலட்சம். என்னவோ பணம் அச்சடிக்கும் மெசினை அப்பா வீட்டில் வைத்து இருக்கிற மாதிரி லிஸ்ட் போடுகிறார்கள்.

பெற்று வளர்த்து படிக்க வைத்து அடுத்தவன் வீட்டுக்குப் போகும் போது இருக்கிறதை எல்லாம் அப்பா அம்மா கொடுத்து அனுப்புகிறார்கள். கடைசி காலத்தில் பெற்றோர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கணிக்க வேண்டாமா. இருப்பதைப் பிடுங்கும் பார்வைதான் பெரிதாகத் தெரிகிறது. உண்மையிலேயே அந்தக் காணொலியைப் பார்த்து வெட்கப் பட்டேன்.

தேவிசர கடாரம்: இந்த காணொலியை என் சகோதரர்கள் பார்த்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்... பெண் பிள்ளைகள் அப்படி இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் செய்வார்கள்...

என் அப்பா உயிரோடு இருந்தால் ..என் பெண்கள் அப்படி இல்லை என்று ஒரே போடாகப் போட்டிருப்பார்...

[8:37 pm, 11/08/2021] Kalaivani Johnson: ஆனால் நம் நாட்டில் தமிழ்ப் பெண் பிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது மிகக் குறைவு தாங்க ஐயா....

[8:38 pm, 11/08/2021] Kalaivani Johnson: உங்களுக்காகவும் உங்கள் தந்தையர்க்காகவும் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன் சகோதரி...👍👍

தேவிசர கடாரம்: என் வீட்டில் நானும் என் தமக்கையும் என் தந்தையிடம் இது வேண்டும் என்று ஒரு நாளும் கேட்டது இல்லை... எங்கள் சகோதரர்களிடமும் கேட்டது இல்லை... இன்றும் கூட வாய் திறந்து கேட்டது இல்லை...

குமரன் மாரிமுத்து: அங்கு இருந்த வாழ்க்கைச் சூழல் வேறு; இங்கு நிலவும் வாழ்க்கைச் சூழல் வேறு. அதுவே இந்த இயந்திர மனிதன் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் என நான் கருதுகிறேன் ஐயா.

இங்கு படித்தாலும் படிக்காவிட்டாலும் வேலை கிடைத்துவிடும்; வருமானம் ஈட்டுதலில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லாத வாழ்க்கை முறை. சோம்பேறிகளை வேறு கணக்கில் வையுங்கள்.

தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லை அல்லது வேலையே இல்லை என்ற சூழல். அதனால், ஏழைகள் தங்கள் குழந்தைகள் வளரும்போது பணம் ஈட்டுதலை முதன்மைபடுத்துகின்றனர்.

பிள்ளைகள், படித்து முடித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். பணம் ஈட்டுதலையே முதன்மையாக நினைக்கும் எந்திரமாக மாறுகின்றனர். (அனைவரும் அல்ல; ஆனால் பெரிய எண்ணிக்கை இதில் அடங்கும்.)

இது அவர்களின் தவறு அல்ல; உயிர் வாழ வேண்டும்; ஏழை என்ற முத்திரையை கிழித்தெறிய வேண்டும்..... இப்படியாக மனிதம் செயலிழந்து வருகின்றது ஐயா. என்னைப் பொருத்தவரை அங்கும் இங்கும் ஒப்பீடு செய்வது முறையாகாது.🥰✌🏻

மன்னிக்கவும். இன்னும் அதிகம் எழுதத் தோன்றுகிறது. உடல் நலம் இடம் தரவில்லை. ஏறக்குறைய 18 நாட்களாக கோறணி நச்சில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இப்போதுதான் தேறிவருகிறேன். நேற்றிலிருந்துதான் புலனத்தில் சில பதிவுகளைச் செய்யத் தொடங்கினேன். அதிக நேரம் கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்த சிரமமாக உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு டச் என் கோ தான்..... 🙏🏽😁

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நீங்கள் சொல்வதில் நியாயமான காரணங்கள் உள்ளன தம்பி குமரா. ஆனால் அக்கரையோ இக்கரையோ பெண்பிள்ளைகளைத் தெய்வப் பிறவிகளாகப் பார்க்கும் பாவனையில் வாழ்ந்து விட்டேன்.

அதனால் அப்பா அம்மாவை வைத்துக் கொண்டு அவர்களுடைய பணம், வீடு, நிலம் வேண்டும் 50 பவுன் நகை வேண்டும் என்று வாய்க் கூசாமல் கேட்பதைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என்ன குமரா... உனக்குமா... உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் தம்பி. புலனத்திற்குப் பின்னர் வரலாம். முதலில் உடல் நலம். கவனம். கவனம்.