1. ஐம்பது சாரி... ஐம்பது சுடிர்தார் போதும்...
2. அப்பா கட்டின வீடு ஒன்னு இருக்கு... அது வேணும்.
3. கல்யாணத்தை ஸ்ரீவாரி மண்டபத்தில் கிரேண்டா செய்யணும். அதன் ஒருநாள் வாடகை ஐம்பது இலட்சம். அதிலே எல்லா செலவும் அடங்கும்.
4. பிரிட்ஜ் வேணும்... வாசிங் மெசின் வேணும்... சப்போஸ் நான் தனிக்குடித்தனம் போனால்...
4. கார்... வீடு... அப்புறம் கோல்ட் 50 பவுன்... அப்புறம் எங்க அம்மா வச்சிருக்கிற இருக்கிற சேலைகள் எல்லாம் வேணும்...
2. அப்பா கட்டின வீடு ஒன்னு இருக்கு... அது வேணும்.
3. கல்யாணத்தை ஸ்ரீவாரி மண்டபத்தில் கிரேண்டா செய்யணும். அதன் ஒருநாள் வாடகை ஐம்பது இலட்சம். அதிலே எல்லா செலவும் அடங்கும்.
4. பிரிட்ஜ் வேணும்... வாசிங் மெசின் வேணும்... சப்போஸ் நான் தனிக்குடித்தனம் போனால்...
4. கார்... வீடு... அப்புறம் கோல்ட் 50 பவுன்... அப்புறம் எங்க அம்மா வச்சிருக்கிற இருக்கிற சேலைகள் எல்லாம் வேணும்...
5. இப்ப நாங்க இருக்கிற வீடு எனக்கு வேணும்... கீழே வாடகைக்கு விட்டு இருக்காங்க. வாடகை நிறைய வரும். நான் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து சாப்பிடலாம்.
நான் ஒரு நாளைக்கு ஒரு சாரி கட்டினால் அதை மறுபடியும் கட்டவே கூடாது. வருசத்துல 365 நாளைக்கும் 365 சேலைகள் வேணும். இதை எல்லாம் புருசன் கிட்ட கேட்கலாமே. வேண்டாம். அப்பா அம்மகிட்ட கேட்கலாம். இன்னொருத்தன் கிட்ட போய் ஏன் கேட்கணும். (பிள்ளையை ரொம்ப அற்புதமா வளர்த்து இருக்காங்க).
6. வைர நெக்லஸ் ஒரு கலெக்சன் வேணும்.
7. 50 பவும் நகை வேணும் ஒரு நிலம் வேணும். அம்மா சேர்த்து வச்சிருக்காங்க. அதான் வேணும். (என்ன கொடுமை சார் இது)
8. மணமேடைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கணும்
9. மாப்பிள்ளை வீட்டில் 30 சவரண் கேட்டால் எனக்கு டபுளா தரணும்.
10. எனக்கு 80 பவுன்ல நகை வேணும்.
பின்னூட்டங்கள்
தனசேகரன் தேவநாதன்: இந்த நிகழ்வைப் பார்க்க நேர்ந்த பொழுது என் மகள் சொன்ன வார்த்தை ‘இதுகள் பிசாசுகள்’. அச்சமயம் மகளுக்கு திருமணம் ஆகவில்லை.
இராதா பச்சையப்பன்: இது பழைய காணொலி .
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இதைப் பற்றி அன்பர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்லலாமே... ஒரு மாற்றத்திற்காக...
கணேசன் சண்முகம் சித்தியவான்: தாய் தந்தையின் வேர்வை உழைப்பு கண்ணீர் சிந்திய இரத்தம் அதை உணரும் பிள்ளைகள் உருவாக வேண்டும்.
குமரன் மாரிமுத்து: பணம், பொருள் ஈட்டும் வேட்கையில் குழந்தை வளர்ப்பை, கூட்டுக் குடும்பங்களை உதறித் தள்ளிய பெற்றோர்களின் சொத்துகள் (பிள்ளைகள்) இன்று முள்வேளியாக வளர்ந்து அவர்களையே காயப் படுத்துகின்றனர்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் கெட்டவராவது தாய் தந்தை வளர்ப்பினிலே!
தனசேகரன் தேவநாதன்: நமது நாட்டில் குறிப்பாக பெண் பிள்ளைகள் இப்படி என கேள்வி பட்டதே இல்லை ஐயா. இப்படி எதிர்பார்த்த மாப்பிள்ளைகளை தட்டிக் கழித்த பெண்கள் உண்டு.
தமிழ் நாட்டில் இந்நிகழ்வில் கலந்து கருத்து சொன்னவர்கள் வாழ்க்கை முறை புரியாத புதிராக உள்ளது. கோடிஸ்வர குடும்ப உறுப்பினர்கள் பாணியில் பேசுவது தமிழ்நாட்டு ஏற்ற தாழ்வு விளங்கவில்லை
ஐயா. நம்நாட்டில் வசதியான குடும்ப பெண்கள் கூட பெற்றோர்களிடம் இப்படி சுரண்டல் செய்வார்களா என்பது கேள்வி குறிதான்
கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா.... மற்றும் அனைவர்க்கும் 🙏🙏... பெண் பிள்ளைகள் என்றால் அப்பாக்களுக்கு தேவதைகள் என்ற நினைப்பு ஆணித்தரமாக உள்ளது. ஆகவே பெண் பிள்ளைகள் தேவதைகள் தான் அப்பா என்று நிரூபிக்க வேண்டும்.
சில பெண் பிள்ளைகள் இப்படி செய்ததை எனது நண்பர் காவல் துறை அதிகாரி சொல்லி கேள்வி பட்டு உள்ளேன்.... வேதனை தான்.... பார்த்து பார்த்து வளர்ந்தவர்களிடம் இப்படி நடந்து கொள்வது முறை அல்ல....
திருமணத்திற்கு பின் கணவருடன் சேர்ந்து உழைத்து அனைத்து ஆடம்பரங்களைச் சேர்த்து கொள்வது அவர்கள் திறமை. அதுவே சாலச் சிறந்த பண்பாகும்...
என் அப்பாவுக்கு நாங்கள் நான்கு பெண் பிள்ளைகளும் தேவதைகள் தான் என்பதை பெருமையாக மகிழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறேன்.
அப்பாக்கள் அனைவரும் பெண் பிள்ளைகளுக்கு கிடைத்த பொக்கிஷம்.... நம் புலன அப்பாக்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்... 🌹🌹🙏🙏
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மலேசியாவைப் பொருத்த வரையில் நம் தமிழ்ப்பிள்ளைகள் தங்கமான பிள்ளைகள். 100-க்கு 95 பெண்பிள்ளைகள் குடும்பத்திற்குப் பாரம் இல்லாதவர்கள்.
காணொலியைப் பார்த்து மிக மிக வேதனை அடைந்தேன். பொதுவாகவே பெண் பிள்ளைகளைத் தெய்வக் குழந்தைகளாக, தெய்வத்தின் அவதாரங்களாகப் பார்த்து புகழ்ந்து போற்றுவது என் வழக்கம்.
ஆனால் அந்தக் காணொலியில் அப்பாவுடைய சொத்துகளை பறித்துக் கொள்வதில்தான் அந்தப் பெண்பிள்ளைகள் முழு இலக்கைக் காட்டி உள்ளார்கள். எப்படி மனசு வருகிறது என்றுதான் முதல் கேள்வி. இப்படி கேட்கும் அளவிற்கு என் மகளை வளர்க்கவில்லையே....
நம் நாட்டில் அப்படிப்பட்ட பெண்பிள்ளைகள் அறவே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். தன்னிடம் உள்ளதை அப்பா அம்மாவிடம் கொடுக்கும் பிள்ளைகளைத் தான் இதுநாள் வரையிலும் பார்த்து இருக்கிறேன்.
கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆமாம் ஐயா. உண்மை ஐயா
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரு குடும்பத்தில் அதிகமான பெண் பிள்ளைகள் இருந்தால் அங்கே பெண் தேவதைகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று பொருள்.
ஆண் பிள்ளைகளை விட்டுத் தள்ளுங்கள். அதிரசத்தை அதிசயமாகப் பார்க்கும் ஆஸ்திரேலியாகாரன் மாதிரி திருமணம் ஆனதும் பெற்றோரை அதிகம் கண்டு கொள்வது இல்லை. எல்லோரும் அல்ல. பாதிக்குப் பாதி.
ஆனால் பெண் பிள்ளைகள் அப்படி இல்லை. திருமணமாகிப் போனாலும் அப்பா அம்மாவை விட்டுக் கொடுப்பது இல்லை. தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகள் செய்கிறார்கள். இது நம் நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளைச் சொல்கிறேன்.
காணொலியைப் பாருங்கள். அப்பாவுடைய வீடு வேண்டும். அப்பாவுடைய நிலம் வேண்டும். அம்மாவுடைய நகைகள் வேண்டும். அப்பாவுடைய பணம் வேண்டும். அதுவும் 50 இலட்சம். என்னவோ பணம் அச்சடிக்கும் மெசினை அப்பா வீட்டில் வைத்து இருக்கிற மாதிரி லிஸ்ட் போடுகிறார்கள்.
பெற்று வளர்த்து படிக்க வைத்து அடுத்தவன் வீட்டுக்குப் போகும் போது இருக்கிறதை எல்லாம் அப்பா அம்மா கொடுத்து அனுப்புகிறார்கள். கடைசி காலத்தில் பெற்றோர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கணிக்க வேண்டாமா. இருப்பதைப் பிடுங்கும் பார்வைதான் பெரிதாகத் தெரிகிறது. உண்மையிலேயே அந்தக் காணொலியைப் பார்த்து வெட்கப் பட்டேன்.
தேவிசர கடாரம்: இந்த காணொலியை என் சகோதரர்கள் பார்த்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்... பெண் பிள்ளைகள் அப்படி இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் செய்வார்கள்...
என் அப்பா உயிரோடு இருந்தால் ..என் பெண்கள் அப்படி இல்லை என்று ஒரே போடாகப் போட்டிருப்பார்...
[8:37 pm, 11/08/2021] Kalaivani Johnson: ஆனால் நம் நாட்டில் தமிழ்ப் பெண் பிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது மிகக் குறைவு தாங்க ஐயா....
[8:38 pm, 11/08/2021] Kalaivani Johnson: உங்களுக்காகவும் உங்கள் தந்தையர்க்காகவும் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன் சகோதரி...👍👍
தேவிசர கடாரம்: என் வீட்டில் நானும் என் தமக்கையும் என் தந்தையிடம் இது வேண்டும் என்று ஒரு நாளும் கேட்டது இல்லை... எங்கள் சகோதரர்களிடமும் கேட்டது இல்லை... இன்றும் கூட வாய் திறந்து கேட்டது இல்லை...
குமரன் மாரிமுத்து: அங்கு இருந்த வாழ்க்கைச் சூழல் வேறு; இங்கு நிலவும் வாழ்க்கைச் சூழல் வேறு. அதுவே இந்த இயந்திர மனிதன் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் என நான் கருதுகிறேன் ஐயா.
இங்கு படித்தாலும் படிக்காவிட்டாலும் வேலை கிடைத்துவிடும்; வருமானம் ஈட்டுதலில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லாத வாழ்க்கை முறை. சோம்பேறிகளை வேறு கணக்கில் வையுங்கள்.
தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லை அல்லது வேலையே இல்லை என்ற சூழல். அதனால், ஏழைகள் தங்கள் குழந்தைகள் வளரும்போது பணம் ஈட்டுதலை முதன்மைபடுத்துகின்றனர்.
பிள்ளைகள், படித்து முடித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். பணம் ஈட்டுதலையே முதன்மையாக நினைக்கும் எந்திரமாக மாறுகின்றனர். (அனைவரும் அல்ல; ஆனால் பெரிய எண்ணிக்கை இதில் அடங்கும்.)
இது அவர்களின் தவறு அல்ல; உயிர் வாழ வேண்டும்; ஏழை என்ற முத்திரையை கிழித்தெறிய வேண்டும்..... இப்படியாக மனிதம் செயலிழந்து வருகின்றது ஐயா. என்னைப் பொருத்தவரை அங்கும் இங்கும் ஒப்பீடு செய்வது முறையாகாது.🥰✌🏻
மன்னிக்கவும். இன்னும் அதிகம் எழுதத் தோன்றுகிறது. உடல் நலம் இடம் தரவில்லை. ஏறக்குறைய 18 நாட்களாக கோறணி நச்சில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இப்போதுதான் தேறிவருகிறேன். நேற்றிலிருந்துதான் புலனத்தில் சில பதிவுகளைச் செய்யத் தொடங்கினேன். அதிக நேரம் கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்த சிரமமாக உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு டச் என் கோ தான்..... 🙏🏽😁
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நீங்கள் சொல்வதில் நியாயமான காரணங்கள் உள்ளன தம்பி குமரா. ஆனால் அக்கரையோ இக்கரையோ பெண்பிள்ளைகளைத் தெய்வப் பிறவிகளாகப் பார்க்கும் பாவனையில் வாழ்ந்து விட்டேன்.
அதனால் அப்பா அம்மாவை வைத்துக் கொண்டு அவர்களுடைய பணம், வீடு, நிலம் வேண்டும் 50 பவுன் நகை வேண்டும் என்று வாய்க் கூசாமல் கேட்பதைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என்ன குமரா... உனக்குமா... உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் தம்பி. புலனத்திற்குப் பின்னர் வரலாம். முதலில் உடல் நலம். கவனம். கவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக