15 ஜனவரி 2021

நாட்டுக்கு ஏற்ற நல்ல தலைவர்கள்

14.01.2021

பதிவு : தினமலர் 16.10.2020

மலேசியாவில் தற்போது அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. அங்கு பிரதமர் முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மகாதீர் முகமது, அன்வர் இப்ராகிமின் உதவியோடு 60 ஆண்டுகளாக மலேசியாவில் நீடித்து வந்த ஒருங்கிணைந்த மலாய் தேசிய அமைப்பு ஆட்சியை கவிழ்த்து வெற்றி கண்டார்.




இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள் எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், முகைதின் யாசின், மகாதீர் முகமது ஆகியவர்கள் ஆவர். இவர்கள் மூவருக்குள்ளும் தற்போது பிரிவினை ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று அன்வர் இப்ராகிம் மலேசிய அரசரை சந்தித்து இது குறித்து பேசினார். கூட்டணியின் உதவியோடு முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க மகாதீர் முகமது முயன்று வருகிறார்.

மலேசியாவில் நிலையான ஆட்சி அமையாததால் எப்போது வேண்டுமானாலும் தற்போது உள்ள ஆட்சி கலைக்கப் படலாம் என மகாதீர் முகமது சொல்கிறார்.


வண்ணம் பூசாத உயிரோவியங்கள்

14.01.2021

பதிவு செய்தவர்: ரஞ்சன், கங்கார் பூலாய்




வண்ணம்  பூசாத உயிரோவியங்கள்...  இவர்கள் தான் நிஜம்

வெங்கடேசன்: அழகிய தேவதைகள்





தம்பூன் தமிழர்களுக்கு பொங்கல் பொருட்கள் அன்பளிப்பு

14.01.2021

பதிவு செய்தவர்: பி. கே. குமார்

தைத் திருநாளாம் பொங்கல் நாளை ஒட்டி பேராக், தம்பூன் (TAMBUN) தொகுதியைச் சேர்ந்த நம் மக்களில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பொங்கல் பானைகளும்; பொங்கல் பொருட்களும் வீடு வீடாக சென்று வழங்கப் பட்டன.

Covid 19 தொற்று காரணத்தினால் வெளியே சென்று கூட்டம் கூட்டமாகக் கொண்டாடுவதைத் தவிர்க்கவும்; அதே சமயத்தில் குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து அவரவர் இல்லம் தோறும் பொங்கல் வைப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தப் பொருட்கள் வழங்கப் பட்டன.

பொங்கல் பொருட்களைப் பெற்றுக் கொண்ட நம் மக்கள் இந்தத் தம்பூன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் DATO SERI AHMAD FAIZAL BIN DATO AZUMU அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

#ParlimenTambun063

 




நல்ல முயற்சி. நல்ல முன்னெடுப்பு. மனதார வாழ்த்துகிறோம். 




மலேசிய மக்களுக்கு எப்போது விடியல்

14.01.2021

பதிவு செய்தவர்: முரு மாதவி

பின் கதவின் வழி நுழைந்திட்ட அரசாங்கம்; நிலை அற்ற ஆட்சியில் தடுமாறுகிறது. ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்றத்தில்! நாடாளுமன்றம் ஒரு காட்சிப் பொருளாக திகழ்கின்றது!

கொள்கை அற்றவர்களால் நிர்வாகத்தில் தடுமாற்றம்! இதனோடு கொரோனாவின் கொட்டம்!

நிறைந்த வளங்களையும்; இயற்கையில் அழகிய நாடு மலேசியா. ஒற்றுமைக் குழைவை ஏற்படுத்த நாய்(க்) வந்தது! அதோடு சரி! நாட்டில் பல தரப்பட்ட பிரச்சினைகள்!

வளம் நிறைந்த நாட்டில் நிர்வாகக் குறையினால் இன்னல் படுவது மக்களே! சரி செய்வதற்கு எந்த அரசியல்வாதியும் முயல்வது இல்லை! தன்னலப் போக்கும்... உழலும் கூட.!

கொட்டம் அடங்குமா! நல்லது நடக்காதா என ஏங்கித் தவிக்கிறார்கள் மலேசிய மக்கள்! சிரமத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு என்றைக்கு அந்த விடியல்!

குமரன் மாரிமுத்து: நிருவாகத் திறமை இன்மையும், தான் கொண்ட மதத்தின் பெயரில் இனவாதம் புரியும் அரசியல் வியாபாரிகளால் பற்பல இன்னல்கள். உலக அரங்கில் பீடுநடை போட வேண்டிய நாடு, இன்று தன்மானம் இழக்கும் பரிதாப நிலையில்...

தினகரன் சுப்ரமணியம் தங்காக்: உண்மை தான் ஐயா. இப்போது மலேசியாவில் சமூக நீதி குறைந்து விட்டது.

ரஞ்சன் கங்கார் பூலாய்: இனவாத அரசியல் வாதிகளால் குறிப்பாக... நம்மினத்தவர்களே அதிகம் பாதிக்கப் படுகிறோம்...

தேவி சரஸ் கடாரம்: இறைவனுக்கே வெளிச்சம்🤷🏻‍♀️

கரு. ராஜா, சுங்கை பூலோ: தம்பி கத்தரிக்காய் 1 கிலோ 12 வெள்ளி. இத்தனைக்கும் அது இந்த நாட்டில் விளையும் ஒரு காய். அதுவும் நம்மவங்க கத்தரிக்காய் போடாமல் சாம்பார் சமைப்பது இல்லை. விலைகள் தாறுமாறாக உயர்ந்திடுச்சு. லஞ்சம் வாங்கும் நபருக்கு பிரச்னை இல்லை. நம்மை போன்றவர்களின் நிலைமை?

ராதா பச்சையப்பன்:
கத்தரிக்காய்  ‌கிலோ 12 வெள்ளியா? கேட்கவே தலை சுற்றுகிறது😇. எனக்குச்‌ சமையலில்‌ கத்தரிக்காய் ‌தான்‌ முதலிடம் வகிக்கிறது.

ரஞ்சன் கங்கார் பூலாய்: நம்மைப் போன்றவர்களுக்கு திண்டாட்டம்தான்...

Muru Mathavi: இந்த நாடு அரசியல் வாதிகள் கிட்ட மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.


14 ஜனவரி 2021

மலேசியம் அன்பர்களின் பொங்கல் வாழ்த்துகள் 2021

14.01.2021

மலேசியம் புலனத்தின் அன்பர்களின் பொங்கல் வாழ்த்துகள்...

மலேசியம் புலன நிர்வாகத்தினரின் பொங்கல் வாழ்த்துகள்.
கரு. ராஜா; தமிழ் மறவன் பாலன் முனியாண்டி;
கென்னடி ஆறுமுகம்; மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


பி.கே.குமார், ஈப்போ

ஷீலா தேவி, சிரம்பான்



மலேசிய இந்து சங்கம்



ஜெயகோபாலன், பாகன் செராய்


நாச்செல் அமைச்சி, கேமரன் மலை

டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்

டாக்டர் சுபாஷினி

தினகரன் சுப்பிரமணியம், தங்காக்

வேலாயுதம் பினாங்கு: அடடா.. போர் முனையிலும் பொங்கல் வைத்து மகிழும் எனது தங்கைகளை நான் என்னவென்று சொல்வது... 🙏

மணியம், கோலாலம்பூர்


மகாலிங்கம், பினாங்கு

பி.கே.குமார், ஈப்போ


ரஞ்சன், கங்கார் பூலாய்


டத்தோ விஜயசிங்கம், கோலாலம்பூர்


இரா. ஆதிசேகர், கோலக்கிள்ளான்.

மலேசியம் புலனத்தில் உள்ள அனைத்து தமிழ்த் தாய் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்..!  🌹🙏🌹 இரா. ஆதிசேகர், கோலக்கிள்ளான். சிலாங்கூர் மாநிலம்.

கு.ச. இராமசாமி, மலேசிய நண்பன் ஞாயிறு மலர்


பாரதிதாசன், சித்தியவான்


ராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

🙏 நம் புலனத்தின் தலைவர், நிர்வாகத்தினருக்கும், புலனத்தில் பயணிக்கும் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும்; அவர்தம் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். என்றும் உங்கள் சகோதரி... 🙏


இளங்கோவன், நெய்வேலி, கடலூர், தமிழ்நாடு

தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

குமரன் மாரிமுத்து குடும்பத்தார்

பொங்கலோ... பொங்கல்.

பொங்கல் உழவர் திருநாள் மட்டுமா? உழைப்பவர் எல்லோரையும் பெருமைப் படுத்தும் திருநாள். இயற்கை வளங்களையும், மனிதனுக்கு உதவியாக இருந்த பிற உயிர்களையும் நன்றியோடு கை கூப்பி வணக்கம் செலுத்தும் பண்பாட்டு நன்னாள்.

தமிழன் இந்த மானிடத்துக்கு அறம் பகன்ற, பாடம் சொன்ன உன்னதத் திருநாள். இந்நாளில், 2021 மலேசியர்களுக்கு சிக்கல்கள் தீரும் நிவாரண ஆண்டாக மலர சிவ பெருமானின் அருளை வேண்டுகிறேன்.

தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்; திருவள்ளுவர் ஆண்டு 2052-ஆம் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். பொங்கலோ... பொங்கல். குமரன் மாரிமுத்து குடும்பத்தார்

ரஞ்சன், கங்கார் பூலாய்

பெரியவர்... என்ன ஒரு நம்பிக்கையில் உற்சாகமாகத் தலையில் கரும்பு சுமந்து செல்கிறார்...
மனோகரன், கோலாலம்பூர்


சாந்தக்குமாரி, கோலாலம்பூர்

கென்னடி ஆறுமுகம், கிரீக்

விவசாயி ஒருவர் பொங்கல் சீர் எடுத்துச் செல்வது போன்ற ஓவியம்... பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.


கென்னடி ஆறுமுகம், கிரீக்

"தை பிறந்தால் வழி பிறக்கும்" இது முன்னோர் வாக்கு... பிறக்கப் போகும் தை மாதத்தில் இருந்து வாழ்வில் உள்ள வலிகள் எல்லாம் நீக்கி நல்வழிகள் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்...!

ஆதி சேகர், கோலாகிள்ளான்: பார்க்கவே கண் இமைகள் மகிழ்ச்சியில் பட படக்கிறது. தமிழ்த் தாமரை இதழ் போல சிரித்த முகத்தோடு வாழ்த்துக் கூறும் தமிழர் வாரிசுகள்.

பார்க்கவே அழகு...! பாப்பா முன் பொங்கல் பானை உள்ளோதோ...? பார்வை... பானையில் மேல் இருக்கிற மாதிரி தெரிகிறதே..! மகிழ்ச்சி...!

பனையபுரம் அதியமான், தமிழ் நாடு

அனைத்து நண்பர்களுக்கும் இதயங் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்... அன்புடன் அன்பன், பனையபுரம் அதியமான், ஆன்மிக எழுத்தாளர்.

இமயவர்மன், மதுரை, தமிழ் நாடு


தமிழ் மறவன் பாலன் முனியாண்டி, பினாங்கு

தமிழ் தாய் உறவுகள் அனைவருக்கும் தமிழ் மறவனின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...


சிவகுரு, டுரியான் துங்கல், மலாக்கா

அன்பர்கள் அனைவருக்கும் எங்களின் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🙏🏼

தேவி கெடா, (கடாரம்): கண்ணு படும்... சுற்றி போடுங்கள்...

முத்துக்கிருஷ்ணன்: அழகிய குடும்பம்... அழகிய வதனங்கள்... என் இரத்த உறவுகள்... 🙏🌹


தேவி கெடா (கடாரம்)

செபஸ்டியன், கோப்பேங், பேராக்



வேலாயுதம் பினாங்கு: அகில மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கத்தின் பொங்கல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.

சந்திரன், ஜொகூர் பாரு

செல்லையா செல்லம், கோலாலம்பூர்

கனக பாஸ்கரன், சிம்மோர்

குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்.
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்.
🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மலேசியா மாமன்னரின் பொங்கல் வாழ்த்து
சந்திரன், லார்கின், ஜொகூர்