14.01.2021
பதிவு : தினமலர் 16.10.2020
மலேசியாவில் தற்போது அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. அங்கு பிரதமர் முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மகாதீர் முகமது, அன்வர் இப்ராகிமின் உதவியோடு 60 ஆண்டுகளாக மலேசியாவில் நீடித்து வந்த ஒருங்கிணைந்த மலாய் தேசிய அமைப்பு ஆட்சியை கவிழ்த்து வெற்றி கண்டார்.
இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள் எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், முகைதின் யாசின், மகாதீர் முகமது ஆகியவர்கள் ஆவர். இவர்கள் மூவருக்குள்ளும் தற்போது பிரிவினை ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று அன்வர் இப்ராகிம் மலேசிய அரசரை சந்தித்து இது குறித்து பேசினார். கூட்டணியின் உதவியோடு முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க மகாதீர் முகமது முயன்று வருகிறார்.
மலேசியாவில் நிலையான ஆட்சி அமையாததால் எப்போது வேண்டுமானாலும் தற்போது உள்ள ஆட்சி கலைக்கப் படலாம் என மகாதீர் முகமது சொல்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக