14.01.2021
பதிவு செய்தவர்: முரு மாதவி
பின் கதவின் வழி நுழைந்திட்ட அரசாங்கம்; நிலை அற்ற ஆட்சியில் தடுமாறுகிறது. ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்றத்தில்! நாடாளுமன்றம் ஒரு காட்சிப் பொருளாக திகழ்கின்றது!
கொள்கை அற்றவர்களால் நிர்வாகத்தில் தடுமாற்றம்! இதனோடு கொரோனாவின் கொட்டம்!
நிறைந்த வளங்களையும்; இயற்கையில் அழகிய நாடு மலேசியா. ஒற்றுமைக் குழைவை ஏற்படுத்த நாய்(க்) வந்தது! அதோடு சரி! நாட்டில் பல தரப்பட்ட பிரச்சினைகள்!
வளம் நிறைந்த நாட்டில் நிர்வாகக் குறையினால் இன்னல் படுவது மக்களே! சரி செய்வதற்கு எந்த அரசியல்வாதியும் முயல்வது இல்லை! தன்னலப் போக்கும்... உழலும் கூட.!
கொட்டம் அடங்குமா! நல்லது நடக்காதா என ஏங்கித் தவிக்கிறார்கள் மலேசிய மக்கள்! சிரமத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு என்றைக்கு அந்த விடியல்!
குமரன் மாரிமுத்து: நிருவாகத் திறமை இன்மையும், தான் கொண்ட மதத்தின் பெயரில் இனவாதம் புரியும் அரசியல் வியாபாரிகளால் பற்பல இன்னல்கள். உலக அரங்கில் பீடுநடை போட வேண்டிய நாடு, இன்று தன்மானம் இழக்கும் பரிதாப நிலையில்...
தினகரன் சுப்ரமணியம் தங்காக்: உண்மை தான் ஐயா. இப்போது மலேசியாவில் சமூக நீதி குறைந்து விட்டது.
ரஞ்சன் கங்கார் பூலாய்: இனவாத அரசியல் வாதிகளால் குறிப்பாக... நம்மினத்தவர்களே அதிகம் பாதிக்கப் படுகிறோம்...
தேவி சரஸ் கடாரம்: இறைவனுக்கே வெளிச்சம்🤷🏻♀️
கரு. ராஜா, சுங்கை பூலோ: தம்பி கத்தரிக்காய் 1 கிலோ 12 வெள்ளி. இத்தனைக்கும் அது இந்த நாட்டில் விளையும் ஒரு காய். அதுவும் நம்மவங்க கத்தரிக்காய் போடாமல் சாம்பார் சமைப்பது இல்லை. விலைகள் தாறுமாறாக உயர்ந்திடுச்சு. லஞ்சம் வாங்கும் நபருக்கு பிரச்னை இல்லை. நம்மை போன்றவர்களின் நிலைமை?
ராதா பச்சையப்பன்: கத்தரிக்காய் கிலோ 12 வெள்ளியா? கேட்கவே தலை சுற்றுகிறது😇. எனக்குச் சமையலில் கத்தரிக்காய் தான் முதலிடம் வகிக்கிறது.
ரஞ்சன் கங்கார் பூலாய்: நம்மைப் போன்றவர்களுக்கு திண்டாட்டம்தான்...
Muru Mathavi: இந்த நாடு அரசியல் வாதிகள் கிட்ட மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக