04 பிப்ரவரி 2021

கலியுகம் பற்றி மகாபாரதம்

04.02.2021

மகாபாரதம் பற்றிய காணொலியைப் பதிவு செய்ததும், ஒருவர் அழைத்துப் பேசினார். இந்து மதம் தமிழர்களின் மதம் அல்ல. அதைப் பற்றி ஏன் பெருமையாகக் காணொலிப் பதிவுகளை எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டார். என்ன பதில் சொல்லலாம். அந்தக் காணொலியைப் பதிவு செய்தது தப்பா? தூங்கப் போகும் நேரத்தில் மனதில் சன்னமாய்ச் சின்ன இறுக்கம். அவரிடம் வாதம் செய்யலாம். ஆனால் தூக்கம் கெடும்.

பாலன் முனியாண்டி: தூங்குபவனை எழுப்பி விடாலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவரை எழுப்பவே முடியாது என்பதை போல... இவருடன் வாதம் செய்து நேரத்தை வீணடிப்பதை விட வாதம் பண்ணாமல் இருப்பதே சிறப்பு.

முருகன் சுங்கை சிப்புட்: அவருக்கு தெரிந்த ஒன்றை உங்கள் முன் வைத்துள்ளார். அவர் சொல்வது ஏதும் தவறு இருந்தால், அதை சரிப்படுத்த வேண்டியது தங்கள் கடமை. அதை விடுத்து உதாசீனப் படுத்துவது படித்தவர்களுக்கு அழகல்ல.

தனசேகரன் தேவநாதன்:
புள்ளி வைக்க இயலா விவாதங்கள்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அவரைப் பிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பார்ப்பதில் அழகு இல்லை.

பௌத்தம் ஒரு மதம். சீக்கியம் ஒரு மதம். கிறிஸ்துவம் ஒரு மதம். அந்த மதங்களில் உள்ள நிகழ்ச்சிகளைக் கதையாகச் சொல்லும் போது சிலரும் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். குட் வெரிகுட் என்று பின்னூட்டம் வழங்குகிறார்கள்.

ஆனால் இந்து மதத்தின் கதைகளைச் சொல்லும் போது மட்டும் (வாழ்வியல் தத்துவங்கள்) ஏன் சிலருக்கு சினம் வருகிறது. புரியவில்லை. ஒருவருக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்காமல் போகட்டும். அது அவருடைய 'பசால்'. அதற்காக மற்றவர்களின் இந்து மதக் கருத்துகளை எதிர்ப்பதில் நியாயம் இல்லை.

பி.கு: இந்தப் பதிவைப் படம் பிடிச்சு மற்ற புலனங்களில் போட்டு மலாக்கா முத்துக்கிருஷ்ணன்... தமிழம் இயக்கத்துக்கு எதிரானவன் என்று பிரசாரம் செய்யாமல் இருந்தால் கோடி புண்ணியம். ஏற்கனவே பட்டு இருக்கிறேன்.

ராதா பச்சையப்பன்:
ஆமாம் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். நமக்கு தான் தெரிவது இல்லை.

கரு. ராஜா: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது போன்ற விவாதங்களை தவிர்ப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
இந்து எனும் சொல்லைப் பயன்படுத்தியதற்காக பல முறை வம்புக்கு இழுத்து பல முறை என்னை அசிங்கம் அசிங்கமாகத் திட்டி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி ஓர் இந்துவத்வா என்றால் அதற்கு நாம் இங்கே என்ன செய்வது... இந்து என்பது ஒரு மதம். சிலர் சமயம் என்கிறார்கள். அதன் கீழே சைவம், சைவ சித்தாந்தம், என்பது எல்லாம் பிரிவுகள் அல்லது சமயப் பிரிவுகள்.

தினகரன் சுப்பிரமணியம் தங்காக்:
விடுங்கள் ஆசான் மனிதம் காப்போம்.

தேவிசர கடாரம்: முற்றிலும் உண்மை ஐயா. தெளிவாக சொல்லி இருக்கிறீகள். நமக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றால் அது நம் கருத்து. அதை மற்றவர் மேல் திணிப்பது அநியாயம்.



 

30 ஜனவரி 2021

தேசியப் பள்ளிகளில் மலாய் மொழி வடிவில் இசுலாமிய போதனை

30.01.2021

குமரன் மாரிமுத்து, கிள்ளான்


இந்த ஆண்டு (2021) தேசிய பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சித் திட்ட வரைவு ஒன்று உருவாகப்பட்டு உள்ளது. இந்தப் பயிற்சித் திட்ட வரைவானது மலேசியக் கல்வி அமைச்சால் எல்லா பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளதாக அறியப் படுகின்றது.

இணையம் வழி கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களின் முழுமையான பங்கெடுப்பு பல காரணங்களால் குறைபாடுகளுடன் செல்வதால், வாரம் ஒருமுறை மேற்கண்ட பயிற்சிகள் நகல் எடுக்கப்பட்டு ஒன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் மூலம் பகிர்ந்தளிக்கப் படுகிறது. நல்ல முயற்சிதான். வாழ்த்துவோம்.

அன்பான பெற்றோர்களே, குறிப்பாக தேசியப் பள்ளிகளுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பினால்தான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று பிடிவாதமாக நாங்கள் எல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்டதை எல்லாம் சற்றும் உங்கள் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல் முரண்டு பிடித்த பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ள பயிற்சிகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

முதலாம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே உங்கள் குழந்தைகள் உங்களைவிட்டு, உங்களோடு இணைத்து இருக்கும் உறவுகளைவிட்டு, பந்தங்களைவிட்டு, உங்கள் பண்பாடு, பழக்க வழக்கங்களை விட்டு தூரப் போகத் தொடங்கி விட்டனர் என்பதை உணர முடிகின்றதா?

ஆம், உங்கள் குழந்தைகளுக்கு தேசிய மொழி என்ற அடையாளத்தில் முதலாம் ஆண்டு தொடங்கியே இசுலாமியக் கல்வி பிஞ்சு மனங்களில் ஆழமாகப் பதிக்கப்படுகின்றது; திணிக்கப் படுகின்றது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மதமாற்றத்தை நோக்கி ஒளிமயமாக பயணப்பட்டு விட்டது. இப்போதும் நீங்கள் இரு காதுகளோடு, இரு கண்களையும் மூடிக் கொண்டுதான் இருக்கப் போகிறீர்களா?

ஜாவி எழுத்துகளை தேசிய வகை தமிழ், சீனப் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக அரசாங்க மத வெறியர்களால் திணிக்கப் பட்டுள்ளது. மொழி பாடத்தை மதம் சார்ந்த பாடமாக போதிக்கக் கூடாது என்று நாங்கள் பகிரங்கமாக எதிர்த்து வருகிறோம்.

எதிர்ப்புகள் பலமாக இருந்தும் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களின் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை (எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்களின் நோக்கத்தில் உறுதியாக இருக்கின்றனர்).

மலாய் தொடக்கப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர்களே, தேசியப் பள்ளிகளில் நம்மவர்களின் எண்ணிக்கைக் குறைவு. யோசித்துப் பாருங்கள். உங்கள் குரல் அங்கே எடுபடுமா? உங்கள் குழந்தைகள் மலாய் மொழி என்ற வடிவில் ஆறாம் ஆண்டு முடிவதற்குள் கட்டாயம் இசுலாத்தைக் கற்றுத் தெளிந்துவிடுவர். பிறகு என்ன செய்யப்போகிறீர்கள்?

உங்கள் குழந்தைகளை உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மாற்றிக் கொண்டுவாருங்கள். தாயை விட்டுத்  தறிகொட்டுச் சொன்ற பிள்ளை மீண்டும் தாயின் கால்களில் விழுந்தால் எந்தத் தாயும் எட்டி உதைப்பதில்லை; அணைக்கவே செய்வாள். சிந்தியுங்கள்; சிந்தித்து செயல்படுங்கள்.



25 ஜனவரி 2021

தற்கொலை தீர்வல்ல – ஒரு சமூகப்பார்வை

24.01.2021

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத் தலைமை கொள் – பிரிவு நடத்தும்

இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஜனவரி 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2021

இன்றைய சமூகத்தில் மலினமாகிவிட்ட தற்கொலைகளுக்கு என்ன காரணம், ஒரு சமூகமாக இதை மாற்றவும் புரிந்துகொள்ளவும் நாம் என்ன செய்யமுடியும் என்று பெருந்தகையாளர் இருவரின் சிறப்புரைகளோடு மக்கள் மத்தியிலான கலந்துரையாடலுடன் கூடிய நிகழ்ச்சி.

கருத்துரைகள்: எழுத்தாளர் இமையம் & வழக்கறிஞர் அஜிதா

வரவேற்புரை: முனைவர். சாந்தினிபீ

நோக்க உரை: முனைவர். சுபாஷிணி

நெறியாள்கை: திருமிகு. ஆனந்தி

ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/84395895931

நுழைவு எண்: 84395895931

கடவுச்சொல்: live

இந்திய / இலங்கை நேரம்:  மாலை 5:00 மணி
தென்கொரியா நேரம் :  இரவு  8:30  மணி
மலேசியா / சிங்கை நேரம்: மாலை  7:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - மதியம் 12:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன்  -  காலை 11:30 மணி
வளைகுடா நேரம்: மதியம் 3:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மதியம் 2:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு  10:30 மணி
அமெரிக்க நேரம்: நியூயார்க் : அதிகாலை 6:30  மணி
அமெரிக்க நேரம்: கலிபோர்னியா: அதிகாலை 3:30  மணி

நேரலை @

https://www.facebook.com/TamilHeritageFoundation/
மின்னஞ்சல்: thfruletheworld@gmail.com

https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.instagram.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil
https://www.facebook.com/subashini.thf
https://www.youtube.com/Thfi-Channel
https://twitter.com/HeritageTamil
https://ruletheworld.tamilheritage.org/
https://www.tamilheritage.org/

 

சோழர் காலத்து அந்தமான் தமிழர்கள்

தமிழ் மலர் - 24.01.2021

முன்பு காலத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் முழுவதும் பற்பல பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டுமரங்களின் மூலமாகக் கடல் கடந்து வந்து அங்கே குடியேறி விட்டார்கள்.

பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியா; பாபுவா நியூகினி; போர்னியோ போன்ற இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். மலாயாவில் இருந்து புலம்பெயர்ந்த பழங்குடி மக்களையும் அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் மண்ணின் மைந்தர்களை, அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது. மண்ணின் மைந்தர்கள் என்பது வேறு. அசல் மண்ணின் மைந்தர்கள் எனும் பழங்குடி மக்கள் வேறு. அசல் மண்ணின் மைந்தர்களின் பெயரைச் சொல்லி பேர் போடுபவர்களை அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது.

இராஜேந்திர சோழன் தென்கிழக்காசியாவின் மீது படையெடுக்கும் போது அந்தமான் தீவுகளில் ஏறக்குறைய 200 தமிழர்களைத் தங்க வைத்துவிட்டு இந்தோனேசியாவுக்குப் போய் இருக்கிறார். படையெடுப்பிற்குப் பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது என்ன அவசரமோ; என்ன நெருக்கடியோ தெரியவில்லை.

அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்ற தமிழர்களை மறந்த வாக்கில் சென்று விட்டார்.ஏன் என்று கேட்க வேண்டாம். அந்த மகா சோழரைக் கேட்க வேண்டிய கேள்வி. ஆயிரத்தெட்டு அவசரங்களில் இதுவும் ஓர் அவசரமாக இருந்து இருக்கலாம். அதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கிறது.

அந்தமான் தீவுகளில் அப்படித் தனிமைப் படுத்தப்பட்ட தமிழர்களும் தனியாக வாழ்ந்து தனி ஒரு சமூகத்தையும் உருவாக்கி விட்டார்கள். அந்தத் தீவுகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஷோம்பேன் பழங்குடி மக்களுடன் இணைந்து ஒரு புதிய கலப்பு தமிழர்ச் சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

இன்றும் அந்தத் தமிழர்க் கலப்பு இன மக்கள் ஷோம்பேன் எனும் பழங்குடி இனத்தின் பார்வையில் வாழ்ந்து வருகிறார்கள். முகத்தைப் பார்த்தாலே தமிழர்களின் முகத் தோற்றங்கள் பளிச்சென தெரியும். வேறு விளக்கம் வேறு சான்றுகள் தேவை இல்லை.

(மலேசியம்)
24.01.2021

மலேசியத் தமிழர்களும் குண்டர் கலாசாரமும்

தமிழ் மலர் - 23.01.2021

ஒரு தகப்பனார். அவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளையை மட்டும் ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். அந்தப் பிள்ளை சாப்பிட்ட மிச்சம் மீதியைக் கீழே கொட்டுவதற்குத் தங்கத் தட்டுகள். சிதறிக் கிடப்பதை சீண்டி எடுப்பதற்கு வெள்ளிக் கரண்டிகள்.

மற்றொரு பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்; இப்போது செல்வச் செழிப்பின் சீமத்தில் உட்கார்ந்து உச்சம் பார்க்கிறது.

மற்றொரு பிள்ளையை அந்தத் தகப்பனார் கண்டு கொள்வதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி போய் விட்டார்.

அந்தப் பிள்ளை தட்டுத் தடுமாறி தன் வாழ்க்கையைச் சொந்தமாக அமைத்துக் கொண்டது. ஆனாலும் இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிப் போய் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது.

அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால், அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா.

அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் பிள்ளை. மலேசிய இந்தியர்களில் ஒரு பிரிவாகப் பயணிக்கும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

அந்த மலேசியத் தமிழர்களில் ஒரு சிலர்; குண்டர் கும்பல் கலாசாரத்தில் அடிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர். சொல்ல வேதனையாக உள்ளது. சொல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது.

பொதுவாகவே குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான்கள் அல்ல. இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் சில சமூகத் தலைகளும்; காலம் காலமாக கோலோச்சிக் கோலம் போட்டு வந்தன.

போட்ட கோலத்திற்குள் செடிகள் நட்டு; கொடிகள் வளர்த்து; அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சி; உரம் தெளித்துச் செழிக்க வைத்து விட்டன. வேறு எப்படி சொல்லுவதாம்.

சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய ஒரு சிலர்; இவர்களை வைத்துத் தான் அப்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள்; இப்போதும் ஒரு சிலர் சொப்பனக் கனவுகளில் சுகமாய் வாழ்ந்தும் வருகிறார்கள்.

மன்னிக்கவும். இது சமுதாயம் சார்ந்த உண்மை. 2014-ஆம் ஆண்டில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மலேசியாவில் 218 குண்டர் கும்பல்கள் உள்ளன.

அவற்றில் 49 குண்டர் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்த 49 குண்டர் கும்பல்களில் 33 கும்பல்கள் இந்தியர்களின் ஆதிக்கத்தில் செயல் படுகின்றன என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ’ஓப்ஸ் சந்தாஸ் 1’ எனும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை. அப்போது குண்டர் கும்பல் ஈடுபாடு புள்ளி விவரங்கள் வெளியிடப் பட்டன.

மலேசிய மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 65 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 5 விழுக்காடு.

சீனர்கள் – 27 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 20 விழுக்காடு.

இந்தியர்கள் 7 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 72 விழுக்காடு.

சபா மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 1 விழுக்காடு.

சரவாக் மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 2 விழுக்காடு.

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடு தான். இருந்தாலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 72 விழுக்காடு. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.01.2021