14 ஆகஸ்ட் 2021

தந்தைகளின் இறுதிக்காலம்

14.08.2021

தந்தைகளின்  இறுதிக்காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும்; முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர், அவரைக் கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.

மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, ’மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும்’ என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடம் இருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்.

எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காகக் கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
.
பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதை செய்து இருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

வயதானவர்களுக்குத் தனிமை மிக கொடுமையானது. ஒரு சிறிய வானொலிப் பெட்டியை வாங்கி கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி. இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்துத் தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

குடும்பத் தலைவன் என்பவன் அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்று எல்லாம் வாழ்ந்து விட்டவன்.

தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.

ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு.

பின்னூட்டங்கள்

தேவிசர கூலிம்: அருமையான அவசியமான பதிவு... முற்றிலும் உண்மையான கருத்துகள்... என் தந்தையின் ஞாபகம் வருகிறது. அப்பாவிற்காகவே மாதத்தில் இரண்டு முறை வீட்டிற்கு செல்வேன்.

அம்மா தவறி விட்டதால் அப்பாவை நாங்கள் நன்றாகவே பார்த்துக் கொண்டோம். இருந்தும் அவர் பாதுகாவலர் வேலைக்குச் செல்வார். யார் கையையும் எதிர் பார்க்க மாட்டார்.

சிறப்பான உணவு செய்தால், கணவரிடம் வேலைக்குச் செல்லும் வழியில் அப்படியே கொடுத்துச் செல்லுங்கள் என்று கொடுத்து அனுப்புவேன். இதைப் படித்தவுடன் அதெல்லாம் ஞாபகம் வருகிறது.

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா. தந்தையர்களுக்காக இந்தப் பதிவு. வரிக்கு வரி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற ஒரு காலம் இருந்தது. இன்றில்லை. தந்தையர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிறப்பு.

பெருமாள் கோலாலம்பூர்: பிள்ளைகளுக்காக ஒரு தந்தையின் எதிர்பார்ப்பை அழகாக விவரித்துள்ளீர். ஆனால் பெற்றவர்கள் கொடுத்தே பழக்கப் பட்டவர்கள். பிள்ளைகளிடம் கேட்டுப் பெறாதவர்களாகவே வாழ்ந்து உள்ளனர்.👍👌

ராதா பச்சையப்பன்: 🌻🙏படித்ததும் மனம் அழுகிறது. எட்டு வயதிற்குப் பிறகு தந்தை பாசம் இல்லை. அப்பாவுக்குச் செல்லப் பெண் நான். திருமணத்திற்குப் பிறகும் மாமனாரும் இல்லை. பார்த்ததும் இல்லை. இதை எல்லாம் நினைக்கையில் வேதனைதான். 🙏🌻

வெங்கடேசன்: கலங்க வேண்டாம் மா. பெண் பிள்ளைகள் கலங்கக் கூடாது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் தந்தை மாதிரிதான். நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பிள்ளைகள் தான். கலங்க வேண்டாம் 👍🙌🙌

பாலன் முனியாண்டி: இன்றைய பிள்ளைகள் உணர்வார்களா என்பது கேள்வி குறிதான் ஐயா.

காரணம் அன்று முதியோர் இல்லம் பார்ப்பதற்கு அரிதாக இருந்தது.
இன்று பார்க்கின்ற இடமெல்லாம் முதியோர் இல்லத்தை  காண முடிகின்றது. இதற்கு என்ன காரணமென்று நினைக்கின்றீர்கள்.....

 இந்த கட்டுரை படித்தபோது  கண்கள் கலங்கின....


13 ஆகஸ்ட் 2021

மலேசியத் தமிழர்களுக்கு குலசேகரன் உதவிகள் செய்யவில்லையா?

13.08.2021

மாண்புமிகு குலசேகரன் அமைச்சராகச் சேவை செய்த காலத்தில், அவர் மலேசிய தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் அரசாங்கம் அமைவதற்கு முன்னர், பக்காத்தான் ஹரப்பான் கட்சி ஒரு கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டது. வழக்கமாக எல்லாக் கட்சிகளும், பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.

ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாக அந்தக் கொள்கை விளக்க அறிக்கையில் சொல்வார்கள்.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் கட்சி வெளியிட்ட அந்தக் கொள்கை விளக்க அறிக்கையை முன்வைத்து, மாண்புமிகு குலசேகரனைத் தரம் தாழ்த்திச் சிறுமைப் படுத்தும் ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் காணொலியும் பதிவாகி உள்ளது.

சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டிவிட வேண்டுமா என்று அந்தக் காணொலிப் பதிவாளர் கேட்கிறார். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கரு. ராஜா: இந்த அம்மணி நியாயமாகப் பேசுறாங்க... ஒரு தமிழனை, குறை சொல்ல, தமிழர்கள் தான் வருகிறார்கள்.

......: நியாயமான கருத்துரை. மாண்புமிகு குலசேகரன் அமைச்சரானதும் ஏற்கனவே இருந்த அதிகாரம் என்ன என்ன செய்து இருக்கிறது; அந்த அதிகாரத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்து அறிக்கை தயாரிக்கவே ஆறு மாதங்கள் பிடித்தன. கோப்புகள் மேல் கோப்புகள்.

இவர் அமைச்சராவதற்கு முன்பு இருந்தே நண்பராக இருந்தவர். அதனால் சில பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். பொதுவில் பகிர இயலாது. அரசு நிந்தனையாகலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வெளியே தெரியாமல் நம் இனத்திற்கு நிறைய உதவிகள் செய்து உள்ளார். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது ஐயா.

......: உங்களுக்கும் அதைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன்

தேவிசர கடாரம்: இவர் இந்திரா காந்தியின் வழக்கிற்கு பணம் வாங்கவில்லை என்று கேள்விப்பட்dஉ இருக்கிறேன்...

......:உண்மைதான். இந்திராகாந்தியின் பிரச்சினை இந்த நாட்டுத் தமிழர்களின் பிரச்சினை எனும் முன்னெடுப்பில் நகர்ந்தவர். ஒரு கட்டத்தில் அவர் பணிபுரிந்த பாலர் பள்ளியில் அவருக்கு ஊழியப் பிரச்சினை; ஊதியப் பிரச்சினை. அவற்றுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டவர். இங்கு விளக்கமாகச் சொல்ல இயலாது. புரிந்து கொள்ளும்மா...

சித்தியவான் சனாதன ஆசிரமம்

தனசேகரன் தேவநாதன்: சித்தியவான் சனாதன ஆசிரம குழந்தைகளின் அடையாள அட்டை பிரச்சனைகளை 90 சதவிகிதம் தீர்வு கண்டவர். பொறுப்பில் இல்லாத போதும் இருந்த போதும் அந்த ஆசிரமத்திற்கு இன்று வரை உதவி வருபவர்.

இவ்விடம் வந்தால் ஆசிரமக் குழந்தைகளுடன் நிறைய நேரத்தை செலவிடும் அன்பான மனிதர். தனது பதவி காலத்தில் பெரிய மானிய தொகையை ஆசிரம குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கியவர். சித்தியவான் மண்ணிற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் 🙏🌹👌🙏🌹👌

......: தகவலுக்கு நன்றிங்க. ஆயர் தாவார், சித்தியவான் பகுதிகளில் தமிழர்கள் பலருக்கு நீல அடையாள அட்டைகள்; குடியுரிமை சான்றிதழ்கள் பெற்றுத் தந்துள்ளார். உண்மை.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

கணேசன் சண்முகம் சித்தியவான்: தெரியும் ஐயா. அன்றைய நிகழ்வை நான் தான் வழி நடத்தினேன். அமைச்சர் என்ற முறையில் சிறப்பான சேவையை செய்தார் ஆசிரமத்திற்கு.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தகவலுக்கு நன்றிங்க கணேசன் ஐயா. கண்ணுக்குள் ஈரம் இருப்பது நமக்கும் தெரியாது. வெளியே உள்ளவர்களுக்கும் தெரியாது. கண்ணுக்கு மட்டுமே தெரியும்.

வெங்கடேசன்: ஒருவரை பற்றி நன்கு ஆராயாமல் கண்டபடி புலனங்களில் திட்டுவது நம் மக்களுக்கு வா(வே)டிக்கையாகி விட்டது 🤷



 

தெலுக் இந்தான் கோவிந்தன் ஆசிரியர்

13.08.2021

தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பளியின் முன்னாள் தலைமையாசிரியர். நேற்று கோவிட் 19- தொற்றினால் காலமானார். மிகவும் அமைதியானவர். இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கோவிட் இறப்பு. நம்ப முடியவில்லை.


வெங்கடேசன்: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்தான் அதிகமாக இறந்து போகிறார்கள். என்னவென்றே புரிய வில்லை ஐயா 🤷‍♀️

நெடுஞ்செழியன் பிரிக்பீல்ட்ஸ்: தடுப்பு ஊசி போட்டு விட்டால் கோறணி தொற்றாது என்ற அறியாத்தனத்தில் எற்படும் அலட்சிய போக்கின் விளைவு

கலைவாணி ஜான்சன்: கொடுமை ஐயா.. இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தொற்று கண்டு இறப்பது.. நம்மவர்களின் மரணங்கள் அதிகம் ஐயா... வேதனை... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராதா பச்சையப்பன்: நாம் யாருக்கும், பிறந்த நாள், திருமணநாள் போன்ற நல் வாழ்த்துகளைக் கூறுவதை விடுத்து, இப்படி  இரங்கல், அனுதாபம் ஆத்ம சாந்தி ஓம் நமசிவாய என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறோமே...

இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு... என்னவோ, ஏதோ என்று பயந்து பயந்து  வாழப் போகிறோம். அலைபோசி சத்தம் வந்தாலும் முன் போல் சந்தோசமாக எடுப்பதை விட்டு, எடுக்கலாமா, வேண்டாமா? யாருக்கு என்னவோ" என்ன சேதியை சொல்லப் போகிறார்களோ என்று தினம் தினம் மனம் திக் திக் என்று அடித்துக் கொள்கிறது.

நிம்மதியாக உண்டு, உறங்கவும் இயலவில்லையே" இவற்றை நாம் கடந்து போவது எப்போது என்று மனம் அழுகிறது. தீர்வு எப்போது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் 😭🙏🙏.

கலைவாணி ஜான்சன்: மிக உண்மை சகோதரி....கைப்பேசி அழைப்பு, அனைவரையும் பயத்தில் ஆழ்த்துகிறது.

தேவிசர கடாரம்: உண்மை சகி... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு இன்றைய சூழலில் அதுவும் சம்பவமாகிவிடக்கூடாது... அதுவே என் பிராத்தனை.

கலைவாணி ஜான்சன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். சகோதரி. ஏற்புடையது. ஏற்றுக் கொள்வோம்...

தேவிசர கடாரம்: இன்றைய சூழ்நிலையில் நம்மவர்களின் இறப்பு விகிதம் மனவேதனையை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை வேண்டாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு தடுப்பூசி போட்டாச்சு... தைரியமாக வெளியில் செல்லலாம் என்று அலச்சிய போக்கோடு செயல் படுகிறார்கள். இரண்டுமே வேதனையை அளிக்கிறது. 🥺

வெங்கடேசன்: ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்னுடைய நண்பர்கள் சிலர் இப்படிதான் அலட்ச்சியமாக இருக்கிறார்கள். தடுப்பூசியை பற்றிய விழிப்புனர்வு மிக குறைவு. தடுப்பூசி செலுத்திய பிறகு நம் உடலில் அது எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து வைத்து கொள்வது இல்லை 🤷‍♀️

கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த அனுதாபங்கள்...! நித்தமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மரண செய்திகள். இறைவா... உலக மக்கள் அனைவரையும் இந்த பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றுவாயக...!

கரு ராஜா: நாட்டில் மரணச் செய்தி மிக சர்வ சாதாரணமாக வந்து கொண்டு இப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமே. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள ஐ எம் ரெடி.

கலைவாணி ஜான்சன்:
இறப்பு அனைவர்க்கும் உரியது. நேரம் வரும் போது, போய்த் தான் ஆக வேண்டும். ஆனால் நான்கு பேர் இல்லாத மரணம். சிந்திக்க வேண்டும் சகோதரரே 🙏

தனசேகரன் தேவநாதன்: பாசமும் நேசமும் நிறைந்த மனிதர்கள் வேதனையை தாங்க இயலாது என்பது இயற்கையின் விதி. காலம் மட்டுமே ஆறுதல் அளிக்க முடியும். மனோதைரியம் அனைவருக்கும் கிட்ட இறைவன் அருள்வானாக. ஓம் நம சிவாய.

 

சாரதா நயனதாரா சாந்தி பெறுக

13.08.2021

செல்வி சாரதா நயனதாரா, முன்னாள் நயனம் ஆசிரியர் இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகள். இராஜகுமாரன் அவர்கள் மறைந்த ஆதி. குமணன் அவர்களின் அண்ணன் ஆவார். கோவிட் தொற்று காரணமாக நயனதாரா மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 


அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறோம்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா சாந்தி பெற இறைவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறோம். 


பாதாசன்: நம்பமுடியவில்லை. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. செல்வி சாரதா நயனதாரா, இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகளின் மரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறேன்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல ஆண்டவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.


ராதா பச்சையப்பன்: பார்க்க முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. ஓம் நமசிவாய. ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏.

மலையாண்டி மலாக்கா: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவா இந்த மண் மீது வாழும் எங்கள் இனத்தின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்.

கரு ராஜா: ஆழ்ந்த இரங்கல். நாட்டில் மரணச் செய்தி மிகs சர்வ சாதாரணமாக வந்து கொண்டிப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது.


கலைவாணி ஜான்சன்: மரணங்களின் ஓலங்கள்.... ஜீரணிக்க முடியவில்லை.... என்னவென்று சொல்வது. மலேசிய மண்ணில் தமிழுக்காக கோலோச்சிய ஒவ்வொரு ஜீவன்களையும் மரணம் தழுவிச் செல்வது தாங்கிக் கொள்ள முடியாத வேதனை.... நயனதாராவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

வெங்கடேசன்: ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆந்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.😭

தனசேகரன் தேவநாதன்: அழகிய முத்தாரம் அறுந்து போனதே... என்று தணியும் இந்த வேதனை இறைவா இறைவா ஓம் நமசிவாய


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இறைவா... என்ன சொல்வது என்று தெரியவில்லை. வாழ வேண்டிய வயது. ஆதி. இராஜக்குமாரன் தன் வாழ்நாளில் தன் மகளுக்காகவே வருத்தப் பட்டவர். மலேசியம் அன்பர்களின் ஆழ்ந்த இரங்கல்... ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏼🙏🏼

விஜயசிங்கம்: என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

உதயகுமார் கங்கார்: ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் நமசிவாய.

மகாலிங்கம் படவேட்டான்: ஆழ்ந்த இரங்கல்... ஓம் நமசிவாய... ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

செல்லா செல்லம்: ஓம் சாந்தி  🙏 ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி

 

மலேசியம் இணையத்தளத்தில் மலேசியம் புலனப் பதிவுகள்

13.08.2021

வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிவாகும் தகவல்கள் மூன்று வாரங்களில் தானாகவே அழிபடும். அந்த வகையில் ‘மலேசியம் இணையத்தளம்’ தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் உறுப்பினர்கள் பதிவு செய்த அழகு அழகான பதிவுகள்; மணிமணியான முத்திரைப் பதிவுகள் எல்லாமே அழிந்து போய் விட்டன.


இனி வரும் காலங்களில் அப்படி நடக்காது. மலேசியம் புலனத்தில் பதிவாகும் நல்ல பதிவுகள்; நேர்த்தியான பதிவுகள் அனைத்தும் மலேசியம் இணையத் தளத்திலும் உடனுக்குடன் பதிவாகும்.

அவ்வாறு பதிவு செய்வதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்த படசம் இரண்டு மணி நேரம் வரை செலவாகலாம். பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் நேர்த்தியான பதிவுகள் அனைத்தையும் சேகரித்து இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

மலேசியம் இணையத்தளத்தில் பதிவாகும் புலனப் பதிவுகள் காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும். நாம் மறைந்த பின்னரும் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும்.

இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின்னரும்; அல்லது 1000 ஆண்டுகள் கழித்தும், அடுத்து வரும் தலைமுறைகள் அவற்றைப் படித்துப் பார்ப்பார்கள். நம்மைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

மலேசியம் எனும் பெயரில் ஒரு புலனம் இருந்தது. இப்படி எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்; இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று அவர்களும் பேசிக் கொள்வார்கள். அந்தப் பதிவுகள் தான் நாம் நம் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனம்.

வெங்கடேசன்: சிறப்பான முயற்ச்சி வாழ்த்துகள் ஐயா. தங்கள் செயல் மிக சிறப்பான ஒன்று 🙏🙏

கணேசன் சண்முகம் சித்தியவான்: உண்மை ஐயா. போற்றப்பட வேண்டிய செயல். காக்கப்பட வேண்டிய எழுத்துச் சாசனங்கள்.

தனசேகரன் தேவநாதன்: இது ஒரு மாபெரும் பணி. பொய் சேவையே மெய் என கருதுகிறோம் எனும் அண்ணன் அன்பானந்தன் அவர்களின் அமுத மொழி  ஓட்டப் பந்தயத்தில் எங்களையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறீர்களே...

பொய் புளுகுச் சரித்திர மூட்டைகளை அடித்துத் துவைக்கும் உங்கள் எழுத்துக்ள் என்றென்றும் உயிர் பெற்று வாழும். அன்னை சரஸ்வதி அனைத்தையும் உங்களுக்கு அருள்வாய் என அன்னையை வேண்டி இந்த அமுத கானத்தை உங்களுக்காகச் சமர்ப்பணம் செய்கிறேன்.

https://youtu.be/l1kYJFo-uBU

தேவிசர: சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

தேவிசர: வணக்கம் அப்பா. கற்றுக் கொண்டதை வீணே விரயம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன் படட்டும் என்ற உயர்வான எண்ணம் கொண்ட தங்களுக்கு இறைவன் எந்த நேரத்திலும் துணை இருப்பார்.

சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

கரு. ராஜா: அருமை

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் தனசேகரன் ஐயா. தங்களின் நீண்ட பதிவு மனதில் ஆழமாய் வருடிச் செல்கின்றது.

இதற்கு மேலும் எதை எழுதுவது... தெரியவில்லை. தங்களைப் போன்று நல்ல உள்ளங்கள் நாட்டிற்கும் தேவை. வீட்டிற்கும் தேவை. இந்தப் புலனத்திற்கும் தேவை. வாழ்த்துகள் ஐயா