15 ஜனவரி 2024

போகி பண்டிகை

 இமயவர்மன், திருச்சி - 15.01.2024


🎉 போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும்!. இது பின்னர் மருவி போகிப் பண்டிகை என்றாகி விட்டது.

🎉 வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது. போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல்நாள் கொண்டாடப்படுகிறது. 


🎉 பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர்.

🎉 இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி நாளன்று புதிதாக வீட்டிற்குக் கொண்டு வருவார்கள்.

காப்புக் கட்டுதல் :

🎉 போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு-ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

🎉 மாவிலை காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் வருவதைத் தடுக்கும். விஷ முறிவுக்கு உதவும்.

🎉 வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை வரவிடாமல் தடுக்கும். ஆவாரம் பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளைத் தடுக்கும். தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.

இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :

🎉 மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு.

🎉 மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.

பழைய பொருட்களை எரித்தல் :

🎉 பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துவார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். 

அதனோடு மட்டுமல்லாமல்  மனதில் இருக்கும் துயரங்களையும் அழிப்பதால் இப்பண்டிகையைப் போக்கி என்றனர். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். 

அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இந்த கொண்டாடத்தின் வெளிப்பாடாகும்.

10 ஜனவரி 2024

வாழ்க்கையில் நீக்குதல் கோட்பாடு

THEORY OF ELIMINATION IN  LIFE 


பெருமாள், கோலாலம்பூர் (10.01.2024)

வாழ்க்கையில் நீக்கப் படுவதற்கான 3 நிலைகள்:

60 வயதில், பணி செய்த இடம் உங்களை நீக்குகிறது. உங்கள் தொழில் வாழ்க்கையின் போது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக அல்லது ஆற்றல் மிக்கவராக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சாதாரண நபராகத்தான் திரும்புவீர்கள்.

எனவே, உங்கள் கடந்தகால வேலையில் இருந்து மேன்மையின் மனநிலையையும் உணர்வையும் பற்றிக்கொள்ளாதீர்கள், உங்கள் ’ஈகோ’-வை விடுங்கள், அல்லது நீங்கள் உங்கள் இலகுவான உணர்வை இழக்க நேரிடலாம்!


70 வயதில், சமூகம் உங்களை படிப்படியாக நீக்குகிறது.

நீங்கள் சந்திக்கும் மற்றும் பழகிய நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் குறைவாக இருப்பார்கள், மேலும் உங்கள் முன்னாள் பணியிடத்தில் யாரும் உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள். 
 
ஏனென்றால், இளைய தலைமுறைக்கு உங்களைத் தெரியாது; மேலும் நீங்கள் அதைப் பற்றி சங்கடமாக உணரக் கூடாது!

80 வயதில், குடும்பம் உங்களை மெதுவாக நீக்குகிறது.

உங்களுக்கு பல பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் மனைவியுடனோ அல்லது உங்களுடனோ வாழ்வீர்கள்.

உங்கள் பிள்ளைகள் எப்போதாவது வருகை தந்தால், அது அன்பின் வெளிப்பாடாகும். எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தீவிரமாக இருப்பதால், குறைவாக வருகை தந்தால் அதற்கு அவர்களைக் குறை கூறாதீர்கள்!

90 வயதில், பூமி உங்களை தவிர்க்க விரும்புகிறது. இந்தக் கட்டத்தில், சோகமாகவோ துக்கமாகவோ இருக்க வேண்டாம்,

ஏனென்றால் இதுவே வாழ்க்கையின் வழி, எல்லோரும் இறுதியில் இந்தப் பாதையைத் தான் பின்பற்றுவார்கள்!

எனவே, நம் உடல்கள் இன்னும் நல்ல நிலையில் இருக்கும்போது, வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!

நீங்கள் விரும்புவதைச் சாப்பிடுங்கள், நீங்கள் விரும்புவதைக் குடியுங்கள், விளையாடுங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் விசயங்களைச் செய்யுங்கள்.


நினைவில் கொள்ளுங்கள், உங்களை நீக்காத ஒரே விசயம் வாட்ஸ்அப் குழு மட்டுமே. எனவே, குழுவில் அதிகம் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு வணக்கம் சொல்லுங்கள், உங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், வருத்தப்பட வேண்டாம்!

எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள். இந்த்ச் செய்தி மூத்த குடிமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

(பதில் இடுகைகள்)

உலக வாழ்க்கையை
நாளும்
நினைத்தாலே
ஈகோ 
என்ற கேள்விக்கே இடமில்லை.

இனி எப்படி வாழ்வது
என்று
இப்பொழுது தான்
திட்டமிடவேண்டுமா,
இதற்கு எப்பவோ
தயாராகி
இருந்திருக்கவேண்டும்.

வாழும் வரை
போராடு
உண்மைதான்.

உடலில்
வலுவுள்ளவரை
போராடி
மகிழ்ந்து
மடிவோம்.
அவ்வளவுதான்.

நமது வயதினிலே
வேறு 
என்ன செய்வது.
எல்லாம்
அவன் செயல்
என்று
வாழ்ந்த காலங்களை
அசை போட்டுக்கொண்டு
உடம்பையும்
கவனித்துக்கொண்டு
நமது
நேரம் வரும்போது
இறைவனே
அழைத்துக்கொள்வான்.

பிறப்பும்
இறப்பும்
அவன் கையிலே.

தற்காலிக
இடமாக
இந்த பூலோகத்தில்
தங்க வாய்ப்பளித்த
இறைவனுக்கு
நாளும்
நன்றி சொல்லி
நம் நாளை
எதிர்நோக்குவோம்.

சரணம் சொல்லி
மரணம் காண்போம். ta

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம்

மகாலிங்கம், பினாங்கு (07.01.2024)

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம், பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரிலிருந்து, அன்றைய போர்ட் வேல்ட்; இன்றைய கோலா செபத்தாங் வரையில், ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பெற்றது. 


அன்று தைப்பிங் நகரில் உள்ள ஈய இலம்பங்களில் எடுக்கப்பட்ட ஈயக் கட்டிகளை போர்ட் வேல்ட் துறைமுகத்திற்கு எடுத்து செல்ல உருவாக்கப் பட்டது தான் இந்த இரயில் தண்டவாளம்.

இன்றைக்கு ஒட்டு மொத்தமாக இந்தப் பகுதிகள் அனைத்தும் சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ளன. வித விதமான வியாபாரங்கள் நடைப் பெறுகின்றன; வித வித மான உணவுகள், கருவாடுகள், கடல் பயணம் என்று ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு மிக நிம்மதியாக வாழ்கிறார்கள்.

உழைக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள்...

(பதில் இடுகைகள்)

பெருமாள், கோலாலம்பூர்

இதிலே 
பழமையும்
புதுமையும்
இருக்கையிலே...

மலேசியா முழுமையும்
துடைத்தொழிக்க
காரணமென்ன...

பழயனவற்றை
இன்றும்
பாதுகாத்து
வரும் அரசு
ஏன்
அத்தகைய மாற்றத்தை
முன்னெடுத்தது
என்பதை
அன்றைய KTM நிர்வாகம் பதிலலித்தால் சிறப்பாக இருக்கும்...

இப்படி பழசும்
பதுசும்
பார்வையில்
விழுந்தால்
அந்த கால
நினைவலைகள்
சிறகடித்துப்போகும்...

கண்டிப்பாக
சுற்றுப் பயணிகளை
கவர்ந்திழுக்கும் இடங்கள் பல உள்ளன.
MATIC பின்னோக்கி நகருமா. ta

12 டிசம்பர் 2023

அன்வார் 2023 அமைச்சரவையில் இந்திய அமைச்சர்கள் இல்லை

(இன்று 12.12.2023 மலேசியாவின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் மலேசிய இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) ஓர் அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. அதன் விளைவாக மலேசியா முழுமைக்கும் மலேசிய இந்தியர்களிடையே அதிருப்தி நிலை. அது குறித்து மலேசியம் புலன அன்பர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு உள்ளன.)

Dhanasegaran Thevanathan: அமைச்சரவையில் தமிழர்கள் காணாமல் போனது மலேசிய எம்.ஜி.ஆர் செயத சாதனை... வேதனை... மாற்றத்தின் மகிமை


Muthukrishnan Ipoh: மக மக மனுசன் இப்போதைக்கு போக மாட்டான் என்று கிந்தா கிளி ஜோசியர் சொல்கிறார்... அவரின் இரண்டாம் தவணையில் நான்கு இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுத்து நம்மை எல்லாம் கண் கலங்க வைத்தாரே... ஆனால் கழுத்தை அறுக்கப் போகிறார் என்பதை தாமதமாகத் தான் ஐயா தெரிந்து கொண்டோம்...

Dhanasegaran Thevanathan: அவன் கழுத்தறுத்தான்... இவன் கருவறுத்தான்...

12/12/2023, 11:07am - Ganeson Shanmugam Sitiawan: விடாது ஐயா சும்மா விடாது. இவரது ஆட்டம் பொய்யாட்டம் என்றால் நிச்சயம் பேரிடி விழும். விழுந்தே தீரும்.

12/12/2023, 11:07am - Muthukrishnan Ipoh: என்னத்தைச் செய்தாலும் நம் இனத்திற்கு அரசியல் விமோசனம் என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருக்கும்... ’அவர்களுக்குள்’ பதவிகளை மாற்றிக் கொள்வார்கள்... ’அம்புட்டுத்தான்... எல்லா பிரதமர்களும் அதைத்தானே செய்து வருகிறார்கள்... அன்பருக்கு’ பிடிக்காதவர்களை பதவியில் இருந்து தூக்கி விடுவார்...


அருமையான சொல்லாடல்... உண்மையிலேயே இப்போது உள்ளவன்... கருவையே அறுக்கிறான்... வெள்ளிடைமலை...

12/12/2023, 11:10am - Mahalingam Padavettan Penang: தமிழனுக்கு சாப கேடோ???

12/12/2023, 11:10am - Dhanasegaran Thevanathan: தமிழர் முழுஅமைச்சராக இல்லாதது சரித்திரத்தில் முதல் முறை

12/12/2023, 11:11am - Muthukrishnan Ipoh: அடுத்த தேர்தலில் நம் இனத்தின் வாக்குகள் நிச்சயம் ????... இப்போதே என் பிள்ளைகளிடம் சொல்லி வைத்து இருக்கிறேன்...

12/12/2023, 11:11am - Ganeson Shanmugam Sitiawan: 👍👍👍

12/12/2023, 11:12am - Dhanasegaran Thevanathan: ஆட்சி கவிழ ஆதரிக்கிறேன்

12/12/2023, 11:13am - Mahalingam Padavettan Penang: ஆசை வார்த்தைகளை நம்பி நம்பி ஏமாந்த ஒரு இனம்... யாரைத்தான் நம்புவதோ?


12/12/2023, 11:16am - Muthukrishnan Ipoh: மிகச் சரி. இந்த நாட்டின் இந்தியர் மக்கள் தொகையில் 82.8 விழுக்காடினர் தமிழர்கள்.

12/12/2023, 11:16am - Dhanasegaran Thevanathan: தழிழர் சார்ந்த இயக்கங்கள் உடனடியாக தங்கள் ஒட்டு மொத்த எதிர்ப்பை காட்டுவார்களா

12/12/2023, 11:26am - Muthukrishnan Ipoh: இதைக் காரணம் காட்டி இன்னோர் அரசியல் கட்சியைத் திறப்பார்கள்.... 


12/12/2023, 11:28am - Mahalingam Padavettan Penang: ஆனால், ஒரு சதவிகிதம் அரை சதவிகிதம் இருக்கிறவர்களுக்கு 82.8 சதவிகிதம் உள்ள தமிழர்கள் எலும்பு துண்டுக்கு அடிமையாக இருப்பதால் தான்... நமது உரிமைகள் பறிபோகுது... நம்மவர்கள் உணர்வார்களா?

12/12/2023, 11:29am - Mahalingam Padavettan Penang: இதுவும் சுயநலம் தான்... பேச வேண்டியது நிறைய இருக்கிறது...

12/12/2023, 11:35am - Kalaivani Johnson: பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு.. நான் நலம் நீ நலமா.. என்று எழுதுகிறது நம் விரல்கள்.. இது மனித இயல்பு.!

12/12/2023, 11:52am - Dhanasegaran Thevanathan: 3 துணை தமிழ் அமைச்சர்கள்
குலா. சரஸ்வதி ரமணன்


12/12/2023, 12:39pm - Muthukrishnan Ipoh: மகிழ்ச்சியான செய்தி... மூன்று தமிழர்கள்... எதிர்ப்பார்த்தது... சிவக்குமார் அமைச்சரான பிறகு இவர் மீது நிறையவே குற்றச்சாட்டுகள்... இலக்கவியல் அமைச்சராக கோபிந்த் சிங் டியோ நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆள்பல அமைச்சராக Steven Sim Chee Keong நியமிக்கப்பட்டு உள்ளார். 

*மலேசிய அமைச்சரவை மாற்றம்*

*TERKINI*

Rumusan Rombakan Kabinet
_*MENTERI YANG DIGUGURKAN*_

1) YB Sivakumar a/l Varatharaju
_*MENTERI BAHARU*_

1) Gobind Singh Deo
2) Datuk Seri Dr.Haji Dzulkefly Ahmad
3) Datuk Seri Johari Abdul Ghani
4) Steven Sim Chee Keong
5) Datuk Seri Amir Hamzah Azizan (dilantik Senator)

_*TIMBALAN MENTERI YANG DIGUGURKAN*_

1) Ramkarpal Singh a/l Karpal Singh
2) Datuk Siti Aminah binti Aching

_*TIMBALAN MENTERI YANG BAHARU*_

1) Datuk Seri Noraini Ahmad
2) M.Kulasegaran a/l V.Murugeson
3) Datuk Ramanan Ramakrishnan
4) Wong Kah Woh
5) Dr. Zulkifli bin Hasan (Dilantik Senator)

_*RUMUSAN KESELURUHAN*_

1) Jumlah Ahli Jemaah Menteri meningkat daripada 28 orang ke 31 orang
2) Jumlah Timbalan Menteri meningkat daripada 27 orang ke 29 orang. 
3) Jumlah keseluruhan meningkat daripada 55 orang ke 60 orang.


12/12/2023, 1:25pm - Muthukrishnan Ipoh: *மலேசிய இந்தியர்களில் எவரும் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லை* >>> பிரதமரின் கணிப்பாக இருக்கலாம்... மாண்புமிகு சிவகுமார் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி; மற்றும் ஜ.செ.க தலைவர்களில் ஒருவர். இந்தக் கட்டத்தில் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு சேவை செய்ய அவரின் அனுபவம் மிக மிக அவசியம் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இப்போது ஜ.செ.க ஆட்சியில் உள்ளது. எனவே மாண்புமிகு சிவக்குமார் தொடர்ந்து இந்தியர்களின் பிரதிநிதியாகவும், தகவல் தொடர்பாளராகவும் செயலாற்றலாம்.

இந்தியர்களின் ஏழ்மை நிலை, கல்வி நிலைப்பாடு, கோயில்கள் பிரச்சினை, சமூக-பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகச் சீர்கேடுகள் மற்றும் இவை போன்ற பல பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. 

எதிர்க்காலத்தில் மாண்புமிகு சிவக்குமார் நம் இந்தியர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான கருத்து. இன்று அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை... மிக மிகக் கேவலமாகவும் மிக்க வேதனையாகவும் உள்ளது. 

1957-இல் மலாயா சுதந்திரம் அடைந்ததில் இருந்து... இதுவரையிலும் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டதே இல்லை. *அன்வார்  கொடுத்த பரிசு* 

12/12/2023, 1:51pm - Kalaivani Johnson: வணக்கம் ஐயா....தகுதி இல்லாத ஒருவரை தேர்ந் தெடுத்தது நம் தவறு தான். அவர் யார் என்பதை நமக்கு காண்பித்து விட்டார்.

12/12/2023, 1:52pm - Muthukrishnan Ipoh: நம்பினோம்... மோசம் போனோம்...

Melayu Anak saya... 
China Anak Saya... 
India Anak Saya... 
Kadazan Anak Saya ...

12/12/2023, 1:58pm - Kalaivani Johnson: எம்.ஜி.ஆர் .... பல பொய்கள்...

12/12/2023, 1:59pm - Muthukrishnan Ipoh: தலை சுற்றுகிறது... இரண்டு பெணடோல் இருந்தால் கொடுங்கள்... 

12/12/2023, 2:09pm - Perumal Kuala Lumpur: இந்த ஆட்சியின் லட்சணம் பாதியிலே பிட்டுக்கலாம்... சபாகாரன் துணிந்து ஓராங் டாயாக் என்கிறான். சாபாவின் பூமியின் புத்திரன் என பேச்சு ஆரம்பம். இங்கே mgr சீக்கிரம் காத்து வாங்க போகலாம். நாளும் பெரிக்காத்தான் வாங்கு வாங்குன்னு வாங்குரான். புதிய அமைச்சரவையை அவரே மெச்சிக்கனும். தலை சுற்றத்தான் செய்யும். ஆப்பு அடிக்க தயாராவோம்.

12/12/2023, 2:35pm - Perumal Kuala Lumpur: பாவம் YB sivakumar அவர்கள். இந்த ஆட்சி மட்டுமே ஒரு தமிழனை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

12/12/2023, 2:45pm - Muthukrishnan Ipoh: விரைவில் மலேசிய இந்தியர்கள் பின் தள்ளப்படுவார்கள்... கோபிந்த் சிங் மலேசிய இந்தியர் அல்ல... *சீனர்கள்* 6 முழு அமைச்சர்கள் 6 துணை அமைச்சர்கள்... மலேசிய இந்தியர்களுக்கு... 
*1* முழு அமைச்சர்... (சீக்கியர் - bukan Orang India)
*3* இந்தியத் துணையமைச்சர்கள்

12/12/2023, 2:53pm - Perumal Kuala Lumpur: மத்தியில் ஒரு சீக்கியர் வடக்கே ஒரு சீக்கியர்
12/12/2023, 2:56pm - Perumal Kuala Lumpur: தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய சீக்கியர்களை Mgr அடையாளம் காட்ட முடியுமா.

12/12/2023, 2:59pm - Mahalingam Padavettan Penang: தமிழனை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்... ஏமாளி தமிழனை எப்படியெல்லாம் வதைக்கலாம் என்பதை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசியல் தலைவர்களும் புரிந்துக் கொண்டு மிக சிறப்பாக காயை நகர்த்துகிறார்கள்...

12/12/2023, 2:59pm - Mahalingam Padavettan Penang: PMX க்கு நன்றி வாழ்த்துக்கள்.

12/12/2023, 2:59pm - Kalaivani Johnson: தமிழர்களுக்கான பிரதிநிதிகள் சரியாக இருந்திருந்தால், நாம் ஏன் அன்வாருக்கு ஓட்டு போடப் போகிறோம்..? வாய்த்தவர் சரியில்லை, வந்தவரும் சரியில்லை...இப்போது ஓட்டுப் போட்டவர்களை குறை சொல்லி என்ன பயன்?  நமது இனத்தின் ஒற்றுமையின்மையே இந்த சூழ்நிலைக்கு காரணம்...

12/12/2023, 3:06pm - Perumal Kuala Lumpur: அம்னோ பொலிவிழந்து செயல்படுகிறது. ஓங்கி நின்ற நம் தாய்கட்சியோ ஒதுங்கி நிற்கிறது... பாரிசானை கணக்கிட்டு கச்சிதமாக காய் நகர்த்தும் Mgrரை காலை வாரி விடுவோர் வெகு தூரமில்லை. மணி அடிக்காதே என்ற போதே மரண அடி கொடுத்திருக்க வேண்டும். சங்கூதும் ஒலி தொடங்கியாச்சு.

12/12/2023, 3:24pm - Muthukrishnan Ipoh: இந்தப் பதிவுகள் அனைத்தையும் தொகுக்கப்பட்டு நம் மலேசியம் இணையத் தளத்தில் பதிவு செய்யப்படும்... 💐


12/12/2023, 3:28pm - Kennedy Arumugam Grik Perak: அப்பொழுது பார்க்கும் பொழுது மனதிற்கு சுகமாக இருந்தது. இப்பொழுது பார்க்கும் பொழுது மனதிற்கு சுமையாக இருக்கிறது.

12/12/2023, 3:31pm - Kalaivani Johnson: நம் இனத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இவர் அன்று... இவர் தவறு இல்லையே.... மனம் குமுறுகிறது.... 😡😡

நானும் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்... ஆனால் நடப்பது எல்லாம் கானல் நீர்... உண்மைதான்... அவரின் ஆனந்தக் களிப்பு... இமயத்தில் உச்சம்... பலரும் அப்படியே... 😞😞

12/12/2023, 3:35pm - Kennedy Arumugam Grik Perak: எல்லோரையும் நம்பி நம்பி மோசம் போனது தான் மிச்சம் ஐயா.

12/12/2023, 3:36pm - Muthukrishnan Ipoh: நஜீப் எவ்வளவோ பரவாயில்லை... நடப்பது நடந்தே தீரும்... 😞

12/12/2023, 3:38pm - Kalaivani Johnson: மிகச் சரியாக கூறினீர்கள் ஐயா...நாம் அனைவரும் ஆனந்த களிப்பில் இருந்தோம்.....நம்பிக்கை துரோகி.....

12/12/2023, 4:04pm - Mahalingam Padavettan Penang: அன்று பார்த்த போது கூட கடுப்பாக தான் இருந்தது... இப்போது 1000 மடங்கு மகா கடுப்பாக இருக்கு... இப்படிப்பட்ட சுய நிலை மறந்த ஜென்மங்கள் கூட இருக்கா என்று... 😭😢😭😢😭

12/12/2023, 5:07pm - Kumaran Marimuthu: இந்தியர்களை பின் தள்ளும் முயற்சிகளை இன்றைய பிரதமர் தீவிரப்படுத்தி இருக்கின்றார். இது அவருக்குப் புதிதல்ல.

சிலாங்கூர் மாநிலத்தில் PKR சார்பில் ஒரு தவணை மட்டுமே ஒருவருக்கு ஆட்சிக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டது. கடந்த மூன்று தவணைகளாக ஒரு இந்தியருக்கும் PKR சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சிரித்து சிரித்து கழுத்தறுத்துவிட்டார் அன்வார். ஆனாலும், அந்தக் கட்சி இந்திய ஆதரவாளர்கள் இன்னும் கிணற்றுத் தவளைகளாகவே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

12/12/2023, 5:14pm - Kumaran Marimuthu: சாகிர் நாய் முன்பு இட்ட ஓலம் நினைவில் உள்ளதா? காபிர்கள் அமைச்சர்களாகவும் உயர் பதவிகளிலும் இருக்கக்கூடாது; இசுலாமியர்கள்தான் மேல்மட்டத்தை அலங்கரிக்க வேண்டும்; காபிர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குக் கீழ் அடிபணிந்துதான் வாழ வேண்டும் என்று கூறியது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அன்வரும் அவரின் சீடர்தானே? குருவின் ஆசியை நடைமுறைபடுத்துகிறார்...... மலேசிய MGR

12/12/2023, 5:26pm - Kalaivani Johnson: நாய் நன்றி உள்ள மிருகம் ஐயா... சாகிர் கழுதையை, ஒருநாள் இந்தக் கழுதை பின்னங்காலால் உதைக்கும் பொழுது, பின்னாள் நிற்கும் எம்.ஜி.ஆர் வேடம் அணிந்தவர் உதை வாங்குவார்... கூடிய விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது...

12/12/2023, 5:50pm - Perumal Kuala Lumpur: கண்மூடித்தனமான தொண்டர்களை பகடைக்காய் ஆக்கியவர்... பதவி சுகத்தால்... பழமையை மறந்து... புதுமையான சுகபோகம் காண்கிறார். வரும் ஒரு  திருப்புமுனை அது. ஏவுகனையாகவே வரும்.

12/12/2023, 5:55pm - Murugan Sivam: மலேசிய எம்.ஜி.ஆர் தெய்வம்... இன்னும் இருக்கு.....

12/12/2023, 5:56pm - Raja Sg Buluh: நம் இனத்திற்கு முழு அமைச்சர் இல்லாத புதிய அமைச்சரவை. தமிழன் முழு அமைச்சராக இருக்க லாய்க்கில்லையோ!!!இந்த நாட்டு தமிழர்களுக்கு ஒரு தலைக்குனிவு! சிங் சமூகத்தை விட நாம் என்ன அறிவில் குறைந்தவர்களா?

தமிழன் அரை மந்திரியாக இருக்கத்தான் லாயக்கு என்று பிரதமர் முடிவு எடுத்துவிட்டாரோ? இவருக்கு அரை மந்திரி கொடுத்து அவமானப் படுத்தியது நியாயமா?

12/12/2023, 6:00pm - Perumal Kuala Lumpur: பாரிசான் ஆட்சி தானே நடக்குது அதையே பின் பற்றி ஒரு  தமிழனுக்கு முழு அமைச்சர் தந்திருந்தால் அன்வாரின் பதவியோ பட்டமோ பறி போயிருக்குமோ.....


12/12/2023, 6:04pm - Raja Sg Buluh: இந்தச் செய்தியை கேட்டால் தமிழனுக்கு முழு மந்திரி கிடைக்க வாய்ப்பே இல்லை ராஜா. நல்ல அடி.........

12/12/2023, 6:23pm - Murugan Sivam: அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும்...(எம்ஜிஆர்)

12/12/2023, 7:10pm - Raja Sg Buluh: வணக்கம் மலேசிவாழ் தமிழினத்தினர் அனைவரும் இதனைக் கட்டாயம் படித்துப் பார்ப்பதோடு இனிவரும் காலங்களில் இந்நாட்டு அரசியலும் இந்த அரசியலினால் தமிழர்களாகிய நமது எதிர்கால நிலைப்பாடும் மிகப் பெரிய கேள்விக்க குறியாகவுள்ளது??? 


இம்மண்ணில் ஐந்து  தலைமுறையை எட்டியுள்ள நாம் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்த  இனம் என்று பெருமைப் பேசுவது வெட்டிப் பேச்சுக்கு இனி இடமில்லை.  

இன்றைய இளையோர்களும் பெற்றோர்களின் அர்ப்பணிப்புகளால் எந்தவோரு கடினங்களும் மேற்கொள்ளாமல் 4 வேலை சோறு, உடுத்த உடை, நண்பர்களோடு சுற்றித் திரிந்து எதிர்காலத்தைப் பற்றி கவலையின்றி இருக்கின்றனர் (சிலரை தவிர). 

இப்போது உள்ள இளையோர் முதலில் அனுபவிப்போம் பின்னால் பார்த்துக் கொள்வோம் எனும் தத்துவத்தைக் கடைப்பிடிக்கின்றனர் (Most if current generation policy is to enjoy first n the rest later part). 

எனவே நமக்கு நாமேதான் எதிர்காலத்தை முடிவு செய்துக் கொள்ள வேண்டுமேயொழிய எந்த அரசியல் கட்சியும் தலைவரும் வாயிலாக எதுவும் கிடையாது? தயவுசெய்து இதனைப் பொறுமையாக முழுமை படித்துப் பகுத்தறிந்து பகிருங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்.  

(Dear beloved Msian Tamilians.  Please take few moment and be patient to read rationally this comment n share it. The previous and the current political scenario does not benefit us at all.  We may proud to say that we particularly majority Tamils who makes the Indian community had contributed the economic growth and for development and also for the progress of this nation. This old self-proud sayings does not valid n doesn't make sense to this current Malaysia.  And as such the previous and the current government never bother about us.  So we have to take care of our  future by ourselves. Think rational. Thank you 🙏🙏🙏

2/12/2023, 8.14pm - Kumaran Marimuthu: துணை அமைச்சர் பதவியைக் கொடுத்து அன்வார் குலாவை ஏமாற்றிவிட்டதாக நீங்கள் ஆதங்கப் படுகின்றீர்கள். ஆனால், தூக்கி எறிந்த எலும்புத் தூண்டை கௌவிக் கொண்டு ஓடும் நாயைப் போல அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளாரே... அதற்கு என்ன சொல்வது ஐயா? மானங்கெட்ட பிழைப்பு ஐயா இது...... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

12/12/2023, 8.40pm - Perumal Kuala Lumpur: அரசியல்வாதிகள் எது கிடைத்தாலும் கௌவிக் கொள்வதில் பேர் பெற்றவர்கள்

12/12/2023, 8.44pm - Perumal Kuala Lumpur: அன்வார் 2023 அமைச்சரவையில் இந்திய அமைச்சர்கள் இல்லை

12/12/2023, 9.08pm - Murugan Sivam: அப்போ குலாவை ராஜினாமா செய்ய சொல்லாமே... இங்கே பலருக்கு குலாவுடன் நேரடி தொடர்பு உண்டுதானே....

12/12/2023, 9:10pm - Raja Sg Buluh: அதுதான் எலும்புத் துண்டு கிடைத்துவிட்டது. எப்படிங்க ராஜினாமா ???????


08 டிசம்பர் 2023

பத்து தீகா கரு. ராஜாவின் மனவேதனைகள்

கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர்

சிலாங்கூர், புக்கிட் ஜாலில் அரங்க வளாகத்தில் 08.12.2023 - 10.12.2023 வரையில் இலவச இருசக்கர வண்டி கவசத் தொப்பிகள் வழங்கப்படுகின்றன எனும் செய்திக்கு பத்து தீகா கரு. ராஜா வழங்கிய பதில் பதிவுகளில் அவரின் மனவேதனைகள் பிரதிபலிக்கின்றன. அண்மையில் அவரின் மூன்றாவது மகன் ராஜமோகன் புற்றுநோயினால் மரணம் அடைந்தார். அந்தத் தாக்கம் இன்றும் அவரிடம் உள்ளது.


அவரின் பதிவு: காலையிலேயே போனால் ஒரு கவசத் தொப்பி வாங்கி வரலாம். ஒரு தடவை நான் பெட்டாலிங் ஜெயாவில் இருந்து பத்து தீகா போகும் போது இடையில் மடக்கி பழைய தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு ஒரு புதிய தொப்பியைக் கொடுத்தார்கள்.


எனக்கு இப்போது 77 வயது. இன்னும் இருசக்கர வண்டியை விரும்பி ஓட்டுகிறேன். ஒரு சிலர் என்னைப் பார்த்து இருசக்கர வண்டி ஓட்ட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்வார்கள். இந்தக் காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுவேன்.

சமீபத்தில் காலமான என் மகன் பெரிய மோட்டார் ஓட்டுவான். 900 சி.சி. நான் அவன் விசயத்தில் தலையிடமாட்டேன். இந்த மலேசியாவில் எல்லா இடங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று இருக்கிறான். அவனோடு சேர்ந்து சுமார் 50 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பயணிப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் எந்த விபத்தும் நடக்கவில்லை. இந்தக் கேன்சர் வந்து என் மகன் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

பதில் இடுகைகள்:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:

வயதை நினைக்காதீர்கள் ராஜா... மனசோடு வாழுங்கள்... என்னைப் பாருங்கள்... இன்றும் 16 என்றும் 16... அப்படி போய்க் கொண்டே இருக்கிறேன்... வயதை நினைத்தால் அங்கே ஒரு உள்ளார்ந்த தடை ஏற்படுவதை உணரலாம். Age is a number என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

07 டிசம்பர் 2023

ஈப்போவில் ஈமச் சடங்கு செய்ய 2500 ரிங்கிட்?

 மாசிலன், பகாவ் - 07.12.2023

அந்த அர்ச்சகர்களை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே இந்த இந்தியச் சமுதாயம் தானே... குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் இவர்களுக்கு இடம் கொடுப்பதால் தான் இந்த அளவுக்கு கேட்கிறார்கள்.


முன்பு கிராமப் புறங்களில் இறப்பு நிகழ்வுகளில்‌ தொண்டு அடிப்படையில் சேவை வழங்குவார்கள். ஆனால் இன்று அது ஒரு வணிகம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது.

ஈமச் சடங்குகள் செய்வதற்கு 2500 ரிங்கிட் கேட்ட அர்ச்சகர்...  100 ரிங்கிட்டில் செய்து முடிக்க வேண்டிய காரியம்...


மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமயத்தின் பெயரில் அதீதமாகக் கட்டணம் கேட்பது நியாயமன்று. இந்த சகோதரியைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து நம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வரவேண்டும்.

ஈப்போ யோகேஸ்வரிக்கு மாமன்னரின் சிறப்பு விருது

 கென்னடி ஆறுமுகம், கிரீக், பேராக் - 07.12.2023

பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலரின் இரக்கச் செயல்களுக்காக, மாட்சிமை தாங்கிய மலேசிய நாட்டின் பேரரசரின் கரங்களால் அவருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.


ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (Hospital Raja Permaisuri Bainun, Ipoh) பாதுகாவலரான யோகேஸ்வரி (Puan Yogeswary), சில மாதங்களுக்கு முன்பு நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் இவர் உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து வைரலானது.

இந்த மருத்துவமனைக்கு வரும் குடும்பங்களின் மிகவும் கடினமான தருணங்களின் போது பார்க்கிங் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற அவரது உதவிகள் இந்த குடும்பங்கள் தாங்கும் கஷ்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு டிசம்பர் 19, 2023 அன்று இஸ்தானா நெகராவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதற்கு முன்னர் இவர் கிரீக் குழுவக தமிழ்ப்பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றினார். அங்கும் அவர் சேவையை செய்தார். பள்ளி மாணவர்களை வாகனத்தில் இருந்து இறக்குவது, அவர்களை வாகனத்தில் ஏற்றி விடுவது, அவர்களது புத்தக பைகளை எடுத்து சென்று வகுப்பறையில் வைப்பது, எவ்வளவு கனமழை பெய்து தான் நனைத்தாலும் மாணவர்களை மழையில் நனைய விடாமல் அழைத்து வருவார். 


ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா மணிக் கணக்கில் கடின உழைப்பை உழைக்கும் பொது மக்கள் தங்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது நம் இதயங்களை அரவணைக்கிறது. 
 
நாம் பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதை அர்பணிப்புடனும், மனநிறைவுடனும் செய்தால் எந்த ஒரு உயரிய நிலையையும் அடையலாம் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 


இவருக்கு கடந்த மார்ச் 21-இல் பேராக் மாநில அளவிலான மகளிர் தின கொண்டாட்டத்தில் இவருக்கு செஜாத்திரா வனிதா விருது (Sejahtera Wanita Award) (பாதுகாப்பு வகை) எனும் சமூக சேவை விருதும் வழங்கப்பட்டது. அவர் பேராக் முதலமைச்சர் டத்தோஸ்ரீ சாரணி முகமட்டிடம் இருந்து விருதைப் பெற்றார்.

மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபாவின் (Health Minister Dr Zaliha Mustafa) கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சி யோகேஸ்வரியின் அர்ப்பணிப்புக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

வாழ்த்துக்கள் சகோதரி யோகேஸ்வரி! ❤

-----------------------------------------------------------------

இடுகைகள்:

பெருமாள், கோலாலம்பூர்

வாழ்த்துகளும் நம்
இனத்திற்கு கிடைத்த பெருமையே.

ஒரு ஆண் பாதுகாவலர்
ஒருவர் அன்மையில்
பள்ளி ஒன்றிலிருந்து
ஓய்வு பெற்றார்.

ஆசிரியர்கள்
மாணவ மாணவியர்களும்
அவருக்கான பிரியாவிடையில்
பல பரிசு பொருட்களும்
கொடுத்து வழியனுப்பியுள்ளதும்
மனம் நெகிழ்வு கொள்ளும் நிகழ்வே.

செய்தொழிலை தெய்வமாக
மதிப்போரை பாராட்டுக்கள் தானாக
தேடி வரும் என்பதை
மெய்பிக்கும் இந்த நிகழ்வுகளே சாட்சியாகிறது.

நாமும் அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்.ta





03 டிசம்பர் 2023

கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி

தனசேகரன் தேவநாதன் - 03.12.2023
வெண்பா மண்டப திறப்புவிழா

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் மற்றும் ஒரு சாதனைத் தளமாக கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி (SJKT Kampung Columbia, Ayer Tawar) உருமாற்றம் கண்டு வருகிறது. பற்பல போராட்டங்களுக்கு இடையில், மலேசிய தமிழர்களை ஈர்க்கும் வகையில், பற்பல சாதனைகளையும் படைத்து வருகிறது. 

பேராக், மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் பகுதியில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது. 1918-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 105 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டில் கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. 

அத்தகைய கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாகத் தழைத்து வளர்ந்து வானுயரும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றுதான் பேராக், ஆயர் தாவார் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி. நல்லது நடக்கும் இடத்தில் நலிவின்மையும் தொடரும் என்பார்கள்.


அந்த வகையில் அண்மைய காலத்தில் இந்தப் பள்ளியில் எலிகளின் தொல்லையும் எல்லை மீறிப் போய்விட்டது. இப்பள்ளியைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் செம்பனை மரங்கள்; இயற்கை மேவிய பச்சை சமவெளிகள். அந்த வகையில் எலிகளும் மற்ற மற்ற ஊர்வனங்களும் இந்தப் பள்ளியில் அழையா விருந்தாளிகளாக வந்து போவது வாடிக்கையானது. 

பொது இடங்களிலும் சரி; பள்ளி வகுப்பறைகள் மற்றும் சிற்றுண்டி சாலையிலும் சரி; எலிகளின் கழிபொருள்கள் பெரும் சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்தன. எலிகளை ஒழிக்கும் பல்வேறு திட்டங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை.



அஸ்ட்ரோ செய்திக் காணொலி

தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் படிப்பை மேற்கொண்டால், அதுவே பின்னர் காலத்தில் மாணவர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று பேராக் மாநில சுகாதார இலாகாவும் எச்சரிக்கை செய்தது. 

அந்த வகையில் எலிக் கழிவுகள், எலிகளின் சிறுநீர் துர்நாற்றத்தால் இந்தப் பள்ளி மூடும் ஆபத்தை நோக்கி இருந்தது. பள்ளியின் அமைவிடத்தை மாற்ற வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டது. அதே கட்டத்தில் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளிக்கு பின்புறத்தில்; தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஓர் இடத்தில் புதிய பள்ளியைக் கட்டுவதற்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.


புதிய பள்ளி கட்டுவதற்கான நிலத்தை கொள்முதல் செய்யும் முயற்சிக்கு பேராக் மாநில மனித வள சுகாதார ஒற்றுமைத் துறை; இந்திய நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரும்; சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்களும் உறுதுணையாக இருந்தார். 

அதே வேளையில் ஓர் இக்கட்டான நிலைமை. புதிய பள்ளியின் நிலத்திற்கு 1.3 இலட்சம் ரிங்கிட் முன்பணம் (பிரிமியம்) கட்ட வேண்டும் என நிபந்தனையும் தொடர்ந்தது. இருப்பினும் மாநில அரசாங்கத்தின் தலையீட்டினால் அந்த முன்பணத் தொகை செயல்பாடு நிறுத்தம் செய்யப்பட்டது.


புதிய பள்ளிக்கு புதிய கட்டடத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு வழியாக, அடுத்த ஆண்டு மலேசியத் துணைக் கல்வியமைச்சர் இப்பள்ளிக்கு வரவிருப்பதாகவும் மாண்புமிகு சிவநேசன் தெரிவித்தார். 

பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2022-ஆம் ஆண்டில், மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 11,231 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 1679 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். அத்துடன் மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,602 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

தற்போது கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியில் 52 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்; 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன். சிறப்பான முறையில் கட்டொழுங்கான பார்வையில் பள்ளி நிர்வாகம் பயணித்து வருகின்றது. 



வணக்கம் மலேசியா காணொலி

பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பற்பல உள்நாட்டு வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு உயர்நிலைத் தோற்றத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். ஆயர் தாவார் தமிழர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை!

கடந்த 02.12.2023-ஆம் தேதி இப்பள்ளியின் வெண்பா மண்டபம் திறப்புவிழா கண்டது. அத்துடன் சிற்றுண்டி தினமும் நடைபெற்றது. அந்த நிகழ்வில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்: 

1) மாணவர்களுக்கான பள்ளி நடவடிக்கைகளின் செலவு 
2) போக்குவரத்து கட்டணம்
3) கட்டட பழுது பார்ப்பதற்கான செலவு
4) வகுப்பறைகளில் திறன் தொலைக்காட்சி (Smart TV) பொருத்துதல்


பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பற்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மைய காலங்களில் வாகனங்களின் மூலமாக பள்ளிக்கு வரும் பி 40 பிரிவு குடும்பங்களின் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆண்டில் இருந்து வாகனப் போக்குவரத்து ஆண்டுத் தொகையான 12,500 ரிங்கிட்டை பேராக் மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. மகிழ்ச்சி தரும் செய்தி.


கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியின் வெண்பா மண்டப திறப்புவிழாவிற்கும்; மற்றும் பல பள்ளி நடவடிக்கைகளுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும்; பள்ளி மேலாளர் வாரியக் குழுவினரும்;  பொது மக்களும் வற்றாத ஆதரவை வழங்கி வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன்

இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் வழிநடத்தியவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் ஆகும் அவர்களுக்கு பொறுப்பு வகித்த ஆசிரியர் திரு. மோ. கலைச்செல்வன். 

உலகின் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் தமிழ் மொழியின் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும். இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி என வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன் கூறுகிறார்.


தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் மொழியின் ஆணி வேர் தமிழ்ப் பள்ளிகளின் சன்னிதானத்தில் தான் வேர் ஊன்றி உள்ளன. தமிழ் பள்ளிகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற முடியும். அதுவே காலத்தின் கட்டாயம்.

01 டிசம்பர் 2023

மனித நேய மலேசிய உணர்வு

தனசேகரன் தேவநாதன், சித்தியவான், பேராக் - 01.12.2023

இனங்களுக்கு இடையில் மனிதத் தன்மைகள் பரவலாக அனுசரிக்கப் பட்டால், அங்கே பகுத்தறிவு வளர்கிறது. இணைந்து போகும் தாராள மனப்பான்மையை வெளிப்படுகிறது. அதுமட்டுமல்ல அவையே பகைமை உணர்வை வளர்வதைத் தடுக்கிறது என்று கூட சொல்லலாம்.


எல்லா இனங்களும் இணைந்து ஒவ்வொருவரின் மாறுபட்ட கலாசாரத்தை ஏற்றுக் கொள்வது பல்லின மக்கள் வாழும் நாட்டில் சுபிட்சத்தை வளர்க்க உதவும். ஒற்றுமையைக் காண நல்லெண்ணம் தேவை. நம்மை விட சிறந்தவர் எவரும் இல்லை என்கின்ற முரட்டு இறுமாப்பு நல்லிணக்கத்தை வளர்க்காது.

பேராக், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான், கிந்தா தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அங்கு பணிபுரிந்த ஓர் இந்திய பாதுகாவலரிடம் தங்களின் அன்பின் வெளிப்பாட்டை வெளிக் கொணர்ந்த முறை மலேசியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

உலகின் முதல் பெட்ரோல் நிலையம்

கென்னடி ஆறுமுகம், கிரீக், பேராக் - 01.12.2023

இன்று டிசம்பர் 1, 1913-ஆம் ஆண்டு இதே நாளில்தான் வாகனத்தை உள்ளே ஓட்டிச் சென்று பெட்ரோல் நிரப்பும், உலகின் முதல் பெட்ரோல் நிலையம், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அமைக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் இருப்புச் சாமான் விற்கும் கடைகளிலும், கொல்லர் பட்டறைகளிலும்தான் எரிபொருள் வாங்க வேண்டியிருந்தது. உலகின் முதல் நீண்ட கார்ப் பயணத்திலிருந்து திரும்பும் போது, ஒரு மருந்துக் கடையில்தான் பெர்த்தா பென்ஸ் என்பவர் மீண்டும் எரிபொருள் நிரப்பினார். 


பெட்ரோலியத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் லைக்ராய்ன், ஈதரைப் போலவே இருக்கும். இதை மருந்துக் கடையில் வாங்கித்தான் காரில் நிரப்பி, தன் திரும்பி வரும் பயணத்தை மேற்கொண்டார் பெர்த்தா பென்ஸ். அதனால் உலகின் முதல் பெட்ரோல் நிலையம் மருந்துக் கடைதான்! 

முதல் பெட்ரோல் விற்குமிடம் 1905-இல் அமெரிக்காவின் மிசவுரியில் தொடங்கப்பட்டது. இதில் வாகனத்தை உள்ளே ஓட்டிச் சென்று நிரப்ப முடியாது என்பதால் இது கடைதான்! 

முதல் பெட்ரோல் நிலையம் 1913-இல் அமைக்கப் பட்டாலும் பெரிய வரவேற்பை உடனடியாகப் பெறவில்லை. அக்காலத்தில் கார்களின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டும் காரணமல்ல. எல்லா கார்களும் பெட்ரோலால் இயங்கவில்லை. எத்தனால், மின்சாரம் ஆகியவை மட்டுமின்றி, நிராவியில் இயங்கும் கார்களும் புழக்கத்திலிருந்தன. 

இதனால் வாகனங்களுக்கு இலவசமாக நீர், காற்று ஆகியவற்றையும், பின்னர் சாலை வரைபடங்களையும் (மேப்) இலவசமாக வழங்கிய முதல் பெட்ரோல் நிலையம் இதுதான். 1917வரை பென்சில்வேனியா மாநிலம் முழுவதற்குமே 7 பெட்ரோல் நிலையங்கள்தான் இருந்தன. 

மோட்டார் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குறைந்த விலை கார்கள் வரத் தொடங்கியதையடுத்து, 1920-இல் அமெரிக்கா முழுவதும் 15 ஆயிரமாகவும், 1920-களில் இறுதியில் 2 இலட்சமாகவும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 

உலகம் முழுவதும் பெட்ரோல் என்று அழைக்கப்பட்டாலும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கேசோலின், கேஸ் என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. இதனால் அங்கு பெட்ரோல் நிலையங்கள் கேஸ் ஸ்டேஷன் என்று அழைக்கப்படுகின்றன. 

மலேசியா போன்ற நாடுகளில் பெட்ரோல் பம்ப், பெட்ரோல் ஸ்டேஷன் என்றும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் பங்க் என்றும் எரிபொருள் நிலையங்கள் அழைக்கப் படுகின்றன.

பத்தாவது மனிதன்

கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர் - 01.12.2023


கடவுள் வந்தார்...!

“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.


முதல் மனிதன் : “எனக்கு அம்பானி போல் கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்: “நான் கூகுள் சுந்தர் பிச்சை போல சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் : “எனக்கு ரஜனிகாந்த் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி: “ஐஸ்வர்யாராய் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் maximum எந்த அளவு மன நிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு் கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்... சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! 

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! 

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம் ஒன்பதில் ஒன்றா..? இல்லை, பத்தாவது மனிதனா..?

படித்ததில் பிடித்தது

25 நவம்பர் 2023

மலேசியத் தமிழர் இனம் 2023

(பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்)

மலேசியத் தமிழர் இனத்தின் எழுச்சியால்
2008 ஆட்சி மாற்றத்தால்
அன்றைய 2007 முயற்சி...
ஆரம்பத்தில் வெற்றி பெற்ற முயற்சி...


அதில்...
உயர்ந்த சுகம் அனுபவித்தது
இரண்டு இனங்கள் தான்...

நாம் நமது முயற்சி...
நமது இந்த எழுச்சி...
"விழலுக்கு இரைத்த நீராக" போய் விட்டது...

அடி உதை வாங்கியவன் ஒரு புறமிருக்க
துன்பம் பட்டவன் ஒரு புறமிருக்க
சிறைவாசம் சென்ற கூட்டம் ஒரு புறமிருக்க
அநாதையாக்கப்பட்ட ஓர் இனக் கூட்டம் ஒரு புறமிருக்க...

மலேசியத் தமிழர் இனத்தின் போராட்டத்தைக் கொண்டு
இன்றும் சொகுசு வாழ்க்கை வாழும் பலர் உள்ளனர்.
அதில் அன்னிய இனத்தவர்கள் மட்டுமல்ல
மாறாக நம் இனத்தை சார்ந்தவர்கள் மிக அதிகம்...

அரசியல் மூலம் தனி மனிதனாக
குடும்ப அரசியல் நடத்திக் கொண்டு
கோடான கோடு சொத்துக்கள் சேர்த்துக் கொண்டு
அவர் அவர் குடும்பத்தை வளர்த்துக் கொண்டு
வாரிசு அரசியல் என்று
இராஜ போக வாழ்க்கை வாழ்கிறார்கள்...

இதற்கு உதாரணம் நிறைய உண்டு...
இன்றளவும் இதை தான் செய்து கொண்டு வருகிறார்கள்...

தமிழர்கள் பலர் அவர்களுக்கு வாலை பிடித்துக் கொண்டு
எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு பின் தொடர்கிறார்கள்...
அவர்களோ... தன் இன அரசியல் செய்கிறார்கள்...
கேட்பாரில்லை... ஐயகோ...

அன்று எழுச்சி கொண்ட மலேசியத் தமிழர் இனம்
இன்றும் கோழை இனமாக
பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கு...

இந்த 16 ஆண்டுகால போராட்டத்தின் மூலம்
"பூனைக்கு மணிக்கட்டிய" இனத்துக்கு
கிடைத்தது என்ன?
சாதித்தது என்ன?
வாழ்கிற வாழ்க்கை தான் என்ன?

அறுபது ஆண்டு கால ஆட்சியில்
ஒன்றும் கிடைக்கவில்லை
அந்தத் தாக்கத்தில் தான் "இந்திய இனம்"  
குறிப்பாக 90 சதவிகித தமிழர்கள்
தலைநகரில் 2007-இல் ஒன்று கூடினார்கள்
(அதில் எனது குடும்பமும் தான்)

என்ன ஆச்சு?

அரசாங்கமும் நமது குறையை கேட்டு அறியவில்லை...
செவி சாய்க்கவில்லை...
ஒரு முக்கியத்துவம் கொடுக்க வில்லை...

(ஆரம்பத்தில் ஒரு சில சலுகைகளை கொடுத்தது குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு)

ஆனால், 2007 எழுச்சிக்குப் பிறகு
இன்று நமக்கு ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்த்தால்
ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை...
ஒன்றுமே இல்லை...

காரணம் நமக்கென்று ஒரு சரியான சமுதாயத் தலைவன் இல்லை
வந்தவன்...
போனவன்...
இருக்கிறவன்...
எவனும் நல்லவன் இல்லை...

வருவான் என்று எதிர்ப்பார்த்தால்
எல்லோரும் 1000 சதவிகிதம் சுயநலவாதிகளே...

நம்மவர்களை ஏணிப்படியாக வைத்து...
மேலே போகிறார்களே தவிர
நம்பிய இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற எண்ணம் எள் அளவும் இல்லை.
நாம் சிந்திப்பதும் இல்லை... திருந்துவும் இல்லை...

சுயநல நரிக்கூட்டமும்
நம்மை சிந்திக்க விடமாட்டார்கள்...

ஆக............
ஒரு காலத்தில் "மக்கள் சக்தி"
என்று வாய் கிழிய கத்திய வாய்கள் இன்று "பண சக்தி" "தன சக்தி"
என்று சத்தமில்லாமல் இரகசியமாக மனதுக்குள்ளேயே கூவுது...

சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...
அன்புடன்
நாம் தமிழர்
நாமே தமிழர்...

ஆக்கம்: பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்
25.11.2023


01 டிசம்பர் 2022

மலேசியம் புலனத்தின் பதிவுகள் - 23.11.2022


23/11/2022, 5:22 am - Ratha Patchiappan: *காலம் போடும் கணக்கு*

இறைவனைத் தவிர யாராலும் மாற்ற முடியாது. அதனால் நல்லதை நினை... நல்லதை செய்... மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்... 🌹

23/11/2022, 7:28 am - Dhanasegaran Thevanathan: 🌸🙏🌹 நல்லதை செய்து நல்லதை நினைத்து நல்லலதை விதைப்பதே நலமிக்கச் செயல்...

23/11/2022, 10:04 am - Muthukrishnan Ipoh: அன்வார் நல்ல ஒரு தலைவர்... அரசியல் காரணங்களுக்காக ஒருவரால் பழி வாங்கப் பட்டார்...

23/11/2022, 11:05 am - Dhanasegaran Thevanathan: முந்தைய தேர்தலில் அன்வாரை முன்னிறுத்தி மக்கள் வாக்களித்தனர்... இப்போது மதம் என்ற வட்டத்தில் மக்களும் நாடும் சிக்கி தவிக்கின்றனர்... பொன் விளையும் பூமியில்... சமயம் எனும் போர்வையில் ஊழலுக்கு வரப்பு கட்டி நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

23/11/2022, 11:11 am - Selvakumar Sanmuka Thevar: ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல.. விழுந்த போது எல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை..!!  வாழ்க வளர்க *தமிழன்*

23/11/2022, 11:11 am - Dhanasegaran Thevanathan: அரசர் நல்ல முடிவை அளிப்பார் என நம்புவோம்🙏🌹🌸

23/11/2022, 11:15 am - Vengadeshan: உண்மை ஆசான் சில தனி மனித வக்கிர புத்தியால் நாடே நாசமாகிறது 😭

23/11/2022, 11:15 am - Devi Kedah Kadaram: உண்மை... உலக நாடுகள் மத்தியில் மூவினமும் ஒன்றான மலேசியாவின் அழகான தோற்றத்தை தேர்தலுக்குப் பின்னர், சில அரசியல் கட்சிகள் உடைத்து தரைமட்டமாக்கி வருகின்றன...

23/11/2022, 11:35 am - Muthukrishnan Ipoh: கிழவர் இரும்புப் பிடி... மொசின் இன வெறி... அடி அவாங் மத வெறி... *எல்லாம் சுயநலம்*

23/11/2022, 11:38 am - Ratha Patchiappan: எவ்வளவு பெரிய  மத வெறியாக இருந்தாலும்  ஒருநாள் எவரும் மண்ணுக்குள்தான் போகனும். அப்போது மதம் இனம் தெரியாது...

23/11/2022, 11:42 am - Ratha Patchiappan: இந்த உண்மையை மொகைதீனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதனால் தான் இத்தனை அலைக்கழிப்பு.

23/11/2022, 11:44 am - Ratha Patchiappan: மனசு திக் திக் என்று அடித்து கொண்டு இருக்கிறது......?

23/11/2022, 11:47 am - Paul Servai: ஐயா... மாமன்னர் நாட்டை ஆட்சி செய்ய கட்டாயத்திற்கு வந்தால்... சட்டத்தில் இடம்  உண்டா?

23/11/2022, 11:49 am - Ratha Patchiappan: இவரின் ஆதங்கம் மிகவும் சரியே... உண்மை.. மனித நேயம்..

23/11/2022, 11:58 am - Vengadeshan: நாட்டையும் மக்களையும் பற்றி எந்தக் கவலையும் கிடையாது இவர்களுக்கு...

23/11/2022, 12:03 pm - Mahalingam Pada: இன வெறி ஊறிப் போன இக்காலத்தில் இதை சிந்திப்பார் யார்?

23/11/2022, 12:03 pm - Vengadeshan: எனக்கு தெரிந்து ஒரு வழி முறை இருப்பதாக நினைக்கின்றேன். தேர்தலில் வெற்றி அடைந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்தில்... இரு பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரைக் கட்சிக்கு அப்பாற்பட்டு மனசாட்சியின் படி வாக்களித்து தேர்வு செய்யலாம்.

23/11/2022, 12:03 pm - Vengadeshan: நாடாளுமன்றத்தை கூட்டி...

23/11/2022, 12:08 pm - Ratha Patchiappan: நல்ல முடிவை எதிர்ப்பார்ப்போம்....

23/11/2022, 12:21 pm - Cikgu Sivalingam: எதையும் சவாலாய் ஏற்றுக் கொள்ளும் தார்மீகம்...

23/11/2022, 12:32 pm - Muthukrishnan Ipoh: சட்டத்தில் இடம் இருக்கிறது. மாமன்னர் தனக்குப் பிடித்த ஒருவரைக் காப்பு பிரதமராக நியமிக்கலாம். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனால் இராணுவத்தைக் கொண்டு நாட்டை பாதுகாக்கலாம். அனைத்து உரிமைகளும் அவரிடம் உள்ளன. ஒன்றே ஒன்றைத் தவிர... சட்டம் இயற்றுவது... நாடாளுமன்றத்தின் மக்களவை மேலவை கொண்டு வந்த மசோதாவை சட்டம் ஆக்குவது. அவர் சம்மதிக்க வேண்டும்.

23/11/2022, 12:35 pm - Muthukrishnan Ipoh: (நம்ப) நிலைமையும் இதே நிலைமைதான். நடிக்கத் தெரியாது... அதனால் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

23/11/2022, 12:42 pm - Muthukrishnan Ipoh: நடக்கிற காரியம் இல்லை சார்... இராத்திரியோட இராத்திரியாக மொசக் குட்டி ஒரு கூட்டம் போட்டு ஒரு வழி பண்ணி விடும்... ஜால்ரா போட இருக்கவே இருக்கு கிளாந்தான் ஆடி அமாவாசை... மொசக்குட்டி தெரியும் தானே... செரட்டோன் அரசு கவிழ்ப்பின் கதாநாயகர்...

23/11/2022, 12:43 pm - Vengadeshan: ஆமாம் ஆசான் உண்மைதான் நீங்கள் சொல்வது இவர்களிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது...

23/11/2022, 12:46 pm - Muthukrishnan Ipoh: *மலேசிய இந்தியர்கள் அனைவரும் நல்லா இருக்கணும்... அன்வார் பிரதமர் ஆகணும்... இறைவா* 🙏💝

23/11/2022, 12:47 pm - Vengadeshan: பெரும்பாலான மக்களின் எண்ணம் இதுதான் ஆசான்...

23/11/2022, 12:49 pm - Muthukrishnan Ipoh: சபா சரவாக் ஒத்துழைக்க தயார்.
கேள்வி: யாருக்கு? 😇

23/11/2022, 12:49 pm - Vengadeshan: குழப்பமான தகவல்கள் ஆசான்...

23/11/2022, 1:01 pm - Chinna Rasu: நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மாவட்டங்கள் தோறும் பலப் படுத்தப்பட்டு உள்ளது. *மாமன்னர் நாளைய தினம் அனைத்து சுல்தான்களையும் சந்தித்துப் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்*

23/11/2022, 1:34 pm - Dhanasegaran Thevanathan: அடுத்த கட்டம்

23/11/2022, 1:35 pm - Muthukrishnan Ipoh: மொசகுட்டிக்கு வாய்ப்பு பிரகாசம்...

*தென்னிந்திய தொழிலாளர் நிதி*

23/11/2022, 1:35 pm - Raja Sg Buluh: இந்தக் கட்டுரையை முழுதும்
படித்தேன். சாமிவேலு தகவலின்படி இந்திய சமுதாயத்தின் நன்மைக்காகவே தென்னிந்திய நிதி வாரியத்தை கலைக்க முடிவு செய்ததாகக் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தானே தமிழனின் நிலைமை ரொம்ப மோசமா போச்சு.

23/11/2022, 1:37 pm - Raja Sg Buluh: இந்தச் சாமி நல்லா வாயில வடை சுட்டுட்டு போய் சேர்ந்து விட்டார்.

23/11/2022, 1:38 pm - Muthukrishnan Ipoh: தென்னிந்திய நிதி கலைக்கப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் துன் சாமிவேலு மட்டும் அல்ல. அந்த வாரியத்தில் இருந்தவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.

23/11/2022, 1:44 pm - Ganeson Shanmugam Sitiawan: மலேசிய தென்னிந்தியர் நிதி விவகாரம் விசுவரூபம் எடுத்த பொழுது, மறைந்த எழுத்தாளர் திரு.ஆதி குமணன் உரக்க குரல் கொடுத்தார்.

மகா கிழவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு  துன் சாமிவேலு  அவர்கள் தடுமாறினார் என்றே சொல்ல வேண்டும்.

ஆதி குமணின் உரத்த குரல், மகாதீரும் எதிர்ப்பார்க்கவில்லை.

விசயத்தை திசை திருப்ப மகா கிழவர் என்ன கூறினார் தெரியுமா?

மலேசிய இந்தியர்கள் இன்னும் தென்னிந்தியர்கள் அல்லர், மலேசியர்கள்.

இன்றும் நாம் இந்த நாட்டில் மலேசியர்களா என்றால் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ 😁😁😁 இதுதான் நிலைமை.

23/11/2022, 1:46 pm - Raja Sg Buluh: அருமை

23/11/2022, 1:51 pm - Muthukrishnan Ipoh: *SOUTH INDIAN LABOUR FUND (DISSOLUTION) ACT 1999* Incorporating all amendments up to 1 January 2006
PUBLISHED BY THE COMMISSIONER OF LAW REVISION, MALAYSIA
UNDER THE AUTHORITY OF THE REVISION OF LAWS ACT 1968 IN COLLABORATION WITH PERCETAKAN NASIONAL MALAYSIA BHD 2006

அரசாங்க நாடாளுமன்ற நிகழ்வுப் பதிவுகளில் அச்சிடப்பட்டு ஆவணமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்டுதான் கட்டுரையைத் தயாரித்து வருகிறேன்...

23/11/2022, 1:53 pm - Kanagarajan: மிக்க நன்றி ஐயா🌸

23/11/2022, 1:53 pm - Ganeson Shanmugam Sitiawan: சிறப்பு ஐயா

23/11/2022, 1:55 pm - Muthukrishnan Ipoh: திடீரென்று யாராவது நம் மீது வழக்கு தொடரலாம். ஆகவே முன்கூட்டியே சான்றுகளை வைத்து இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் போய் நின்று கொண்டு தடுமாறக் கூடாது. சட்டபூர்வமான ஆவணங்களைத் தூக்கிப் போட வேண்டும். அதோடு அவர்கள் கப் சிப்...

23/11/2022, 1:55 pm - Raja Sg Buluh: அருமை

23/11/2022, 1:58 pm - Vengadeshan: மிக்க நன்றி ஆசான்🙏

23/11/2022, 2:01 pm - Ve Sangkar Melaka: சிறப்பு 👍🏻👌🏻

23/11/2022, 2:17 pm - Ganeson Shanmugam Sitiawan: மாமன்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவதாகக் கூறியுள்ளனர்

23/11/2022, 2:49 pm - Murugan Sivam: https://www.malaysiakini.com/news/645404

23/11/2022, 2:54 pm - Muthukrishnan Ipoh: ஒருக்கால் டத்தோ ஸ்ரீ அன்வார் பிரதமரானால்... நம் இனத்தவர்கள் அதிக ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மற்றவர்களை முகம் சுழிக்கச் செய்யும். இதனால் வேறு பின்விளைவுகளும் வரலாம். எனவே, இதை உணர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது.

23/11/2022, 2:55 pm - Muthukrishnan Ipoh: இதை நாம் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். சாலையில்  மற்றும் பொது இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

23/11/2022, 4:09 pm - Cikgu Sivalingam: பேதம் இருக்கும் வரையில் *சமதர்மம்*
என்ற இலட்சியம் கனவில் காணும் காட்சியாகவே இருக்க முடியும்.

*குட்டிக்கதை*

23/11/2022, 5:36 pm - Devi Kedah Kadaram: ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. இணையத்துல தேடிப் பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தை சொன்னான்.

"டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே."

டாக்டரு சொன்னாரு..

"தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தடவை வீதம் அஞ்சு முறை என்கிட்டே வாங்க.  சரி பண்ணிடலாம்!"

"ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?"

" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி.  நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹  சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "

" ஓ அப்டீங்களா? சரிங்க

டாக்டர் ஐயா. வர்றேன். "

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.

ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில  காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.

" அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? "

"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிரச்சினை சரியாயிடுச்சு."

"ஓ! அப்டியா, எப்படி சரியாச்சி? "

"நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.

"என்ன தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க! "

"அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிரச்சினை பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்கன்னாரு. அப்படியே கட்டிலை 2000-₹க்கு வித்துட்டு 200₹-க்கு பாய் வாங்கிட்டேன்.  இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. 😄

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

*படித்ததில் பிடித்தது*

23/11/2022, 7:57 pm - Muthukrishnan Ipoh: மலேசியாவின் 15-ஆவது பொதுத் தேர்தலின் போது, பாடாங் செராய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் *கருப்பையா முத்துசாமி* மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்து உள்ளேன். படித்துப் பாருங்கள்.

23/11/2022, 8:10 pm - Devi Kedah Kadaram: இனவாதம்  ஊழலை விட கொடியது...

23/11/2022, 8:44 pm - Ganeson Shanmugam Sitiawan: 13-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தலைக்கனம் பிடித்த அம்னோ தலைவர்கள் ஒரு சிலர் எங்களுக்கு மஇகா வேண்டாம், எங்களுக்கு மசீச வேண்டாம் என்று முழங்கினர்.

நாங்கள் மலாய்க்காரர்கள் ஆதரவுடன் தன்னிச்சையாக வெல்வோம் என்று கொக்கரித்தனர்.

14-ஆவது தேர்தலில் வரலாறு காணாத தோல்வி அடைந்தது தேசிய முன்னணி.

தலைக்கனத்தோடும், ஆணவத்தோடும் பேசிய அம்னோ கட்சியினர் இன்று மலாய்க்காரர்களாளேயே வீழ்த்தப்பட்டு இருக்கின்றனர்.

மஇகா மற்றும் மசீச தலைவர்களுக்கு ஏன் PH வேண்டாம், ஏன் PN வேண்டும்.

BN + PH யுடன் இணைந்தால் ம.இ.கா-வுக்கும் , ம.சீ.ச-வுக்கும் அமைச்சர் பதவி என்பது கேள்விக் குறியாகும். PH-இல் சீனர் இந்தியர் தலைவர்கள் உள்ளனர்.

அதே BN + PN  உடன் இணைந்தால் நிச்சயம் அமைச்சர்கள் பதவி உண்டு.

இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்கினாலும் பரவாயில்லை, தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என்பது இவர்களது முக்கிய எதிர்பார்ப்பு.

23/11/2022, 8:47 pm - Muthukrishnan Ipoh: மிக மிக அருமையான அரசியல் பார்வை... 🎖️

23/11/2022, 8:51 pm - Ganeson Shanmugam Sitiawan: நன்றி ஐயா.

23/11/2022, 8:53 pm - Muthukrishnan Ipoh: இந்தப் பதிவின் கடைசி வரிகள்... 👍👍

23/11/2022, 9:10 pm - Dhanasegaran Thevanathan: சரியாகக் கணித்தீர்கள் தம்பி. சமூகமாவது பற்றாது. பல அம்னோக்காரர்கள் அம்னோ வீழ்ச்சிக்கு காரணமான PN வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மஇகா எங்களை வீழ்த்திய இந்திய சமூகத்தை ஒரு கை பார்கிறேன் என்கிறது. இந்தியர்களுக்கு ஏன் மஇகா மீது வெறுப்பு. அதை  சிந்திக்கவே இல்லை.

அம்னோ மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத்தான் கிராமத்து மலாய் மக்கள் PN-ஐ வெற்றி பெறச் செய்தனர் என்பதனை அம்னோ தலைவர்கள் உடனே உணர்ந்து விட்டனர். யார் தோற்றாலும் பதவியில் சுகம் கண்டவர்கள் நாட்டு நலனோ சமூக நலனோ துச்சம் 🙉🙊🙈

23/11/2022, 9:11 pm - Vengadeshan: அருமையான உரை. ஆனால் கேட்க வேண்டியவர்கள் கேட்பார்களா?😭

23/11/2022, 9:20 pm - Kumaran Marimuthu: சிந்திப்பதை இழந்துவிட்ட சமுதாயத்திற்கு நறுக்கென்று ஒர் கேள்வி. நம் சமுதாயத்தில் பெரும் பகுதி சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டது என்றே தோன்றுகிறது ஐயா.

23/11/2022, 9:30 pm - Devi Kedah Kadaram: மிகச் சரியான ஆதங்கத்தையும் மனக் குமுறலையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்... நம்மவர்கள் காதில் இது விழுமா....

23/11/2022, 9:33 pm - Kalaivani Johnson: வணக்கம் ஐயா... சிறப்பான  பதிவுகள்.... அமரர் திரு. கருப்பையா அவர்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சிங்க ஐயா... அவரது அரசியல் ஈடுபாடு சிறப்பானவை என்று தெரிந்து கொண்டேன். மலாய், சீன சமூகத்தினர் இருந்தும் தமிழரான இவரை தேர்வு செய்தது, இவரின் நல்ல பண்பை வெளிபடுத்துகிறது. சிறப்புங்க ஐயா... 🙏🙏

23/11/2022, 9:35 pm - Barnabas: நன்றி ஐயா.

23/11/2022, 9:36 pm - Mahalingam Padavettan Penang: உண்மை தான் ஐயா... இந்த இனம் வித விதமான போதையிலும்... பல வகையான கேளிக்கையிலும்...

அடிப்படையிலான கல்வியறிவு கூட முழுமையாக பெறாத நிலையிலும்.. தன்னிலை மறந்து தான் தோன்றிச் சூழலில்... ஆணவத்தோடு சுய கட்டுப்பாடு இன்றி... ஊர் மெச்சிக்க வேண்டி தனது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டு... சிந்திக்க மறந்த ஒரு இனமாக மாறி விட்டது இன்று.

அடிப்படையிலேயே மாற்றத்தை கொண்டு வந்தால் தான் எதிர்கால சந்ததியினர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டு... பிற இனத்தவர்களின் பார்வைக்கு நாம் ஒரு அறிவார்ந்த இனம் என்றும் மதிக்கப்படும்  இனமாகவும் பார்க்கப் படுவார்கள்.

ஆனால், இன்றைய சூழ்நிலை தொடருமானால் நமது அடுத்த தலைமுறைக்கு இந்த நாட்டில் எதிர்காலமே இல்லை... பெற்றோர்கள் உணர்வார்களா?

சமுதாயத் தலைவர்களின் பங்கு இருக்குமா? அரசியல்வாதிகள் சமுதாய வளர்ச்சிக்கு பாடு படுவார்களா? சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...

23/11/2022, 9:36 pm - Muthukrishnan Ipoh: அருமையான பின்னூட்டம்... நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்யும் மனநிலையில் இல்லை... நம்முடைய இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் ஆரவாரம் தான் மலாய் மக்களின் வாக்குகளைத் திசை திருப்பி உள்ளன...

23/11/2022, 9:39 pm - Devi Kedah Kadaram: இப்படி  பேசி விட்டு எப்படி  இவர் அவர்களுடன்  கூட்டு சேருகிறார்❓ மதவாதப் பேச்சும் இனவாதப் பேச்சும் தீவிரவாதத்தை ஏற்படுத்துமே.... சரவாக் மக்கள்  விழித்துக் கொள்ள வேண்டும்.

(விக்கிப்பீடியாவில் பதிவு செய்வது)

23/11/2022, 9:40 pm - Muthukrishnan Ipoh: நம்மால் இயன்றதை உடனுக்குடன் செய்து விட வேண்டும். நமக்கு பிறகு யாராவது எவராவது செய்வார்கள் என்று நினைப்பதை காட்டிலும் நாமே இப்போதே செய்து விட வேண்டும்... ✌️

23/11/2022, 9:40 pm - Mahalingam Padavettan Penang: நன்றி வாழ்த்துக்கள்
ஐயா. தங்களின் ஆசிர்வாதம் கிடைத்தமைக்கு நன்றி.

23/11/2022, 9:41 pm - Muthukrishnan Ipoh: நம் மலேசியம் புலன அன்பர் ஆசிரியர் கணேசன் அவர்களின் குரல் பதிவு...

23/11/2022, 9:42 pm - Devi Kedah Kadaram: 👏🏻👏🏻👏🏻👏🏻

23/11/2022, 9:46 pm - Kalaivani Johnson: உங்களின் பணி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் அளப்பரியதுங்க ஐயா.. மிக்க நன்றி... 🙏🙏

23/11/2022, 9:51 pm - Muthukrishnan Ipoh: இதைப் படித்ததும் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி... மலேசியத் தமிழர்... மலாயாத் தமிழர் என்று எழுதி எழுதியே என் வாழ்நாளில் பாதி கரைந்து விட்டது... நன்றிம்மா 🙏

23/11/2022, 10:17 pm - Muthukrishnan Ipoh: கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல் குழப்பங்களினால் நம்முடைய தூக்கம் தான் கெடுகிறது. இன்றைக்காவது கொஞ்சம் சீக்கிரம் படுக்கப் போவோம். 🙏

23/11/2022, 10:19 pm - Kalaivani Johnson: கிளாந்தான் மக்களில் அடி அவாங்கை பிடிக்காதவர்களும் உண்டுங்க ஐயா... மத வெறி, இன வெறி பிடித்தவர்...😡

23/11/2022, 10:23 pm - Devi Kedah Kadaram: ஆடி அம்மாவாசைக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் உரைக்காது... அவர் மதம் சார்ந்தவரகள் மட்டும் தான் சொர்க்கம் செல்லுவார்களாம்... போங்கள் நீங்கள் செல்லும் சொர்க்கம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அது எங்களுக்கு நரகமாகத்தான் இருக்கும். சீக்கிரம்  சொர்க்கம் செல்ல வாழ்த்துகள்.

23/11/2022, 10:25 pm - Ratha Patchiappan: 🌷🙏 அமரர் கருப்பையா  முத்துசாமி; தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவாகிய கட்டுரையை இப்போதுதான் படித்தேன். அவரின் தொண்டு மிகவும் பெரியது. தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி உதவியவர். தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. (அதிக பதிவால் கைபேசி அடிக்கடி MCO  போடுகிறது)

23/11/2022, 10:27 pm - Ratha Patchiappan: அமரர் கருப்பையா  முத்துசாமி அனைத்து மதத்தினரையும் அனுசரித்து போகும் நல்ல மனிதர்..

23/11/2022, 10:30 pm - Devi Kedah Kadaram: நிக் அஸிஸ் ... இப்போது இருந்தால் யாருக்கு  ஆதரவு தருவார்?

23/11/2022, 10:32 pm - Ratha Patchiappan: பாஸ் சமயவாதிகள் சொர்க்கத்தையும், நரகத்தையும் நேரில் பார்த்ததைப் போல் தெரிகிறது. ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லை பாவம்... 🤪

23/11/2022, 10:35 pm - Devi Kedah Kadaram: பிரதமராக வருபவர் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்க வேண்டும்.

23/11/2022, 10:41 pm - Mahalingam Padavettan Penang: மிக தெளிவாக உள்ளனர், இன்றைய இஸ்லாமிய இளையோர்கள்...