29 ஜூலை 2021

மூன்றாவது கொரோனா அலையில் தமிழர்கள் அதிகம் பாதிப்பு

மகாலிங்கம் படவெட்டான், நாம் தமிழர் பினாங்கு.

இன்றைய மூன்றாவது கொரோனா அலையில் நம்மவர்கள் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அழிவிற்கு காரணங்கள்....

1. ஆரம்பத்தில் ஏற்பட்ட முதல் அலையில் இருந்த பாதுகாப்பு அம்சம், பய உணர்வு, அச்சம், கவனம் நம்மவர்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறை... இப்போது இல்லை.

2. இரண்டாவது அலையிலும் மிக மிகக் கவனமாக எதிர்க் கொண்டோம். அச்சம் பயம் இருந்தது. ஆனாலும் அலச்சிய போக்கு இருந்தது. கொஞ்சம் பாதிப்பு.

3. இப்போதைய மூன்றவது அலையில் முற்றிலுமாக முழு அலச்சிய போக்கை கையாண்டு....

அ... கூட்டம் கூட்டமாக கூடி மது அருந்துவது

ஆ... பணத் திமிரில் ஒன்று கூடி விருந்துகள் வைத்து ஆட்டம் பாட்டம் போடுவது

இ... பழைய பய பக்தி இல்லை..

ஈ... தெனாவட்டாக மமதையில் வாழ்வது... எனக்கு ஒன்னும் வராது என்ற திமிர்

உ... கட்டுபாடு அற்ற வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல்

ஊ... இப்போதைய சமுதாய சிந்தனையில்  சிறு வயது முதல் வயதில் மூத்தவர்கள் வரை தலை கனம் பிடித்து அலைகிறார்கள்....

இவர்களின் தெளிவில்லாத சிந்தனையால் தான் நமது இனம் இன்று கொத்து கொத்தாக செத்து மடிக்கிறார்கள்.

ஆக, இந்தச் சூழலில் நாம் யாரையும் குறை கூறவோ வஞ்சிக்கவோ வேண்டாம்.

இந்த அழிவுக்கு காரணம் நாம் தான். மற்ற இனத்தவர்கள் இந்த நோயிலிருந்து பயந்து ஓடுகிறார்கள். ஆனால், நாமோ ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், தூற்றிக் கொண்டும், மது போதையில் வாழ்ந்து கொண்டும் திருந்தாத ஜென்மங்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறோம்.

இப்படியே தொடர்ந்தால் நமது அழிவை யாராலும் தடுக்க முடியாது. இப்போதைய நமது மக்கள் தொகை 7 சதவிகிதம் கூட இல்லை. ஆனால், கொரோனா முடித்த பிறகு நமது மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நமது இந்தியரின் விகிதம் 5 சதவிதமாக மாறி விட வாய்ப்பு உள்ளது.

ஆக, நம்மை நாமே காப்போம்... குடும்பத்தையும் காப்போம்.

மகாலிங்கம் படவெட்டான்

நாம் தமிழர். பினாங்கு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக