22 ஜூலை 2021

இறப்பிலும் இணைந்த இதயங்கள்



மலேசியம் புலன அன்பர் திரு. பெருமாள் அவர்களின் அண்ணன்; அண்ணியர் இருவரும் I.C.U. வில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார இடைவெளியில் ஒருவரை ஒருவர் அறியாமலேயே இறைவனடி சேர்ந்தனர். 17-ஆம் தேதி கணவர் காலமானார். இன்று காலை 21.07.2021 மனைவி காலமானார்.

கொரோனாவின் கோரப்பிடி எவ்வளவு கொடுமையானது என்பதை அறிந்து கொள்வோம். அது உறவுகளைப் பார்ப்பதும் இல்லை. உணர்வுகளைப் பார்ப்பதும் இல்லை.

கொஞ்ச காலத்திற்கு வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் (உடன் பிறப்புகளாக இருந்தாலும்). வீட்டில் உள்ளவர்கள் வெளியே போய் ஊர் சுற்றுவதையும் அனுமதிக்காதீர்கள். 50 வயது தாண்டியவர்களுக்கு ஆபத்து மிக அதிகம். அண்மைய தகவல்.

அவர்களின் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கின்றோம்.

*புலன அன்பர்கள்*
*நிர்வாகத்தினர்*
*மலேசியம்*
21.07.2021

பின்னூட்டங்கள்

பெருமாள் கோலாலம்பூர்: இல்வாழ்வில் இணைந்தவர்கள். இருவருமே மருத்துமனையில் சேர்க்கப் பட்டனர். ஒருவரை ஒருவர் அறியாமலே I C U வில் இணைந்து ஒரு வார இடைவெளியில் இருவருமே இறைவனடி எய்தனர்.

கொரோனாவின் கோரப்பிடி எவ்வளவு கொடுமை வாய்ந்தது என்பதை அறிகிறேன். என் அண்ணன் அண்ணியாரின் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறேன் ta

தனசேகரன் தேவநாதன்: ஓம் சட்கதி. எல்லாம்,வல்ல ஏக இறைவன் குடும்பத்தினருக்கு அமைதியையும் சாந்தியையும் அருள்வாயாக ஓம்நம சிவாய.


வெங்கடேசன்: ஓம் நம சிவாய ஓம்

கலைவாணி ஜான்சன்: ஆழ்ந்த இரங்கல்... திருமண பந்தத்தில் இணைந்த இதயங்கள், இறப்பிலும் இணைந்து ஒன்றாக இறுதி பயணத்தில்.... இவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 🙏


இராதா பச்சையப்பன்: 🙏. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

தேவி சர: ஓம் நமச்சிவாய

உதயகுமார் பெர்லிஸ்: ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் நமசிவாய


செல்லையா செல்லம்: ஓம் சிவாய நமஹ... ஓம் சிவாய நமஹ... ஓம் சிவாய நமஹ...

மகாலிங்கம் படவேட்டான் பினாங்கு: ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.. ஆழ்ந்த அனுதாபங்கள்


சிவகுரு மலாக்கா: ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் நமசிவாய 🙏🏼

கென்னடி ஆறுமுகம் கிரிக்: ஆழ்ந்த இரங்கல்

பெருமாள் கோலாலம்பூர்: தலைவர் அவர்களே... இரங்கல் தெரிவித்தோருக்கு துயரிலும் தலை வணங்குகிறேன். நமது அன்றாட தகவல் பகிர்வுகளை தொடர வேண்டுகிறேன். அன்புடன் ta.

பால் சேர்வை:
ஆழ்ந்த இரங்கல்....

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்

ஆதி சேகர் கோலக்கிள்ளான்: ஆழ்ந்த அனுதாபங்கள்... ஓம் நமசிவாய 🙏🏼


1 கருத்து: