23 ஜூலை 2021

மலேசியத் தமிழனத்தின் குடிப்பழக்கம் - மகாலிங்கம், பினாங்கு

23.07.2021

நம் இனத்தின் குடிப் பழக்கம் தொன்று தொட்டு புழக்கத்தில் உள்ளது. ஏன் ஏன் ஏன்?

ஏறக்குறைய பிறந்த சில நாட்களில் இருந்து குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி... சுடுகாடு போகும் வரை... பழகிய இந்தக் குடியை மறக்க முடியாத... விட்டுத் தொலைக்க இயலாத... ஒரு சுயசிந்தனை இல்லாத... மானம் கெட்டத் தமிழ் இனமாக  மாறி...


மற்ற இனத்தவர்கள் காரி உமிழும் வகையில் இடம் பொருள் ஏவல் இல்லாமல்...

நடு ரோடு, பொது விளையாட்டுப் பூங்கா, கோயில் குளம், திருமணக் கொண்டாட்டம், பிறந்த நாள், இறந்த நாள், கருமாதி என்று எல்லாம்...

ஆண் பெண் என பால் தெரியாமல்... கண்டதே காட்சி கொண்டதே கோலமாக... தரி கெட்டு... நாளும் குடி குடி என்று குடித்து ஆட்டம் போடும் நம் இனத்தை யார் திருத்துவது?


தந்தையும் குடிக்கிறான்...
மகனும்  குடிக்கிறான்...
அம்மாவும் குடிக்கிறான்...
மகளும் குடிக்கிறாள்...
அதுவும் ஒரே மேசையில் அமர்ந்து...

குடியிலே வேறு வேறு பிரிவுகள்...
உயர் தர தண்ணி...
கீழ்த் தர தண்ணி...

ஆனால், போதை தரும் தண்ணியில் வேறு வேறுபாடு...
படித்தவருக்கு ஒரு வகை தண்ணி...
படிக்காத பாமரருக்கு ஒரு வகை தண்ணி...
பணக்காரனுக்கு உயர் தர தண்ணி...
ஏழை மக்களுக்கு  தரம் குறைவான தண்ணி...

ஆக மொத்தத்தில் நம்மவர்களில் 90 விழுக்காட்டினர் மது போதையில் தான் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... யாரை யார் திருத்துவது? தயவு செய்து நாம் நம்மைச் சுற்றியுள்ள நம் இனத்தை ஒரு வட்டமிட்டுப் பார்ப்போம்.


சாராய மயக்கம் கொண்டவர்களுக்குள் காணப்படும் முதன்மையான அறிகுறி பாதிப்பு அடைந்தவரின் உடல் நலத்தை சேதப் படுத்தும் வகையில் மேலும் மேலும் குடிக்கத் தூண்டுவதாகும்.

இரண்டாவதாக மதுவைக் குடிக்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் இயலாமை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பல வழிகளில் வெளிப்படும்.

சாராய மயக்கம் காரணமாகக் குடிப்பவர், அவரின் குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்களுக்குச் சமூகத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் சமுதாய விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


சாராய மயக்கம் என்பதனைச் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு, மதுபானங்களைத் தவறுதலாகப் பயன்படுத்துவதில் இருந்து மீள இயலாமை ஆகிய குறிப்பிட்ட அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம்.

மதுபானங்களால் தூண்டப்படும் உடலியக்கவியல் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு போன்றவை குடிப்பவர் குடிக்காமல் இருக்க இயலாமைக்கு காரணிகளாக விளங்குகிறது.

சாராய மயக்கம் மன நலத்தையும் வெகுவாகப் பாதித்து மன நலச் சீர்கேடுகள் உருவாகக் காரணமாக இருக்கலாம். குடிப்பவர்களில் ஏறக்குறைய 18 விழுக்காடு மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அன்புடன்,
மகாலிங்கம் படவெட்டான்,
நாம் தமிழர்; பினாங்கு.


பின்னூட்டங்கள்

பாலன் முனியாண்டி: வாழ்கை என்பது வாழ்வதற்கே... வருவது வரட்டும் பயம் எதற்கு என்ற அறப சந்தோசத்தில் திலைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள்...

வெங்கடேசன்: உண்மை... தற்போது நம் சமுதாயத்தில் குடிப் பழக்கம மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. பிறந்த நாள், கருமாதி நாள், திருமண நாள் இப்படி எல்லா நாட்களிலும் குடியும் குடித்தனங்கள்...

மகாலிங்கம் படவெட்டான் பினாங்கு: வேதனையான விடயம்... யாரை யார் காப்பாற்றுவது ஐயா?

வெங்கடேசன்: நம் சமுதாயத்திடம் நல்ல விடயங்கள் சொல்ல முடிவதில்லை ஐயா. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

தனசேகரன் தேவநாதன்: சந்தோசத்தின் உச்சம் குடிப்பதுதான் என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது நம் இளைய தலைமுறை... வேதனை

வெங்கடேசன்: இந்தப் பழக்கம் வைரஸை விட கொடூரமாக நம் சமுதாயத்தைக் குறிப்பாக... இளையோர் மத்தியில் மிக மோசமாக பரவியுள்ளது. வேதனையான விடயம் 😭😭

பால் சேர்வை: இந்தியர்கள் குடிb பழக்கத்தை அடியோடு நிறுத்த வேண்டும்

முருகன் சுங்கை சிப்புட்: திருடனாய் திருந்த வேண்டும்... நானும் பல போதைக்கு அடிமையானவன்தான். அமைந்த மனைவியும் ஒரு காரணம். சிந்தித்தேன் சிறப்பான முடிவை எடுத்தேன். 30 ஆண்டுகளாகி விட்டன. புகைபிடித்தல், போதைப் பழக்கம், மதுப் பழக்கம் அனைத்தையும் நிறுத்தி விட்டேன். நிறுத்தினால் மட்டுமே தன்மானம் கொஞ்சம் பிறக்கும்.

பொன் வடிவேலு ஜொகூர் பாரு: இந்தியர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்த, அவரவர் குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடியில் மிதப்பவர்களைக் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்க வேண்டும். அதுபோல சமுதாயமும் குடிகாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

குடிகாரர்களை சீர்திருத்த மையங்களுக்கு அனுப்ப வேண்டும். குடிப்பதை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என சொல்லிச் சொல்லி பல காலம் போய்விட்டது. இயக்கங்கள் நல்ல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். -பொன் வடிவேல் ஜோகூர்பாரு 012-7299587

உதயக்குமார் பெர்லிஸ்: தமிழ் திரைப் படங்களில் புகைப் பிடித்தல் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு எனும் அறிவிப்பை விடுத்து அவ்வாறான காட்சிகள் இல்லாமல் இருத்தல் சிறப்பு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக