பதிவு: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.
எந்த எல்லைக்குப் பணி நிமித்தமாக செல்கிறீர்கள்? ஆக்ராவுக்கு... அங்கு இரண்டு வாரம் பயிற்சி. அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி.
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.
எந்த எல்லைக்குப் பணி நிமித்தமாக செல்கிறீர்கள்? ஆக்ராவுக்கு... அங்கு இரண்டு வாரம் பயிற்சி. அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும். அப்பொழுது ஓர் அறிவிப்பு. மதிய உணவு தயார்.
’சரி உணவு வாங்கலாம்’ என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும் போது எனக்குப் பின்னால் இருந்த இராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உடைந்து போனேன்.
ஏன்... சாப்பாடு வாங்கலையா?
இல்லை. விலை அதிகம். என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும். அங்கு இறங்கி உண்ணலாம். விலை குறைவாக இருக்கும்.
ஆமாம். உண்மை.
இதைக் கேட்ட பொழுது என்மனது மிகவும் வலித்தது. உடனே விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமானப் பணிப் பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னேன்.
அந்தப் பணிப் பெண் என் கைகளைப் பிடித்தாள். கண்களில் கண்ணீர். ’இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து’ என்றாள்.
நான் உண்டு முடித்து, கை கழவச் சென்றேன். அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, ’நீங்கள் செய்தததை நான் பார்த்தேன். நான் வெட்கப் படுகிறேன்’ எனக் கூறி ’இந்தாங்க... என் பங்கு ரூபாய் 500’ என்று என்னிடம் கொடுத்தார்.
நான் என் இருக்கைக்குத் திரும்பினேன்.
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளைப் பிடித்து குலுக்கி, ’இது ஒரு மிகப் பெரிய கருணைச் செயல்... மிக்க சந்தோஷம். உங்களைப் போன்றவர்களைத் தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிச் சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை...
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயைத் திணித்தான்.
விமானம் வந்து நின்றது. நான் இறங்கினேன். இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டைப் பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்.
இறங்கி நடந்தேன். அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச் செல்லும் இராணுவ வண்டிக்காகக் காத்து இருந்தார்கள்.
அவர்கள் அருகில் சென்றேன். நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்.
ஒரு தூண்டுதல். பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்... அனைத்துப் பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். போகும் வழியில் நன்றாகச் சாப்படுங்கள். கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்.
காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்.
இந்த இளம் வீரர்கள் குடும்பப் பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய உயிரினைத் துச்சமாக மதித்து எப்படி நம்மைப் பாதுகாக்கிறார்கள். இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை.
இவர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களைத் தரும்
சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.
அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.
இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.
கோடிக் கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்... ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்... லஞ்சம் வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை நினைத்துகூட பார்ப்பது இல்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது..
இளைஞனே... என் சகோதரனே... உன்னைச் சரியான வழியில் வாழத் தயார் செய்து கொள்.
பின்னூட்டங்கள்
பதிவு செய்தவர் மீது நாம் குறை காண இயலாது. வேறு ஒரு புலனத்தில் பகிரப் பட்டது. பதிவாளருக்குப் பிடித்து இருக்கிறது. இங்கு பதிவு செய்து உள்ளார். தவறு இல்லை.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தில் பயணம் செய்யும் இந்தியப் போர் வீரர்களுக்கு விமானத்தில் இலவசமாக உணவு நீர் வழங்கப்படும். அப்படி இருக்கும் போது விமானத்தில் விற்கப்படும் உணவை விலை கொடுத்து வாங்கி வீரரகளுக்கு வழங்கியதாகச் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.
தேவி சர: உண்மை ... தன் நாட்டை காக்கும் படை வீரனுக்கு உணவு இலவசமாக கொடுக்கலாமே...
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தின் பயணம் மூன்று மணி நேரம். விமானத்தில் ஏறி இறங்க எல்லாம் முடிய ஐந்து மணி நேரம் பிடிக்கும். விமானத்தில் உணவு வாங்கிச் சாப்பிடாமல் டில்லியில் போய் இறங்கி சாப்பிடலாம்; அங்கு விலை குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
தேவி சர:உண்மை ஐயா
கேப்டன் வந்து கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. சாதாரண விமானங்களில் இராணுவ வீரர்களை அனுப்புவது குறைவு. அவர்களுக்கு என்று இராணுவ விமானங்கள் உள்ளன.
15 வீரர்களுக்கு சாப்பாட்டுச் செலவு 500 ரூபாய். ஒரு வீரருக்கு 30 ரூபாய். இந்த 30 ரூபாயை மிச்சம் பிடிக்கும் அளவுக்கு இந்திய இராணுவ வீரர்களைச் சிறுமைப் படுத்தக் கூடாது.
வெங்கடேசன்: பொருமையாக படித்து பார்தால்தான் இவ்வளவு விஷயங்களும் விளங்கும் ஐயா அருமை 👏👏
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மொத்தத்தில் ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவையே அவமதிக்கும் கதையாகவே தெரிகிறது.
தேவி சர:இப்படி கதை எழுதுவதால் அவருக்கு என்ன இலாபம்...🤦🏻♀️
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பதிவாளர் மீது நாம் குறை காணக் கூடாது. அதைப் பகிர்ந்ததால் தான் கருத்துகளைச் சொல்ல
கடைசியாக என்னைப் பாதித்தது. இந்திய இராணுவ வீரர்கள் 30 ரூபாய் இல்லாமல் ஐந்து மணி நேரம் பசியை அடக்கிப் பயணிக்கிறார்கள் என்று எழுதியவர் முன் வைக்கும் கருத்து... Totally absurd!
வெங்கடேசன்: சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.
அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.
இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.
போன்ற நல்ல கருத்துகளையும் முன் வைப்பதற்காக இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கலாம்.
தேவி சர: எப்படி இருந்தாலும். இந்தக் கதையை பிரதமர் மோடி படித்தால் என்ன ஆவது... நல்ல வேலை அவருக்கு தமிழ் படிக்க தெரியாது...
வெங்கடேசன்: எப்படி இருந்தாலும் பிழை பிழைதான்... போர் எல்லையில் இந்திய இளைஞர்கள் நாட்டுக்காக உயிர் துறக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் பொழுதை வீணாகச் செலவு செய்கிறார்கள் என்பதைச் சொல்ல முன் வருகிறார்.
ஒரு நாட்டை அவமதிப்பது போல கதை செல்கிறது.... ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
’சரி உணவு வாங்கலாம்’ என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும் போது எனக்குப் பின்னால் இருந்த இராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உடைந்து போனேன்.
ஏன்... சாப்பாடு வாங்கலையா?
இல்லை. விலை அதிகம். என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும். அங்கு இறங்கி உண்ணலாம். விலை குறைவாக இருக்கும்.
ஆமாம். உண்மை.
இதைக் கேட்ட பொழுது என்மனது மிகவும் வலித்தது. உடனே விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமானப் பணிப் பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னேன்.
அந்தப் பணிப் பெண் என் கைகளைப் பிடித்தாள். கண்களில் கண்ணீர். ’இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து’ என்றாள்.
நான் உண்டு முடித்து, கை கழவச் சென்றேன். அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, ’நீங்கள் செய்தததை நான் பார்த்தேன். நான் வெட்கப் படுகிறேன்’ எனக் கூறி ’இந்தாங்க... என் பங்கு ரூபாய் 500’ என்று என்னிடம் கொடுத்தார்.
நான் என் இருக்கைக்குத் திரும்பினேன்.
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளைப் பிடித்து குலுக்கி, ’இது ஒரு மிகப் பெரிய கருணைச் செயல்... மிக்க சந்தோஷம். உங்களைப் போன்றவர்களைத் தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிச் சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை...
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயைத் திணித்தான்.
விமானம் வந்து நின்றது. நான் இறங்கினேன். இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டைப் பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்.
இறங்கி நடந்தேன். அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச் செல்லும் இராணுவ வண்டிக்காகக் காத்து இருந்தார்கள்.
அவர்கள் அருகில் சென்றேன். நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்.
ஒரு தூண்டுதல். பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்... அனைத்துப் பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். போகும் வழியில் நன்றாகச் சாப்படுங்கள். கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்.
காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்.
இந்த இளம் வீரர்கள் குடும்பப் பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய உயிரினைத் துச்சமாக மதித்து எப்படி நம்மைப் பாதுகாக்கிறார்கள். இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை.
இவர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களைத் தரும்
சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.
அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.
இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.
கோடிக் கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்... ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்... லஞ்சம் வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை நினைத்துகூட பார்ப்பது இல்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது..
இளைஞனே... என் சகோதரனே... உன்னைச் சரியான வழியில் வாழத் தயார் செய்து கொள்.
பின்னூட்டங்கள்
பதிவு செய்தவர் மீது நாம் குறை காண இயலாது. வேறு ஒரு புலனத்தில் பகிரப் பட்டது. பதிவாளருக்குப் பிடித்து இருக்கிறது. இங்கு பதிவு செய்து உள்ளார். தவறு இல்லை.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தில் பயணம் செய்யும் இந்தியப் போர் வீரர்களுக்கு விமானத்தில் இலவசமாக உணவு நீர் வழங்கப்படும். அப்படி இருக்கும் போது விமானத்தில் விற்கப்படும் உணவை விலை கொடுத்து வாங்கி வீரரகளுக்கு வழங்கியதாகச் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.
தேவி சர: உண்மை ... தன் நாட்டை காக்கும் படை வீரனுக்கு உணவு இலவசமாக கொடுக்கலாமே...
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தின் பயணம் மூன்று மணி நேரம். விமானத்தில் ஏறி இறங்க எல்லாம் முடிய ஐந்து மணி நேரம் பிடிக்கும். விமானத்தில் உணவு வாங்கிச் சாப்பிடாமல் டில்லியில் போய் இறங்கி சாப்பிடலாம்; அங்கு விலை குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
தேவி சர:உண்மை ஐயா
கேப்டன் வந்து கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. சாதாரண விமானங்களில் இராணுவ வீரர்களை அனுப்புவது குறைவு. அவர்களுக்கு என்று இராணுவ விமானங்கள் உள்ளன.
15 வீரர்களுக்கு சாப்பாட்டுச் செலவு 500 ரூபாய். ஒரு வீரருக்கு 30 ரூபாய். இந்த 30 ரூபாயை மிச்சம் பிடிக்கும் அளவுக்கு இந்திய இராணுவ வீரர்களைச் சிறுமைப் படுத்தக் கூடாது.
வெங்கடேசன்: பொருமையாக படித்து பார்தால்தான் இவ்வளவு விஷயங்களும் விளங்கும் ஐயா அருமை 👏👏
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மொத்தத்தில் ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவையே அவமதிக்கும் கதையாகவே தெரிகிறது.
தேவி சர:இப்படி கதை எழுதுவதால் அவருக்கு என்ன இலாபம்...🤦🏻♀️
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பதிவாளர் மீது நாம் குறை காணக் கூடாது. அதைப் பகிர்ந்ததால் தான் கருத்துகளைச் சொல்ல
கடைசியாக என்னைப் பாதித்தது. இந்திய இராணுவ வீரர்கள் 30 ரூபாய் இல்லாமல் ஐந்து மணி நேரம் பசியை அடக்கிப் பயணிக்கிறார்கள் என்று எழுதியவர் முன் வைக்கும் கருத்து... Totally absurd!
வெங்கடேசன்: சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.
அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.
இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.
போன்ற நல்ல கருத்துகளையும் முன் வைப்பதற்காக இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கலாம்.
தேவி சர: எப்படி இருந்தாலும். இந்தக் கதையை பிரதமர் மோடி படித்தால் என்ன ஆவது... நல்ல வேலை அவருக்கு தமிழ் படிக்க தெரியாது...
வெங்கடேசன்: எப்படி இருந்தாலும் பிழை பிழைதான்... போர் எல்லையில் இந்திய இளைஞர்கள் நாட்டுக்காக உயிர் துறக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் பொழுதை வீணாகச் செலவு செய்கிறார்கள் என்பதைச் சொல்ல முன் வருகிறார்.
ஒரு நாட்டை அவமதிப்பது போல கதை செல்கிறது.... ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக