06.02.2021
தென் கொரியாவில் நடை பெற்ற அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் காஜாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.
இணையம் வழி நடைபெற்ற இப்போட்டியில் பல நாடுகள் கலந்து கொண்ட வேளையில், ரோபோட்டிக் குழு பிரிவில் காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ரேகன் பிள்ளை அந்தோணிப் பிள்ளை, முகேஷ் குமார் சரவணகுமார், கவியரசு தமிழரசு ஆகியோர் தங்கம் வென்று உள்ளனர்.
திரிஷர் நிஷேல் குமார், அரவிந்தன் ஜெய்சந்திரன், யுவனேஸ்வர் சண்முகசீலன் ஆகியோர் அடங்கிய மாணவர் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.
தர்ஷன் ஜெயசீலன், பித்திகா அரிகிருஷ்ணன், மோஷிகன் ரமேஸ் ஆகியோர் அடங்கிய மாணவர் குழு வெண்கலப் பதக்கம் வென்றது.
2018, 2019 பிலிப்பைன்ஸில் நடந்த இப்போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. ஆனால் இம்முறை 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என்று காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து இருப்பதாகத் தலைமையாசிரியர் ஜோன் பொஸ்கோ தெரிவித்தார்.
புறப்பாட நடவடிக்கை துணை தலைமையாசிரியர் கு. நெடுஞ்செழியன், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சி. காந்திமதி, பயிற்றுநர் விக்னேஸ்வரன் ஆகியோர் மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக