06.02.2021
இந்த உலகில் ஒவ்வொருவரும் அடுத்தவர்களை அதிகாரம் செய்து அவர்களை விட தான் உயர்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.
தன்னை மிகவும் முக்கியமானவனாக எல்லோரும் கருத வேணடும் என்று நினைக்கிறார்கள். இது தான் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
ஒருவன் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தான் வெளிப்பட வேண்டும் என்று மன இறுக்கம் கொள்கின்றான். தான் நினைப்பது போல் நடக்க வில்லை என்றால் துன்புறுகிறான். கவலைப் படுகிறான். மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறான்.
அவனுடைய அகங்கார மனமே இந்தத் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம். இப்படி அகங்கார மனம் படைத்தவர்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போடுகின்றனர். பணம், அதிகாரம், பதவி, அரசியல் பலம், பொய் நடிப்பு, கொள்கை; ஏன் மதத்திலும் கூட ஒழுக்கத்திலும் கூட போட்டி போடுகிறார்கள்.
தான்தான் இந்த உலகத்தின் மையம் என்று எல்லோரும் கருத வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். இந்த விபரீதமான அகங்கார எண்ணம்தான் உங்கள் பிரச்சினைகளின் ஆணிவேர்.
இதனால் உங்களைத் தவிர எல்லோரும் பகைவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே படகில் தான் பயணம் செய்கிறார்கள். அது தான் அந்த அகங்காரப் படகு.
-ஓஷோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக