10.02.2021
பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ
மயிர் குறை கருவி. என்னது இது? நாம் அன்றாடம் முடிவெட்ட பயன்படும் கத்தரிக்கோல்.
கத்தரிக் கோலை கண்டுபிடித்தது யார்? எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழர்கள் சங்க காலத்திலேயே கத்தரிக் கோலை முடி வெட்ட பயன்படுத்தினார்கள் என்பது தான் சிறப்பான விடயம்.
அதன் பெயர்தான் "மயிர் குறை கருவி"
சங்க இலக்கியமான *பொருநர் ஆற்றுப்படை*
கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
யாழிசைத்துப் பாடும் பாடினியை வர்ணிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்..
பாடினியின் காது, மயிர் குறை கருவியின் அடிப்பக்கம் போன்று இருந்ததாம். கத்திரிக் கோலின் கைப்பிடிபோல் அவளின் காது நீண்டு இருந்தது.
பாடல் 25 - 30.
" அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல்,
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன "
கருமையான கூந்தல், பிறைபோல் நெற்றி, கொலை வில் போன்று வளைந்த புருவம், இனிய மொழி பேசும் செந்நிற இதழ் கொண்ட வாய், முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல் வெண் பற்கள், மயிரை நறுக்குகின்ற கருவியின் கைப்பிடிபோல் உள்ள காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன..
அடடா...
என்னவொரு உவமை...
நீண்ட காதுகளுக்கும்...
கத்தரிக்கோலின் கைப்பிடிக்கும்...
அதைவிட அவசியம்... சங்க காலத்திலேயே தமிழன் முடி வெட்டி சிகை அலங்காரம் கொண்ட நாகரிகத் தமிழன் என்பதுதான்.
நன்றி: முனைவர் பாண்டியராஜா அவர்களின் சங்கச் சோலை இணையப் பக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக