19 பிப்ரவரி 2021

சுய ஒழுக்கம் (Self Discipline)

19.02.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phone-இல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம் அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாகக் கேட்பவரிடம் மனப் பூர்வமாக கேட்டுக் கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் பண்பை உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், உணவுத் தட்டு, குடை போன்றவைக்கும்.

3. கடயில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், விலைப் பட்டியலில் விலை அதிகமான் உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் செய்யச் சொல்லுங்கள்.

4.தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.

இன்னும் கல்யாணம் ஆகலயா?

குழந்தைகள் இல்லையா?

இன்னும் சொந்த வீடு வாங்கவில்லையா?

ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?

இது நமது பிரச்சினை இல்லை தானே!"

5. தானியங்கி கதவைத் திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும் வரை மூடாமல் பிடித்து இருப்பது அவர்களைச் சமூகத்தில் பொறுப்பு உள்ளவர்களாக மாறச் செய்யும்!

6. நண்பருடன் டாக்சியில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்து விடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு அளியுங்கள். மோசமாக இருந்தாலும், கவனிப்பில் வைத்து இருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டல் அடிப்பதை சம்பந்தப் பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்து விடாதீர்கள். அவரை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளைச் சுட்டிக் காட்டலாம்.

12. உடல் பருமனை ஒரு போதும் கிண்டல் அடிக்காதீர்கள். "நீங்கள் பார்க்க சூட்டிகையாக, கவர்ச்சியாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்களின் படத்தைக் காட்ட போனைக் கொடுத்தால் Gallery-யில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டு விடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும் போது போனை நோண்டிக் கொண்டு இருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், ஸ்டைலுக்காக கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்னையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இது போன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிரவும்.

சான்று: https://www.kalvikural.com/2020/07/self-discipline_22.html


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக