13 மார்ச் 2021

மூடி மறைக்க ஓர் இனம் கங்கணம் கட்டுகிறது

13.03.2021

கரு. ராஜா சுங்கை பூலோ: உங்கள் கட்டுரையைப் படித்தேன். கூடிய விரைவில் இந்த கட்டுரைகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெரிய நூலாகப் போட்டு விடுங்கள். உங்களுக்குப் பிறகு இது போன்ற கட்டுரைகளை எழுத இங்கே எழுத்தாளர்கள் இல்லை.

ஆகவே, கூடிய விரைவில் புத்தகம் வெளியாக வேண்டும். நம் சந்ததிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதை எல்லாம் மூடி மறைக்க ஓர் இனம் கங்கணம் கட்டிக் கொண்டு பேயாய் திரிகின்றது. கட்டுரை அருமை. பாராட்டுக்கள்.

மகேந்திர மணி காப்பார்: உண்மை... வரவேற்கிறோம்🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க ராஜா. மிகச் சிரமப்பட்டுக் கட்டுரைகள் தயாரிக்கப் படுகின்றன. பல நூல்களைப் படித்து பல இணைய ஊடகங்களில் இருந்து பதிவுகளைச் சேகரித்து; பல நாடுகளின் பழம் பொருள் காப்பகங்களில் இருந்து பதிவுகளை மீட்டு எடுத்து... சற்று சிரமமே. ஒவ்வொரு நாளும் 6 - 8 மணி நேரம் பிடிக்கும்.

என் மனதில் நீண்ட நாட்களாக ஓர் ஆதங்கம். அதையும் சொல்லி விட்டீர்கள். நமக்குப் பிறகு யார் எடுத்துச் செய்யப் போகிறார்கள் எனும் ஆதங்கம் தான்.

அதனால் ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போகு முன்னர் பிரார்த்தனையின் போது இறைவனிடம் ஒரு வேண்டுதல் வைப்பேன். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நோய் நொடி இல்லாமல் நகர வேண்டும்.

இயன்ற வரையில் மலாயா தமிழர்களைப் பற்றிய தகவல்களை மீட்டு எடுத்து ஆவணமாக்கிவிட வேண்டும். அவற்றை நம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சீதனமாகக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். இதுதான் என் ஆசை.

காசு பணம் புகழ் பதவி எதுவும் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்தால் போதும்... வயதும் உயர்கிறது. செய்து முடித்துவிட வேண்டும். கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🌻

ஜெயகோபாலன்: நான் மிகவும் வரவேற்கிறேன் ஐயா 🙏

தேவி சர: தங்கள் எண்ணம் போல் எல்லாம் அமையும் ஐயா... தங்களுக்காக எங்கள் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்..🙏🏻

டத்தோ தெய்வீகன்: வணக்கம் தலைவரே. பணிகளிலேயே மிகவும் சிரமமான பணி, எழுதுவது. அதுவும் ஒவ்வொரு நாளும் ஆய்வுகள் பல செய்து, தகவல்கள் சரியானதா என்று சரிபார்த்து, பின்னர் எழுத்துப்பிழை, சொற்பிழை, வாக்கியப் பிழை, கருத்துப் பிழை என்பதை எல்லாம் சரிபார்த்து, குறித்த நேரத்திற்குள் எழுதி முடிப்பது சாதாரண பணியல்ல.

ஓய்வு இல்லாமல் ஓடுகின்ற நதியைப் போல, உங்களின் எழுத்துப் பணி,  ஆண்டுகள் பலவாக, தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கின்றது. உங்களின் முத்தான எழுத்துக்கள், எதிர்கால சந்ததியின் அறிவுக்கு வித்தாகவும், நெஞ்சுக்கு சத்தாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் உங்கள் பயணம். கலையட்டும் சமுதாயத்தின் நீண்ட சயனம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
நன்றிங்க ஐயா தெய்வீகன் அவர்களே. தாங்கள் சொல்வது மிகச் சரி. நம் இனத்துக்கு எதையாவது செய்து நிரந்தரமாக்கி விட்டுச் செல்ல வேண்டும் எனும் ஒரு தூண்டுதலே மூல காரணம்.

நாம் மறைந்த பின்னர் நம் சந்ததியினர் நம் வரலாறு தெரியாமல் வாயில்லா பூச்சிகளாக... அப்பாவிகளாக இருந்துவிடக் கூடாது. அதற்காக இப்போதே செய்து விடுவோம் எனும் உத்வேகம் உயிர்ப்பு பெறும் போது அசதி சோர்வு எல்லாம் ஏற்படுவது இல்லை ஐயா.

கொரோனா கட்டுப்பாடு தளர்ந்ததும் நூல்களை வரிசையாக வெளியிட்டு விடுவோம். மிக மிகக் குறைந்த விலையில் அனைத்துத் தமிழர்களின் வீடுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாக அமைதல் வேண்டும்.  தாங்களும் முன் நின்று உதவி செய்ய வேண்டும். நன்றிங்க.

வெங்கடேசன்:
மிகவும் சிறப்பான செயல் வெற்றி நிச்சயம். இறைவன் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் ஐயா🙏🙏

செல்லையா செல்லம்: உங்கள் பணி தொய்வின்றி நடைபெற இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி. வணக்கம்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக