14.03.2021
பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்
கல்வி என்பது வெறும் விதிகளைக் கற்றுக் கொடுப்பது அல்ல. மாறாக மனித மூளையை சிந்திக்கத் தூண்டும் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்றார் ஐன்ஸ்டீன்!
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆகச் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1955-ஆம் ஆண்டு தனது 76-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடலை தாமஸ் ஹார்வே என்ற மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்தார். அப்போது ஐன்ஸ்டீனின் மூளையை எடுத்து வைத்து கொண்டார்.
இதனை அறிந்த ஐன்ஸ்டீன் குடும்பத்தினர், தாமஸ் ஹார்வே மீது வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்துக் கொள்ள அவரது மகன் அனுமதி அளித்ததாக ஹார்வே கூறினார்!
இருந்த போதும் அவர் பணி நீக்கம் செய்யப் பட்டார். ஆனாலும் ஐன்ஸ்டீனின் மூளையை தானே வைத்து கொண்டார்.
இந்த நிலையில், ஐன்ஸ்டீன் இறந்து பல வருடங்களுக்குப் பிறகு அவரின் மூளையை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் ஹார்வேயிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஐன்ஸ்டீன் மூளையின் சில பகுதிகளைப் பரிசோதனைக்காக வழங்கினார்.
அதில் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டறிந்து உள்ளனர். சராசரி மனிதனைக் காட்டிலும் ஐன்ஸ்டீன் மூளை சிறியது என்றும், அதே சமயம் சராசரி மனிதனின் மூளையை விடவும் அடர்த்தியானது என்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்!
தற்போது ஐன்ஸ்டீன் மூளையின் 46 மெல்லிய அடுக்குகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலடெல்பியாவின் முட்டர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதைப் பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்ட இந்த மூளையின் துகள்களை லென்ஸ் மூலமாகத்தான் பார்க்க முடியும். 20-ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மூளை ஐன்ஸ்டீனுடையது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக